கடைசிப் பக்கம்.சுஜாதா தேசிகன்.இந்த வாரம் மீண்டும் சென்னை விஜயம். காலை நடையில் தி.நகர்'ஹாட் சிப்ஸ்'ல் காஃபி சாப்பிடும்போது விஜயதசமி முடிந்து வாழை தோரணங்கள் வாடி வதங்கி அதன் அடிப் பகுதியில் தண்டு சின்னதாக எட்டிப் பார்த்து வளர்ந்து இருந்தது. அருகே ஆலமர இளம் தளிர் விழுதுகள் காலை சூரியக் கதிர்களில் பளபளத்தது..கீழ்நோக்கி வளரும் வாழைத் தண்டு பிழைக்க போவதில்லை. அந்த ஆலமர விழுதுகளும் 'ஸ்மார்ட் சிட்டி' பிளாட்ஃபாரத் தரையைத் தொடப் போவதில்லை. ஆனால் எந்தக் கவலையும் இல்லாமல் இவை வளர்ந்துகொண்டு இருக்கிறது.."எப்படி வளர்கிறோம்" என்ற கவலை மனிதர்களுக்கு மட்டும்தான். கர்ப்பிணிப் பெண்கள் குறிப்பாக 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு'டவுன் சிண்டிரோம்' பரிசோதனைகள் இந்தியாவில் இருபது வருடம் முன் ஆரம்பம் ஆகியது. வெளிநாட்டுச் சொந்தங்கள் 'எதுக்கும் ஒரு டிரிபிள் டெஸ்ட் எடுத்துக்கோ' என்று சிபாரிசு செய்ய குடும்பங்கள் இந்தப் பரிசோதனைகள் செய்யும் இடம் தேடி ஓட ஆரம்பித்தார்கள்..மனித உடலின் ஒவ்வொரு செல்லிலும், 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன. கருத்தரிக்கும் நேரத்தில் அம்மா அல்லது அப்பாவிடமிருந்து 21வது குரோமோசோமில் ஓர் எக்ஸ்டரா குரோமோசோம் பெற்று பிறக்கும் குழந்தைக்கு மரபணு சம்பந்தப்பட்ட குறைபாடுகள் ஏற்பட்டு, இதன் விளையாக குழந்தைக்கு மூளை, நரம்பு சார்ந்த கோளாறுகள் உண்டாக வாய்ப்பு உண்டு. இதனால் பிறக்கும் குழந்தை அறிவு வளர்ச்சி குன்றி, கண், மூக்கு போன்றவை வித்தியாசமான தோற்றத்தில் பிறக்க வாய்ப்பு இருக்கிறது..கர்ப்பத்தின் மூன்றாவது மாதத்தில் செய்யப்படும் இந்தப் பரிசோதனையில் இந்தக் குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு 0.1%. அதாவது ஆயிரத்தில் ஒருவருக்கு! பரிசோதனை முடிவு பாஸிடிவ் என்று வந்தால் ( சில பரிசோதனைகள் தப்பாக 'ஃபால்ஸ் பாசிட்டிவ்' வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது) மேலும் அம்னோசென்டெசிஸ் போன்ற சோதனை சிகிச்சை இன்று தொடரும்..சில மாதங்கள் முன் 'மிமி' என்ற ஹிந்தி படத்தைப் பார்த்தேன். குழந்தை இல்லாத அமெரிக்கத் தம்பதியினர், வாடகை தாயைத் தேடி இந்தியா வருகிறார்கள். திருமணம் ஆகாத நடனப் பெண் மிமியை தேர்ந்தெடுக்கிறார்கள். பணம் கிடைத்தால் தன் வாழ்க்கையின் லட்சியமான 'பெரிய நடிகை ஆகலாம்' என்ற கனவில் மிமியும் வாடகைத் தாயாக இருக்க சம்மதிக்கிறாள்..