– சித்தார்த்தன் சுந்தரம்.பெருந்தொற்று சிறிது சிறிதாக குறைந்து வரும் சூழலில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் நாளிதழ்களின் முதல் பக்கத்தைக் கடந்த மூன்று வாரங்களாக ஆக்ரமித்து வருகிறது. இதற்கிடையில் மெக்கின்சி நிறுவனம் உலகப் பொருளாதார நிலை குறித்து ஓர் ஆய்வு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது..உக்ரைன் மீதான ரஷ்ய அரசின் தாக்குதல் தொடர்பாக உலகப் பொருளாதாரத்தில் ஏற்படவிருக்கும் விளைவுகள் நன்கு தெரிவதற்கு இன்னும் சில வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகலாம். சமீபத்தில் வெளியாகியிருக்கும் தரவுகள் உலக அளவில் பொருளாதாரம் வளர்ந்து வந்தாலும் வளர்ச்சியானது பணவீக்கத்தினால் மெதுவாக இருப்பதாகக் கூறுகின்றன. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு (The Organization of Economic Co-operation and Development – OECD) ஆய்வின்படி, பணவீக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக நுகர்வோர் நம்பிக்கை (Consumer Confidence) குறியீட்டு எண் குறைந்திருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது..உலக அளவில் அமெரிக்கா தவிர, மற்ற நாடுகளில் சில்லரை வணிகம் குறைந்திருக்கிறது. அமெரிக்க நுகர்வோர்கள் பொருள்களை வாங்கச் செலவிடுவதிலிருந்து சேவையை வாங்குவதற்கு செலவு செய்ய ஆரம்பித்திருக்கின்றனர். இந்த நெருக்கடியான காலகட்டத்தில், ஐரோப்பிய மண்டலத்தில் (euro zone) வாழ்ந்துவரும் மக்களிடையேயான கையிருப்பு மற்றும் காப்புநிதி சுமார் 1000 மில்லியன் யூரோ எனத் தெரிய வந்திருப்பது ஒரு நல்ல செய்தி என நிபுணர்கள் கூறுகின்றனர்..சேவை மற்றும் உற்பத்திக்கான உலக கொள்முதலாளர்களின் குறியீடு இந்தப் புத்தாண்டில் வளர்ச்சி மெதுவாக அதிகரித்து வருவதாக தெரிவிப்பதோடு OECD-யின் குறியீடுகளும் இனி வரும் மாதங்களில் வளர்ச்சி இருக்கும். ஆனால் மெதுவாக இருக்கும் என்பதைக் கோடிட்டுக் காட்டியிருக்கிறது..2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் World Trade Monitor வெளியிட்ட CPB (Central Plan Bureau) குறியீடானது வர்த்தகத்தின் அளவு 1.1 சதவீதம் அதிகரித்திருப்பதாகத் (நவம்பரில் 1.9 சதவீதம்) தெரிவிக்கிறது. பொதுப்படையாக, வருடாந்திர வளர்ச்சியானது முந்தைய ஆண்டைவிட 10.3 சதவீதம் அதிகம் என தெரிவித்திருப்பதோடு பெருந்தொற்று காலத்துக்கு முந்தைய அளவைவிட சற்றே கூடுதலாக இருப்பதாகவும் சுட்டிக் காட்டியிருக்கிறது. ஆசிய நாடுகளில் சீனாவானது பெருந்தொற்று காலத் தடைகளை மீறித் தொடர்ந்து ஓரளவுக்கு நன்றாகவே வளர்ச்சியடைந்திருப்பதாக இவ்வறிக்கைத் தெரிவிக்கிறது. ஆய்வு மேற்கொண்ட நாடுகளில், இந்தியாவைத் தவிர, மற்ற நாடுகளில் வேலையில்லாப் பிரச்னை கணிசமான அளவுக்குக் குறைந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கிறது..