"நாக்குமேல பல்லு போட்டு பேசறே நீ? என்ன சொல்ற? அப்ப நான் யாரு?".மகாதேவன் கர்ஜித்தார்..வெளியே கண்ணாடி கதவிற்கு பின்னால் யாரோ ஒரு கஸ்டமர் அவரைப் பார்ப்பதற்காக வெகுநேரமாகக் காத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் அவரை கண்டுகொள்ளவில்லை அவர்..நீலிமா மௌனமாக இருந்தாள்..அவருடன் புலி ஆடு புல்லுக்கட்டு விளையாட விரும்பவில்லை..அவளைப் பொறுத்தவரை நெற்றி நிறைய விபூதி, அதன் நடுவே செர்ரி பழமாட்டம் குங்குமம், நீட்டான ஃபுல் ஷர்ட் அணிந்து, ரேமண்ட்ஸ் பேண்ட்டில் 'டக்இன்' பண்ணி ராக்ஃபீல்ட் ஷூவில் கால் நுழைத்திருக்கும் மகாதேவன் ஒரு ஹிப்போக்கிரட்.எக்ஸண்ட்ரிக்.."என்ன வாயில கொழுக்கட்டையா? ஓரு மேனஜர் கேட்கிறேன். எங்க மறுபடி டெல்…டெல்…நீ யாருக்குப் பயப்படுவேன்னு சொன்ன?'' பல்லைக் கடித்துக் கொண்டு சீட் நுனிக்கு வந்து கன்னத்தில் கைவைத்து முழங்கையால் முட்டுக்கொடுத்தார்.."குடிகாரனுக்கும் மனநலம் பாதிக்கப்பட்டவனுக்கும் பயப்படுவேன் சார். காரணம் இந்த இரண்டுபேர்தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் காரணம் இன்றி சம்பந்தப்படாதவர்கள காயப்படுத்துவார்கள்''."அப்போ என்ன குடிகாரன்… மென்டல்னு சொல்றியா?".அப்போது அந்த கஸ்டமர் கதவைத்தள்ளி தலையை மட்டும் காட்டி எரிச்சலுடன் "சார் நான் ரொம்ப நேரமா காத்திருக்கேன்…".அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு சட்டென்று கிளம்பினாள் நீலிமா.."இரு வச்சிக்கிறேன்… உள்ள வாய்யா" என்றார் வந்தவரைப் பார்த்து..வெளியே கலங்கிய கண்களுடன் வந்த நீலிமாவை ஊழியர்கள் பார்த்தார்கள்..அவர்கள் விழிகளில் தொக்கி நிற்கும் பார்வையின் அர்த்தம் அவளுக்குத் தெரியும்..ரெஸ்ட் ரூமில் போய் அழுதுவிட்டு வந்து சீட்டில் உட்கார்ந்தாள்.."இன்னிக்கு என்ன ரொமான்ஸ்?" என்று வந்தான் பாலன்..அவளிடம் நூல் விட்டுத் தோற்று அவள் மீது காண்டாயிருக்கும் வில்லன்..'பேசாம போயிரு… செருப்படி வாங்கறதுக்குள்ளே' மனதால் திட்டினாள் அவனை..அவள் பதில் சொல்லாமல் அவனைப் பார்த்துவிட்டு வேலையைத் தொடர்ந்தாள்..சுதா அவள் சப்போர்ட். ஆதரவாய் வந்து தோளைத் தொட்டவள் நீலிமாவின் கலங்கிய கண்களைப் பார்த்து புரிந்துக்கொண்டாள். ஒரு கண் அதிகமாக சிவந்து இருந்தது..''நேற்று இரவு சமைக்கும் போது கண்ணில் கடுகு வெடித்து தெறித்து விட்டது. பயங்கர வலி. சமாளித்துவிட்டு காலையில் பார்க்கும்போது கோவைப் பழமாட்டம் சிவந்து விட்டது.டாக்டரிடம் போய் காண்பித்துவர லேட். மேனேஜரிடம் மாட்டிக் கொண்டேன். தாமதத்தின் காரணம் சொன்னேன்…."அட கண் இப்படி சிவந்திருக்கே" என்றவர் சட்டென்று எழுந்து வந்து கட்டை விரலால் என் கண் இமையை அழுத்தி இழுக்க, "சார்…சார்… என்ன சார் இது…யாரும் பார்க்கப் போறாங்க…" என்று படார் என்று கோபத்தில் தள்ளிவிட, கோபம் வந்து விட்டது அவருக்கு.."யார் பார்த்தா என்னம்மா? உன் வயதென்ன என் வயதென்ன?"."சார் இது நான் கேட்கவேண்டிய கேள்வி!'."நான் மேனேஜர்"."இல்ல டேமேஜர்"."