கவர் ஸ்டோரி.– எஸ். சந்திரமௌலி. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது எதிர் வரும் ஐந்து மாநில் தேர்தல்கள். அந்த மாநிலங்களில் களநிலவரம் எப்படியிருக்கிறது? – ஒரு கண்ணோட்டம்… .உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் பிரசாரம், கொரோனா கட்டுப்பாடுகளால் வழக்கமான பரபரப்புடன் இன்னமும் களை கட்டவில்லை என்றே சொல்லவேண்டும். பா.ஜ.க., உத்தரப்பிரதேசத்தில்தான் முழு கவனமும் செலுத்துவதாகத் தெரிகிறது. ஆம் ஆத்மி, பஞ்சாபுக்கு முக்கியத்துவம் கொடுத்து வேலை பார்க்கிறது. திரிணாமூல் காங்கிரசோ, கோவாவில் கால்பதித்து, தன்னை ஒரு தேசியக் கட்சியாக வெளிக்காட்டிக்கொள்ள முயற்சி செய்கிறது. காங்கிரஸ் கட்சியோ ஒரு பக்கம் உத்தரப் பிரதேசத்தில் பிரியங்காவின் செயல்பாடுகளின் மூலமாக நாங்களும் தேர்தல் ரேசில் இருக்கோம்ல என காட்டிக்கொள்ள முயற்சி செய்கிறது; இன்னொரு பக்கம் பஞ்சாபிலும், உத்தராகண்டிலும் கோஷ்டிப் பூசல்களை சமாளிக்கத் திணறிக் கொண்டிருக்கிறது..உத்தரப் பிரதேசத்தில், பிப்ரவரி 10 தொடங்கி மார்ச் 7 வரை ஏழு கட்டங்களாக தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல் கமிஷன் திட்டமிட்டிருந்தாலும், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா மாநிலங்களில் பிப்ரவரி 14ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்ந்தல் முடிவடைந்துவிடுகிறது. மணிப்பூரில் மட்டும் பிப்ரவரி 27, மார்ச் 3 என இரு கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10..ஏற்கெனவே, பஞ்சாப் தேர்தல் நிலவரம் பற்றிப் பார்த்துவிட்டோம். அடுத்து மணிப்பூர், உத்தராகண்ட், கோவா என ஒரு சின்ன ரவுண்டு போய்வரலாமா?.மணிப்பூரில் சம பலம்:.தேர்தல் சூடுபிடித்திருக்கும் மாநிலங்களில் மணிப்பூர் வடகிழக்கில் இருக்கும் சின்ன மாநிலம் என்பதால், நாட்டு மக்களின் ஆர்வம் பெரிசாய் மணிப்பூர் மீது இல்லை என்றாலும், அங்கே தேர்தல் களம் பரபரப்பாகவே இருக்கிறது. காரணம் அங்கே ஆளும் கூட்டணியின் பிரதான கட்சியான பா.ஜ.க.வும், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசும் ஏறத்தாழ சமபலத்துடன்தான் மோதிக்கொள்கின்றன..கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட மொத்தம் உள்ள 60 இடங்களில் அதிக இடங்களில் ஜெயித்த தனிக் கட்சி என்னவோ காங்கிரஸ்தான். (28 இடங்கள்) ஆனால், அதற்கு தனி மெஜாரிடி கிடைக்கவில்லை. 21 எம்.எல்.ஏ.க்களே ஜெயித்திருந்தாலும், இப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தை நழுவ விடுமா பா.ஜ.க.? காங்கிரஸ் அல்லாத மற்ற கட்சிகளை வளைத்துப் போட்டு, தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி ஆட்சியை அமைத்துவிட்டது. அதன் பிறகு காங்கிரஸ், திரிணாமூல், லோக்ஜனசக்தி கட்சி எம்.எல்.ஏ.களையும் கட்சிதாவ வைத்து பலத்தைப் பெருக்கிக் கொண்டது..ஐந்தாண்டுகள் முதல்வராக இருந்த பா.ஜ.க.வின் பிரோன் சிங்கிற்கு நல்ல பெயர் என்றாலும், மத்திய பா.