கவர் ஸ்டோரி.– ஆதித்யா.அரசியலில் கட்சித் தலைவர்கள் உயரங்களைத் தொடுவதும் பள்ளங்களில் சாய்வதும் புதிய விஷயமில்லை. பெரும்பாலும் இப்படி நிகழ்வதற்குத் தேர்தல்கள்தான் காரணமாயிருக்கும். அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியிலிருந்த ஒரு கட்சி எதிர் கட்சியாகக்கூட அமரமுடியாமல் வாக்காளர்கள் தீர்ப்பளித்த காட்சிகளை இந்த தேசம் கண்டிருக்கிறது. தலைமையின் போக்கைக் கண்டித்து கட்சியிலிருந்து வெளியேறிபுதுக் கட்சி தொடங்கியவர்கள் இந்திய அரசியலில் எல்லாக்கட்சியிலிருக்கிறார்கள்..ஆனால், கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்த அ.தி.மு.கவின் பொதுக் குழுக் கூட்டத்திலிருந்து தானாக வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்ஓ. பன்னீர்செல்வம். ஒரு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அந்தக் கட்சியின் பொதுக்குழுவிலேயே இப்படி நடத்தப்பட்டிருப்பது இந்திய அரசியலில் இது தான் முதல்முறை..பன்னீர் செல்வத்துக்கு ஏன் இது நிகழ்ந்தது? என்பதை ஆராய்ந்தால் நமக்குப் புலப்படுவது இரண்டு விஷயங்கள். ஓர் அரசியல் கட்சியில் தலைமையேற்பவர்கள் கட்சி நிர்வாகப் பணிகளையும் தாண்டி தொண்டர்களிடம் தனி செல்வாக்கை பெற்றிருக்கவேண்டும். அந்த செல்வாக்கை நிலை நிறுத்திக்கொள்ள கட்சியில் ஒரு குழு தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருக்க வேண்டும். அந்தக் குழுவிற்கு மறைமுகமாவோ நேரடியாகவோ அனைத்து வசதிகளையும் செய்துகொண்டிருக்க வேண்டும்..இதை எடப்பாடி பழனிச்சாமி செய்தார். பன்னீர் செல்வம் செய்யத் தவறிவிட்டார். கட்சியில் 'இரட்டை தலைமை' என்ற நிலை உருவான போதே 'இந்த அமைப்பு நீண்ட நாள் நிலைக்காது, யாரேனும் ஒருவர்தான் கட்சிக்கு தலைமை தாங்க முடியும்' என்பதை இருவரும் உணர்ந்தேயிருந்தனர். ஆனால், அதை அடைய இருவரும் பின்பற்றிய வழிகள் வெவ்வேறானவை.."1980களில் எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே கட்சியில் இருக்கிறார் ஓ. பன்னீர்செல்வம். ஆனால், ஒருபோதும் தனக்கென ஒரு கோஷ்டியை அவர் உருவாக்கியதில்லை. தலைமை சொல்வதைச் செய்வோம் என்று இருப்பார். அதுதான் அவருடைய பலவீனம்," இதனால் அவருக்குக்கிடைத்த பல வாய்ப்புகளில் தனக்கென் கோஷ்டி ஒன்றை உருவாக்கிக்கொள்ளத் தவறிவிட்டார்..ஜெயலலிதாவுக்கு நெருக்கடி வந்த இரண்டு தருணங்களில் அவரால் முதலமைச்சராக்கப்பட்டவர் ஓ. பன்னீர்செல்வம். 2001 தேர்தலில் வெற்றிபெற்று வருவாய்த் துறை அமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வம், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா டான்சி வழக்கில் அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தண்டிக்கப்பட்டதையடுத்து பதவியிழக்க நேரிட்டது. அந்தத் தருணத்தில் ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக யார் முதலமைச்சராக நியமிக்கப்படுவார்கள் என காத்திருந்தபோது,ஓ. பன்னீர்செல்வத்தை தேர்வுசெய்தார் ஜெயலலிதா..