ஓவரா பேசறே! புருஷன சீக்குல பறிகொடுத்து ஒரு வருஷம் ஆகலே…கொஞ்சம் கூட முகத்துல சோகம் இல்லியே? வகை வகையாய் சமையல் பண்ணி வக்கணையாய் எடுத்து வறீயாமே? கொஞ்சம் நாக்கை அடக்கினாத்தானே எல்லாமே கட்டுப்படும்…?''.ரீப்ளே பண்ணிவிட்டு அழுதாள் நீலிமா.."சுதா… தாங்கலைடி…"."வாடி…எல்லோருமா போய் கேட்போம்…குட்டக்குட்டக் குனியறவனும் முட்டாள்… குனியக் குனியக் குட்றவனும் முட்டாள்…"."வேண்டாம்டி…எனக்கு இந்த வேலை கன்ஃபர்ம் ஆறது இவன் கையில தான் இருக்கு…ப்ரஃபேஷன் பீரியட் வரைக்கும் பல்லைக் கடிச்சிக்கிறேன்…பிறகு ட்ரான்ஸ்ஃபர் ஆயிரும்…''."இவருக்கு கடவுள் நிச்சயம் தண்டணை தராமல் விடமாட்டார்" என்றாள் ரேகா..அவள் சொன்ன மாதிரி கடவுள் அவருக்கு தண்டனை கொடுக்கப் போகிறார் என்று அப்போது யாருக்கும் தெரியவில்லை..அன்று வெள்ளிக்கிழமை..கிச்சனில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள் நீலிமா..சுதா அவளிடம் வெஜ் பிரியாணி கேட்டிருந்தாள். செய்து எடுத்துக்கொண்டு கிளம்பும்போது போன்..மகாதேவன்..'ஐயையோ… புறப்படற நேரத்துல எதுக்கு இந்தபிள்ளைப் பூச்சி? சகுனம் சரியில்லியே'."குட் மார்னிங் சார்…''."போன உடனே எடுக்கறதில்லையா…"."கொஞ்சம் பிசியாக இருந்துட்டேன் சார்…"."என்னத்த கிழிக்கிற…ஆளும் இல்ல…சீக்கிரம் எழுதிருச்சி வீட்டு வேலைய ஆரம்பிக்க வேண்டியதுதானே?'.காலங் கார்த்தாலே காதில் காய்ச்சிய ஈயம். அசிங்கமான ஈயம்.."வீட்டுக்கு வந்து ஒரு ஃபைலை வாங்கிட்டு ஆஃபிஸிற்குப்போ… இன்ஸ்பெக்க்ஷன் ஆஃபீசர் கேட்டிருக்காரு. நான் மல்ஹோத்ரா கோடவுண் இன்ஸ்பெக்க்ஷன் போயிட்டு வந்திடறேன்… அவர்ட்ட எதுவும் சொல்லித் தொலைக்காதே.."."சரி சார்"."கொஞ்சம் வாய் நிறைய 'சரி'ன்னு சொல்லித் தொலையேன்".போனை வைத்து விட்டார்..முதல்முதலாய் அவர் வீட்டிற்குப் போகிறாள் நீலிமா..நடுக்கம் பயம் எல்லாம் வந்தது..எதற்கும் இருக்கட்டும் என்று 'பெப்பர் ஸ்பிரே' எடுத்துக் கொண்டாள்..அன்றைக்கு கேபினிலேயே கன்னத்தை அழுத்தியவர்..வீட்டில் கோக்குமாக்காக நடந்து கொண்டால்?.வீடு அழகாக இருந்தது. பக்தி பாடல் மெதுவாக கேட்டது. பூ மணம், பத்தி வாசம் மிக ரம்மியமாக இருந்தது. ஸ்வாமி படங்களில் பூச்சரங்கள் அழகாக தொங்கிக் கொண்டிருந்தன..அவளுக்கு வியப்பு தாங்கவில்லை..இது மகாதேவன் வீடுதானா? மாறி வந்து விட்டோமா?.நாக்கிலும் மனதிலும் நாராசத்தைக் குடியமர்த்தி இருக்கும் மேனேஜர் வீட்டிலா இப்படி ஒரு கோவில்?.ஏதோ ஒரு ஸ்லோகம் மெல்ல அவள் காதருகே வந்து கிசுகிசுத்துக் கொண்டிருந்தது..குனிந்து கிண்ணத்தில் இருந்த சந்தனத்தை விரலால் தொட்டு நெற்றியில் வைத்தபோது கிறீச் சென்ற சத்தம். திரும்பினாள்..வீல்சேர் ஒன்றில் ஒரு பெண்மணி..அவளைப் பார்த்ததும் ஒரு கணம் அசைவற்று நின்றுவிட்டாள் நீலிமா.காரணம் அந்தப் பெண் முகத்தில் அப்படி ஒரு தேஜஸ்.வட்ட முகம்.எலுமிச்சை நிறம்.பெரிய பொட்டு. புராணப் படத்தில் வரும் கே.ஆர். விஜயா மாதிரி அழகாக இருந்தாள். தன்னையும் அறியாமல் கைகூப்பினாள் நீலிமா.." நான் புவனா. அவர் ஒய்ஃப்''.அவள் கையில் ஒரு ஃபைல்.."நீ வருவதாகச் சொன்னார். ஜில்லுதானே நீ?" என்றாள் புன்சிரிப்பு வழிய.."இல்லை நீலிமா"."உன்னை 'ஜில்லு'ன்னுதான் சொல்வார்…".'