– எஸ். சந்திரமௌலி.நாலு மாத காலத்தில் மடமடவென்று மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ததை எல்லோரும் பாராட்டுகிறார்கள். ஆனால், ராம்ராஜ் காட்டன் மூன்றே நாளில் செஸ் ஒலிம்பியாட் ஸ்பெஷலாக, கறுப்பு, வெள்ளை கட்டங்கள் கொண்ட செஸ் போர்டு பார்டர் கொண்ட வேட்டியை அறிமுகப்படுத்தியது உங்களுக்குத் தெரியுமா? செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவக்கி வைக்க விமானம் மூலம் சென்னை வந்து இறங்கியபோது பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்தது ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தினர் டிசைன் செய்த பிரத்யேக வேட்டியைத்தான்! இது எப்படி சாத்தியமானது என்று வெர்மிலியன் விளம்பர நிறுவனத்தின் நிர்வாகப் பங்குதாரர் விஜயஸ்ரீ கிருஷ்ணனிடம் கேட்டபோது, மூன்றே நாட்களில் ஐடியாவில் ஆரம்பித்து, வேட்டி டிசைன், உற்பத்தி, அறிமுகம் மற்றும் விளம்பரம் வரை நடந்த சுறுசுறு பணிகள் பற்றி உற்சாகமாகப் பேசினார். அதன் தொகுப்பு:."சர்வதேச அளவிலான ஒலிம்பிக் போட்டி நம்ம ஊர்ல நடக்கிறதே! அதை ஒட்டி வேட்டியில் ஏதாவது புதுமையைப் புகுத்தி அறிமுகப்படுத்தலாமே!" என்று ராம்ராஜ் அதிபர் நாகராஜன் கேட்டபோது, "ஓ! கண்டிப்பா ஏதாவது பண்ணலாம்!" என்று சொல்லிவிட்டு, யோசித்தேன். ஆனால், எங்கள் முன் இருந்த மாபெரும் சவால், செஸ் ஒலிம்பியாட் ஆரம்பிக்க ஒரு வாரம் கூட இல்லை. அதற்குள் புதிதாக ஒரு வேட்டியை டிசைன் செய்து, ராம்ராஜ் நிறுவனம் அந்த வேட்டியை உற்பத்தி செய்து விற்பனைக்கு அனுப்ப வேண்டும். அதற்குள்ளே புதிதாக அறிமுகமாகும் வேட்டிக்கு பிரிண்ட் மீடியா விளம்பர டிசைன், டீவி சேனல் விளம்பர ஷூட்டிங் இவற்றையும் முடிக்க வேண்டும்..சட்டென்று ஒரு ஐடியா! நம் ஊர் வேட்டிக்கு செஸ் போர்டில் இருக்கும் கறுப்பு, வெள்ளைக் கட்டங்கள் பார்டர் மற்றும் கரையாக வைத்து டிசன் செய்யலாமே என்று தோன்றியது. நாகராஜன் சாரிடம் சொன்னதும், அவர் பச்சைக் கொடி காட்டினார். நேரமில்லாத காரணத்தால் நாலு முழ வேட்டிதான் உற்பத்தி செய்ய முடியும் என்ற சூழ்நிலை. வழக்கமான முறைக்கு பதிலாக டிஜிட்டல் முறையில் செஸ் கட்டங்களை வேட்டியில் பிரிண்ட் செய்தால் உற்பத்தி செலவு அதிகரிக்கும் என்றாலும், அது பற்றிக் கவலைப்படாமல் உற்பத்தி வேலைகளை அவர் கவனித்தார்..செஸ் ஒலிம்பியாட் லோகோவான தம்பி (குதிரை) யை வைத்து தம்பிக்கு ஒரு வேட்டி என்று புதிய வேட்டியை அறிமுகப்படுத்த முடிவானது. வேட்டி தயாரானதும், கையோடு எடுத்துக் கொண்டு அவர் சென்னை வந்தார். முதலமைச்சர் ஸ்டாலின் செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடுகளை மேற்பார்வையிட மாமல்லபுரம் சென்றிருக்கிறார் என்பதை அறிந்ததும், இவரும் மாமல்லபுரத்துக்குப் புறப்பட்டுச் சென்று அங்கேயே முதல்வரை சந்தித்து, புதிய வேட்டியை வழங்கினார். உடன் இருந்த அமைச்சர்களுக்கும் வேட்டி வழங்கப்பட்டது..