அந்தத் தேர்வு எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது. ஏனென்றால், அதற்கு முன்பாக, எவ்விதத்திலும் செய்திகளில் அடிபடாத ஓர் அரசியல்வாதியாகவே இருந்தவர் ஓ. பன்னீர்செல்வம். இருந்தபோதும் அவரை முதலமைச்சராக்கினார் ஜெயலலிதா..2002 ஆண்டு மார்ச் மாதத்தில், அந்த வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதும், உடனடியாக முதல்வர் பதவியை ஜெயலலிதாவிடம் ஒப்படைத்தார் ஓ.பி.எஸ். அதற்குப் பிறகு, மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றார்..2014 ஆண்டு செப்டம்பரில் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பதவியிழந்தபோதும், ஜெயலலிதாவின் தேர்வு ஓ. பன்னீர்செல்வமாகவே இருந்தார். அடுத்த ஆண்டே மேல் முறையீட்டில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டவுடன் பதவியை முன்பைப்போல ஒப்படைத்தார் ஓ.பி.எஸ். இப்படி ஜெயலலிதாவின் நம்பிக்கையைக்கு உரியவராக இருந்தாரே தவிர, கட்சித்தொண்டர்களிடமும் மக்களிடமும் அவருக்கு எந்த தனிச்செல்வாக்கும் இல்லை..பின்னர் ஜெயலிதா மறைந்தபிறகு கட்சியை தன்கட்டுப்பாட்டில் வைத்திருந்த வி. கே சசிகலா. பன்னீர் செல்வத்தை மீண்டும் முதல்வராக்கினார்..இதற்குப் பிறகு, ஜெயலலிதா உடல்நலம் குன்றியபோது, முதல்வரின் இந்த மூன்று தருணங்களிலுமே, கட்சிக்குள் தனக்கிருந்த ஆதரவால் அல்லாது, கட்சியின் தலைமை அளித்த பொறுப்புகளில் ஒன்றாகவே முதல்வர் பதவியை வகித்தார் ஓ. பன்னீர்செல்வம். அந்த நிலையில் அவர் காட்டிய செயல் வேகம் மக்களிடம் ஒரு தனி செல்வாக்கை உருவாக்கியது. ஆனால், அதை விரும்பாத வி.கே. சசிகலா தானே முதலமைச்சராக விரும்பி,ஓ. பன்னீர்செல்வத்தை ராஜினாமா செய்ய வைத்தார்..கொதித்துப்போன ஓ. பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமர்ந்து தர்ம யுத்தத்தைத் தொடங்கியிருப்பதாக அறிவித்தார். அந்தத் தருணத்தில்தான் கட்சியின் பிரமுகர்களில் பலர் வெளிப்படையாக தங்களது ஆதரவை ஓ. பன்னீர்செல்வத்திற்கு அளித்தனர். தர்மயுத்தம் துவங்கியபோது, 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பன்னீர்செல்வத்தின் பக்கம் நின்றனர். மாஃபா பாண்டியராஜன் போன்ற பல சட்டமன்ற உறுப்பினர்களும் அவர் பக்கம் நின்றனர். ஆனால் அதைத் தக்கவைத்துக்கொள்ள பன்னிர்செல்வத்தால் முடியவில்லை. சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்குச் செல்ல முதல்வராக எடப்பாடி பழனிசாமி தேர்வானார். அந்தக் கட்டத்திலேயே இருவருக்கும் பனிப்போர் தொடங்கிவிட்டது..டெல்லி பா.ஜ.க. தலைமை தலையிட்டு இரண்டு அணிகளையும் இணைத்தனர். பன்னீர்செல்வம் துணை முதல்வரானார். கட்சியில் ஒருங்கிணைப்பாளர் ஆனார். ஆனால் "கட்சி ஒன்றாக இணைந்த பிறகுகூட தன் ஆதரவாளர்களுக்கு என அவர் எந்தச் சிபாரிசையும் செய்ததில்லை. கட்சியின் தலைமைப் பொறுப்பும் முழுமையாக ஓ.பன்னீர்செல்வத்திற்கு வழங்கப்படவில்லை. 2021 சட்டமன்றத் தேர்தலின் போதே எடப்பாடிகே. பழனிசாமி மிக சாமர்த்தியமாகத் தன் தரப்பை சேர்ந்தவர்களே பெரும் எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டு அவர்களின் வெற்றியையும் உறுதி செய்துகொண்டார். இது குறித்து பன்னீர்செல்வம் கட்சியில் குரல் எழுப்பவில்லை. அல்லது முடியவில்லை. இது அவரது தோல்லிவியின் இரண்டாம் கட்டம்..2021ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியை இழந்த பிறகு, தி.