அடப்பாவி. எனக்கு 'ஜில்லு'ன்னு பேர்வேற வேச்சு குஷியடிக்கிறியா?'."வெளியே போயிட்டார். வந்தா கொடுக்கச் சொன்னார்…''.ஃபைலை நீட்டவும் பெற்றுக்கொண்டாள் நீலிமா.."உன்னப் பார்த்தா ரொம்ப அழகா இருக்கு. பேசிகிட்டே இருக்கணும் போல இருக்கு ஜில்லு…".நீலிமாவின் கைகளைப் பிடித்துக் கொண்டாள் அவள். கண்கள் கூட பனித்திருந்த மாதிரி தெரிந்தது.."ஜில்லு வேண்டாம்மா…நீலிமான்னே கூப்பிடுவீங்களா ப்ளீஸ்"."ஓ சரிம்மா…என் பொண்ணு சொன்னா மறுபேச்சு உண்டா…வா..இரண்டு நிமிஷம் இரேன் நீலிமா எனக்காக.."."சரிம்மா… ஆஃபீஸிற்கு டயம் இருக்கு".நீலிமாவிற்கு பெரும் வியப்பாக இருந்தது. சில நிமிடங்களில் மகாதேவன் மனைவியிடம் தன் மனது மளமள வென்று விழுந்துவிடும் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை..வீல் சேரைத் தள்ளிக்கொண்டுபோய் படுக்கை அருகே இறக்கி மெள்ள படுக்கையில் படுக்க வைத்தாள்..''என்னைப் பார்த்துக்க மூணு வேளை சிஸ்டர் வருவா. சாப்பாடு கொடுப்பா…போயிருவா. சர்வம் எந்திரகதி…அவரோ சதா ஆஃபீஸ் ஆஃபீஸ்னு கதி…எனக்குன்னு யாரும் இல்ல..".அழகிய அம்மன் சிலை ஒன்று பேசுவது போலவே இருந்தது நீலிமாவுக்கு.."காஃபி போட்டுத் தரவா" என்ற நீலிமாவை கருணை பொங்கப் பார்த்த புவனா, " சரி" என்று தலையசைக்க நீலிமா கிச்சனில் நுழைந்து காஃபி எடுத்துவந்தாள்.."ஓ பிரமாதம்..! இதே பால் இதே டிக்காஷன்…அதுகளுக்கு இப்படி போடத் தெரியலையே'' ரசித்துக் குடித்தவள் நீலிமாவை விசாரித்தாள்..தன் சோகக் கதையை மிக மிகச் சுருக்கமாகச் சொல்லி முடித்த நீலிமாவிடம்,.''சோதனை இல்லாத மனுஷாளே இல்லை… பகவான் "நல்லவர்களை சோதிப்பான் கைவிடமாட்டான்"… சிக்கெனப் பிடிச்சிக்கணும்..'யானுனைத் தொடர்ந்து சிக்கெனெப் பிடித்தேன்…பாடியிருக்காரே ஞானசம்பந்தர்.." சொல்லிவிட்டு சிரித்தாள் புவனா..தன்னைப் பற்றி சொன்னாள்.."ஏகப்பட்ட சொத்துடன் மகாதேவனைக் கைப்பிடித்தேன். சிலவருஷத்திலேயே ஸ்ட்ரோக்… இப்படி ஆகிருச்சு…குழந்தையில்லை… என் சொத்துக்களுக்காக அவர் என்னை விடவில்லை… இங்க நான் வைக்கிறதுதான் சட்டம்..".நீலிமா புவனாவை உற்றுப்பார்த்தாள். சின்ன வயதில் இருந்தே இப்படி வாழ்வைத் தொலைத்து விட்ட இந்த அழகுச் சிலையின் முகத்தில் எந்த ஒரு சலனமும் இல்லை. இதெல்லாம் சொன்னது கூட அறிமுகத்துக்காகத்தான் என்று தோன்றியது..என்ன தோன்றியதோ சுதாவிற்காக கொண்டுவந்த வெஜ்பிரியாணியை அவளுக்கு கொடுத்தாள்."மதியம் சாப்பிடுங்கம்மா…நான் பண்ணியது"."அட… இப்பவே சாப்பிடறேன்…காலைல ஓட்ஸ்தான்…நாக்கு செத்து கிடக்கு…".ஆர்வமாக வாங்கிச் சாப்பிட்டுவிட்டு நீலிமா நீட்டிய பௌலில் கை கழுவிக் கொண்டே சொன்னாள்: "அற்புதமா இருக்குடா உன் சமையல்…நல்ல எனெர்ஜி…! இங்க அதுக சமைக்கிறது சொல்றதுக்கில்ல… இங்கல்லாம் வெளிச்சம் இருக்கும்… ஒளி இருக்காது…கருணை இருக்கும்… பாசம் இருக்காது… உணவில்கூட ருசி இருக்கும்… சுவை இருக்காது…புரியுதா நீலிமா..? புரியறது கஷ்டம்…"."புரியுதும்மா.."."