விழித்திரை புற்றுநோய் .கண்களில் புற்று நோய் வருமா? அதுவும் குழந்தைகளுக்கு வருமா? .முனைவர் அ.போ.இருங்கோவேள், மேலாளர் – மருத்துவ சமூகவியல்,சங்கர நேத்ராலயா, சென்னை. .குழந்தைகளின் கண் நலம் பற்றி சிந்திக்கும் போது, மிகவும் முக்கியமாக கவனிக்க வேண்டிய பிரச்சினை விழித்திரை புற்றுநோய்.கண்ணில் விழித்திரையில் வரக்கூடிய புற்றுநோய் ஆங்கிலத்தில் ரெட்டினோப்ளாஸ்டோமா எனப்படுகிறது. இது கண்ணில் உள்ள ரெட்டினா என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் விழித்திரையில் உருவாகக்கூடியது. இது பொதுவாக ஒரு கண்ணிலோ சிலருக்கு இரண்டு கண்களிலுமே வரக்கூடிய நோய்..நாம் பிறந்தவுடன், நமது வாழ்வின் ஆரம்ப வருடங்களில் நமது கண்கள் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது. அந்த விரைவான வளர்ச்சி காலத்தின் போது சில நேரங்களில் நமது கண்ணுக்குள்ளே செல் பிரிதல் மிகவும் அசாதாரணமான வழியில் நடைபெறுகின்றது. அதன் காரணமாகவே இந்த ரெட்டினோப்ளாஸ்டோமா எனும் விழித்திரை புற்று நோய் ஆரம்பமாகி வளருகிறது..இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு வருடமும் சுமார் 2000 குழந்தைகளுக்கு ரெட்டினோப்ளாஸ்டோமா இருப்பதாக நோய் கண்டறியப்பட்டுள்ளது..இந்நோய் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளையே மிக அதிக அளவில் பாதிக்கிறது. இந்நோய் ஆரம்பக்கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டால் குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம்..சராசரியாக குழந்தைகளுக்கு வயது 18 மாதமாக இருக்கும் போது இந்த விழித்திரை புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும்போது கட்டி உருவாகிறது என்றாலும், ரெட்டினோபிளாஸ்டோமா பற்றிய விழிப்புணர்வு இல்லாத நிலையில் மருத்துவர்களிடம் தாமதமாக காண்பிப்பதே முக்கிய காரணம்..அதிக அளவில் ஒன்றரை வயது முதல் மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவில் 3 முதல் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்த நோய் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..குழந்தைகளின் விழிகளைசிறு வயதிலேயே கவர்ந்து கொள்ளும் விழித்திரை புற்று நோய் பற்றி டாக்டர் திருமதி சுகனேஷ்வரி கணேசனுடன் ஓர் நேர்முகம்:.இது பரம்பரை வியாதியா?.கண்ணில் விழித்திரையில் காணப்படும் பரம்பரை மூலக்கூறியல் குறைபாடு காரணமாகவே கண்களில் விழித்திரையில் புற்றுநோய் பாதிப்பு நேரிடுகிறது..விழித்திரை புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவரின் குழந்தைகளுக்கும் இந்நோய் வருவதற்க்கான வாய்ப்பு 50 % இருக்கிறது..பெற்றோரில் ஒருவருக்கு இந்நோய் இருந்தாலும், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இந்நோய் வருவதற்கான வாய்ப்பு 50% இருக்கிறது.. குழந்தைகளுக்கு இது வந்திருப்பதை எப்படி தெரிந்து கொள்வது?.