– ஜெயராமன் ரகுநாதன் . படம் : வி. ராஜன்.மறைந்த எழுத்தாளர் சுஜாதாவுடன் ஒரு முறை பேசிக்கொண்டிருந்தபோது ஸ்ரீரங்கத்து தேவதைகளில் "மாஞ்சு" கதையை சிலாகித்துச்சொன்னேன். அவர் சொன்னது,."ஒரு ஸ்டேஜுக்கப்றம் மாஞ்சு கதை தன்னைத்தானே எழுதிக்கொண்டதுய்யா!".'ஒரு கதை தன்னைத்தானே எழுதிக்கொள்ளுமா என்ன' என்று அன்று வியந்த எனக்கு இப்போது நானும் எழுத ஆரம்பித்தவுடன் அவர் சொன்னது புரிபட்டது. எழுதுபவன் முழுக்க முழுக்க கதைக்குள் புகுந்துவிடும்போது அறிவும் மனதும் கைகளும் ஒரு புள்ளியில் இணைகின்றன. அப்போது வெளிப்படுவது எழுத்தாளனின் வெளியுணர்வைக் (consciousness) கடந்து வார்த்தைகளாக விழுவதைத்தான் சுஜாதா சொல்லியிருந்தார்..இந்த "தன்னைத்தானே" எழுதிக்கொள்ளும் நேர்த்தி சுஜாதாவின் எழுத்தில் பரவலாக உணர முடியும்.."அதெப்படி நாளைய தலைமுறையின் சுஜாதா என்று சொல்லலாம்? அவர் படைத்தவை அப்படி ஒன்றும் காலம் கடந்த எழுத்து இல்லை!".இந்த வாதம் இப்போதே பரவலாக இருக்கிறது என்றாலும் எனக்கு மட்டும் இல்லை, என்னைப்போல லட்சக்கணக்கான வாசகர்களூக்கு சுஜாதாவின் எழுத்து சாசுவதம் தான் என்னும் ஸ்திரமான நம்பிக்கை இருப்பதை மறுக்க முடியுமா?.ஒவ்வொரு புத்தகச் சந்தையிலும் பொன்னியின் செல்வனும் சுஜாதாவும் தான் விற்பனையில் முன்னணி என்பது ஆவணப்படுத்தப்பட்ட உண்மை!."விற்பனை தரத்தை நிர்ணயிக்குமா?".விவாதங்களுக்கு முடிவே இல்லை! மேலும் ஒருவரின் எழுத்து சாசுவதமா இல்லையா என்பதை ஏதோ ஒரு குழுவோ அதிகார மையமோ தீர்மானித்துவிட முடியாது. இதுவுமே வாசக நம்பிக்கைக்கு அப்பாற்பட்டதுதான்..நிலாவில் மனிதன் இறங்கினதே இல்லை. 1969இல் நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கும் எட்வின் ஆல்டிரின்னும் இறங்கிய டெலிவிஷன் காட்சிகள் அமெரிக்காவின் நெப்ராஸ்காவில் ஏதோ ஒரு ஸ்டூடியோவில் எடுக்கப்பட்டவை என்று சொல்லுபவர்கள் இன்றும் உண்டு!.ஷேக்ஸ்பியரின் பல நாடகங்களை அவர் எழுதவே இல்லை. கிறிஸ்டஃபர் மார்லோ, ஃப்ரான்ஸிஸ் பேக்கன், எட்வார்ட் டி வியர் என்று வேறு வேறு யாரோ எழுதினார்கள் என்றெல்லாம் கூட சர்ச்சைகள் உண்டு..அதெல்லாம் ஒரு ஓரமாக விசிறிக் கடாசிவிட்டு சுஜாதா சாசுவதரா இல்லியா என்னும் கனமான சப்ஜெக்டை விட்டு விடலாம். ஆனாலும் இன்றும் சுஜாதா ஏன் ஆர்வத்துடன் வாசிக்கப்படுகிறார், நாளையும் ஏன் வாசிக்கப்படுவார் என்று ஆரவாரமில்லாமல் கொஞ்சம் யோசிக்கலாம்..