ஐபிஎல் 2022 கிரிக்கெட் லீக் போட்டியில் புதிதாக அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் இணைந்துள்ளன. அந்த வகையில் அடுத்து நடைபெறவுள்ள ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் இந்த புதிய இரு அணிகளூம் போட்டிகளில் பன்ஃப்கேற்கும் என இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ இந்திய கிரிகெட் வாரியம் சார்பில் வெளியிடப்பட்ட தகவல்:
ஐபிஎல் போட்டிகளில் மேலும் இரு அணிகளைச் சேர்ப்பதற்கான ஏலம், துபாயிலுள்ள தாஜ் ஹோட்டலில் கடந்த திங்கள்கிழமை (அக்டோபர் 25) நடந்தது. அதன் முடிவில் லக்னோ அணியாக ஆர்பி–சஞ்சீவ் கோயங்கா குழுமம் மற்றும் அகமதாபாத் அணியாக சிவிசி கேப்பிட்டல் பார்ட்னர்ஸ் ஆகியோர் புதிய அணிகளின் உரிமையாளர்களாக தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
–இவ்வாறு பிசிசிஐ தெரிவித்துள்ளது.
RPSG குழுமம் லக்னோ அணிக்கான ஏலத் தொகையாக ரூ.7,090 கோடியை RPSG குழுமமும் சிவிசி அகமதாபாத் அணிக்காக ரூ.5,625 கோடி கொடுத்து சிவிசி குழுமமும் வாங்கியதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.