கைச்செலவுக்கு ஆடு திருடினோம்: சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதனைக் கொன்ற மணிகண்டன் வாக்குமூலம்!

கைச்செலவுக்கு ஆடு திருடினோம்: சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதனைக் கொன்ற மணிகண்டன் வாக்குமூலம்!

திருச்சி மாவட்டம், நாவல்பட்டு போலீஸ் நிலைய சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் பூமிநாதன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆடு திருட்டு கும்பலில் ஒருவனான மணிகண்டன் கைச்செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் ஆடு திருடியதாக பரபரப்பு வாக்குமூலம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருச்சி சரக டி..ஜி. சரவண சுந்தர் கீரனூர் போலீஸ் நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சப்இன்ஸ்பெக்டர் பூமிநாதன் கொலை வழக்கில் மணிகண்டன் (வயது 19) மற்றும் 2 சிறுவர்களை கைது செய்து வழக்கில் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், பொருட்கள், அரிவாள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. ஒரு இறப்புக்கு செல்ல வேண்டிய நிலையில், அதற்கு கைச்செலவு பணத்துக்காக ஆடு திருடியதாக மணிகண்டன் ஒப்புகொண்டுள்ளார். வழியில் பூமிநாதன் வழிமறித்து விசாரித்தபோது, தங்களை தற்காத்து கொள்ளும் வகையில் மூவரும் அவரை பின்னாலிருந்து தாக்கி கொலை செய்ததாக ஒப்புகொண்டனர். சப்இன்ஸ்பெக்டரின் உடல் பிரேத பரிசோதனையில் அவர் பின்னால் இருந்து தாக்கப்பட்டுள்ளார் என்பது உறுதியாகி உள்ளது.

பூமிநாதன் செல்போனில் பல போலீசாருக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்ததால் அந்த பயத்தினால் அவரை கொலை செய்திருக்கலாம். இந்த வழக்கில் கொலைக்கான தடயங்கள், அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கும் வகையில் போதுமான ஆதாரங்கள் உள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com