நேர் காணல்.– ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு.அரியலூர் ராஜாஜி நகரில் இயங்கி வருகிறது, பத்மஸ்ரீ வித்யாலயா நர்சரி பிரைமரி ஸ்கூல். அங்கு எல்.கே.ஜி. முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடங்கள் நடத்தப்படுகின்றன. அதன் தாளாளர் பத்மபிரியா. அந்தப் பள்ளி தொடங்கி பதின்மூன்று ஆண்டுகள் ஆகின்றன. ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் பள்ளி ஆண்டு விழா கொண்டாடுவது வழக்கம். சமீபத்திய கொரோனா கால நெருக்கடிகளுக்குச் சற்று முன்பாக 2020ல், அந்தப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் "பொன்னியின் செல்வன்" மேடை நாடகம் அரங்கேற்றம் ஆகியுள்ளது. அந்த நாடகத்தில் நடித்தவர்கள் அனைவருமே அந்தப் பள்ளியின் மாணவ / மாணவியர்கள் மட்டும்தான். அதாவது பத்து வயதுக்கு உட்பட்டோர் மட்டுமே நடித்து அரங்கேற்றப்பட்ட "பொன்னியின் செல்வன்" நாடகம் என்பது தான் மிகவும் குறிப்பிடத்தக்கது. அதன் தீவிர முழு முதல் மூலகர்த்தாவான பத்மபிரியா அவர்களிடம் பேசினோம்..உங்கள் பள்ளியின் ஆண்டு விழாவில் "பொன்னியின் செல்வன்" மேடை நாடகம் நடத்திட வேண்டும் என்கிற எண்ணம் முதலில் உங்களுக்கு எப்படி வந்தது?.எங்கள் பள்ளியின் ஒவ்வொரு ஆண்டு விழாவிலும் ஒவ்வொரு விதமான கலை நிகழ்ச்சிகள் நடத்துவோம். நான்கைந்து ஆண்டுகளாகவே நம் பள்ளி ஆண்டு விழாவில் "பொன்னியின் செல்வன் நாடகம் ஒரு முறையாவது நடத்திட வேண்டும்" என்கிற எண்ணமும் ஆவலும் எனக்குள் வந்து கொண்டே இருந்தது. என்னுடைய இருபத்தி ஐந்தாம் வயதினில் பொன்னியின் செல்வன் அத்தனை பாகங்களையும் மீண்டும் மீண்டும் வாசித்து அதில் கரைந்து போனேன். எனக்குள் நானே காணாமல் போய்விட்ட உணர்வு. இருபது ஆண்டுகளாக அதனை அசைபோட்டபடியே இருந்துள்ளேன். பொன்னியின் செல்வன் என்பது மாபெரும் கடல். அதனை ஒரு குவளைக்குள் அடக்கிட இயலாது எனத் தெரிந்திருந்தும், அதன் மேடை நாடக வடிவத்துக்கான முயற்சிகளில் இறங்கத் தொடங்கினேன்..என்ன செய்தீர்கள்?.பொன்னியின் செல்வன் நாவலை முழுமையாக மீண்டும் வாசித்தேன். அப்போது அதில் எங்கெங்கு மேடை நாடகமாக்கக் கூடிய காட்சியமைப்புகள் உள்ளன என்று குறிப்புகள் எடுத்தேன். மேடையில் காட்ட இயலாத சில நிகழ்வுகளை வேறு வடிவத்தில் மேடையில் காட்டினோம். பின்னர் அது குறித்துச் சொல்கிறேன். ஆங்காங்கு குறிப்புகள் எடுக்கும் போதே அதன் உரையாடல்களையும் சுருக்கமாக எழுதிக் கொண்டேன். பொன்னியின் செல்வன் வரலாற்று நவீனத்தின் தொடக்கம் முதல் இறுதி வரைக்குமாக நாடக ஸ்கிரிப்ட் எழுதிக் கொண்டேன். என் சக ஆசிரியைகள் அவ்வப்போது அதனை மனம் கோணாமல் மகிழ்வுடன் எனக்கு தட்டச்சு செய்து தந்து உதவினார்கள். அந்த நீண்ட நெடும் வரலாற்று நாவலின் பல நிகழ்வுகளை ஆங்காங்கு தாவித் தாவி வந்த போதிலும், ஓரளவுக்கு ஒரு முழு வடிவமான மேடை நாடக ஸ்கிரிப்ட் என் கைகளுக்குள் வந்து விட்டது.. அதன் பின் என்ன ஆச்சு?.