பணவீக்கமானது அமெரிக்காவில் 7.5%, ஐரோப்பிய மண்டலத்தில் 5.1%, இந்தியாவில் 6%, பிரேசிலில் 10.4% என தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீனாவில் நுகர்வோர் பணவீக்கம் 0.9 சதவீதம் அதிகரித்து 3.9% சதவீதத்தில் இருக்கிறது..உக்ரைன் மீதான தாக்குதலுக்கு முன்பாகவே பண்டங்களின் (commodities) விலை அதிகரிக்க ஆரம்பித்தது. தாக்குதலுக்குப் பிறகு விலை மளமளவென்று உயர, ஒரு அவுன்ஸ் (28.35 கிராம்) தங்கத்தின் விலை சுமார் 1900 டாலர் என்கிற அளவுக்கு அதிகரித்தது..உக்ரைன் ஆக்ரமிப்புக்குப் பிறகு மற்ற பொருள்களைவிட எரிசக்தி சம்பந்தப்பட்ட பொருள்களின் விலை அதிகரிக்க ஆரம்பித்தாலும் அதன் தாக்கம் மற்ற பொருள்களின் விலையிலும் பிரதிபலிக்க ஆரம்பித்திருக்கிறது. டிசம்பர் மாதம் ஒரு பேரல் கச்சா எண்ணையின் விலை சுமார் 60 டாலராக இருந்தது ஆனல் இன்றைக்கு அது 108 டாலரை எட்டியிருக்கிறது..நிதிச் சந்தையில் பங்குச் சந்தை பெரும் நஷ்டத்தை அல்லது மெதுவான வளர்ச்சியை எதிர் கொண்டது. ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் குறியீடுகளில் பெருமளவுக்கு ஏற்ற இறக்கம் இருந்ததால் ஒரு நிலையற்ற தன்மையே நிலவியது. உக்ரைன் ஆக்ரமிப்புக்கு முன்பாக அமெரிக்க டாலரின் மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்தது ஆனால் ஆக்ரமிப்புக்குப் பிறகு இதன் மதிப்பு அதிகமாகிக் கொண்டே வருகிறது. இதனால் ஆய்வுக்கு உள்ளான பெரும்பாலான நாடுகளின் மத்திய வங்கி வட்டி சதவீதத்தை உயர்த்த தயங்குகின்றன..உக்ரைன் மீதான தாக்குதல் ஆரம்பித்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதிக்குப் பிறகு தங்கம், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலை அதிகரிப்பதிருப்பதோடு பல பங்குச் சந்தைகள் பங்குதாரர்களுக்கு நஷ்டத்தை அளித்திருக்கிறது..அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய யூனியன், G7 நாடுகள் ரஷ்யாவின் உக்ரைன் தாக்குதலைக் கண்டித்துப் பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கின்றன..கவலைக்குரிய இன்னொரு முக்கியமான விஷயம், கோதுமையும் மற்ற தானியங்களும் ஆகும். உலகத்துக்குத் தேவையான 25 சதவீத கோதுமையை ரஷ்யா அல்லது உக்ரைன் உற்பத்தி செய்து வருகிறது. இதனால் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய யூனியனின் தடையில் கோதுமை மற்றும் தானிய ஏற்றுமதிகள் அடங்காது. ரஷ்யாவிடம் அதிகப்படியான அளவுக்கு தங்கமும் நாணயத்தின் இருப்பும் இருக்கிறது. அதோடு சீனாவுக்கு தானியங்களையும் இயற்கை எரிவாயுவையும் ஏற்றுமதி செய்வதற்கு அந்நாட்டோடு ஒப்பந்தம் செய்திருக்கிறது..ஆக, பெருந்தொற்றுக்குப் பிறகு வளர்ச்சியை நோக்கி பயணித்த பொருளாதாரமானது உக்ரைன் மீதான தாக்குதலால் ஓரளவு மந்த நிலையை அடைந்திருக்கிறது. இரு நாடுகளுக்குமான அமைதிப் பேச்சுவார்த்தை இந்த தேக்க நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
