சேத்துமான் – சினிமா விமர்சனம்.– இராமானுஜம்.எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய 'வறுகறி' என்ற சிறுகதையே 'சேத்துமான்' என்ற பெயரில் படமாக்கப்பட்டுள்ளது. இலக்கியத்தில் இருந்து சினிமா திரைக்கதை என்பது அவ்வப்போது தமிழ் சினிமாவில் அபூர்வமாக நடக்கும்..மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் தொடங்கி வைத்தது தொடரவில்லை என்றாலும் தமிழ் சினிமாவில் அவ்வப்போது எளிய மக்களின் வாழ்க்கை பற்றி வெளியான சிறுகதை, நாவல்கள் படமாக்கப்படுகின்றன. அந்த வரிசையில் சேத்துமான் இணைந்திருக்கிறது..தலித்தியம், தலித் உரிமைகளை முன்னிறுத்தி செயல்படுபவராகக் கூறப்படும் இயக்குநர் பா.ரஞ்சித் இதுபோன்ற முயற்சிகளுக்கு முதலீடு செய்வது தமிழ் சினிமாவுக்கான வரம் என்றே கூறலாம். வழக்கமான வணிக சினிமா அதற்கான திரைக்கதைகளுக்கு என இதுவரை சொல்லப்பட்டிருக்கும் வரைமுறைகளை மீறியிருக்கிறது சேத்துமான் திரைப்படம்..தமிழ்நாட்டின் மேற்கில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை மையமாகக் கொண்டு கதை நிகழ்கிறது. சேத்துமான் என்பது பன்றியைக் குறிப்பது. 'மாட்டுக்கறி உண்ணாதே' என்று சொல்லும் அரசியலுக்கு எதிராகப் பேசினால் 'நீங்கள் பன்றிக்கறி பற்றிப் பேசுவீர்களா?' என்று எதிர்க்கேள்வி வரும், அதையும் பேசுவோம் திரைப்படம் மூலமாக என களத்தில் இறங்கியிருக்கிறார் இயக்குநர் தமிழ்..படத்தில் எந்தவொரு இடத்திலும் நாங்கள் இதைப் பேசுகிறோம் என்று சொல்லிப் பேசவில்லை, கதாபாத்திரங்கள் பேசுகின்றன. படத்தில் தாத்தாவாக வாழ்ந்திருக்கும் மாணிக்கம், பேரனாக வரும் சிறுவன் அஸ்வின், பண்ணாடி எனும் ஆதிக்கச் சாதிக்காரராக வரும் பிரசன்னா, பன்றி வளர்க்கும் குமார், பண்ணாடியின் மனைவி சாவித்திரி உள்ளிட்ட எல்லா கதாபாத்திரங்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை நிறைவாகச் செய்திருக்கிறார்கள்..தமிழ்நாட்டின் வட்டார வழக்குகளில் ஒன்றான கொங்குத் தமிழ் என்றால், ஏனுங்க என்னங்க என்பது மட்டுமே என்கிற இதுவரையிலான நடைமுறையை மாற்றி எதார்த்தத் தமிழை படமெங்கும் பேச வைத்திருக்கிறார் வசனகர்த்தா பெருமாள் முருகன்..தாத்தாவும் பேரனும் நடந்து வரும் முதல் காட்சியில் தொடங்கி கடைசி வரை இயக்குநருக்கு இணையாகக் காட்சிகளில் கதை சொல்லிச் செல்கிறார் ஒளிப்பதிவாளர் பிரதீப் காளிராஜா. பண்ணாடி வீட்டில் இருக்கும் சிறுவர்கள் ஓட்டும் மிதிவண்டி முதல் பந்துகள் வரை அனைத்தையும் அஸ்வின் சலனமின்றிப் பார்க்கும் காட்சியின் தாக்கம் பார்வையாளன் மனதைவிட்டு அகலாது பல மணி நேரங்களுக்கு நீடிக்கிறது..பிந்துமாலினியின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்தின் தரத்தை உயர்த்திக் காட்டுகிறது. இந்திய நாட்டின் குடியரசு தலைவராக தலித் ஒருவர் வர முடியும், அதே வேளையில் தலித் ஒருவர் சாதியின் பெயரால் கொடுமைப்படுத்தப்படுவதை ஒரு காட்சிக்குள்ளேயே கொண்டுவந்து எல்லோர் முகத்திலும் அறைந்திருக்கிறார் இயக்குநர் தமிழ்..சேத்துமான் திரைப்படம் மே 27 அன்று ஓடிடியில் வெளியாகி உள்ளது..நன்றி: மின்னம்பலம்