என் சக ஆசிரியைகளின் ஆலோசனைகளின்படி, வரலாற்று நாவலின் முக்கிய கதாபாத்திரங்களுக்கான மாணவ – மாணவிகளைத் தேர்வு செய்தோம். அவர்கள் ஒவ்வொருவரிடமும் அவரவர் பங்களிப்புக்கான மற்றையோரின் இணைப்பு வசனங்களையும் சேர்த்துத் தந்து பல தடவைகள் அவர்களைப் படித்து உணரச் செய்தோம். பிள்ளைகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் ரொம்பவே சந்தோசம். எங்கள் பள்ளியில் மொத்தம் இருநூற்றி எழுபத்தைந்து பிள்ளைகள். மேடை நாடகத்தில் காட்சிகளுக்குத் தகுந்தாற்போல மேடையில் அனைவர்க்கும் வாய்ப்பளித்தோம். நாடக வசனங்களுக்கான கேரக்டர்களுக்கு அந்தந்தப் பிள்ளைகளைப் பேச வைத்தே குரல் பதிவுகள் பதிவு செய்தோம். ஒட்டுமொத்தமாக அந்தக் குரல் பதிவுகளை கவனமாக வெட்டி ஒட்டி இணைத்து எடிட் செய்து முழுமை பெற வைத்தோம். மேடையில் பிள்ளைகள் நடித்துக் கொண்டே பேசுகையில் ஒவ்வொருவருக்கும் மைக் ரெடி பண்ணித் தந்திட இயலாது என்பதால், குரல் ஒலி வடிவில் முழுதாக உருவாக்கினோம். ஒவ்வொரு காட்சிக்கும் மேடையில் பிள்ளைகள் (அந்தந்த கதாபாத்திரங்கள்) தோன்றி நடிப்பார்கள். வெறும் உதட்டசைவில் வசனங்களை உச்சரிப்பார்கள். முன்னரே பதிவு செய்யப்பட வசனங்கள் ஏற்ற இறக்க உச்சரிப்புடன் அரங்கிலே ஒலிபரப்பு ஆகிக் கொண்டிருக்கும்..மேடையில் காட்சிப்படுத்த இயலாதவைகளுக்கு என்ன செய்தீர்கள்?.சில இடங்களுக்கு அந்தக் கதாபாத்திரங்களுடன் நேரில் சென்று அவர்களை நடிக்க வைத்து வீடியோவாகப் பதிவு செய்தோம். மேலும் சில காட்சிகளுக்குப் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். வீராணம் ஏரியில் குந்தவையும் வானதியும் படகில் செல்லும் காட்சி. அதற்கு நாங்கள் அரியலூர் மாவட்டத்தில் கரைவெட்டி ஏரிக்குச் சென்று அங்கு குந்தவை வானதி ஆகியோரை படகிலே பயணம் செல்வது போல வீடியோ பதிவு செய்தோம். குந்தவையும் வானதியும் குடந்தை ஜோதிடர் வீட்டுக்கு அன்னபட்சி படகில் செல்வார்கள். அதனை கரைவெட்டி அருகே ஒரு ஓடையில் படகு விட்டு வீடியோ எடுத்தோம். கந்தமாறனை வந்தியத் தேவன் தூக்கிக் காப்பாற்றும் சம்பவம். எங்கள் கரம்பயம் டீச்சர் வீட்டருகே குளத்தின் படித்துறையில் வீடியோ பதிவு செய்தோம். பெரிய பழுவேட்டரையர் வெள்ளத்தில் சிக்கி தத்தளிப்பார். அதனைக் கண்டிராதீர்த்தம் படித்துறையில் வீடியோ எடுத்தோம். அருண்மொழிவர்மன் யாருக்கும் தெரியாமல் இருளில் புத்த பிட்சுக்கள் வீட்டுக்குச் செல்வார். அப்போது படகோட்டி தீவட்டி வெளிச்சத்தில், வந்திருப்பது அருண்மொழிவர்மன் தான் என்று தெரிந்து கொள்வார். அந்தக் காட்சியினையும் கண்டிராதீர்த்தம் படித்துறையில் வீடியோ பதிவு செய்தோம்..இவைகளை மேடையில் அதனதன் காட்சிகள் வரும் போது திரையிட்டுக் காட்டினோம். இதற்கென மேடையின் ஒரு பக்கத்தில் பன்னிரண்டடி உயரம் கொண்ட எல்இடி திரையினை அமைத்திருந்தோம்..