ஒரு குழந்தைக்கு கீழ்க்கண்ட அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகள் தெரிந்தால் அந்த குழந்தையை ஒரு கண் மருத்துவ நிபுணரிடம் பரிசோதனைக்கு அழைத்துச் செல்வது நல்லது.கண் மருத்துவர் கண்களில் சொட்டு மருந்திட்டு கண்ணின் கருமணியை விரிய வைத்து உட்பகுதிகளை தீவிரமாக சோதனை செய்து விழித்திரை புற்று நோய்க்கான அறிகுறிகள் இருக்கிறதா அல்லது வேறு ஏதேனும் கண் நோய்களுக்கான அறிகுறிகள் இருக்கிறதா என்பதை கண்டறிவார்..மேலும் இந்த அறிகுறிகள் விழித்திரை புற்று நோய்க்கான பொதுவான அறிகுறிகளாக இருந்தாலும், அவை மற்ற கண் நோய்களுக்கான பொதுவான அறிகுறிகளாகவும் கருதப்படுகின்றன..பொதுவாக கண்ணின் கருமணி எனப்படும் பாப்பா (ஆங்கிலத்தில் Pupil)வெள்ளை நிறத்தில் காட்சியளிப்பது. இது லுக்கோகோரியா எனப்படுகிறது. இது ஒளிக்கதிர்கள் விழித்திரையில் குவியாமல், வெண் நிற கட்டியின் மீது பதிவாகி பிரதிபலிப்பதால் உருவாகிறது..பாதிக்கப்பட்ட குழந்தையின் கண்கள் சில நேரங்களில் சிவப்பு நிறத்திலும் காணப்படலாம். குழந்தைக்கு வலியும் இருக்கும். அந்த கட்டி வளருவதால் புதிய இரத்தக்குழாய்கள் கருவிழியின் மேற்பரப்பில் உருவாகின்றன. இது கருவிழியின் நிறத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இப்படி கருவிழி நிறம் மாறுவதை ஹீட்ரொக்ரோமியா என்று சொல்லப்படுகிறது..ஈசோட்ரோபியா Esotropia (cross-eyed) எனப்படும் குறுக்குவாட்டாக அமைந்த கண்கள் குழந்தைகளுக்கு இருக்குமேயானால், அதுவும் ஒரு அறிகுறியாகும். கண்கள் உள்புறம் நோக்கி திரும்பியிருப்பது போல காட்சியளிக்கும்..எக்ஸோட்ரோபியா Exotropia (lazy eye) எனப்படும் சோம்பேறிக்கண் போல அமைந்த கண்கள் குழந்தைகளுக்கு இருக்குமேயானால், அதுவும் ஒரு அறிகுறியாகும். கண்கள் வெளிப்பக்கம் நோக்கி திரும்பியிருப்பது போல காட்சியளிக்கும்..நோய் அதிகமான நிலையில், நமது உடல் கட்டிகளுக்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகளும் செயல்படுகிறது. அந்த நிலையில் கண் இமைகள் சிவப்பாகவும் சற்று வீக்கமாகவும் காணப்படும்..சில நேரங்களில் கண்ணின் சுற்றுப்புறப்பாதையாக இருக்கும் ஆர்பிட் டிலிருந்து கண்கள் வெளியே எட்டிப்பார்ப்பது போலவும் இருக்கும். இது கண்ணில் ஏதோ நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பது போல தோற்றம் தரும். இதுவும் விழித்திரை புற்று நோயின் அறிகுறியாகும்..பார்வைக் குறைவு – விழித்திரையில் இந்நோய்க்கான கட்டி இருந்தால் பார்வை பாதிக்கப்படலாம்..என்ன சிகிச்சை அளிப்பார்கள்?.பொதுவாக புற்றுநோயின் வகையை வைத்து நோயாளிக்கு சிகிச்சை முறைகள் தீர்மானிக்கப்படுகிறது. இது விழித்திரை புற்று நோய்க்கும் பின்பற்றப்படுகிறது. மேற்கண்ட அறிகுறிகள் கொண்ட குழந்தைகளுக்கு முழுமையான கண் பரிசோதனை செய்வது அவசியம்..