– சித்தார்த்தன் சுந்தரம்.பெருந்தொற்று சிறிது சிறிதாக குறைந்து வரும் சூழலில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் நாளிதழ்களின் முதல் பக்கத்தைக் கடந்த மூன்று வாரங்களாக ஆக்ரமித்து வருகிறது. இதற்கிடையில் மெக்கின்சி நிறுவனம் உலகப் பொருளாதார நிலை குறித்து ஓர் ஆய்வு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது..உக்ரைன் மீதான ரஷ்ய அரசின் தாக்குதல் தொடர்பாக உலகப் பொருளாதாரத்தில் ஏற்படவிருக்கும் விளைவுகள் நன்கு தெரிவதற்கு இன்னும் சில வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகலாம். சமீபத்தில் வெளியாகியிருக்கும் தரவுகள் உலக அளவில் பொருளாதாரம் வளர்ந்து வந்தாலும் வளர்ச்சியானது பணவீக்கத்தினால் மெதுவாக இருப்பதாகக் கூறுகின்றன. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு (The Organization of Economic Co-operation and Development – OECD) ஆய்வின்படி, பணவீக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக நுகர்வோர் நம்பிக்கை (Consumer Confidence) குறியீட்டு எண் குறைந்திருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது..உலக அளவில் அமெரிக்கா தவிர, மற்ற நாடுகளில் சில்லரை வணிகம் குறைந்திருக்கிறது. அமெரிக்க நுகர்வோர்கள் பொருள்களை வாங்கச் செலவிடுவதிலிருந்து சேவையை வாங்குவதற்கு செலவு செய்ய ஆரம்பித்திருக்கின்றனர். இந்த நெருக்கடியான காலகட்டத்தில், ஐரோப்பிய மண்டலத்தில் (euro zone) வாழ்ந்துவரும் மக்களிடையேயான கையிருப்பு மற்றும் காப்புநிதி சுமார் 1000 மில்லியன் யூரோ எனத் தெரிய வந்திருப்பது ஒரு நல்ல செய்தி என நிபுணர்கள் கூறுகின்றனர்..சேவை மற்றும் உற்பத்திக்கான உலக கொள்முதலாளர்களின் குறியீடு இந்தப் புத்தாண்டில் வளர்ச்சி மெதுவாக அதிகரித்து வருவதாக தெரிவிப்பதோடு OECD-யின் குறியீடுகளும் இனி வரும் மாதங்களில் வளர்ச்சி இருக்கும். ஆனால் மெதுவாக இருக்கும் என்பதைக் கோடிட்டுக் காட்டியிருக்கிறது..2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் World Trade Monitor வெளியிட்ட CPB (Central Plan Bureau) குறியீடானது வர்த்தகத்தின் அளவு 1.1 சதவீதம் அதிகரித்திருப்பதாகத் (நவம்பரில் 1.9 சதவீதம்) தெரிவிக்கிறது. பொதுப்படையாக, வருடாந்திர வளர்ச்சியானது முந்தைய ஆண்டைவிட 10.3 சதவீதம் அதிகம் என தெரிவித்திருப்பதோடு பெருந்தொற்று காலத்துக்கு முந்தைய அளவைவிட சற்றே கூடுதலாக இருப்பதாகவும் சுட்டிக் காட்டியிருக்கிறது. ஆசிய நாடுகளில் சீனாவானது பெருந்தொற்று காலத் தடைகளை மீறித் தொடர்ந்து ஓரளவுக்கு நன்றாகவே வளர்ச்சியடைந்திருப்பதாக இவ்வறிக்கைத் தெரிவிக்கிறது. ஆய்வு மேற்கொண்ட நாடுகளில், இந்தியாவைத் தவிர, மற்ற நாடுகளில் வேலையில்லாப் பிரச்னை கணிசமான அளவுக்குக் குறைந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கிறது..