இன்னொரு பக்கம் மடமடவென்று மற்ற வேலைகள் நடந்தன. "தம்பி வேட்டி கட்டிக்கோ! செஸ் போட்டியில் ஜெயிச்சுக்கோ" என்று விளம்பர வரிகள் உருவாக்கப்பட்டன. மாடலை வைத்து விளம்பர ஷூட்டிங் முடிந்தது..முதலமைச்சரிடம் வேட்டியை அளித்தவுடன், இன்றே பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துவிடுங்கள்! இன்றே வேட்டி அறிமுகம்!" என்று சொல்லிவிட்டார் நாகராஜன் சார். கொச்சியில் இருந்த நடிகர் ஜெயராமை உடனே புறப்பட்டு வரச்சொன்னோம். அன்று மாலை பிரஸ் மீட். குறுகிய அவகாசமே இருந்தாலும், திரளாக பத்திரிகையாளர்கள் வந்திருந்தனர். தம்பி வேட்டி அறிமுகம் அமர்க்களமாக நடந்தேறியது. மூன்றே நாட்களில் புது டிசைன் வேட்டி ரெடியானது ஓர் அதிரடி சாதனைதான்!" என்கிறார் விஜயஸ்ரீ கிருஷ்ணன்..தம்பி வேட்டி அறிமுக நிகழ்ச்சியில், "ஒரு காலத்தில் வேட்டியை நெய்பவருக்கோ, உற்பத்தி செய்பவருக்கோ அல்லது கட்டுபவருக்கோ கூட சமுதாயத்தில் ஒரு பெரிய அங்கீகாரமில்லாமல் இருந்தது. நாங்கள், வேட்டியை தமிழ்நாட்டின் அடையாளமாக்கி இருக்கிறோம்; அதனை அகில இந்தியாவின் அடையாளமாக ஆக்குவதற்கான முயற்சியில் இறங்கி இருக்கிறோம்; சர்வதேச அளவில் வேட்டியை அறிமுகப்படுத்தும் வாய்ப்புகளை உருவாக்கிக் வருகிறோம். எங்கள் முயற்சியால் சுமார் 40 ஆயிரம் நெசவாளர்கள் வாழ்க்கையில் வளம் பெற்றுள்ளனர். இந்த சூழ்நிலையில், தமிழ்நாடு அரசு வெள்ளை வேட்டி கட்டிய செஸ் தம்பியை ஒலிம்பியாட் லோகோவாக அறிமுகப்படுத்தியது எங்களை பெரும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. அதன் அடிப்படையில் யோசித்துதான், தம்பி வேட்டியை தயாரித்து அறிமுகப்படுத்தி இருக்கிறோம்" என்று குறிப்பிட்டார் ராம்ராஜ் காட்டன் நாகராஜன்..தம்பி வேட்டியை அறிமுகப்படுத்தியதுடன் நிற்காமல், பிரதமர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு தம்பி வேட்டி பற்றி எடுத்துச் சொல்லி, உடனடியாக பிரதமருக்கு வேட்டியை அனுப்பி வைத்தார் நாகராஜன். ஏற்கெனவே சீனப் பிரதமர் வருகையின்போது மகாபலிபுரத்தில் வேட்டிக் கட்டிக் கொண்டு அவருடன் பேச்சு வார்த்தை நடத்திய பிரதமர் மோடி, இந்த முறை தம்பி வேட்டி கட்டிக் கொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டியினை துவக்கி வைத்தது ராம்ராஜின் தொப்பியில் வைக்கப்பட்ட இன்னொரு சிறகு!