குழந்தைகளுக்கு கண்ணில் ரெட்டினோப்ளாஸ்டோமா எனப்படும் விழித்திரை புற்று நோய் இருப்பது ஊர்ஜிதமானால், நோயின் தீவிரத்தைப் பொறுத்து கீழ்க்காணும் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன..சிகிச்சையானது லேசர், கிரையோதெரபி முறைகளிலிருக்கும் மற்றும் கீமோதெரபியின் வடிவமாகும்..கணவன் அல்லது மனைவி ரெட்டினோபிளாஸ்டோமாவில் இருந்து தப்பிய தம்பதிகளில் ஒருவர், ரெட்டினோபிளாஸ்டோமா இல்லாமல் ஆரோக்கியமான குழந்தையைப் பெற விரும்பினால், இந்த நோய் தாக்காத குழந்தையைப் பெற்றுக்கொள்ள முடியாதா?.முதலில் ரெட்டினோபிளாஸ்டோமா உள்ள பெற்றோர் RB1 மரபணுவின் மரபணு மாற்றம் இருப்பதைக் கண்டறிய இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். மரபணு மாற்றம் எதிர்மறையாக இருந்தால், சாதாரண கர்ப்பத்தைத் தொடரவும், ஆனால் குழந்தை பிறந்தவுடன், பிறந்த ஒரு வாரத்திற்குள் விழித்திரை மதிப்பீட்டிற்காக குழந்தையை உடனடியாக கண் புற்றுநோயியல் நிபுணரிடம் கொண்டு செல்ல வேண்டும். மறுபுறம், மரபணு மாற்றம் நேர்மறையாக இருந்தால், கர்ப்ப திட்டமிடலில் மரபியல் நிபுணர், மகப்பேறு மருத்துவர், பெரினாட்டாலஜிஸ்ட் மற்றும் கண் புற்றுநோயியல் நிபுணர் ஆகியோர் இருக்க வேண்டும். கவலை வேண்டாம் மரபணு நோய்களால் பாதிக்கப்பட்ட தம்பதிகளுக்கு சாதாரண குழந்தைகளைப் பெறுவதற்கு மருத்துவத் தொழில்நுட்பம் பல முன்னேற்றங்களைக் கொண்டுள்ளது.
விழித்திரை புற்றுநோய் .கண்களில் புற்று நோய் வருமா? அதுவும் குழந்தைகளுக்கு வருமா? .முனைவர் அ.போ.இருங்கோவேள், மேலாளர் – மருத்துவ சமூகவியல்,சங்கர நேத்ராலயா, சென்னை. .குழந்தைகளின் கண் நலம் பற்றி சிந்திக்கும் போது, மிகவும் முக்கியமாக கவனிக்க வேண்டிய பிரச்சினை விழித்திரை புற்றுநோய்.கண்ணில் விழித்திரையில் வரக்கூடிய புற்றுநோய் ஆங்கிலத்தில் ரெட்டினோப்ளாஸ்டோமா எனப்படுகிறது. இது கண்ணில் உள்ள ரெட்டினா என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் விழித்திரையில் உருவாகக்கூடியது. இது பொதுவாக ஒரு கண்ணிலோ சிலருக்கு இரண்டு கண்களிலுமே வரக்கூடிய நோய்..நாம் பிறந்தவுடன், நமது வாழ்வின் ஆரம்ப வருடங்களில் நமது கண்கள் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது. அந்த விரைவான வளர்ச்சி காலத்தின் போது சில நேரங்களில் நமது கண்ணுக்குள்ளே செல் பிரிதல் மிகவும் அசாதாரணமான வழியில் நடைபெறுகின்றது. அதன் காரணமாகவே இந்த ரெட்டினோப்ளாஸ்டோமா எனும் விழித்திரை புற்று நோய் ஆரம்பமாகி வளருகிறது..இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு வருடமும் சுமார் 2000 குழந்தைகளுக்கு ரெட்டினோப்ளாஸ்டோமா இருப்பதாக நோய் கண்டறியப்பட்டுள்ளது..இந்நோய் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளையே மிக அதிக அளவில் பாதிக்கிறது. இந்நோய் ஆரம்பக்கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டால் குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம்..