ஜ.க. அரசு மணிப்பூரைப் புறக்கணிக்கிறது என்ற குறையும் நிலவுகிறது. மோடி வருகை, புதிய திட்ட அடிக்கல் நாட்டுதல் எல்லாம் இதனை சமாளிக்கத்தான்..பா.ஜ.கவுக்குள் நடக்கும் கோஷ்டிப் பூசல்தான் அங்கே பெரிய குடைச்சல். போதாகுறைக்கு பா.ஜ.க. கூட்டணியில் இருந்த 'நாகா மக்கள் முன்னணி', 'தேசிய மக்கள் கட்சி' இரண்டும் கூட்டணியிலிருந்து விலகி தனித்துப் போட்டியிடுகின்றன. இது, பா.ஜ.க.வின் வாக்கு வங்கியை பிரிக்குமா அல்லது பா.ஜ.க.வுக்கு எதிரான அதிருப்தியாளர்களின் ஓட்டைப் பிரித்து, பா.ஜ.க.வுக்கு சாதகமாக அமையுமா என்பது பற்றி யாருக்கும் தெளிவான ஐடியா இல்லை..மணிப்பூர் காங்கிரஸ் என்பது ஓக்ராம் இபோயி என்ற காங்கிரஸ் தலைவரின் ஒன் மேன் ஆர்மி போல என்கிறார்கள். அவர் என்னவோ, "நாங்கள் மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம்" என்று சொல்லுகிறார். பா.ஜ.க. ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள தீவிரமாக களமிறங்கி உள்ளது..கூட்டணியிலிருந்து விலகி, தனித்துப் போட்டியிடும் பா.ஜ.க.வின் முன்னாள் நண்பர்கள், "தேர்தலுக்குப் பின் அவசியமானால் பா.ஜ.க.வை ஆதரிப்போம்" என்று வெளிப்படையாகவே சொல்கிறார்கள். இதற்கு அவர்கள் சொல்லும் காரணம், பல்லாண்டுகளாக வன்முறை ரணகளமாக இருந்து வந்த மணிப்பூரை கடந்த ஐந்து வருடங்களாக அமைதி மண்டலமாக ஆக்கியது பா.ஜ.க.தான் என்பதை யாரும் இங்கே மறந்துவிட முடியாது..உத்தராகண்டில் காங்கிரஸ் பலம்?.70 இடங்கள் கொண்டது உத்தராகண்ட் சட்டசபை. மாநிலத்தில் மொத்தம் சுமார் 80 லட்சம் வாக்காளர்கள். இவர்களில் 12 லட்சம் பேர் புதிய வாக்காளர்கள் என்பது கவனிக்கத்தக்கது. தற்போதைய பா.ஜ.க. முதலமைச்சர் புஷ்கர் சிங் தமியின் வயது 42. மாநிலத்தின் வாக்காளர்களில் 60% இவரைவிட இளையவர்கள் என்கிறது ஒரு புள்ளிவிபரம்..உத்தராகண்ட் முதலமைச்சராக இருந்தவர்களில் என்.டி.திவாரியைத் தவிர யாரும் ஐந்தாண்டுகள் முழுசாக முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்தது இல்லை. இன்னும் சொல்லப்போனால் கடந்த இரண்டு தேர்தல்களில் முதலமைச்சராக பதவி வகித்தவர்கள் மீண்டும் தங்கள் சொந்தத் தொகுதியில் போட்டியிட்டபோது தோல்வியைத் தழுவ நேரிட்டதும் சரித்திரம். குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால், முதலமைச்சராக இருந்த ஹரீஷ் ராவத், கடந்த தேர்தலில் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலுமே தோல்வியைச் சந்தித்தார். இந்தத் தேர்தலில், தன்னை முதலமைச்சர் வேட்பாளராக காங்கிரஸ் மேலிடம் வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்று ஹரீஷ் ராவத்துக்கு கடுப்பு என்பது ஓர் உபரி தகவல்..கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக, பிரதமர் மோடியின் மெகா பிரசாரக் கூட்டம், பேரணிக்கெல்லாம் வாய்ப்பில்லாததை பா.ஜ.