கர்ப்பம் தரிக்க மிமிக்கு 'டவுன் சிண்டிரோம்' பரிசோதனையில் பிறக்கப் போகும் குழந்தை குறைபாடுகளுடன் பிறக்கும் என்று மருத்துவர்கள் கூறி கருவைக் கலைக்க சிபாரிசு செய்கிறார்கள். மிமி 'கருவைக் கலைக்க மாட்டேன்' என்று அடம்பிடிக்க, வெளிநாட்டுத் தம்பதிகள் 'குறைபாடு உள்ளக் குழந்தை தங்களுக்கு வேண்டாம்' என்று இந்தியாவை விட்டு 'எஸ்ஆக', குழந்தை எந்தக் குறைபாடும் இல்லாமல் நல்லவிதமாக பிறந்து வளர்கிறது(ஃபால்ஸ் பாசிட்டிவ்!)..சில வருடங்கள் கழித்து இதை அறிந்த வெளிநாட்டுத் தம்பதிகள் திரும்ப வந்து குழந்தையைக் கேட்க, அந்த குடும்ப சிக்கலே படத்தின் கதை..வாடகைத் தாய் என்பவள் தாயா ? குறை என்பதற்காகச் சிசுவைக் கொல்லலாமா ? போன்ற கருத்துக்களை விவாதம் செய்யலாம். ஆனால் அந்தப் பரிசோதனை முடிவு வரும் வரை அந்தத் தாய் படும் மன உளைச்சலை விவரிக்க முடியாது..இந்த மன உளைச்சல் மனிதர்களுக்கு மட்டும்தான். விலங்கு, தாவரங்களுக்கு கிடையாது. ஹிரண்யகசிபு பிரகலாதனை பெற்றதை மூங்கிலினிடத்து உண்டான நெருப்பு போலவும், நண்டு தரித்த கர்ப்பம் போலவும், குலை ஈன்ற வாழை போலவும் இருந்தது என உவமையாகக் கூறுவார்கள்.. உவமை.மூங்கில் ஒன்றோடு ஒன்று உரசும் போது தீப் பற்றி அந்த மூங்கிலே எறிந்து போகும். கர்ப்பம் தரித்த நண்டு பிரசவிக்கும் போது இறந்துவிடும். குலை ஈன்ற வாழை மடிந்துவிடும்..இது மாதிரி நடக்கும் என்று மூங்கில், நண்டு, வாழைக்கு முன்பே தெரிந்தால் என்ன நடக்கும் என்று யோசித்ததுண்டு!
கடைசிப் பக்கம்.சுஜாதா தேசிகன்.இந்த வாரம் மீண்டும் சென்னை விஜயம். காலை நடையில் தி.நகர்'ஹாட் சிப்ஸ்'ல் காஃபி சாப்பிடும்போது விஜயதசமி முடிந்து வாழை தோரணங்கள் வாடி வதங்கி அதன் அடிப் பகுதியில் தண்டு சின்னதாக எட்டிப் பார்த்து வளர்ந்து இருந்தது. அருகே ஆலமர இளம் தளிர் விழுதுகள் காலை சூரியக் கதிர்களில் பளபளத்தது..கீழ்நோக்கி வளரும் வாழைத் தண்டு பிழைக்க போவதில்லை. அந்த ஆலமர விழுதுகளும் 'ஸ்மார்ட் சிட்டி' பிளாட்ஃபாரத் தரையைத் தொடப் போவதில்லை. ஆனால் எந்தக் கவலையும் இல்லாமல் இவை வளர்ந்துகொண்டு இருக்கிறது.."எப்படி வளர்கிறோம்" என்ற கவலை மனிதர்களுக்கு மட்டும்தான். கர்ப்பிணிப் பெண்கள் குறிப்பாக 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு'டவுன் சிண்டிரோம்' பரிசோதனைகள் இந்தியாவில் இருபது வருடம் முன் ஆரம்பம் ஆகியது. வெளிநாட்டுச் சொந்தங்கள் 'எதுக்கும் ஒரு டிரிபிள் டெஸ்ட் எடுத்துக்கோ' என்று சிபாரிசு செய்ய குடும்பங்கள் இந்தப் பரிசோதனைகள் செய்யும் இடம் தேடி ஓட ஆரம்பித்தார்கள்..