எதுலயும் உயிர் இருக்கணும் நீலிமா… இவ்வளவு விஞ்ஞானம் வளர்ந்து இருக்கு. டெக்னாலஜி சூப்பர். மேதமேடிக்ஸ்… கால்குலேஷன் இருக்கு… ஆனா, ஒருவன் தஞ்சைப் பெரியகோயிலையோ தாஜ்மகாலையோ கட்டமுடியுமா? அதுலெல்லாம் உயிர் இருக்கு… அந்த உயிருக்குக் காரணம் ராஜராஜனோ ஷாஜகானோ இல்ல…அதற்காக பிசைந்த மண்ணில், பதித்த கல்லில் தன் உணர்வைக் கொட்டியிருக்கும் வேலையாட்களின் உயிர்…".நீலிமா புவனாவைப் பார்த்து வியந்து நின்றபோது-.ஆஃபிஸில் இருந்து பதற்ற போன்..இன்ஸ்பெக்க்ஷனுக்கு சென்ற மகாதேவனுக்கு திடீர் மயக்கம்.சரிந்து விழுந்து தலையில் அடி..மெர்லின் ஆஸ்பத்ரி ஐசியூவுல இருக்கிறாராம். சீரியசாம்..மறுபடி போன்.."ஹா… ஹா என்று சிரித்தவாறே வில்லன் பாலன்..''நீலிமா மகாதேவன் மண்டயப் போட்றுவாரு போல. அதுக்குப் பிறகு உன் பாடு திண்டாட்டம்" சிரித்தான்.."நான் சென்ஸ்"."ஹா… ஹா… தானாடவிட்டாலும் தசை ஆடுமே?"."சீ ராஸ்கல்"."ஹா… ஹா".போனைத் துண்டித்தான்..புவனாவிடம் கவலைப்படாமல் இருக்கச் சொல்லிவிட்டு அவசரமாக கிளம்பினாள்..மகாதேவனுக்கு எமெர்ஜென்சி ஆப்பரேஷன். இரத்தம் அதிகம் தேவைப்பட்டது. ஆப்பரேஷன் காம்ளிகேஷன் ஆகிவிட்டது. இருபத்தினாலு மணி நேரம் போகவேண்டும் என்று டாக்டர் சொல்லிவிட்டார்..நீலிமா சட்டென்று ஒரு முடிவெடுத்தாள்..சுதாவிடம் மட்டும் ஐடியாவைச் சொன்னாள்..''என்னடி சொல்றே? இப்பவே அப்படி இப்படிங்கிறாங்க"."நான் கவலைப்படலடி… எனக்கு மனசு கேட்கல… இவரு டிஸ்சார்ஜ் ஆறதுக்கு பத்து நாள் ஆகும் போலிருக்கு…நான் புவனாம்மாவைப் பார்த்துக்கப் போறேன்… அவங்களுக்கு என் அருகாமை நிச்சயம் ஆறுதலாக இருக்கும்…"."நீலிமா…நீ ஒரு ஒண்டர்…உன்னை நினைத்து வியக்கிறேன்… நீ சொன்னா சரியாத்தான் இருக்கும் நீலிமா…! இதுக கெடக்குதுக".*** *** ***.ஒரு சிறுக்குழந்தைபோல் அழுதாள் புவனா, பத்து நாட்கள் முடிந்து நீலிமா தன் வீட்டிற்குக் கிளம்பும்போது.."தைரியமான நீங்களே கலங்கலாமாம்மா? இன்னும் சில நிமிடங்களில் அவர் வந்து விடுவார். அதற்குள் நான் கிளம்பவேண்டும்…"."சொந்த மக கூட இப்படி பார்த்துக்க மாட்டாம்மா.'கண்ணிலான் கண்பெற்று இழந்தார்போல' என்று கம்பராமாயணத்தில் ஒரு வரிவரும். அதன் முழு அர்த்தம் இப்போது தெரிகிறது நீலிமா. நீ எனக்கு அறிமுகமாகாமலே இருந்திருக்கலாம்"."அம்மா பெரிய வார்தைகள். நான் வரேன்மா"." நில்லு நீலிமா" கிளம்பியவளை சடன் பிரேக் போட வைத்தது புவனாவின் குரல்..நின்றாள்.."இனிமே உனக்குத் தொல்லை இருக்காது. இருந்தா அவருக்கு சொத்து இருக்காது.. இங்க நான் சொன்னதுதான் சட்டம்…போய்ட்டு வா".நீலிமா அதிர்ந்தாள்..மகாதேவன் இன்று டூட்டி ஜாய்ன்பண்ண ஆஃபீஸ் வருகிறார்..வழக்கம் போல் வேகமாக கிளம்புகிறாள் நீலிமா. இந்த பாழாய்ப்போன ட்ராஃபிக்ஜாம்..சில நிமிடங்கள் லேட். கண்ணாடி கேபினுக்குள் அவர் உட்கார்ந்து இருக்கிறார். சக உழியர்கள் அவர் எதிரே நின்று கைகட்டி பணிவாக விசாரித்துக் கொண்டிருப்பது தெரிகிறது..பயத்துடனே கதவை மெள்ளத்தள்ளி நுழைய அவளைப்பார்த்த மகாதேவன் சட்டென்று எழுந்து "வாங்கம்மா" என்கிறார்..மற்றவர்கள் அதிர்கிறார்கள்.."சார்… நீங்க மேனேஜர் சார்… உட்காருங்க சார்" என்று சொல்ல நினைக்கிறாள் நீலிமா..சொல்லவில்லை..'இங்க நான் சொன்னதுதான் சட்டம்'.புவனா சொன்னது நினைவில் வந்து போகிறது!