மு.க. மீது கடுமையான விமர்சனங்களை வைக்க வேண்டிய தருணங்களில் ஒருங்கிணைப்பாளர் அதனைச் செய்யவில்லை. பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலையும் தாங்கள்தான் உண்மையான எதிர்க்கட்சி என்று பேசிய போதும் அதைக் கண்டித்து பன்னீர் பேசவில்லை. கட்சித் தொண்டர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தைத் தந்தது..தமிழக பா.ஜ.க.வின் 'எதிர்க்கட்சி நாங்கள்தான்' என்ற குரலை சாமர்த்தியமாகப் பயன்படுத்திக்கொண்டவர் எடப்பாடி. இம்மாதிரி நிலையைத் தவிர்க்கத் தான் கட்சிக்கு ஒற்றைத் தலமையிருக்கவேண்டும் என்ற கருத்தை தன் ஆதரவாளர்களின் மூலம் முன்னெடுத்து அதை பொதுக்குழுவில் ஓங்கி ஒலிக்கச் செய்திருக்கிறார்..இனி என்ன செய்யப்போகிறார் ஓ. பன்னீர்செல்வம்?.நிழல் யுத்தத்தின் முதல் சுற்றில் எடப்பாடி வென்றிருக்கிறார். ஆனால், இன்னும் சில சுற்றுகளும் இருக்கின்றன. பன்னீர்செல்வத்தின் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது என்ற குரலை நீதிமன்றம் வழியாக சந்திக்க பன்னீர் முடிவுசெய்தால் அடுத்த சுற்று ஒரு பெரிய இடைவேளைக்குப் பின்னர்தான் தொடங்கும். நிழல் யுத்தமாக மாறியிருக்கும் . தர்மயுத்தம் முடிவுக்கு வர நீண்ட நாட்கள் ஆகும். அதற்குள் எதுவும் நடக்கலாம். பன்னீர்செல்வத்தின் தனிக்கட்சி தொடக்கம், அது பா.ஜ.க.வுடன் கூட்டணி என்பது உள்பட.
கவர் ஸ்டோரி.– ஆதித்யா.அரசியலில் கட்சித் தலைவர்கள் உயரங்களைத் தொடுவதும் பள்ளங்களில் சாய்வதும் புதிய விஷயமில்லை. பெரும்பாலும் இப்படி நிகழ்வதற்குத் தேர்தல்கள்தான் காரணமாயிருக்கும். அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியிலிருந்த ஒரு கட்சி எதிர் கட்சியாகக்கூட அமரமுடியாமல் வாக்காளர்கள் தீர்ப்பளித்த காட்சிகளை இந்த தேசம் கண்டிருக்கிறது. தலைமையின் போக்கைக் கண்டித்து கட்சியிலிருந்து வெளியேறிபுதுக் கட்சி தொடங்கியவர்கள் இந்திய அரசியலில் எல்லாக்கட்சியிலிருக்கிறார்கள்..ஆனால், கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்த அ.தி.மு.கவின் பொதுக் குழுக் கூட்டத்திலிருந்து தானாக வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்ஓ. பன்னீர்செல்வம். ஒரு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அந்தக் கட்சியின் பொதுக்குழுவிலேயே இப்படி நடத்தப்பட்டிருப்பது இந்திய அரசியலில் இது தான் முதல்முறை..பன்னீர் செல்வத்துக்கு ஏன் இது நிகழ்ந்தது? என்பதை ஆராய்ந்தால் நமக்குப் புலப்படுவது இரண்டு விஷயங்கள். ஓர் அரசியல் கட்சியில் தலைமையேற்பவர்கள் கட்சி நிர்வாகப் பணிகளையும் தாண்டி தொண்டர்களிடம் தனி செல்வாக்கை பெற்றிருக்கவேண்டும். அந்த செல்வாக்கை நிலை நிறுத்திக்கொள்ள கட்சியில் ஒரு குழு தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருக்க வேண்டும். அந்தக் குழுவிற்கு மறைமுகமாவோ நேரடியாகவோ அனைத்து வசதிகளையும் செய்துகொண்டிருக்க வேண்டும்..