மனித உடலின் ஒவ்வொரு செல்லிலும், 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன. கருத்தரிக்கும் நேரத்தில் அம்மா அல்லது அப்பாவிடமிருந்து 21வது குரோமோசோமில் ஓர் எக்ஸ்டரா குரோமோசோம் பெற்று பிறக்கும் குழந்தைக்கு மரபணு சம்பந்தப்பட்ட குறைபாடுகள் ஏற்பட்டு, இதன் விளையாக குழந்தைக்கு மூளை, நரம்பு சார்ந்த கோளாறுகள் உண்டாக வாய்ப்பு உண்டு. இதனால் பிறக்கும் குழந்தை அறிவு வளர்ச்சி குன்றி, கண், மூக்கு போன்றவை வித்தியாசமான தோற்றத்தில் பிறக்க வாய்ப்பு இருக்கிறது..கர்ப்பத்தின் மூன்றாவது மாதத்தில் செய்யப்படும் இந்தப் பரிசோதனையில் இந்தக் குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு 0.1%. அதாவது ஆயிரத்தில் ஒருவருக்கு! பரிசோதனை முடிவு பாஸிடிவ் என்று வந்தால் ( சில பரிசோதனைகள் தப்பாக 'ஃபால்ஸ் பாசிட்டிவ்' வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது) மேலும் அம்னோசென்டெசிஸ் போன்ற சோதனை சிகிச்சை இன்று தொடரும்..சில மாதங்கள் முன் 'மிமி' என்ற ஹிந்தி படத்தைப் பார்த்தேன். குழந்தை இல்லாத அமெரிக்கத் தம்பதியினர், வாடகை தாயைத் தேடி இந்தியா வருகிறார்கள். திருமணம் ஆகாத நடனப் பெண் மிமியை தேர்ந்தெடுக்கிறார்கள். பணம் கிடைத்தால் தன் வாழ்க்கையின் லட்சியமான 'பெரிய நடிகை ஆகலாம்' என்ற கனவில் மிமியும் வாடகைத் தாயாக இருக்க சம்மதிக்கிறாள்..கர்ப்பம் தரிக்க மிமிக்கு 'டவுன் சிண்டிரோம்' பரிசோதனையில் பிறக்கப் போகும் குழந்தை குறைபாடுகளுடன் பிறக்கும் என்று மருத்துவர்கள் கூறி கருவைக் கலைக்க சிபாரிசு செய்கிறார்கள். மிமி 'கருவைக் கலைக்க மாட்டேன்' என்று அடம்பிடிக்க, வெளிநாட்டுத் தம்பதிகள் 'குறைபாடு உள்ளக் குழந்தை தங்களுக்கு வேண்டாம்' என்று இந்தியாவை விட்டு 'எஸ்ஆக', குழந்தை எந்தக் குறைபாடும் இல்லாமல் நல்லவிதமாக பிறந்து வளர்கிறது(ஃபால்ஸ் பாசிட்டிவ்!)..சில வருடங்கள் கழித்து இதை அறிந்த வெளிநாட்டுத் தம்பதிகள் திரும்ப வந்து குழந்தையைக் கேட்க, அந்த குடும்ப சிக்கலே படத்தின் கதை..வாடகைத் தாய் என்பவள் தாயா ? குறை என்பதற்காகச் சிசுவைக் கொல்லலாமா ? போன்ற கருத்துக்களை விவாதம் செய்யலாம். ஆனால் அந்தப் பரிசோதனை முடிவு வரும் வரை அந்தத் தாய் படும் மன உளைச்சலை விவரிக்க முடியாது..இந்த மன உளைச்சல் மனிதர்களுக்கு மட்டும்தான். விலங்கு, தாவரங்களுக்கு கிடையாது. ஹிரண்யகசிபு பிரகலாதனை பெற்றதை மூங்கிலினிடத்து உண்டான நெருப்பு போலவும், நண்டு தரித்த கர்ப்பம் போலவும், குலை ஈன்ற வாழை போலவும் இருந்தது என உவமையாகக் கூறுவார்கள்.. உவமை.மூங்கில் ஒன்றோடு ஒன்று உரசும் போது தீப் பற்றி அந்த மூங்கிலே எறிந்து போகும். கர்ப்பம் தரித்த நண்டு பிரசவிக்கும் போது இறந்துவிடும். குலை ஈன்ற வாழை மடிந்துவிடும்..இது மாதிரி நடக்கும் என்று மூங்கில், நண்டு, வாழைக்கு முன்பே தெரிந்தால் என்ன நடக்கும் என்று யோசித்ததுண்டு!