"நாக்குமேல பல்லு போட்டு பேசறே நீ? என்ன சொல்ற? அப்ப நான் யாரு?".மகாதேவன் கர்ஜித்தார்..வெளியே கண்ணாடி கதவிற்கு பின்னால் யாரோ ஒரு கஸ்டமர் அவரைப் பார்ப்பதற்காக வெகுநேரமாகக் காத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் அவரை கண்டுகொள்ளவில்லை அவர்..நீலிமா மௌனமாக இருந்தாள்..அவருடன் புலி ஆடு புல்லுக்கட்டு விளையாட விரும்பவில்லை..அவளைப் பொறுத்தவரை நெற்றி நிறைய விபூதி, அதன் நடுவே செர்ரி பழமாட்டம் குங்குமம், நீட்டான ஃபுல் ஷர்ட் அணிந்து, ரேமண்ட்ஸ் பேண்ட்டில் 'டக்இன்' பண்ணி ராக்ஃபீல்ட் ஷூவில் கால் நுழைத்திருக்கும் மகாதேவன் ஒரு ஹிப்போக்கிரட்.எக்ஸண்ட்ரிக்.."என்ன வாயில கொழுக்கட்டையா? ஓரு மேனஜர் கேட்கிறேன். எங்க மறுபடி டெல்…டெல்…நீ யாருக்குப் பயப்படுவேன்னு சொன்ன?'' பல்லைக் கடித்துக் கொண்டு சீட் நுனிக்கு வந்து கன்னத்தில் கைவைத்து முழங்கையால் முட்டுக்கொடுத்தார்.."குடிகாரனுக்கும் மனநலம் பாதிக்கப்பட்டவனுக்கும் பயப்படுவேன் சார். காரணம் இந்த இரண்டுபேர்தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் காரணம் இன்றி சம்பந்தப்படாதவர்கள காயப்படுத்துவார்கள்''."அப்போ என்ன குடிகாரன்… மென்டல்னு சொல்றியா?".அப்போது அந்த கஸ்டமர் கதவைத்தள்ளி தலையை மட்டும் காட்டி எரிச்சலுடன் "சார் நான் ரொம்ப நேரமா காத்திருக்கேன்…".அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு சட்டென்று கிளம்பினாள் நீலிமா.."இரு வச்சிக்கிறேன்… உள்ள வாய்யா" என்றார் வந்தவரைப் பார்த்து..வெளியே கலங்கிய கண்களுடன் வந்த நீலிமாவை ஊழியர்கள் பார்த்தார்கள்..அவர்கள் விழிகளில் தொக்கி நிற்கும் பார்வையின் அர்த்தம் அவளுக்குத் தெரியும்..ரெஸ்ட் ரூமில் போய் அழுதுவிட்டு வந்து சீட்டில் உட்கார்ந்தாள்.."இன்னிக்கு என்ன ரொமான்ஸ்?" என்று வந்தான் பாலன்..அவளிடம் நூல் விட்டுத் தோற்று அவள் மீது காண்டாயிருக்கும் வில்லன்..'பேசாம போயிரு… செருப்படி வாங்கறதுக்குள்ளே' மனதால் திட்டினாள் அவனை..அவள் பதில் சொல்லாமல் அவனைப் பார்த்துவிட்டு வேலையைத் தொடர்ந்தாள்..சுதா அவள் சப்போர்ட். ஆதரவாய் வந்து தோளைத் தொட்டவள் நீலிமாவின் கலங்கிய கண்களைப் பார்த்து புரிந்துக்கொண்டாள். ஒரு கண் அதிகமாக சிவந்து இருந்தது..''நேற்று இரவு சமைக்கும் போது கண்ணில் கடுகு வெடித்து தெறித்து விட்டது. பயங்கர வலி. சமாளித்துவிட்டு காலையில் பார்க்கும்போது கோவைப் பழமாட்டம் சிவந்து விட்டது.டாக்டரிடம் போய் காண்பித்துவர லேட். மேனேஜரிடம் மாட்டிக் கொண்டேன். தாமதத்தின் காரணம் சொன்னேன்…."அட கண் இப்படி சிவந்திருக்கே" என்றவர் சட்டென்று எழுந்து வந்து கட்டை விரலால் என் கண் இமையை அழுத்தி இழுக்க, "சார்…சார்… என்ன சார் இது…யாரும் பார்க்கப் போறாங்க…" என்று படார் என்று கோபத்தில் தள்ளிவிட, கோபம் வந்து விட்டது அவருக்கு.."யார் பார்த்தா என்னம்மா? உன் வயதென்ன என் வயதென்ன?"."சார் இது நான் கேட்கவேண்டிய கேள்வி!'."நான் மேனேஜர்"."இல்ல டேமேஜர்"."