க. எப்படி சமாளிப்பது என திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது. சமூக ஊடகப் பிரிவு முழு வீச்சில் களமிறங்கினாலும், இந்த மலைப்பிரதேச மக்களிடம் அது எந்த அளவுக்கு ரீச் ஆகும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஆனால், வாக்காளர்களில் மெஜாரிடி 45 வயதுக்குக் கீழ் என்பதால் சமூக ஊடகப் பிரசாரம் கைகொடுக்கும் என நம்புகிறது பா.ஜ.க. முதல்வர்களை மாற்றும் காங்கிரஸ் கலாசாரத்தை பா.ஜ.க.வும் இங்கே செய்தது. கடந்த தேர்தலில் ஜெயித்தபோது முதல்வராகப் பதவி ஏற்ற திரிவேந்திர ராவத்தை மாற்றிவிட்டு, திரத் சிங் ராவத்தை முதல்வராக்கியது. ஆனால், நாலே மாதங்களில் அவரையும் மாற்றிவிட்டு ஜூனியர் அமைச்சராக இருந்த புஷ்கர் சிங் தமியை முதலமைச்சர் நாற்காலியில் அமர்த்தியது..காங்கிரஸ் ஜெயித்தால் முதலமைச்சர் ரேசில் இருக்கும் இருவரில் ஹரீஷ் ராவத்துக்கு வயது 73. பிரீதம் சிங்கிற்கு 63. ஆக்டிவான இளைய தலைமுறை யினரைக் கொண்ட கட்சியாக பா.ஜ.க. காட்டிக் கொள்வதற்காக 40 வயதுக்குக் குறைந்த 14 பேர்களுக்கு தேர்தலில் டிக்கெட் கொடுத்துள்ளது. ஆனாலும், "வேலை இல்லாப் பிரச்னை, புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் மறுவாழ்வு போன்றவற்றில் பா.ஜ.க. அரசு போதிய கவனம் செலுத்தவில்லை" என்ற குறை சுட்டிக்காட்டப்படுகிறது. கொரோனா தாக்கம் காரணமாக மாநிலத்தின் முக்கியமான சுற்றுலாத்துறைக்கு பெரும் பாதிப்பு. இது மாநிலத்தின் பொருளாதாரத்தை பெருமளவில் பாதித்துள்ளது..ஆனாலும், பா.ஜ.க. மீண்டும் ஜெயித்துவிடலாம் என்று கணக்குப் போடுகிறது. மாநில காங்கிரஸ், தங்கள் கட்சி மேலிடம் உ.பி.க்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறது; உத்தரகாண்டை கண்டுகொள்ளவில்லை" என வருத்தத்தில் இருக்கிறது..கோவாவில் வங்காளத்துப் பூ மலருமா?.தேர்தல் களத்தில் இறங்கிவிட்டால், எல்லா கட்சிகளுமே "வெற்றி எங்களுக்கே" என அறிக்கைவிடுவதுதான் வாடிக்கை. ஆனால், கோவாவில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் வாக்களித்தாலும், ஜெயித்து சட்டசபைக்குச் செல்லும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அந்தக் கட்சியிலேயே இருப்பார்களா? அல்லது கட்சித்தாவி விடுவார்களா? என்ற வலுவான சந்தேகம் வந்துவிட்டது. காரணம், முந்தைய சட்டசபைத் தேர்தல் அனுபவம்..கடந்த தேர்தலில், காங்கிரஸ் அதிக எம்.எல்.ஏ.க்கள் கொண்ட தனிக் கட்சியாக இருந்தபோதிலும், அதைவிட குறைவான சீட்கள் பெற்ற பா.ஜ.க. உதிரிகளுடன் கைகோர்த்து ஆட்சியில் அமர்ந்தது. இதைக்கூட சகித்துக் கொண்டது காங்கிரஸ். ஆனால், நாளடைவில் ஜெயித்த 17 காங்கிரஸ் எம்.எல்.ஏ.களில் 15 பேர்கள் பா.ஜ.க. பக்கம் தாவிவிட்டார்கள். ஆகவே, தற்போது கோவா தேர்தல் பொறுப்பாளரான முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் காங்கிரஸ் வேட்பாளர்கள அனைவரையும் கோவில், சர்ச், மசூதி என்று யாத்திரை அழைத்துக் கொண்டு போய் "தேர்தலில் ஜெயித்தால், நாங்கள் கட்சி மாறமாட்டோம்; காங்கிரஸ் கட்சியிலேயே இருப்போம்" என உறுதி மொழி வாங்கிக்கொண்டிருக்கிறார்..