"தலைவருக்கு சுயநினைவு இல்லைன்னு எப்படிச் சொல்றே?"."தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றப் போறதா சொல்றாரே".– மாடக்கண்ணு, பாப்பான்குளம்."குட் மார்னிங் சொன்னதுக்குப் போய்யா மேனேஜர் உங்களைத் திட்டினாரு?"."ஆமாம்… தூங்கிட்டு இருந்தவரை எழுப்பிச் சொன்னேன்.".-தீபிகா சாரதி, சென்னை."தலைவர் ஏன் சோகமா இருக்கிறார்?"."அவரைப் பத்தி சோசியல் மீடியாவில் ஒரு மீம்சும் வரலையாம்? அவர் மவுஸ் குறைஞ்சிடுமோன்னு சோகமாயிட்டார்.".-சி. கார்த்திகேயன், சாத்தூர்."எதிர்க்கட்சியில் சேர்ந்த நம்ம தலைவரை ஒரே நாள்ல நீக்கிட்டாங்களாமே, ஏன்?"."பழக்க தோஷத்தில், சேர்ந்த கட்சியையே கன்னாபின்னான்னு தாக்கிப் பேசிட்டாராம்!".– ப.சோமசுந்தரம், சென்னை."அந்த எழுத்தாளர் தினமும் ஆற்றங்கரை பக்கமா போய் உட்கார்ந்திருக்கிறாரே, ஏன்?"."அங்குதான் கற்பனை கரைபுரண்டு ஓடும்னு யாரோ அவர்கிட்ட சொன்னாங்களாம்!".– மு. மதிவாணன், அரூர்,."நம்ம தலைவருக்குத் தமிழ்ப்பற்று ரொம்ப அதிகம்னு இப்பத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்!"."எதை வச்சு?"."நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கிரிக்கெட் ஸ்டேடியத்துல முழுவதும் அன்னைத் தமிழில் கமென்ட்ரி கொடுக்கப்படும்னு அறிவிச்சிருக்காரே…".– இரா. அருண்குமார், புதுச்சேரி
"தலைவருக்கு சுயநினைவு இல்லைன்னு எப்படிச் சொல்றே?"."தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றப் போறதா சொல்றாரே".– மாடக்கண்ணு, பாப்பான்குளம்."குட் மார்னிங் சொன்னதுக்குப் போய்யா மேனேஜர் உங்களைத் திட்டினாரு?"."ஆமாம்… தூங்கிட்டு இருந்தவரை எழுப்பிச் சொன்னேன்.".-தீபிகா சாரதி, சென்னை."தலைவர் ஏன் சோகமா இருக்கிறார்?"."அவரைப் பத்தி சோசியல் மீடியாவில் ஒரு மீம்சும் வரலையாம்? அவர் மவுஸ் குறைஞ்சிடுமோன்னு சோகமாயிட்டார்.".-சி. கார்த்திகேயன், சாத்தூர்."எதிர்க்கட்சியில் சேர்ந்த நம்ம தலைவரை ஒரே நாள்ல நீக்கிட்டாங்களாமே, ஏன்?"."பழக்க தோஷத்தில், சேர்ந்த கட்சியையே கன்னாபின்னான்னு தாக்கிப் பேசிட்டாராம்!".– ப.சோமசுந்தரம், சென்னை."அந்த எழுத்தாளர் தினமும் ஆற்றங்கரை பக்கமா போய் உட்கார்ந்திருக்கிறாரே, ஏன்?"."அங்குதான் கற்பனை கரைபுரண்டு ஓடும்னு யாரோ அவர்கிட்ட சொன்னாங்களாம்!".– மு. மதிவாணன், அரூர்,."நம்ம தலைவருக்குத் தமிழ்ப்பற்று ரொம்ப அதிகம்னு இப்பத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்!"."எதை வச்சு?"."நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கிரிக்கெட் ஸ்டேடியத்துல முழுவதும் அன்னைத் தமிழில் கமென்ட்ரி கொடுக்கப்படும்னு அறிவிச்சிருக்காரே…".– இரா. அருண்குமார், புதுச்சேரி