– ஆதித்யா.கல்கி ஆன்லைனில் விரைவில் தொடங்க இருக்கும் "கல்கியின் பொன்னியின் செல்வன் வந்தியத்தேவன் பாதையில் ஓர் அனுபவப்பயணம்" என்ற விடியோத் தொடரின் டீசர்களை வெளியீடும் நிகழ்ச்சிதான் அது..இன்று திரைப்படங்களுக்கு டீசர்கள் வெளியிடுவது வாடிக்கையாகிப்போன விஷயம். ஆனால், ஓர் இணைய இதழ், அதில் தொடராக வெளியாகப் போகும் ஒரு காணொளித் தொடருக்காக டீசர்கள் தயாரித்து அதை ஊடகவியலாளர்கள் சந்திப்பில் வெளியிடுவது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை. அச்சு இதழகாக இருந்த போது செய்த பல "முதல்" களைச் செய்த கல்கி இப்போது இதையும் முதன் முதலாகச் செய்திருக்கிறது..கல்கி குழும நிர்வாகியும் பத்திரிகையாளருமான லஷ்மிநடராஜன் தனது வரவேற்புரையில் காட்சி ஊடகங்களால் கவரப்பட்ட இன்றைய இளைய தலைமுறைக்குப் பொன்னியின் செல்வனை எடுத்துச்சொல்லும் முயற்சியான இது எங்கள் நீண்ட நாள் கனவு என்றார். எந்த லாப நோக்கும் இல்லாமல் பெரும் பொருட்செலவில் பலரின் கடுமையான உழைப்பில் உருவான இந்த காணொளித் தொடரில் பொன்னியின் செல்வனில் அமரர் கல்கி குறிப்பிட்டிருக்கும் இடங்கள் அங்கு இன்றும் எஞ்சிநிற்கும் சரித்திர சாட்சிகளைக் காட்சியாக்கியிருக்கிறோம். இதைப் பார்க்கும் இன்றைய தலைமுறையினர் பொன்னியின் செல்வன் காவியத்தையும், பாரம்பரியம் மிக்க நம் சரித்திரத்தையும் அறிந்துகொள்ளப் படிக்க, விரும்புவார்கள் என்று நம்புகிறோம் என்றார்..அமரர் கல்கி தன் காவியத்தில் சொல்லியிருக்கும் இந்த இடங்களின் சிறப்புகளை ஆய்வு செய்திருக்கும் சரித்திர நூல்களின் ஆசிரியர் 'காலசக்கரம்' நரசிம்மா, அந்தந்த இடங்களிலிருந்து இணைப்புரை வழங்கியிருக்கிறார். சரித்திரங்கள் நிகழ்ந்த இடங்களை காட்டும்போது எளிதாக புரிந்துகொள்ள பொன்னியின் செல்வன் காவியத்துக்காக ஓவியர் பத்மவாசன் வரைந்த படங்களும் காணொளியில் இடம்பெற்றிருக்கின்றன. இந்தக் காணொளி காட்சித் தொடருக்காக மேற்கொண்ட பயணத்தில் சந்தித்த சவால்கள், கிடைத்த புதிய சான்றுகள் பற்றிப் பேசிய காலசக்கரம் நரசிம்மன், வசதிகள் மிகுந்த இன்றைய காலகட்டத்திலேயே சவாலாக இருக்கும் இந்தப் பாதையில் பல ஆண்டுகளுக்கு முன் பயணித்து ஆய்வுகள் செய்து தரவுகளைத் தேடியிருக்கும் அமரர் கல்கி எந்தளவு கஷ்டப்பட்டிருப்பார்? என்று எழுப்பிய கேள்வி அவையோரைச் சிந்திக்கச் செய்தது..காணொளியில் காணும் இந்த இடங்களை நேரிலும் பார்க்கும் வாய்ப்பாக ஒரு நேரடிப்பயணத்தையும் திட்டமிட்டிருக்கிறார்கள் முருகப்பா குழுமத்தின் பாரி&கோ டிராவல்ஸ் நிறுவனத்தினர். அதற்கான முன்பதிவு அன்று தொடங்கியது. பயணம் மற்றும் கட்டண விபரங்கள் கல்கி இணைய தளத்தில் வெளியாகியிருக்கிறது..இந்த காணொளித்தொடரை ஓர் இளைஞர் பட்டாளம் உருவாக்கியிருக்கிறது. இயக்கம், கேமிரா, இசை, எடிட்டிங், அனைத்தையும் செய்திருப்பது 20K kids. சும்மா கலக்கியிருக்கிறார்கள். பொன்னியன் செல்வனைப் புரிந்து கொண்டு செய்நேர்த்தியுடனும் அர்ப்பணிப்புடனும் இவர்கள் செய்திருக்கும் பணி பாராட்டுக்குரியது. என்பதை இந்த டீசரை பார்த்தபின் நீங்களே சொல்வீர்கள்.. டீசர் இங்கே ...