நந்தியம்மன் பெருமாள் கோயிலுக்கு சேந்தனமுதன் பூ கொண்டு போவார். அதனை திருவையாறு அருகே ஒரு சிவன் கோயிலில் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். திருப்புறம்பியம் கோயில் மதில் சுவர் மீதமர்ந்து கொண்டு, ஆழ்வார்க்கடியான் உளவு பார்ப்பார். பாண்டிய உளவாளியான மந்திரவாதியின் சூழ்ச்சிகளை மறைந்திருந்து கவனிப்பார். அதனை அங்கு சென்றே போட்டோ பிடித்தோம். இதுபோன்ற புகைப்படங்களையும் தேவைப்படும் நேரங்களில் மேடையில் காட்சிப்படுத்தினோம்..பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களின் ஆடை அணிகலன்களுக்கு என்ன செய்தீர்கள்?.முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த பிள்ளைகளின் பெற்றோர்களே மனமுவந்து அவரவர்க்கான ஆடைகளை அவர்களது சொந்த செலவில் வடிவமைத்துத் தந்து உதவினார்கள். பொன்னியின் செல்வனுக்காக நாங்கள் இது கூட செய்யவில்லை என்றால் என்னாவது எனக் கேட்டனர். மற்ற இதர அணிகலன்கள் மற்ற பொருட்கள் ஒவ்வொன்றுக்கும் சக ஆசிரியைகள் ஆசிரியர் ஒருவர் மற்றும் பள்ளியின் வேன் டிரைவர்கள் உட்பட அலுவலகப் பணியாளர்களும் தாங்களே முன்வந்து செலவு செய்தனர். அரியலூர் நகரப் பொதுமக்களில் முக்கியப் பிரமுகர்கள் பலரும் நிதியுதவியும் உடல் உழைப்பும் நிறையவே செய்தனர். இல்லையேல் தனி ஒரு நபரால் மட்டும் இவ்வளவும் நடந்திருக்க முடியவே முடியாது. மூன்று மணி நேரம் மேடை நாடகம் அரங்கின் பார்வையாளர் அனைவரையுமே பெரிதும் ஈர்த்தது. பெரிதும் கவர்ந்தது. எனக்குத் தெரிந்த வகையில், நான் உணர்ந்து கொண்ட வகையில் அமரர் கல்கி அவர்களின் மாஸ்டர் பீஸ் ஆன பொன்னியின் செல்வன் வரலாற்று நவீனத்தை மூன்று மணி நேர மேடை நாடகமாக வடிவமைத்து நடத்திக் காட்டியதில் எனக்கு ஆத்ம திருப்தி.
நேர் காணல்.– ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு.அரியலூர் ராஜாஜி நகரில் இயங்கி வருகிறது, பத்மஸ்ரீ வித்யாலயா நர்சரி பிரைமரி ஸ்கூல். அங்கு எல்.கே.ஜி. முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடங்கள் நடத்தப்படுகின்றன. அதன் தாளாளர் பத்மபிரியா. அந்தப் பள்ளி தொடங்கி பதின்மூன்று ஆண்டுகள் ஆகின்றன. ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் பள்ளி ஆண்டு விழா கொண்டாடுவது வழக்கம். சமீபத்திய கொரோனா கால நெருக்கடிகளுக்குச் சற்று முன்பாக 2020ல், அந்தப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் "பொன்னியின் செல்வன்" மேடை நாடகம் அரங்கேற்றம் ஆகியுள்ளது. அந்த நாடகத்தில் நடித்தவர்கள் அனைவருமே அந்தப் பள்ளியின் மாணவ / மாணவியர்கள் மட்டும்தான். அதாவது பத்து வயதுக்கு உட்பட்டோர் மட்டுமே நடித்து அரங்கேற்றப்பட்ட "பொன்னியின் செல்வன்" நாடகம் என்பது தான் மிகவும் குறிப்பிடத்தக்கது. அதன் தீவிர முழு முதல் மூலகர்த்தாவான பத்மபிரியா அவர்களிடம் பேசினோம்..உங்கள் பள்ளியின் ஆண்டு விழாவில் "பொன்னியின் செல்வன்" மேடை நாடகம் நடத்திட வேண்டும் என்கிற எண்ணம் முதலில் உங்களுக்கு எப்படி வந்தது?.