சராசரியாக குழந்தைகளுக்கு வயது 18 மாதமாக இருக்கும் போது இந்த விழித்திரை புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும்போது கட்டி உருவாகிறது என்றாலும், ரெட்டினோபிளாஸ்டோமா பற்றிய விழிப்புணர்வு இல்லாத நிலையில் மருத்துவர்களிடம் தாமதமாக காண்பிப்பதே முக்கிய காரணம்..அதிக அளவில் ஒன்றரை வயது முதல் மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவில் 3 முதல் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்த நோய் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..குழந்தைகளின் விழிகளைசிறு வயதிலேயே கவர்ந்து கொள்ளும் விழித்திரை புற்று நோய் பற்றி டாக்டர் திருமதி சுகனேஷ்வரி கணேசனுடன் ஓர் நேர்முகம்:.இது பரம்பரை வியாதியா?.கண்ணில் விழித்திரையில் காணப்படும் பரம்பரை மூலக்கூறியல் குறைபாடு காரணமாகவே கண்களில் விழித்திரையில் புற்றுநோய் பாதிப்பு நேரிடுகிறது..விழித்திரை புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவரின் குழந்தைகளுக்கும் இந்நோய் வருவதற்க்கான வாய்ப்பு 50 % இருக்கிறது..பெற்றோரில் ஒருவருக்கு இந்நோய் இருந்தாலும், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இந்நோய் வருவதற்கான வாய்ப்பு 50% இருக்கிறது.. குழந்தைகளுக்கு இது வந்திருப்பதை எப்படி தெரிந்து கொள்வது?.ஒரு குழந்தைக்கு கீழ்க்கண்ட அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகள் தெரிந்தால் அந்த குழந்தையை ஒரு கண் மருத்துவ நிபுணரிடம் பரிசோதனைக்கு அழைத்துச் செல்வது நல்லது.கண் மருத்துவர் கண்களில் சொட்டு மருந்திட்டு கண்ணின் கருமணியை விரிய வைத்து உட்பகுதிகளை தீவிரமாக சோதனை செய்து விழித்திரை புற்று நோய்க்கான அறிகுறிகள் இருக்கிறதா அல்லது வேறு ஏதேனும் கண் நோய்களுக்கான அறிகுறிகள் இருக்கிறதா என்பதை கண்டறிவார்..மேலும் இந்த அறிகுறிகள் விழித்திரை புற்று நோய்க்கான பொதுவான அறிகுறிகளாக இருந்தாலும், அவை மற்ற கண் நோய்களுக்கான பொதுவான அறிகுறிகளாகவும் கருதப்படுகின்றன..பொதுவாக கண்ணின் கருமணி எனப்படும் பாப்பா (ஆங்கிலத்தில் Pupil)வெள்ளை நிறத்தில் காட்சியளிப்பது. இது லுக்கோகோரியா எனப்படுகிறது. இது ஒளிக்கதிர்கள் விழித்திரையில் குவியாமல், வெண் நிற கட்டியின் மீது பதிவாகி பிரதிபலிப்பதால் உருவாகிறது..பாதிக்கப்பட்ட குழந்தையின் கண்கள் சில நேரங்களில் சிவப்பு நிறத்திலும் காணப்படலாம். குழந்தைக்கு வலியும் இருக்கும். அந்த கட்டி வளருவதால் புதிய இரத்தக்குழாய்கள் கருவிழியின் மேற்பரப்பில் உருவாகின்றன. இது கருவிழியின் நிறத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இப்படி கருவிழி நிறம் மாறுவதை ஹீட்ரொக்ரோமியா என்று சொல்லப்படுகிறது..