ஓவரா பேசறே! புருஷன சீக்குல பறிகொடுத்து ஒரு வருஷம் ஆகலே…கொஞ்சம் கூட முகத்துல சோகம் இல்லியே? வகை வகையாய் சமையல் பண்ணி வக்கணையாய் எடுத்து வறீயாமே? கொஞ்சம் நாக்கை அடக்கினாத்தானே எல்லாமே கட்டுப்படும்…?''.ரீப்ளே பண்ணிவிட்டு அழுதாள் நீலிமா.."சுதா… தாங்கலைடி…"."வாடி…எல்லோருமா போய் கேட்போம்…குட்டக்குட்டக் குனியறவனும் முட்டாள்… குனியக் குனியக் குட்றவனும் முட்டாள்…"."வேண்டாம்டி…எனக்கு இந்த வேலை கன்ஃபர்ம் ஆறது இவன் கையில தான் இருக்கு…ப்ரஃபேஷன் பீரியட் வரைக்கும் பல்லைக் கடிச்சிக்கிறேன்…பிறகு ட்ரான்ஸ்ஃபர் ஆயிரும்…''."இவருக்கு கடவுள் நிச்சயம் தண்டணை தராமல் விடமாட்டார்" என்றாள் ரேகா..அவள் சொன்ன மாதிரி கடவுள் அவருக்கு தண்டனை கொடுக்கப் போகிறார் என்று அப்போது யாருக்கும் தெரியவில்லை..அன்று வெள்ளிக்கிழமை..கிச்சனில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள் நீலிமா..சுதா அவளிடம் வெஜ் பிரியாணி கேட்டிருந்தாள். செய்து எடுத்துக்கொண்டு கிளம்பும்போது போன்..மகாதேவன்..'ஐயையோ… புறப்படற நேரத்துல எதுக்கு இந்தபிள்ளைப் பூச்சி? சகுனம் சரியில்லியே'."குட் மார்னிங் சார்…''."போன உடனே எடுக்கறதில்லையா…"."கொஞ்சம் பிசியாக இருந்துட்டேன் சார்…"."என்னத்த கிழிக்கிற…ஆளும் இல்ல…சீக்கிரம் எழுதிருச்சி வீட்டு வேலைய ஆரம்பிக்க வேண்டியதுதானே?'.காலங் கார்த்தாலே காதில் காய்ச்சிய ஈயம். அசிங்கமான ஈயம்.."வீட்டுக்கு வந்து ஒரு ஃபைலை வாங்கிட்டு ஆஃபிஸிற்குப்போ… இன்ஸ்பெக்க்ஷன் ஆஃபீசர் கேட்டிருக்காரு. நான் மல்ஹோத்ரா கோடவுண் இன்ஸ்பெக்க்ஷன் போயிட்டு வந்திடறேன்… அவர்ட்ட எதுவும் சொல்லித் தொலைக்காதே.."."சரி சார்"."கொஞ்சம் வாய் நிறைய 'சரி'ன்னு சொல்லித் தொலையேன்".போனை வைத்து விட்டார்..முதல்முதலாய் அவர் வீட்டிற்குப் போகிறாள் நீலிமா..நடுக்கம் பயம் எல்லாம் வந்தது..எதற்கும் இருக்கட்டும் என்று 'பெப்பர் ஸ்பிரே' எடுத்துக் கொண்டாள்..அன்றைக்கு கேபினிலேயே கன்னத்தை அழுத்தியவர்..வீட்டில் கோக்குமாக்காக நடந்து கொண்டால்?.வீடு அழகாக இருந்தது. பக்தி பாடல் மெதுவாக கேட்டது. பூ மணம், பத்தி வாசம் மிக ரம்மியமாக இருந்தது. ஸ்வாமி படங்களில் பூச்சரங்கள் அழகாக தொங்கிக் கொண்டிருந்தன..அவளுக்கு வியப்பு தாங்கவில்லை..இது மகாதேவன் வீடுதானா? மாறி வந்து விட்டோமா?.நாக்கிலும் மனதிலும் நாராசத்தைக் குடியமர்த்தி இருக்கும் மேனேஜர் வீட்டிலா இப்படி ஒரு கோவில்?.ஏதோ ஒரு ஸ்லோகம் மெல்ல அவள் காதருகே வந்து கிசுகிசுத்துக் கொண்டிருந்தது..குனிந்து கிண்ணத்தில் இருந்த சந்தனத்தை விரலால் தொட்டு நெற்றியில் வைத்தபோது கிறீச் சென்ற சத்தம். திரும்பினாள்..வீல்சேர் ஒன்றில் ஒரு பெண்மணி..அவளைப் பார்த்ததும் ஒரு கணம் அசைவற்று நின்றுவிட்டாள் நீலிமா.காரணம் அந்தப் பெண் முகத்தில் அப்படி ஒரு தேஜஸ்.வட்ட முகம்.எலுமிச்சை நிறம்.பெரிய பொட்டு. புராணப் படத்தில் வரும் கே.ஆர். விஜயா மாதிரி அழகாக இருந்தாள். தன்னையும் அறியாமல் கைகூப்பினாள் நீலிமா.." நான் புவனா. அவர் ஒய்ஃப்''.அவள் கையில் ஒரு ஃபைல்.."நீ வருவதாகச் சொன்னார். ஜில்லுதானே நீ?" என்றாள் புன்சிரிப்பு வழிய.."இல்லை நீலிமா"."உன்னை 'ஜில்லு'ன்னுதான் சொல்வார்…".'