எங்கள் பள்ளியின் ஒவ்வொரு ஆண்டு விழாவிலும் ஒவ்வொரு விதமான கலை நிகழ்ச்சிகள் நடத்துவோம். நான்கைந்து ஆண்டுகளாகவே நம் பள்ளி ஆண்டு விழாவில் "பொன்னியின் செல்வன் நாடகம் ஒரு முறையாவது நடத்திட வேண்டும்" என்கிற எண்ணமும் ஆவலும் எனக்குள் வந்து கொண்டே இருந்தது. என்னுடைய இருபத்தி ஐந்தாம் வயதினில் பொன்னியின் செல்வன் அத்தனை பாகங்களையும் மீண்டும் மீண்டும் வாசித்து அதில் கரைந்து போனேன். எனக்குள் நானே காணாமல் போய்விட்ட உணர்வு. இருபது ஆண்டுகளாக அதனை அசைபோட்டபடியே இருந்துள்ளேன். பொன்னியின் செல்வன் என்பது மாபெரும் கடல். அதனை ஒரு குவளைக்குள் அடக்கிட இயலாது எனத் தெரிந்திருந்தும், அதன் மேடை நாடக வடிவத்துக்கான முயற்சிகளில் இறங்கத் தொடங்கினேன்..என்ன செய்தீர்கள்?.பொன்னியின் செல்வன் நாவலை முழுமையாக மீண்டும் வாசித்தேன். அப்போது அதில் எங்கெங்கு மேடை நாடகமாக்கக் கூடிய காட்சியமைப்புகள் உள்ளன என்று குறிப்புகள் எடுத்தேன். மேடையில் காட்ட இயலாத சில நிகழ்வுகளை வேறு வடிவத்தில் மேடையில் காட்டினோம். பின்னர் அது குறித்துச் சொல்கிறேன். ஆங்காங்கு குறிப்புகள் எடுக்கும் போதே அதன் உரையாடல்களையும் சுருக்கமாக எழுதிக் கொண்டேன். பொன்னியின் செல்வன் வரலாற்று நவீனத்தின் தொடக்கம் முதல் இறுதி வரைக்குமாக நாடக ஸ்கிரிப்ட் எழுதிக் கொண்டேன். என் சக ஆசிரியைகள் அவ்வப்போது அதனை மனம் கோணாமல் மகிழ்வுடன் எனக்கு தட்டச்சு செய்து தந்து உதவினார்கள். அந்த நீண்ட நெடும் வரலாற்று நாவலின் பல நிகழ்வுகளை ஆங்காங்கு தாவித் தாவி வந்த போதிலும், ஓரளவுக்கு ஒரு முழு வடிவமான மேடை நாடக ஸ்கிரிப்ட் என் கைகளுக்குள் வந்து விட்டது.. அதன் பின் என்ன ஆச்சு?.என் சக ஆசிரியைகளின் ஆலோசனைகளின்படி, வரலாற்று நாவலின் முக்கிய கதாபாத்திரங்களுக்கான மாணவ – மாணவிகளைத் தேர்வு செய்தோம். அவர்கள் ஒவ்வொருவரிடமும் அவரவர் பங்களிப்புக்கான மற்றையோரின் இணைப்பு வசனங்களையும் சேர்த்துத் தந்து பல தடவைகள் அவர்களைப் படித்து உணரச் செய்தோம். பிள்ளைகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் ரொம்பவே சந்தோசம். எங்கள் பள்ளியில் மொத்தம் இருநூற்றி எழுபத்தைந்து பிள்ளைகள். மேடை நாடகத்தில் காட்சிகளுக்குத் தகுந்தாற்போல மேடையில் அனைவர்க்கும் வாய்ப்பளித்தோம். நாடக வசனங்களுக்கான கேரக்டர்களுக்கு அந்தந்தப் பிள்ளைகளைப் பேச வைத்தே குரல் பதிவுகள் பதிவு செய்தோம். ஒட்டுமொத்தமாக அந்தக் குரல் பதிவுகளை கவனமாக வெட்டி ஒட்டி இணைத்து எடிட் செய்து முழுமை பெற வைத்தோம். மேடையில் பிள்ளைகள் நடித்துக் கொண்டே பேசுகையில் ஒவ்வொருவருக்கும் மைக் ரெடி பண்ணித் தந்திட இயலாது என்பதால், குரல் ஒலி வடிவில் முழுதாக உருவாக்கினோம். ஒவ்வொரு காட்சிக்கும் மேடையில் பிள்ளைகள் (அந்தந்த கதாபாத்திரங்கள்) தோன்றி நடிப்பார்கள். வெறும் உதட்டசைவில் வசனங்களை உச்சரிப்பார்கள். முன்னரே பதிவு செய்யப்பட வசனங்கள் ஏற்ற இறக்க உச்சரிப்புடன் அரங்கிலே ஒலிபரப்பு ஆகிக் கொண்டிருக்கும்..மேடையில் காட்சிப்படுத்த இயலாதவைகளுக்கு என்ன செய்தீர்கள்?.