– எஸ். சந்திரமௌலி.நாலு மாத காலத்தில் மடமடவென்று மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ததை எல்லோரும் பாராட்டுகிறார்கள். ஆனால், ராம்ராஜ் காட்டன் மூன்றே நாளில் செஸ் ஒலிம்பியாட் ஸ்பெஷலாக, கறுப்பு, வெள்ளை கட்டங்கள் கொண்ட செஸ் போர்டு பார்டர் கொண்ட வேட்டியை அறிமுகப்படுத்தியது உங்களுக்குத் தெரியுமா? செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவக்கி வைக்க விமானம் மூலம் சென்னை வந்து இறங்கியபோது பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்தது ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தினர் டிசைன் செய்த பிரத்யேக வேட்டியைத்தான்! இது எப்படி சாத்தியமானது என்று வெர்மிலியன் விளம்பர நிறுவனத்தின் நிர்வாகப் பங்குதாரர் விஜயஸ்ரீ கிருஷ்ணனிடம் கேட்டபோது, மூன்றே நாட்களில் ஐடியாவில் ஆரம்பித்து, வேட்டி டிசைன், உற்பத்தி, அறிமுகம் மற்றும் விளம்பரம் வரை நடந்த சுறுசுறு பணிகள் பற்றி உற்சாகமாகப் பேசினார். அதன் தொகுப்பு:."சர்வதேச அளவிலான ஒலிம்பிக் போட்டி நம்ம ஊர்ல நடக்கிறதே! அதை ஒட்டி வேட்டியில் ஏதாவது புதுமையைப் புகுத்தி அறிமுகப்படுத்தலாமே!" என்று ராம்ராஜ் அதிபர் நாகராஜன் கேட்டபோது, "ஓ! கண்டிப்பா ஏதாவது பண்ணலாம்!" என்று சொல்லிவிட்டு, யோசித்தேன். ஆனால், எங்கள் முன் இருந்த மாபெரும் சவால், செஸ் ஒலிம்பியாட் ஆரம்பிக்க ஒரு வாரம் கூட இல்லை. அதற்குள் புதிதாக ஒரு வேட்டியை டிசைன் செய்து, ராம்ராஜ் நிறுவனம் அந்த வேட்டியை உற்பத்தி செய்து விற்பனைக்கு அனுப்ப வேண்டும். அதற்குள்ளே புதிதாக அறிமுகமாகும் வேட்டிக்கு பிரிண்ட் மீடியா விளம்பர டிசைன், டீவி சேனல் விளம்பர ஷூட்டிங் இவற்றையும் முடிக்க வேண்டும்..சட்டென்று ஒரு ஐடியா! நம் ஊர் வேட்டிக்கு செஸ் போர்டில் இருக்கும் கறுப்பு, வெள்ளைக் கட்டங்கள் பார்டர் மற்றும் கரையாக வைத்து டிசன் செய்யலாமே என்று தோன்றியது. நாகராஜன் சாரிடம் சொன்னதும், அவர் பச்சைக் கொடி காட்டினார். நேரமில்லாத காரணத்தால் நாலு முழ வேட்டிதான் உற்பத்தி செய்ய முடியும் என்ற சூழ்நிலை. வழக்கமான முறைக்கு பதிலாக டிஜிட்டல் முறையில் செஸ் கட்டங்களை வேட்டியில் பிரிண்ட் செய்தால் உற்பத்தி செலவு அதிகரிக்கும் என்றாலும், அது பற்றிக் கவலைப்படாமல் உற்பத்தி வேலைகளை அவர் கவனித்தார்..செஸ் ஒலிம்பியாட் லோகோவான தம்பி (குதிரை) யை வைத்து தம்பிக்கு ஒரு வேட்டி என்று புதிய வேட்டியை அறிமுகப்படுத்த முடிவானது. வேட்டி தயாரானதும், கையோடு எடுத்துக் கொண்டு அவர் சென்னை வந்தார். முதலமைச்சர் ஸ்டாலின் செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடுகளை மேற்பார்வையிட மாமல்லபுரம் சென்றிருக்கிறார் என்பதை அறிந்ததும், இவரும் மாமல்லபுரத்துக்குப் புறப்பட்டுச் சென்று அங்கேயே முதல்வரை சந்தித்து, புதிய வேட்டியை வழங்கினார். உடன் இருந்த அமைச்சர்களுக்கும் வேட்டி வழங்கப்பட்டது..