தமிழ் எழுத்துலகில் அவரின் முதல் பிரவேசமே நிறைய தாக்கமுள்ளதாக இருந்ததை யாரும் மறுக்க முடியாது. அறுபதுகளில் பெரும்பாலான கதைகளின் ஆரம்பம் இப்படி இருக்கும்.."உஸ்! அப்பாடா " என்று நாகராஜ சர்மா ஈஸி சேரில் வந்து உட்கார்ந்துகொண்டார்..வாசலில் சார் போஸ்ட்! என்ற குரல் கேட்டது.."நாகராஜா! அலமுவப் பொண் பார்த்துட்டு போனாளே அவா கடுதாசியான்னு பாரு" .நாகராஜ சர்மாவோ அவர் பெண்ணொ என்ன ஆனார்கள் என்பது பற்றி நமக்கு கவலை போயே போய்விடும்! ஆனால் சுஜாதா அந்தக்கால கட்டத்திலேயே கதையை இப்படித் தொடங்கினார்.."அவன் என்னைத்தான் பின் தொடர்ந்து கொண்டிருந்தான். பஸ் ஏறி, பஸ் இறங்கி, மாறின பிற்பாடும் அதே தூரத்தில், அதே மீசையுடன் என்னைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தான். ….மறுபடி மூலைக்கு வந்து நின்றேன். சிகரெட்டை வாயில் ஒட்ட வைத்துக்கொண்டேன் (ராத்மன்ஸ் கிங் சைஸ்). லைட்டரை ஏற்றினான். ஜோதியைக்கவர்ந்து கொண்டு….. .…எதற்காக என்னைத்தொடருகிறாய்? பொசுக்கி விடுவேன், துப்பாக்கி வைத்திருக்கிறேன், பெரெட்டா! லைஸென்ஸுடன்….(ஒரு அரேபிய இரவு (1960s))..இப்படித்தொடங்கும் கதையை அப்போதே மேலும் வாசிக்காவிட்டால் ஒரு பரபரப்பு உண்டாகுமா இல்லியா? இந்த சுவாரஸ்யமே பிரதானம் என்னும் பிரவேசத்துக்குப்பிறகு சுஜாதா அடித்து ஆடியது எல்லாமே ஆறு பாலும் சிக்ஸர் என்னும் அதிரடிப்புதுமை..சுவாரஸ்யம் தாண்டி சுஜாதாவின் எழுத்துக்களில் இருந்த கவர்ச்சி, கவனிக்க, நான் சொல்லும் கவர்ச்சி நீங்கள் நினைக்கும் ஜெயராஜ் படக் கவர்ச்சி அல்ல! மூத்த பத்திரிகையாளர் மாலன் சொல்லும் "தமிழைப்புதிதாக்கும் கவர்ச்சி"!."….அவன் அப்படியே ஊஞ்சலில் உட்கார்ந்தான். உள்ளே ரசம் கொதிக்கும் வாசனை. எங்கோ துணி துவைக்கும் சத்தம். இன்னொரு அறையில், அய்யங்காரின் பேத்தி போலும், ரஞ்சனி ராகத்தை அழிச்சாட்டியம் பண்ணிக்கொண்டிருந்தது…!".புதுமையை அவர் தன் முதல் கதையான "சசி காத்திருக்கிறாளி"லிருந்து கடைசியாக எழுதிய "அப்போலோ தினங்கள்" வரை செய்துகொண்டே இருந்தார்.."எனக்கென்னவோ நரகத்துக்குப்போகத்தான் ஆசை. அங்கேதான் பல சுவாரஸ்ய ஆசாமிகளைச் சந்திக்கலாம். மேலும் சொர்க்கத்தின் அகண்ட பஜனை எனக்கு சில நிமிஷங்களுக்கு மேல் தாங்காது!".