பா.ஜ.க.வில் உட்கட்சிப் பூசல்களுக்குக் குறைவில்லை. கோவா பா.ஜ.க.வில் மனோகர் பரிக்கருக்கான இடம் முக்கியத்துவம் வாய்ந்தது. மத்திய அமைச்சரவையில் பரிக்கர் போன்ற திறமைசாலிகள் கட்டாயமாக தேவைப்பட்ட சமயத்திலும் கூட கோவாவில் தனி மெஜாரிடி இல்லாது போனாலும், பா.ஜ.க. ஆட்சியில் அமர வேண்டுமென்றால் பரிக்கர் கோவா முதலமைச்சர் ஆனால் மட்டுமே சாத்தியம் என்ற இக்கட்டான சூழ்நிலையில் முதல்வரானார் பரிக்கர். துரதிருஷ்டவசமாக அவரை கேன்சர் பலி வாங்கிக்கொண்டது. அவரது மகனுக்கு பா.ஜ.க. சீட் தரவில்லை என்று கோபம்..காங்கிரஸ், பா.ஜ.க. மோதலுக்கு இடையில் புகுந்து சீன் போடப்பார்க்கிறார் மம்தா பானர்ஜி. திரிணாமூல் காங்கிரசில் சேர்ந்திருக்கும் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்தான் திரிணாமூலின் பிரசார பீரங்கி. காரணம் லியாண்டர் பயசின் அப்பாவுக்கு பூர்வீகம் கோவா. கோவாவில் மீனவ மக்களை சந்தித்து, "திரிணாமூலுக்கு ஓட்டுப் போட்டு ஆட்சியில் அமர்த்துங்கள்! உங்கள் பிரச்னையெல்லாம் தீர்த்து வைக்கப்படும்!" என்று சொல்லி ஓட்டுக் கேட்கிறார். ஆம் ஆத்மி கட்சியும் தன் கால் பதிக்க முயற்சி செய்கிறது.."எல்லா கட்சிகளும் ரொம்பவே குழம்பிப் போய் உள்ளன; ஆனாலும், தனி மெஜாரிடி பெற்று பா.ஜ.க. ஜெயித்தாலும், ஜெயிக்காவிட்டாலும், அவர்கள் ஆட்சி அமைக்கவே வாய்ப்புகள் அதிகம் என்று சொல்கிறார்கள் உள்ளூர் பத்திரிகையாளர்கள்.
கவர் ஸ்டோரி.– எஸ். சந்திரமௌலி. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது எதிர் வரும் ஐந்து மாநில் தேர்தல்கள். அந்த மாநிலங்களில் களநிலவரம் எப்படியிருக்கிறது? – ஒரு கண்ணோட்டம்… .உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் பிரசாரம், கொரோனா கட்டுப்பாடுகளால் வழக்கமான பரபரப்புடன் இன்னமும் களை கட்டவில்லை என்றே சொல்லவேண்டும். பா.ஜ.க., உத்தரப்பிரதேசத்தில்தான் முழு கவனமும் செலுத்துவதாகத் தெரிகிறது. ஆம் ஆத்மி, பஞ்சாபுக்கு முக்கியத்துவம் கொடுத்து வேலை பார்க்கிறது. திரிணாமூல் காங்கிரசோ, கோவாவில் கால்பதித்து, தன்னை ஒரு தேசியக் கட்சியாக வெளிக்காட்டிக்கொள்ள முயற்சி செய்கிறது. காங்கிரஸ் கட்சியோ ஒரு பக்கம் உத்தரப் பிரதேசத்தில் பிரியங்காவின் செயல்பாடுகளின் மூலமாக நாங்களும் தேர்தல் ரேசில் இருக்கோம்ல என காட்டிக்கொள்ள முயற்சி செய்கிறது; இன்னொரு பக்கம் பஞ்சாபிலும், உத்தராகண்டிலும் கோஷ்டிப் பூசல்களை சமாளிக்கத் திணறிக் கொண்டிருக்கிறது..உத்தரப் பிரதேசத்தில், பிப்ரவரி 10 தொடங்கி மார்ச் 7 வரை ஏழு கட்டங்களாக தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல் கமிஷன் திட்டமிட்டிருந்தாலும், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா மாநிலங்களில் பிப்ரவரி 14ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்ந்தல் முடிவடைந்துவிடுகிறது. மணிப்பூரில் மட்டும் பிப்ரவரி 27, மார்ச் 3 என இரு கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10..