பணவீக்கமானது அமெரிக்காவில் 7.5%, ஐரோப்பிய மண்டலத்தில் 5.1%, இந்தியாவில் 6%, பிரேசிலில் 10.4% என தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீனாவில் நுகர்வோர் பணவீக்கம் 0.9 சதவீதம் அதிகரித்து 3.9% சதவீதத்தில் இருக்கிறது..உக்ரைன் மீதான தாக்குதலுக்கு முன்பாகவே பண்டங்களின் (commodities) விலை அதிகரிக்க ஆரம்பித்தது. தாக்குதலுக்குப் பிறகு விலை மளமளவென்று உயர, ஒரு அவுன்ஸ் (28.35 கிராம்) தங்கத்தின் விலை சுமார் 1900 டாலர் என்கிற அளவுக்கு அதிகரித்தது..உக்ரைன் ஆக்ரமிப்புக்குப் பிறகு மற்ற பொருள்களைவிட எரிசக்தி சம்பந்தப்பட்ட பொருள்களின் விலை அதிகரிக்க ஆரம்பித்தாலும் அதன் தாக்கம் மற்ற பொருள்களின் விலையிலும் பிரதிபலிக்க ஆரம்பித்திருக்கிறது. டிசம்பர் மாதம் ஒரு பேரல் கச்சா எண்ணையின் விலை சுமார் 60 டாலராக இருந்தது ஆனல் இன்றைக்கு அது 108 டாலரை எட்டியிருக்கிறது..நிதிச் சந்தையில் பங்குச் சந்தை பெரும் நஷ்டத்தை அல்லது மெதுவான வளர்ச்சியை எதிர் கொண்டது. ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் குறியீடுகளில் பெருமளவுக்கு ஏற்ற இறக்கம் இருந்ததால் ஒரு நிலையற்ற தன்மையே நிலவியது. உக்ரைன் ஆக்ரமிப்புக்கு முன்பாக அமெரிக்க டாலரின் மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்தது ஆனால் ஆக்ரமிப்புக்குப் பிறகு இதன் மதிப்பு அதிகமாகிக் கொண்டே வருகிறது. இதனால் ஆய்வுக்கு உள்ளான பெரும்பாலான நாடுகளின் மத்திய வங்கி வட்டி சதவீதத்தை உயர்த்த தயங்குகின்றன..உக்ரைன் மீதான தாக்குதல் ஆரம்பித்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதிக்குப் பிறகு தங்கம், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலை அதிகரிப்பதிருப்பதோடு பல பங்குச் சந்தைகள் பங்குதாரர்களுக்கு நஷ்டத்தை அளித்திருக்கிறது..அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய யூனியன், G7 நாடுகள் ரஷ்யாவின் உக்ரைன் தாக்குதலைக் கண்டித்துப் பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கின்றன..கவலைக்குரிய இன்னொரு முக்கியமான விஷயம், கோதுமையும் மற்ற தானியங்களும் ஆகும். உலகத்துக்குத் தேவையான 25 சதவீத கோதுமையை ரஷ்யா அல்லது உக்ரைன் உற்பத்தி செய்து வருகிறது. இதனால் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய யூனியனின் தடையில் கோதுமை மற்றும் தானிய ஏற்றுமதிகள் அடங்காது. ரஷ்யாவிடம் அதிகப்படியான அளவுக்கு தங்கமும் நாணயத்தின் இருப்பும் இருக்கிறது. அதோடு சீனாவுக்கு தானியங்களையும் இயற்கை எரிவாயுவையும் ஏற்றுமதி செய்வதற்கு அந்நாட்டோடு ஒப்பந்தம் செய்திருக்கிறது..ஆக, பெருந்தொற்றுக்குப் பிறகு வளர்ச்சியை நோக்கி பயணித்த பொருளாதாரமானது உக்ரைன் மீதான தாக்குதலால் ஓரளவு மந்த நிலையை அடைந்திருக்கிறது. இரு நாடுகளுக்குமான அமைதிப் பேச்சுவார்த்தை இந்த தேக்க நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.