எழுத்து என்பது ஒரு தவம். அது அடிவயிற்றில் இருந்து பீரிட்டுக்கொண்டு வரும் ஏக்கத்தின் சீரிய வெளிப்பாடு என்பதெல்லம் அவர் ஒப்புக்கொண்டதில்லை. இந்த தவம், பீரிட்டு என்பதெல்லாம் அவர் பாஷையிலேயே சொல்வதானால் வெறும் "ஜல்லி அல்லது ஜபேட்டு!."எழுதறது ரொம்ப சுலபம்யா! ஆரம்பமே வாசகனை கதைக்குள் இழுத்துடணும்……"."அவர் பாலகுமாரனுக்கும் சுப்பிரமணிய ராஜுவுக்கும் எக்மோரில் ஒரு பூங்காவில் கால் மாற்றி மாற்றி நின்று கொண்டு சொன்னதைப் படித்தால் கதை எழுதுவதை யார் வேண்டுமானாலும் செய்யலாம்" என்ற ரீதியிலேயே அவர் எழுத்தை அணுகினார் என்பது புரியும். சுஜாதாவின் கைகளில் எழுத்து ஒரு கைவினையாகத்தான் (craft)மிளிர்ந்தது..சுஜாதாவின் எழுத்துக்களில் இன்றும் வாசகர்கள் தேடுவது அறிவுசார் விஷயங்கள். சுஜாதா தொடாத சப்ஜெக்டே இல்லை என்னும்படி அவர் தன் பரந்த வாசிப்பின் மூலம் அவற்றையெல்லாம் சாதாரண வாசகனுக்கும் கடத்தினார். கணையாழியின் கடைசிப் பக்கங்களும் கற்றதும் பெற்றதுவும், விஞ்ஞானக்கேள்வி பதில்களும், ஏனைய கட்டுரைகளும் சுஜாதாவின் அறிவுத்தாகத்தையும் அவரின் மிக ஆழமான வாசிப்பையும் எளிமையாக அதை எழுதினப் பாங்கையும் சொல்லும் ஆவணங்களாக நிற்கின்றன..நாம் இன்று genre என்றும் சொல்லும் வகைகளில் சுஜாதா விட்டுவைக்காத வகையே இல்லை எனலாம்..நைலான் கயிறு என்று கிரைம் எழுத ஆரம்பித்தாலும் அப்போதே உள் மன விசாரங்களை ஆழ்ந்து நோக்கிய "தனிமை கொண்டு" எழுதினார்..கணேஷ் – வசந்த் என்று துப்பறியும் கதைகளின் நடுவே காகித சங்கிலிகள் என்று கிட்னி தானம் பற்றின யதார்த்தத்தை எழுதி மனதைத்தொட்டார்..'ஜீனோ', 'ஆத்மா நித்யா', 'திமலா', 'சொர்க்கத்தீவு' என்று சயன்ஸ் ஃபிக்ஷன் கதைகளோடு நிற்காமல் 'ரத்தம் ஒரே நிறம்', 'காந்தளூர் வசந்தகுமாரன்' என்று சரித்திரத்தையும் தொட்டார்..சயன்ஸ் ஃபிக்ஷனில்கூட கம்ப்யூட்டர் ரேப் என்று சம்பிரதாயக்கதைகளைத்தாண்டி நச்சுப்பொய்கை என்று புராணத்திலும் ஒரு கதையில் இரண்டு கதைகள் என்று சோழர்காலத்திலும் விஞ்ஞானப்புனைவுகளை எழுதி பிரமிக்க வைத்தார்..'கரையெல்லாம் செண்பகப்பூ' நாவலில் ஒரு எளிய கொலை முடிச்சை கிராமத்தில் நடத்தி நாட்டுப்பாடல்களைப் புகுத்தி கதையின் தரத்தையே வேறு லெவலுக்கு கொண்டு போனார்..