ஏற்கெனவே, பஞ்சாப் தேர்தல் நிலவரம் பற்றிப் பார்த்துவிட்டோம். அடுத்து மணிப்பூர், உத்தராகண்ட், கோவா என ஒரு சின்ன ரவுண்டு போய்வரலாமா?.மணிப்பூரில் சம பலம்:.தேர்தல் சூடுபிடித்திருக்கும் மாநிலங்களில் மணிப்பூர் வடகிழக்கில் இருக்கும் சின்ன மாநிலம் என்பதால், நாட்டு மக்களின் ஆர்வம் பெரிசாய் மணிப்பூர் மீது இல்லை என்றாலும், அங்கே தேர்தல் களம் பரபரப்பாகவே இருக்கிறது. காரணம் அங்கே ஆளும் கூட்டணியின் பிரதான கட்சியான பா.ஜ.க.வும், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசும் ஏறத்தாழ சமபலத்துடன்தான் மோதிக்கொள்கின்றன..கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட மொத்தம் உள்ள 60 இடங்களில் அதிக இடங்களில் ஜெயித்த தனிக் கட்சி என்னவோ காங்கிரஸ்தான். (28 இடங்கள்) ஆனால், அதற்கு தனி மெஜாரிடி கிடைக்கவில்லை. 21 எம்.எல்.ஏ.க்களே ஜெயித்திருந்தாலும், இப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தை நழுவ விடுமா பா.ஜ.க.? காங்கிரஸ் அல்லாத மற்ற கட்சிகளை வளைத்துப் போட்டு, தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி ஆட்சியை அமைத்துவிட்டது. அதன் பிறகு காங்கிரஸ், திரிணாமூல், லோக்ஜனசக்தி கட்சி எம்.எல்.ஏ.களையும் கட்சிதாவ வைத்து பலத்தைப் பெருக்கிக் கொண்டது..ஐந்தாண்டுகள் முதல்வராக இருந்த பா.ஜ.க.வின் பிரோன் சிங்கிற்கு நல்ல பெயர் என்றாலும், மத்திய பா.ஜ.க. அரசு மணிப்பூரைப் புறக்கணிக்கிறது என்ற குறையும் நிலவுகிறது. மோடி வருகை, புதிய திட்ட அடிக்கல் நாட்டுதல் எல்லாம் இதனை சமாளிக்கத்தான்..பா.ஜ.கவுக்குள் நடக்கும் கோஷ்டிப் பூசல்தான் அங்கே பெரிய குடைச்சல். போதாகுறைக்கு பா.ஜ.க. கூட்டணியில் இருந்த 'நாகா மக்கள் முன்னணி', 'தேசிய மக்கள் கட்சி' இரண்டும் கூட்டணியிலிருந்து விலகி தனித்துப் போட்டியிடுகின்றன. இது, பா.ஜ.க.வின் வாக்கு வங்கியை பிரிக்குமா அல்லது பா.ஜ.க.வுக்கு எதிரான அதிருப்தியாளர்களின் ஓட்டைப் பிரித்து, பா.ஜ.க.வுக்கு சாதகமாக அமையுமா என்பது பற்றி யாருக்கும் தெளிவான ஐடியா இல்லை..மணிப்பூர் காங்கிரஸ் என்பது ஓக்ராம் இபோயி என்ற காங்கிரஸ் தலைவரின் ஒன் மேன் ஆர்மி போல என்கிறார்கள். அவர் என்னவோ, "நாங்கள் மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம்" என்று சொல்லுகிறார். பா.ஜ.க. ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள தீவிரமாக களமிறங்கி உள்ளது..கூட்டணியிலிருந்து விலகி, தனித்துப் போட்டியிடும் பா.ஜ.க.வின் முன்னாள் நண்பர்கள், "தேர்தலுக்குப் பின் அவசியமானால் பா.ஜ.க.வை ஆதரிப்போம்" என்று வெளிப்படையாகவே சொல்கிறார்கள். இதற்கு அவர்கள் சொல்லும் காரணம், பல்லாண்டுகளாக வன்முறை ரணகளமாக இருந்து வந்த மணிப்பூரை கடந்த ஐந்து வருடங்களாக அமைதி மண்டலமாக ஆக்கியது பா.ஜ.க.தான் என்பதை யாரும் இங்கே மறந்துவிட முடியாது..