அடப்பாவி. எனக்கு 'ஜில்லு'ன்னு பேர்வேற வேச்சு குஷியடிக்கிறியா?'."வெளியே போயிட்டார். வந்தா கொடுக்கச் சொன்னார்…''.ஃபைலை நீட்டவும் பெற்றுக்கொண்டாள் நீலிமா.."உன்னப் பார்த்தா ரொம்ப அழகா இருக்கு. பேசிகிட்டே இருக்கணும் போல இருக்கு ஜில்லு…".நீலிமாவின் கைகளைப் பிடித்துக் கொண்டாள் அவள். கண்கள் கூட பனித்திருந்த மாதிரி தெரிந்தது.."ஜில்லு வேண்டாம்மா…நீலிமான்னே கூப்பிடுவீங்களா ப்ளீஸ்"."ஓ சரிம்மா…என் பொண்ணு சொன்னா மறுபேச்சு உண்டா…வா..இரண்டு நிமிஷம் இரேன் நீலிமா எனக்காக.."."சரிம்மா… ஆஃபீஸிற்கு டயம் இருக்கு".நீலிமாவிற்கு பெரும் வியப்பாக இருந்தது. சில நிமிடங்களில் மகாதேவன் மனைவியிடம் தன் மனது மளமள வென்று விழுந்துவிடும் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை..வீல் சேரைத் தள்ளிக்கொண்டுபோய் படுக்கை அருகே இறக்கி மெள்ள படுக்கையில் படுக்க வைத்தாள்..''என்னைப் பார்த்துக்க மூணு வேளை சிஸ்டர் வருவா. சாப்பாடு கொடுப்பா…போயிருவா. சர்வம் எந்திரகதி…அவரோ சதா ஆஃபீஸ் ஆஃபீஸ்னு கதி…எனக்குன்னு யாரும் இல்ல..".அழகிய அம்மன் சிலை ஒன்று பேசுவது போலவே இருந்தது நீலிமாவுக்கு.."காஃபி போட்டுத் தரவா" என்ற நீலிமாவை கருணை பொங்கப் பார்த்த புவனா, " சரி" என்று தலையசைக்க நீலிமா கிச்சனில் நுழைந்து காஃபி எடுத்துவந்தாள்.."ஓ பிரமாதம்..! இதே பால் இதே டிக்காஷன்…அதுகளுக்கு இப்படி போடத் தெரியலையே'' ரசித்துக் குடித்தவள் நீலிமாவை விசாரித்தாள்..தன் சோகக் கதையை மிக மிகச் சுருக்கமாகச் சொல்லி முடித்த நீலிமாவிடம்,.''சோதனை இல்லாத மனுஷாளே இல்லை… பகவான் "நல்லவர்களை சோதிப்பான் கைவிடமாட்டான்"… சிக்கெனப் பிடிச்சிக்கணும்..'யானுனைத் தொடர்ந்து சிக்கெனெப் பிடித்தேன்…பாடியிருக்காரே ஞானசம்பந்தர்.." சொல்லிவிட்டு சிரித்தாள் புவனா..தன்னைப் பற்றி சொன்னாள்.."ஏகப்பட்ட சொத்துடன் மகாதேவனைக் கைப்பிடித்தேன். சிலவருஷத்திலேயே ஸ்ட்ரோக்… இப்படி ஆகிருச்சு…குழந்தையில்லை… என் சொத்துக்களுக்காக அவர் என்னை விடவில்லை… இங்க நான் வைக்கிறதுதான் சட்டம்..".நீலிமா புவனாவை உற்றுப்பார்த்தாள். சின்ன வயதில் இருந்தே இப்படி வாழ்வைத் தொலைத்து விட்ட இந்த அழகுச் சிலையின் முகத்தில் எந்த ஒரு சலனமும் இல்லை. இதெல்லாம் சொன்னது கூட அறிமுகத்துக்காகத்தான் என்று தோன்றியது..என்ன தோன்றியதோ சுதாவிற்காக கொண்டுவந்த வெஜ்பிரியாணியை அவளுக்கு கொடுத்தாள்."மதியம் சாப்பிடுங்கம்மா…நான் பண்ணியது"."அட… இப்பவே சாப்பிடறேன்…காலைல ஓட்ஸ்தான்…நாக்கு செத்து கிடக்கு…".ஆர்வமாக வாங்கிச் சாப்பிட்டுவிட்டு நீலிமா நீட்டிய பௌலில் கை கழுவிக் கொண்டே சொன்னாள்: "அற்புதமா இருக்குடா உன் சமையல்…நல்ல எனெர்ஜி…! இங்க அதுக சமைக்கிறது சொல்றதுக்கில்ல… இங்கல்லாம் வெளிச்சம் இருக்கும்… ஒளி இருக்காது…கருணை இருக்கும்… பாசம் இருக்காது… உணவில்கூட ருசி இருக்கும்… சுவை இருக்காது…புரியுதா நீலிமா..? புரியறது கஷ்டம்…"."புரியுதும்மா.."."