இதை எடப்பாடி பழனிச்சாமி செய்தார். பன்னீர் செல்வம் செய்யத் தவறிவிட்டார். கட்சியில் 'இரட்டை தலைமை' என்ற நிலை உருவான போதே 'இந்த அமைப்பு நீண்ட நாள் நிலைக்காது, யாரேனும் ஒருவர்தான் கட்சிக்கு தலைமை தாங்க முடியும்' என்பதை இருவரும் உணர்ந்தேயிருந்தனர். ஆனால், அதை அடைய இருவரும் பின்பற்றிய வழிகள் வெவ்வேறானவை.."1980களில் எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே கட்சியில் இருக்கிறார் ஓ. பன்னீர்செல்வம். ஆனால், ஒருபோதும் தனக்கென ஒரு கோஷ்டியை அவர் உருவாக்கியதில்லை. தலைமை சொல்வதைச் செய்வோம் என்று இருப்பார். அதுதான் அவருடைய பலவீனம்," இதனால் அவருக்குக்கிடைத்த பல வாய்ப்புகளில் தனக்கென் கோஷ்டி ஒன்றை உருவாக்கிக்கொள்ளத் தவறிவிட்டார்..ஜெயலலிதாவுக்கு நெருக்கடி வந்த இரண்டு தருணங்களில் அவரால் முதலமைச்சராக்கப்பட்டவர் ஓ. பன்னீர்செல்வம். 2001 தேர்தலில் வெற்றிபெற்று வருவாய்த் துறை அமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வம், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா டான்சி வழக்கில் அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தண்டிக்கப்பட்டதையடுத்து பதவியிழக்க நேரிட்டது. அந்தத் தருணத்தில் ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக யார் முதலமைச்சராக நியமிக்கப்படுவார்கள் என காத்திருந்தபோது,ஓ. பன்னீர்செல்வத்தை தேர்வுசெய்தார் ஜெயலலிதா..அந்தத் தேர்வு எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது. ஏனென்றால், அதற்கு முன்பாக, எவ்விதத்திலும் செய்திகளில் அடிபடாத ஓர் அரசியல்வாதியாகவே இருந்தவர் ஓ. பன்னீர்செல்வம். இருந்தபோதும் அவரை முதலமைச்சராக்கினார் ஜெயலலிதா..2002 ஆண்டு மார்ச் மாதத்தில், அந்த வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதும், உடனடியாக முதல்வர் பதவியை ஜெயலலிதாவிடம் ஒப்படைத்தார் ஓ.பி.எஸ். அதற்குப் பிறகு, மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றார்..2014 ஆண்டு செப்டம்பரில் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பதவியிழந்தபோதும், ஜெயலலிதாவின் தேர்வு ஓ. பன்னீர்செல்வமாகவே இருந்தார். அடுத்த ஆண்டே மேல் முறையீட்டில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டவுடன் பதவியை முன்பைப்போல ஒப்படைத்தார் ஓ.பி.எஸ். இப்படி ஜெயலலிதாவின் நம்பிக்கையைக்கு உரியவராக இருந்தாரே தவிர, கட்சித்தொண்டர்களிடமும் மக்களிடமும் அவருக்கு எந்த தனிச்செல்வாக்கும் இல்லை..பின்னர் ஜெயலிதா மறைந்தபிறகு கட்சியை தன்கட்டுப்பாட்டில் வைத்திருந்த வி. கே சசிகலா. பன்னீர் செல்வத்தை மீண்டும் முதல்வராக்கினார்..இதற்குப் பிறகு, ஜெயலலிதா உடல்நலம் குன்றியபோது, முதல்வரின் இந்த மூன்று தருணங்களிலுமே, கட்சிக்குள் தனக்கிருந்த ஆதரவால் அல்லாது, கட்சியின் தலைமை அளித்த பொறுப்புகளில் ஒன்றாகவே முதல்வர் பதவியை வகித்தார் ஓ. பன்னீர்செல்வம். அந்த நிலையில் அவர் காட்டிய செயல் வேகம் மக்களிடம் ஒரு தனி செல்வாக்கை உருவாக்கியது. ஆனால், அதை விரும்பாத வி.