கனவுத்தொழிற்சாலையில் தமிழ் சினிமா உலகின் யதார்த்தங்களையும் சிவந்த கைகள் – கலைந்த பொய்களில் இந்திய கார்ப்பரேட் உலகின் நுணுக்கங்களையும் தமிழ் வாசகனுக்கு பரிமாறினார்..அனிதாவின் காதல்கள் எழுதினதோடு இல்லாமல் ஆழ்வார்கள் எளிய அறிமுகமும் பிரம்ம சூத்திரத்துக்கு விளக்கமும் எழுதினார்..வார்த்தைகளில் சிக்கனம் என்பதை அவர் ஒரு தவம் போல கடைபிடித்தார்.."எழுத்தில் சுருக்கம் (brevity) இல்லையென்றால் கையை ஒடி! என்னும் சித்தாந்தத்தைக்கொண்ட அவர் அந்த எளிமையைக்கூட அபார நகைச்சுவையுடன் அனாயசமாகக் கையாண்டார்.."ஆறு பக்கம் கதை எழுதறது பெரிய விஷயமே இல்லைய்யா! அதை மூணு பக்கத்துக்குச் சுருக்கணும், அதுதான் கலை!".தமிழிலும் தமிழையும் புதிதாக்கிய அவர் தன் எழுத்தை உயர் தர craft லெவலுக்கு எடுத்துப்போய் வாசிப்பவனை பல படிகள் உயர்த்தினார். சுருங்கச் சொல்வதில் விற்பன்னர். நாம் நான்கைந்து வரிகள் எடுத்துக்கொள்வதை ஒரே வார்த்தைப் பிரயோகத்தில் அடித்துப் போட்டுவிட்டுப் போய்விடுவார்..கீழ்க்கண்ட இந்த வரிகளைக் கவனியுங்கள்.."ஞாயிற்றுக்கிழமை மத்தியானம் சுந்தரேசனைப் பார்க்கப் போயிருந்தோம். வாசலில் வெற்றுடம்புடன் உட்கார்ந்துக்கொண்டிருந்தார். எங்களைப் பார்த்ததும் உள்ளே போய் பனியன் மாட்டிக்கொண்டு வந்தார்.".இது நானும் நீங்களும் எழுதும் வரிகள். அவர்?."ஞாயிறு மதியம் அவரைப் பார்க்கப்போன எங்களைக் கண்டதும் சுந்தரேசன் "சலுகையாக" பனியன் போட்டுக்கொண்டு வந்தார்!".சலுகையாக என்னும் ஒரே வார்த்தை!.இன்னும் ஒரிரு மின்னல்களைக் கவனியுங்கள்.." சார்! நீங்க ஸ்ரீரங்கம்தானே?"."ஆமா! நீங்க யாருன்னு..?"."நாந்தான் சார்! ……! நம்ம ஃபண்டாஃபீஸ் மாதவராவ் தெரியுமோனோ?"."ஆமாம் மாதவராவ் தெரியுமே!".அவருக்குகூட வாட்ட சாட்டமாக மாலினின்னு ஒரு பொண்ணு இருப்பாளே!".தெரியாது என்றேன்…….இதோடு நிறுத்தினால் அதை எழுதியது நீங்களோ நானோ! ஆனால் சுஜாதா…?."தெரியாது என்றேன், அவசரமாக!".அந்த "அவசரமாக"வில் இருக்கிறது ஓராயிரம் விஷமம் (அ) விஷயம்!.இந்த மிருகத்துக்கு என்ன பேர் சொன்னீங்க, தேவ் ஆனந்தா?""யோவ்! தேவாங்குய்யா!".தேவானந்த் ரசிகர்களுக்குக்கூட சிரிப்பு வருகிறதா?. "நேற்று வந்த நண்பர் கோபப்பட்டார். "என்ன சார் இது, ஸ்டார் டி.வி.