உத்தராகண்டில் காங்கிரஸ் பலம்?.70 இடங்கள் கொண்டது உத்தராகண்ட் சட்டசபை. மாநிலத்தில் மொத்தம் சுமார் 80 லட்சம் வாக்காளர்கள். இவர்களில் 12 லட்சம் பேர் புதிய வாக்காளர்கள் என்பது கவனிக்கத்தக்கது. தற்போதைய பா.ஜ.க. முதலமைச்சர் புஷ்கர் சிங் தமியின் வயது 42. மாநிலத்தின் வாக்காளர்களில் 60% இவரைவிட இளையவர்கள் என்கிறது ஒரு புள்ளிவிபரம்..உத்தராகண்ட் முதலமைச்சராக இருந்தவர்களில் என்.டி.திவாரியைத் தவிர யாரும் ஐந்தாண்டுகள் முழுசாக முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்தது இல்லை. இன்னும் சொல்லப்போனால் கடந்த இரண்டு தேர்தல்களில் முதலமைச்சராக பதவி வகித்தவர்கள் மீண்டும் தங்கள் சொந்தத் தொகுதியில் போட்டியிட்டபோது தோல்வியைத் தழுவ நேரிட்டதும் சரித்திரம். குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால், முதலமைச்சராக இருந்த ஹரீஷ் ராவத், கடந்த தேர்தலில் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலுமே தோல்வியைச் சந்தித்தார். இந்தத் தேர்தலில், தன்னை முதலமைச்சர் வேட்பாளராக காங்கிரஸ் மேலிடம் வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்று ஹரீஷ் ராவத்துக்கு கடுப்பு என்பது ஓர் உபரி தகவல்..கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக, பிரதமர் மோடியின் மெகா பிரசாரக் கூட்டம், பேரணிக்கெல்லாம் வாய்ப்பில்லாததை பா.ஜ.க. எப்படி சமாளிப்பது என திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது. சமூக ஊடகப் பிரிவு முழு வீச்சில் களமிறங்கினாலும், இந்த மலைப்பிரதேச மக்களிடம் அது எந்த அளவுக்கு ரீச் ஆகும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஆனால், வாக்காளர்களில் மெஜாரிடி 45 வயதுக்குக் கீழ் என்பதால் சமூக ஊடகப் பிரசாரம் கைகொடுக்கும் என நம்புகிறது பா.ஜ.க. முதல்வர்களை மாற்றும் காங்கிரஸ் கலாசாரத்தை பா.ஜ.க.வும் இங்கே செய்தது. கடந்த தேர்தலில் ஜெயித்தபோது முதல்வராகப் பதவி ஏற்ற திரிவேந்திர ராவத்தை மாற்றிவிட்டு, திரத் சிங் ராவத்தை முதல்வராக்கியது. ஆனால், நாலே மாதங்களில் அவரையும் மாற்றிவிட்டு ஜூனியர் அமைச்சராக இருந்த புஷ்கர் சிங் தமியை முதலமைச்சர் நாற்காலியில் அமர்த்தியது..காங்கிரஸ் ஜெயித்தால் முதலமைச்சர் ரேசில் இருக்கும் இருவரில் ஹரீஷ் ராவத்துக்கு வயது 73. பிரீதம் சிங்கிற்கு 63. ஆக்டிவான இளைய தலைமுறை யினரைக் கொண்ட கட்சியாக பா.ஜ.க. காட்டிக் கொள்வதற்காக 40 வயதுக்குக் குறைந்த 14 பேர்களுக்கு தேர்தலில் டிக்கெட் கொடுத்துள்ளது. ஆனாலும், "வேலை இல்லாப் பிரச்னை, புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் மறுவாழ்வு போன்றவற்றில் பா.ஜ.க. அரசு போதிய கவனம் செலுத்தவில்லை" என்ற குறை சுட்டிக்காட்டப்படுகிறது. கொரோனா தாக்கம் காரணமாக மாநிலத்தின் முக்கியமான சுற்றுலாத்துறைக்கு பெரும் பாதிப்பு. இது மாநிலத்தின் பொருளாதாரத்தை பெருமளவில் பாதித்துள்ளது..ஆனாலும், பா.ஜ.