கே. சசிகலா தானே முதலமைச்சராக விரும்பி,ஓ. பன்னீர்செல்வத்தை ராஜினாமா செய்ய வைத்தார்..கொதித்துப்போன ஓ. பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமர்ந்து தர்ம யுத்தத்தைத் தொடங்கியிருப்பதாக அறிவித்தார். அந்தத் தருணத்தில்தான் கட்சியின் பிரமுகர்களில் பலர் வெளிப்படையாக தங்களது ஆதரவை ஓ. பன்னீர்செல்வத்திற்கு அளித்தனர். தர்மயுத்தம் துவங்கியபோது, 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பன்னீர்செல்வத்தின் பக்கம் நின்றனர். மாஃபா பாண்டியராஜன் போன்ற பல சட்டமன்ற உறுப்பினர்களும் அவர் பக்கம் நின்றனர். ஆனால் அதைத் தக்கவைத்துக்கொள்ள பன்னிர்செல்வத்தால் முடியவில்லை. சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்குச் செல்ல முதல்வராக எடப்பாடி பழனிசாமி தேர்வானார். அந்தக் கட்டத்திலேயே இருவருக்கும் பனிப்போர் தொடங்கிவிட்டது..டெல்லி பா.ஜ.க. தலைமை தலையிட்டு இரண்டு அணிகளையும் இணைத்தனர். பன்னீர்செல்வம் துணை முதல்வரானார். கட்சியில் ஒருங்கிணைப்பாளர் ஆனார். ஆனால் "கட்சி ஒன்றாக இணைந்த பிறகுகூட தன் ஆதரவாளர்களுக்கு என அவர் எந்தச் சிபாரிசையும் செய்ததில்லை. கட்சியின் தலைமைப் பொறுப்பும் முழுமையாக ஓ.பன்னீர்செல்வத்திற்கு வழங்கப்படவில்லை. 2021 சட்டமன்றத் தேர்தலின் போதே எடப்பாடிகே. பழனிசாமி மிக சாமர்த்தியமாகத் தன் தரப்பை சேர்ந்தவர்களே பெரும் எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டு அவர்களின் வெற்றியையும் உறுதி செய்துகொண்டார். இது குறித்து பன்னீர்செல்வம் கட்சியில் குரல் எழுப்பவில்லை. அல்லது முடியவில்லை. இது அவரது தோல்லிவியின் இரண்டாம் கட்டம்..2021ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியை இழந்த பிறகு, தி.மு.க. மீது கடுமையான விமர்சனங்களை வைக்க வேண்டிய தருணங்களில் ஒருங்கிணைப்பாளர் அதனைச் செய்யவில்லை. பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலையும் தாங்கள்தான் உண்மையான எதிர்க்கட்சி என்று பேசிய போதும் அதைக் கண்டித்து பன்னீர் பேசவில்லை. கட்சித் தொண்டர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தைத் தந்தது..தமிழக பா.ஜ.க.வின் 'எதிர்க்கட்சி நாங்கள்தான்' என்ற குரலை சாமர்த்தியமாகப் பயன்படுத்திக்கொண்டவர் எடப்பாடி. இம்மாதிரி நிலையைத் தவிர்க்கத் தான் கட்சிக்கு ஒற்றைத் தலமையிருக்கவேண்டும் என்ற கருத்தை தன் ஆதரவாளர்களின் மூலம் முன்னெடுத்து அதை பொதுக்குழுவில் ஓங்கி ஒலிக்கச் செய்திருக்கிறார்..இனி என்ன செய்யப்போகிறார் ஓ. பன்னீர்செல்வம்?.நிழல் யுத்தத்தின் முதல் சுற்றில் எடப்பாடி வென்றிருக்கிறார். ஆனால், இன்னும் சில சுற்றுகளும் இருக்கின்றன. பன்னீர்செல்வத்தின் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது என்ற குரலை நீதிமன்றம் வழியாக சந்திக்க பன்னீர் முடிவுசெய்தால் அடுத்த சுற்று ஒரு பெரிய இடைவேளைக்குப் பின்னர்தான் தொடங்கும். நிழல் யுத்தமாக மாறியிருக்கும் . தர்மயுத்தம் முடிவுக்கு வர நீண்ட நாட்கள் ஆகும். அதற்குள் எதுவும் நடக்கலாம். பன்னீர்செல்வத்தின் தனிக்கட்சி தொடக்கம், அது பா.ஜ.க.வுடன் கூட்டணி என்பது உள்பட.