யில ராத்திரி பன்னண்டு மணிக்கு சென்சார் பண்ணாத படமெல்லாம் காட்றானுங்க! அயோக்கியத்தனம்! சின்னப்பசங்க பார்த்தா என்ன ஆறது! நா விடப்போறதில்ல… இன்னிக்கே டெல்லிக்கு எழுதப்போறேன்!"."என்றார்" என்று முடித்தால் அது நீங்களும் நானும்! ஆனால் அவர்…?." என்றார், தூக்கமில்லாத கண்களுடன்" என்று முடிப்பார்.!.ராட்சசன்!.ஆமாம் அவர் என்ன எப்போதுமே சுருக்கமாத்தான் எழுதுவாரா?".இல்லியே! விலாவரியாகவும் எழுதுவாரே!.அப்ப இந்த brevity பத்தியெல்லாம் நாப்பது வரிக்கு முன்னால சொன்னியே?.அவர் நீண்ட வரி எழுதினால் கண்ல தண்ணி வருமே, இல்லை, சிலிர்த்துப் போகுமே!."அருணா பஸ்ஸின் மேல் கம்பியைப் பிடித்துக்கொண்டு ஒரு கையால் ஹேண்ட்பாகிலிருந்து ஒரு ரூபாய் எடுத்து கண்டக்டரிடம் கொடுத்து டிக்கட் வாங்கி, அதை வாயில் பிடித்துக்கொண்டு இன்னொரு கையால்…அருணா படும் கஷ்டத்தைப்பார்த்து ஒரு வயதானவர் எழுந்து தன் சீட்டைக்கொடுக்க, அருணா மறுக்க கிழவர் வற்புறுத்த, அதற்குள் அந்த சீட்டில் வேறு ஏதோ ஒரு கவுடன் உட்கார்ந்துகொண்டுவிட, அருணாவும் அந்த அழகான தாத்தாவும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டதில் துல்லியமான வாத்ஸல்யம் கலந்திருந்தது!".அழுகை வருகிறதா?.குறும்பும் நகைச்சுவையும் சுஜாதாவின் எழுத்தில் நர்த்தனமாடுவதைப்பார்க்கலாம்.."குதிரை கடிக்காதே" என்றார் ஏதோ குதிரைக்கடியில் பிஹெச்டி பண்ணினவர் போல (குதிரை கிச்சாமி) ."எட்டடிச்சா படுத்துண்டுடுவேன்!". "அதான் ஏழு புள்ளைங்களா?" (கரை கண்ட ராமன்). "வாட் கேன் ஐ டு ஃபார் யூ சர்?""தமிழ் தெரியாதா?""ராயபுரங்க!" (மேற்கே ஒரு குற்றம்). "கற்புக்கரசி கண்ணகி" என்று சொல்லி முடிப்பதற்குள் படுத்துக்கொண்டுவிடும் கேஸ்!" (கனவுத் தொழிற்சாலை). சுஜாதாவின் எழுத்துக்களில் சமூகப்பார்வை இல்லை என்று சிலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அது நிச்சயம் நியாயமற்ற விமரிசனம்..மகாபலி (எங்கே தவறு செய்தோம்? நம் தேசத்து இளைஞர்களை நாமே நம் கடற்கரையில் சுட்டும்கொல்லும் அளவுக்கு தவறு எங்கே நிகழ்ந்தது),.ஒரு லட்சம் புத்தகங்கள் (ஒரு கோடி தமிழ் வார்த்தைகள் எரிந்து போயிருக்கின்றன அய்யா!"), கற்றதும் பெற்றதும் ("அந்த ஹனுமாரின் சிலை மேல் வெண்ணை கோலி அடித்து நாசப்படுத்தியிருக்கிறோம்!", பழையவைகளைப் பழயவையாகவே வைத்திருப்பதின் உன்னதம் நமக்குப்புரியவே இல்லை!).