இன்னொரு பக்கம் மடமடவென்று மற்ற வேலைகள் நடந்தன. "தம்பி வேட்டி கட்டிக்கோ! செஸ் போட்டியில் ஜெயிச்சுக்கோ" என்று விளம்பர வரிகள் உருவாக்கப்பட்டன. மாடலை வைத்து விளம்பர ஷூட்டிங் முடிந்தது..முதலமைச்சரிடம் வேட்டியை அளித்தவுடன், இன்றே பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துவிடுங்கள்! இன்றே வேட்டி அறிமுகம்!" என்று சொல்லிவிட்டார் நாகராஜன் சார். கொச்சியில் இருந்த நடிகர் ஜெயராமை உடனே புறப்பட்டு வரச்சொன்னோம். அன்று மாலை பிரஸ் மீட். குறுகிய அவகாசமே இருந்தாலும், திரளாக பத்திரிகையாளர்கள் வந்திருந்தனர். தம்பி வேட்டி அறிமுகம் அமர்க்களமாக நடந்தேறியது. மூன்றே நாட்களில் புது டிசைன் வேட்டி ரெடியானது ஓர் அதிரடி சாதனைதான்!" என்கிறார் விஜயஸ்ரீ கிருஷ்ணன்..தம்பி வேட்டி அறிமுக நிகழ்ச்சியில், "ஒரு காலத்தில் வேட்டியை நெய்பவருக்கோ, உற்பத்தி செய்பவருக்கோ அல்லது கட்டுபவருக்கோ கூட சமுதாயத்தில் ஒரு பெரிய அங்கீகாரமில்லாமல் இருந்தது. நாங்கள், வேட்டியை தமிழ்நாட்டின் அடையாளமாக்கி இருக்கிறோம்; அதனை அகில இந்தியாவின் அடையாளமாக ஆக்குவதற்கான முயற்சியில் இறங்கி இருக்கிறோம்; சர்வதேச அளவில் வேட்டியை அறிமுகப்படுத்தும் வாய்ப்புகளை உருவாக்கிக் வருகிறோம். எங்கள் முயற்சியால் சுமார் 40 ஆயிரம் நெசவாளர்கள் வாழ்க்கையில் வளம் பெற்றுள்ளனர். இந்த சூழ்நிலையில், தமிழ்நாடு அரசு வெள்ளை வேட்டி கட்டிய செஸ் தம்பியை ஒலிம்பியாட் லோகோவாக அறிமுகப்படுத்தியது எங்களை பெரும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. அதன் அடிப்படையில் யோசித்துதான், தம்பி வேட்டியை தயாரித்து அறிமுகப்படுத்தி இருக்கிறோம்" என்று குறிப்பிட்டார் ராம்ராஜ் காட்டன் நாகராஜன்..தம்பி வேட்டியை அறிமுகப்படுத்தியதுடன் நிற்காமல், பிரதமர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு தம்பி வேட்டி பற்றி எடுத்துச் சொல்லி, உடனடியாக பிரதமருக்கு வேட்டியை அனுப்பி வைத்தார் நாகராஜன். ஏற்கெனவே சீனப் பிரதமர் வருகையின்போது மகாபலிபுரத்தில் வேட்டிக் கட்டிக் கொண்டு அவருடன் பேச்சு வார்த்தை நடத்திய பிரதமர் மோடி, இந்த முறை தம்பி வேட்டி கட்டிக் கொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டியினை துவக்கி வைத்தது ராம்ராஜின் தொப்பியில் வைக்கப்பட்ட இன்னொரு சிறகு!