க. மீண்டும் ஜெயித்துவிடலாம் என்று கணக்குப் போடுகிறது. மாநில காங்கிரஸ், தங்கள் கட்சி மேலிடம் உ.பி.க்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறது; உத்தரகாண்டை கண்டுகொள்ளவில்லை" என வருத்தத்தில் இருக்கிறது..கோவாவில் வங்காளத்துப் பூ மலருமா?.தேர்தல் களத்தில் இறங்கிவிட்டால், எல்லா கட்சிகளுமே "வெற்றி எங்களுக்கே" என அறிக்கைவிடுவதுதான் வாடிக்கை. ஆனால், கோவாவில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் வாக்களித்தாலும், ஜெயித்து சட்டசபைக்குச் செல்லும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அந்தக் கட்சியிலேயே இருப்பார்களா? அல்லது கட்சித்தாவி விடுவார்களா? என்ற வலுவான சந்தேகம் வந்துவிட்டது. காரணம், முந்தைய சட்டசபைத் தேர்தல் அனுபவம்..கடந்த தேர்தலில், காங்கிரஸ் அதிக எம்.எல்.ஏ.க்கள் கொண்ட தனிக் கட்சியாக இருந்தபோதிலும், அதைவிட குறைவான சீட்கள் பெற்ற பா.ஜ.க. உதிரிகளுடன் கைகோர்த்து ஆட்சியில் அமர்ந்தது. இதைக்கூட சகித்துக் கொண்டது காங்கிரஸ். ஆனால், நாளடைவில் ஜெயித்த 17 காங்கிரஸ் எம்.எல்.ஏ.களில் 15 பேர்கள் பா.ஜ.க. பக்கம் தாவிவிட்டார்கள். ஆகவே, தற்போது கோவா தேர்தல் பொறுப்பாளரான முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் காங்கிரஸ் வேட்பாளர்கள அனைவரையும் கோவில், சர்ச், மசூதி என்று யாத்திரை அழைத்துக் கொண்டு போய் "தேர்தலில் ஜெயித்தால், நாங்கள் கட்சி மாறமாட்டோம்; காங்கிரஸ் கட்சியிலேயே இருப்போம்" என உறுதி மொழி வாங்கிக்கொண்டிருக்கிறார்..பா.ஜ.க.வில் உட்கட்சிப் பூசல்களுக்குக் குறைவில்லை. கோவா பா.ஜ.க.வில் மனோகர் பரிக்கருக்கான இடம் முக்கியத்துவம் வாய்ந்தது. மத்திய அமைச்சரவையில் பரிக்கர் போன்ற திறமைசாலிகள் கட்டாயமாக தேவைப்பட்ட சமயத்திலும் கூட கோவாவில் தனி மெஜாரிடி இல்லாது போனாலும், பா.ஜ.க. ஆட்சியில் அமர வேண்டுமென்றால் பரிக்கர் கோவா முதலமைச்சர் ஆனால் மட்டுமே சாத்தியம் என்ற இக்கட்டான சூழ்நிலையில் முதல்வரானார் பரிக்கர். துரதிருஷ்டவசமாக அவரை கேன்சர் பலி வாங்கிக்கொண்டது. அவரது மகனுக்கு பா.ஜ.க. சீட் தரவில்லை என்று கோபம்..காங்கிரஸ், பா.ஜ.க. மோதலுக்கு இடையில் புகுந்து சீன் போடப்பார்க்கிறார் மம்தா பானர்ஜி. திரிணாமூல் காங்கிரசில் சேர்ந்திருக்கும் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்தான் திரிணாமூலின் பிரசார பீரங்கி. காரணம் லியாண்டர் பயசின் அப்பாவுக்கு பூர்வீகம் கோவா. கோவாவில் மீனவ மக்களை சந்தித்து, "திரிணாமூலுக்கு ஓட்டுப் போட்டு ஆட்சியில் அமர்த்துங்கள்! உங்கள் பிரச்னையெல்லாம் தீர்த்து வைக்கப்படும்!" என்று சொல்லி ஓட்டுக் கேட்கிறார். ஆம் ஆத்மி கட்சியும் தன் கால் பதிக்க முயற்சி செய்கிறது.."எல்லா கட்சிகளும் ரொம்பவே குழம்பிப் போய் உள்ளன; ஆனாலும், தனி மெஜாரிடி பெற்று பா.ஜ.க. ஜெயித்தாலும், ஜெயிக்காவிட்டாலும், அவர்கள் ஆட்சி அமைக்கவே வாய்ப்புகள் அதிகம் என்று சொல்கிறார்கள் உள்ளூர் பத்திரிகையாளர்கள்.