எதுலயும் உயிர் இருக்கணும் நீலிமா… இவ்வளவு விஞ்ஞானம் வளர்ந்து இருக்கு. டெக்னாலஜி சூப்பர். மேதமேடிக்ஸ்… கால்குலேஷன் இருக்கு… ஆனா, ஒருவன் தஞ்சைப் பெரியகோயிலையோ தாஜ்மகாலையோ கட்டமுடியுமா? அதுலெல்லாம் உயிர் இருக்கு… அந்த உயிருக்குக் காரணம் ராஜராஜனோ ஷாஜகானோ இல்ல…அதற்காக பிசைந்த மண்ணில், பதித்த கல்லில் தன் உணர்வைக் கொட்டியிருக்கும் வேலையாட்களின் உயிர்…".நீலிமா புவனாவைப் பார்த்து வியந்து நின்றபோது-.ஆஃபிஸில் இருந்து பதற்ற போன்..இன்ஸ்பெக்க்ஷனுக்கு சென்ற மகாதேவனுக்கு திடீர் மயக்கம்.சரிந்து விழுந்து தலையில் அடி..மெர்லின் ஆஸ்பத்ரி ஐசியூவுல இருக்கிறாராம். சீரியசாம்..மறுபடி போன்.."ஹா… ஹா என்று சிரித்தவாறே வில்லன் பாலன்..''நீலிமா மகாதேவன் மண்டயப் போட்றுவாரு போல. அதுக்குப் பிறகு உன் பாடு திண்டாட்டம்" சிரித்தான்.."நான் சென்ஸ்"."ஹா… ஹா… தானாடவிட்டாலும் தசை ஆடுமே?"."சீ ராஸ்கல்"."ஹா… ஹா".போனைத் துண்டித்தான்..புவனாவிடம் கவலைப்படாமல் இருக்கச் சொல்லிவிட்டு அவசரமாக கிளம்பினாள்..மகாதேவனுக்கு எமெர்ஜென்சி ஆப்பரேஷன். இரத்தம் அதிகம் தேவைப்பட்டது. ஆப்பரேஷன் காம்ளிகேஷன் ஆகிவிட்டது. இருபத்தினாலு மணி நேரம் போகவேண்டும் என்று டாக்டர் சொல்லிவிட்டார்..நீலிமா சட்டென்று ஒரு முடிவெடுத்தாள்..சுதாவிடம் மட்டும் ஐடியாவைச் சொன்னாள்..''என்னடி சொல்றே? இப்பவே அப்படி இப்படிங்கிறாங்க"."நான் கவலைப்படலடி… எனக்கு மனசு கேட்கல… இவரு டிஸ்சார்ஜ் ஆறதுக்கு பத்து நாள் ஆகும் போலிருக்கு…நான் புவனாம்மாவைப் பார்த்துக்கப் போறேன்… அவங்களுக்கு என் அருகாமை நிச்சயம் ஆறுதலாக இருக்கும்…"."நீலிமா…நீ ஒரு ஒண்டர்…உன்னை நினைத்து வியக்கிறேன்… நீ சொன்னா சரியாத்தான் இருக்கும் நீலிமா…! இதுக கெடக்குதுக".*** *** ***.ஒரு சிறுக்குழந்தைபோல் அழுதாள் புவனா, பத்து நாட்கள் முடிந்து நீலிமா தன் வீட்டிற்குக் கிளம்பும்போது.."தைரியமான நீங்களே கலங்கலாமாம்மா? இன்னும் சில நிமிடங்களில் அவர் வந்து விடுவார். அதற்குள் நான் கிளம்பவேண்டும்…"."சொந்த மக கூட இப்படி பார்த்துக்க மாட்டாம்மா.'கண்ணிலான் கண்பெற்று இழந்தார்போல' என்று கம்பராமாயணத்தில் ஒரு வரிவரும். அதன் முழு அர்த்தம் இப்போது தெரிகிறது நீலிமா. நீ எனக்கு அறிமுகமாகாமலே இருந்திருக்கலாம்"."அம்மா பெரிய வார்தைகள். நான் வரேன்மா"." நில்லு நீலிமா" கிளம்பியவளை சடன் பிரேக் போட வைத்தது புவனாவின் குரல்..நின்றாள்.."இனிமே உனக்குத் தொல்லை இருக்காது. இருந்தா அவருக்கு சொத்து இருக்காது.. இங்க நான் சொன்னதுதான் சட்டம்…போய்ட்டு வா".நீலிமா அதிர்ந்தாள்..மகாதேவன் இன்று டூட்டி ஜாய்ன்பண்ண ஆஃபீஸ் வருகிறார்..வழக்கம் போல் வேகமாக கிளம்புகிறாள் நீலிமா. இந்த பாழாய்ப்போன ட்ராஃபிக்ஜாம்..சில நிமிடங்கள் லேட். கண்ணாடி கேபினுக்குள் அவர் உட்கார்ந்து இருக்கிறார். சக உழியர்கள் அவர் எதிரே நின்று கைகட்டி பணிவாக விசாரித்துக் கொண்டிருப்பது தெரிகிறது..பயத்துடனே கதவை மெள்ளத்தள்ளி நுழைய அவளைப்பார்த்த மகாதேவன் சட்டென்று எழுந்து "வாங்கம்மா" என்கிறார்..மற்றவர்கள் அதிர்கிறார்கள்.."சார்… நீங்க மேனேஜர் சார்… உட்காருங்க சார்" என்று சொல்ல நினைக்கிறாள் நீலிமா..சொல்லவில்லை..'இங்க நான் சொன்னதுதான் சட்டம்'.புவனா சொன்னது நினைவில் வந்து போகிறது!