சில இடங்களுக்கு அந்தக் கதாபாத்திரங்களுடன் நேரில் சென்று அவர்களை நடிக்க வைத்து வீடியோவாகப் பதிவு செய்தோம். மேலும் சில காட்சிகளுக்குப் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். வீராணம் ஏரியில் குந்தவையும் வானதியும் படகில் செல்லும் காட்சி. அதற்கு நாங்கள் அரியலூர் மாவட்டத்தில் கரைவெட்டி ஏரிக்குச் சென்று அங்கு குந்தவை வானதி ஆகியோரை படகிலே பயணம் செல்வது போல வீடியோ பதிவு செய்தோம். குந்தவையும் வானதியும் குடந்தை ஜோதிடர் வீட்டுக்கு அன்னபட்சி படகில் செல்வார்கள். அதனை கரைவெட்டி அருகே ஒரு ஓடையில் படகு விட்டு வீடியோ எடுத்தோம். கந்தமாறனை வந்தியத் தேவன் தூக்கிக் காப்பாற்றும் சம்பவம். எங்கள் கரம்பயம் டீச்சர் வீட்டருகே குளத்தின் படித்துறையில் வீடியோ பதிவு செய்தோம். பெரிய பழுவேட்டரையர் வெள்ளத்தில் சிக்கி தத்தளிப்பார். அதனைக் கண்டிராதீர்த்தம் படித்துறையில் வீடியோ எடுத்தோம். அருண்மொழிவர்மன் யாருக்கும் தெரியாமல் இருளில் புத்த பிட்சுக்கள் வீட்டுக்குச் செல்வார். அப்போது படகோட்டி தீவட்டி வெளிச்சத்தில், வந்திருப்பது அருண்மொழிவர்மன் தான் என்று தெரிந்து கொள்வார். அந்தக் காட்சியினையும் கண்டிராதீர்த்தம் படித்துறையில் வீடியோ பதிவு செய்தோம்..இவைகளை மேடையில் அதனதன் காட்சிகள் வரும் போது திரையிட்டுக் காட்டினோம். இதற்கென மேடையின் ஒரு பக்கத்தில் பன்னிரண்டடி உயரம் கொண்ட எல்இடி திரையினை அமைத்திருந்தோம்..நந்தியம்மன் பெருமாள் கோயிலுக்கு சேந்தனமுதன் பூ கொண்டு போவார். அதனை திருவையாறு அருகே ஒரு சிவன் கோயிலில் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். திருப்புறம்பியம் கோயில் மதில் சுவர் மீதமர்ந்து கொண்டு, ஆழ்வார்க்கடியான் உளவு பார்ப்பார். பாண்டிய உளவாளியான மந்திரவாதியின் சூழ்ச்சிகளை மறைந்திருந்து கவனிப்பார். அதனை அங்கு சென்றே போட்டோ பிடித்தோம். இதுபோன்ற புகைப்படங்களையும் தேவைப்படும் நேரங்களில் மேடையில் காட்சிப்படுத்தினோம்..பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களின் ஆடை அணிகலன்களுக்கு என்ன செய்தீர்கள்?.முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த பிள்ளைகளின் பெற்றோர்களே மனமுவந்து அவரவர்க்கான ஆடைகளை அவர்களது சொந்த செலவில் வடிவமைத்துத் தந்து உதவினார்கள். பொன்னியின் செல்வனுக்காக நாங்கள் இது கூட செய்யவில்லை என்றால் என்னாவது எனக் கேட்டனர். மற்ற இதர அணிகலன்கள் மற்ற பொருட்கள் ஒவ்வொன்றுக்கும் சக ஆசிரியைகள் ஆசிரியர் ஒருவர் மற்றும் பள்ளியின் வேன் டிரைவர்கள் உட்பட அலுவலகப் பணியாளர்களும் தாங்களே முன்வந்து செலவு செய்தனர். அரியலூர் நகரப் பொதுமக்களில் முக்கியப் பிரமுகர்கள் பலரும் நிதியுதவியும் உடல் உழைப்பும் நிறையவே செய்தனர். இல்லையேல் தனி ஒரு நபரால் மட்டும் இவ்வளவும் நடந்திருக்க முடியவே முடியாது. மூன்று மணி நேரம் மேடை நாடகம் அரங்கின் பார்வையாளர் அனைவரையுமே பெரிதும் ஈர்த்தது. பெரிதும் கவர்ந்தது. எனக்குத் தெரிந்த வகையில், நான் உணர்ந்து கொண்ட வகையில் அமரர் கல்கி அவர்களின் மாஸ்டர் பீஸ் ஆன பொன்னியின் செல்வன் வரலாற்று நவீனத்தை மூன்று மணி நேர மேடை நாடகமாக வடிவமைத்து நடத்திக் காட்டியதில் எனக்கு ஆத்ம திருப்தி.