சேத்துமான் – சினிமா விமர்சனம்.– இராமானுஜம்.எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய 'வறுகறி' என்ற சிறுகதையே 'சேத்துமான்' என்ற பெயரில் படமாக்கப்பட்டுள்ளது. இலக்கியத்தில் இருந்து சினிமா திரைக்கதை என்பது அவ்வப்போது தமிழ் சினிமாவில் அபூர்வமாக நடக்கும்..மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் தொடங்கி வைத்தது தொடரவில்லை என்றாலும் தமிழ் சினிமாவில் அவ்வப்போது எளிய மக்களின் வாழ்க்கை பற்றி வெளியான சிறுகதை, நாவல்கள் படமாக்கப்படுகின்றன. அந்த வரிசையில் சேத்துமான் இணைந்திருக்கிறது..தலித்தியம், தலித் உரிமைகளை முன்னிறுத்தி செயல்படுபவராகக் கூறப்படும் இயக்குநர் பா.ரஞ்சித் இதுபோன்ற முயற்சிகளுக்கு முதலீடு செய்வது தமிழ் சினிமாவுக்கான வரம் என்றே கூறலாம். வழக்கமான வணிக சினிமா அதற்கான திரைக்கதைகளுக்கு என இதுவரை சொல்லப்பட்டிருக்கும் வரைமுறைகளை மீறியிருக்கிறது சேத்துமான் திரைப்படம்..தமிழ்நாட்டின் மேற்கில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை மையமாகக் கொண்டு கதை நிகழ்கிறது. சேத்துமான் என்பது பன்றியைக் குறிப்பது. 'மாட்டுக்கறி உண்ணாதே' என்று சொல்லும் அரசியலுக்கு எதிராகப் பேசினால் 'நீங்கள் பன்றிக்கறி பற்றிப் பேசுவீர்களா?' என்று எதிர்க்கேள்வி வரும், அதையும் பேசுவோம் திரைப்படம் மூலமாக என களத்தில் இறங்கியிருக்கிறார் இயக்குநர் தமிழ்..படத்தில் எந்தவொரு இடத்திலும் நாங்கள் இதைப் பேசுகிறோம் என்று சொல்லிப் பேசவில்லை, கதாபாத்திரங்கள் பேசுகின்றன. படத்தில் தாத்தாவாக வாழ்ந்திருக்கும் மாணிக்கம், பேரனாக வரும் சிறுவன் அஸ்வின், பண்ணாடி எனும் ஆதிக்கச் சாதிக்காரராக வரும் பிரசன்னா, பன்றி வளர்க்கும் குமார், பண்ணாடியின் மனைவி சாவித்திரி உள்ளிட்ட எல்லா கதாபாத்திரங்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை நிறைவாகச் செய்திருக்கிறார்கள்..தமிழ்நாட்டின் வட்டார வழக்குகளில் ஒன்றான கொங்குத் தமிழ் என்றால், ஏனுங்க என்னங்க என்பது மட்டுமே என்கிற இதுவரையிலான நடைமுறையை மாற்றி எதார்த்தத் தமிழை படமெங்கும் பேச வைத்திருக்கிறார் வசனகர்த்தா பெருமாள் முருகன்..தாத்தாவும் பேரனும் நடந்து வரும் முதல் காட்சியில் தொடங்கி கடைசி வரை இயக்குநருக்கு இணையாகக் காட்சிகளில் கதை சொல்லிச் செல்கிறார் ஒளிப்பதிவாளர் பிரதீப் காளிராஜா. பண்ணாடி வீட்டில் இருக்கும் சிறுவர்கள் ஓட்டும் மிதிவண்டி முதல் பந்துகள் வரை அனைத்தையும் அஸ்வின் சலனமின்றிப் பார்க்கும் காட்சியின் தாக்கம் பார்வையாளன் மனதைவிட்டு அகலாது பல மணி நேரங்களுக்கு நீடிக்கிறது..பிந்துமாலினியின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்தின் தரத்தை உயர்த்திக் காட்டுகிறது. இந்திய நாட்டின் குடியரசு தலைவராக தலித் ஒருவர் வர முடியும், அதே வேளையில் தலித் ஒருவர் சாதியின் பெயரால் கொடுமைப்படுத்தப்படுவதை ஒரு காட்சிக்குள்ளேயே கொண்டுவந்து எல்லோர் முகத்திலும் அறைந்திருக்கிறார் இயக்குநர் தமிழ்..சேத்துமான் திரைப்படம் மே 27 அன்று ஓடிடியில் வெளியாகி உள்ளது..நன்றி: மின்னம்பலம்