– ஆதித்யா.கல்கி ஆன்லைனில் விரைவில் தொடங்க இருக்கும் "கல்கியின் பொன்னியின் செல்வன் வந்தியத்தேவன் பாதையில் ஓர் அனுபவப்பயணம்" என்ற விடியோத் தொடரின் டீசர்களை வெளியீடும் நிகழ்ச்சிதான் அது..இன்று திரைப்படங்களுக்கு டீசர்கள் வெளியிடுவது வாடிக்கையாகிப்போன விஷயம். ஆனால், ஓர் இணைய இதழ், அதில் தொடராக வெளியாகப் போகும் ஒரு காணொளித் தொடருக்காக டீசர்கள் தயாரித்து அதை ஊடகவியலாளர்கள் சந்திப்பில் வெளியிடுவது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை. அச்சு இதழகாக இருந்த போது செய்த பல "முதல்" களைச் செய்த கல்கி இப்போது இதையும் முதன் முதலாகச் செய்திருக்கிறது..கல்கி குழும நிர்வாகியும் பத்திரிகையாளருமான லஷ்மிநடராஜன் தனது வரவேற்புரையில் காட்சி ஊடகங்களால் கவரப்பட்ட இன்றைய இளைய தலைமுறைக்குப் பொன்னியின் செல்வனை எடுத்துச்சொல்லும் முயற்சியான இது எங்கள் நீண்ட நாள் கனவு என்றார். எந்த லாப நோக்கும் இல்லாமல் பெரும் பொருட்செலவில் பலரின் கடுமையான உழைப்பில் உருவான இந்த காணொளித் தொடரில் பொன்னியின் செல்வனில் அமரர் கல்கி குறிப்பிட்டிருக்கும் இடங்கள் அங்கு இன்றும் எஞ்சிநிற்கும் சரித்திர சாட்சிகளைக் காட்சியாக்கியிருக்கிறோம். இதைப் பார்க்கும் இன்றைய தலைமுறையினர் பொன்னியின் செல்வன் காவியத்தையும், பாரம்பரியம் மிக்க நம் சரித்திரத்தையும் அறிந்துகொள்ளப் படிக்க, விரும்புவார்கள் என்று நம்புகிறோம் என்றார்..அமரர் கல்கி தன் காவியத்தில் சொல்லியிருக்கும் இந்த இடங்களின் சிறப்புகளை ஆய்வு செய்திருக்கும் சரித்திர நூல்களின் ஆசிரியர் 'காலசக்கரம்' நரசிம்மா, அந்தந்த இடங்களிலிருந்து இணைப்புரை வழங்கியிருக்கிறார். சரித்திரங்கள் நிகழ்ந்த இடங்களை காட்டும்போது எளிதாக புரிந்துகொள்ள பொன்னியின் செல்வன் காவியத்துக்காக ஓவியர் பத்மவாசன் வரைந்த படங்களும் காணொளியில் இடம்பெற்றிருக்கின்றன. இந்தக் காணொளி காட்சித் தொடருக்காக மேற்கொண்ட பயணத்தில் சந்தித்த சவால்கள், கிடைத்த புதிய சான்றுகள் பற்றிப் பேசிய காலசக்கரம் நரசிம்மன், வசதிகள் மிகுந்த இன்றைய காலகட்டத்திலேயே சவாலாக இருக்கும் இந்தப் பாதையில் பல ஆண்டுகளுக்கு முன் பயணித்து ஆய்வுகள் செய்து தரவுகளைத் தேடியிருக்கும் அமரர் கல்கி எந்தளவு கஷ்டப்பட்டிருப்பார்? என்று எழுப்பிய கேள்வி அவையோரைச் சிந்திக்கச் செய்தது..காணொளியில் காணும் இந்த இடங்களை நேரிலும் பார்க்கும் வாய்ப்பாக ஒரு நேரடிப்பயணத்தையும் திட்டமிட்டிருக்கிறார்கள் முருகப்பா குழுமத்தின் பாரி&கோ டிராவல்ஸ் நிறுவனத்தினர். அதற்கான முன்பதிவு அன்று தொடங்கியது. பயணம் மற்றும் கட்டண விபரங்கள் கல்கி இணைய தளத்தில் வெளியாகியிருக்கிறது..இந்த காணொளித்தொடரை ஓர் இளைஞர் பட்டாளம் உருவாக்கியிருக்கிறது. இயக்கம், கேமிரா, இசை, எடிட்டிங், அனைத்தையும் செய்திருப்பது 20K kids. சும்மா கலக்கியிருக்கிறார்கள். பொன்னியன் செல்வனைப் புரிந்து கொண்டு செய்நேர்த்தியுடனும் அர்ப்பணிப்புடனும் இவர்கள் செய்திருக்கும் பணி பாராட்டுக்குரியது. என்பதை இந்த டீசரை பார்த்தபின் நீங்களே சொல்வீர்கள்.. டீசர் இங்கே ...