ஈசோட்ரோபியா Esotropia (cross-eyed) எனப்படும் குறுக்குவாட்டாக அமைந்த கண்கள் குழந்தைகளுக்கு இருக்குமேயானால், அதுவும் ஒரு அறிகுறியாகும். கண்கள் உள்புறம் நோக்கி திரும்பியிருப்பது போல காட்சியளிக்கும்..எக்ஸோட்ரோபியா Exotropia (lazy eye) எனப்படும் சோம்பேறிக்கண் போல அமைந்த கண்கள் குழந்தைகளுக்கு இருக்குமேயானால், அதுவும் ஒரு அறிகுறியாகும். கண்கள் வெளிப்பக்கம் நோக்கி திரும்பியிருப்பது போல காட்சியளிக்கும்..நோய் அதிகமான நிலையில், நமது உடல் கட்டிகளுக்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகளும் செயல்படுகிறது. அந்த நிலையில் கண் இமைகள் சிவப்பாகவும் சற்று வீக்கமாகவும் காணப்படும்..சில நேரங்களில் கண்ணின் சுற்றுப்புறப்பாதையாக இருக்கும் ஆர்பிட் டிலிருந்து கண்கள் வெளியே எட்டிப்பார்ப்பது போலவும் இருக்கும். இது கண்ணில் ஏதோ நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பது போல தோற்றம் தரும். இதுவும் விழித்திரை புற்று நோயின் அறிகுறியாகும்..பார்வைக் குறைவு – விழித்திரையில் இந்நோய்க்கான கட்டி இருந்தால் பார்வை பாதிக்கப்படலாம்..என்ன சிகிச்சை அளிப்பார்கள்?.பொதுவாக புற்றுநோயின் வகையை வைத்து நோயாளிக்கு சிகிச்சை முறைகள் தீர்மானிக்கப்படுகிறது. இது விழித்திரை புற்று நோய்க்கும் பின்பற்றப்படுகிறது. மேற்கண்ட அறிகுறிகள் கொண்ட குழந்தைகளுக்கு முழுமையான கண் பரிசோதனை செய்வது அவசியம்..குழந்தைகளுக்கு கண்ணில் ரெட்டினோப்ளாஸ்டோமா எனப்படும் விழித்திரை புற்று நோய் இருப்பது ஊர்ஜிதமானால், நோயின் தீவிரத்தைப் பொறுத்து கீழ்க்காணும் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன..சிகிச்சையானது லேசர், கிரையோதெரபி முறைகளிலிருக்கும் மற்றும் கீமோதெரபியின் வடிவமாகும்..கணவன் அல்லது மனைவி ரெட்டினோபிளாஸ்டோமாவில் இருந்து தப்பிய தம்பதிகளில் ஒருவர், ரெட்டினோபிளாஸ்டோமா இல்லாமல் ஆரோக்கியமான குழந்தையைப் பெற விரும்பினால், இந்த நோய் தாக்காத குழந்தையைப் பெற்றுக்கொள்ள முடியாதா?.முதலில் ரெட்டினோபிளாஸ்டோமா உள்ள பெற்றோர் RB1 மரபணுவின் மரபணு மாற்றம் இருப்பதைக் கண்டறிய இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். மரபணு மாற்றம் எதிர்மறையாக இருந்தால், சாதாரண கர்ப்பத்தைத் தொடரவும், ஆனால் குழந்தை பிறந்தவுடன், பிறந்த ஒரு வாரத்திற்குள் விழித்திரை மதிப்பீட்டிற்காக குழந்தையை உடனடியாக கண் புற்றுநோயியல் நிபுணரிடம் கொண்டு செல்ல வேண்டும். மறுபுறம், மரபணு மாற்றம் நேர்மறையாக இருந்தால், கர்ப்ப திட்டமிடலில் மரபியல் நிபுணர், மகப்பேறு மருத்துவர், பெரினாட்டாலஜிஸ்ட் மற்றும் கண் புற்றுநோயியல் நிபுணர் ஆகியோர் இருக்க வேண்டும். கவலை வேண்டாம் மரபணு நோய்களால் பாதிக்கப்பட்ட தம்பதிகளுக்கு சாதாரண குழந்தைகளைப் பெறுவதற்கு மருத்துவத் தொழில்நுட்பம் பல முன்னேற்றங்களைக் கொண்டுள்ளது.