இவையெல்லாம் சமூக அக்கறை இல்லாமல் வேறென்ன?.சினிமாவில் கூட இன்றைய இளைய தலைமுறையை ஈர்கும்படி அவர் எழுதிய வசனங்கள் அமைந்தன.."மேல் நாட்டிலும் லஞ்சம் உண்டு. ஆனால் அங்கே கடமையை மீற லஞ்சம் வாங்குவார்கள். ஆனா இந்தியாவில கடமையைச் செய்யறதுக்கெ லஞ்சம்!" (இந்தியன்)."நேர்மைங்கறது ஒண்ணும் பனியன் சைஸ் இல்ல, அடிக்கடி மாத்தறதுக்கு!" (அந்நியன்).சுஜாதாவின் படைப்புகளில் மிக முக்கிய அம்சம் அவர் பாசாங்கற்ற எழுத்துக்களையே தந்தார்.."என் எழுத்தில் உள்ள பாசாங்குகளை முதலில் அடையாளம் கண்டு நீக்கிவிடுவேன். முதல் வாசகனான என்னைத் தாண்டித்தான் என் எழுத்து வெளியேறியாக வேண்டும்!".ஒரு தலைமுறைக்கு வாசிக்க சுவாரஸ்யம், புதுமை, நகைச்சுவை, அறிவார்ந்த விஷயங்களை எளிதாகச் சொல்லுதல், உள்மனதை ஊடுருவக்கூடிய பிரயோகங்கள் மூலம் உணர்ச்சிகளைச் சொல்லும் கலை, முழுமையான வாசிப்பனுபவம் அதைப் படித்த உடனேயே இன்னொருவருக்குச் சொல்ல வேண்டும் என்கிற ஆவலை வாசகன் மனத்தில் உண்டாக்கும் எழுத்துக்களைத் தந்த சுஜாதா அடுத்த தலைமுறையிலும் ஆர்வமாக வாசிக்கப்படுவார்.
– ஜெயராமன் ரகுநாதன் . படம் : வி. ராஜன்.மறைந்த எழுத்தாளர் சுஜாதாவுடன் ஒரு முறை பேசிக்கொண்டிருந்தபோது ஸ்ரீரங்கத்து தேவதைகளில் "மாஞ்சு" கதையை சிலாகித்துச்சொன்னேன். அவர் சொன்னது,."ஒரு ஸ்டேஜுக்கப்றம் மாஞ்சு கதை தன்னைத்தானே எழுதிக்கொண்டதுய்யா!".'ஒரு கதை தன்னைத்தானே எழுதிக்கொள்ளுமா என்ன' என்று அன்று வியந்த எனக்கு இப்போது நானும் எழுத ஆரம்பித்தவுடன் அவர் சொன்னது புரிபட்டது. எழுதுபவன் முழுக்க முழுக்க கதைக்குள் புகுந்துவிடும்போது அறிவும் மனதும் கைகளும் ஒரு புள்ளியில் இணைகின்றன. அப்போது வெளிப்படுவது எழுத்தாளனின் வெளியுணர்வைக் (consciousness) கடந்து வார்த்தைகளாக விழுவதைத்தான் சுஜாதா சொல்லியிருந்தார்..இந்த "தன்னைத்தானே" எழுதிக்கொள்ளும் நேர்த்தி சுஜாதாவின் எழுத்தில் பரவலாக உணர முடியும்.."அதெப்படி நாளைய தலைமுறையின் சுஜாதா என்று சொல்லலாம்? அவர் படைத்தவை அப்படி ஒன்றும் காலம் கடந்த எழுத்து இல்லை!".இந்த வாதம் இப்போதே பரவலாக இருக்கிறது என்றாலும் எனக்கு மட்டும் இல்லை, என்னைப்போல லட்சக்கணக்கான வாசகர்களூக்கு சுஜாதாவின் எழுத்து சாசுவதம் தான் என்னும் ஸ்திரமான நம்பிக்கை இருப்பதை மறுக்க முடியுமா?.ஒவ்வொரு புத்தகச் சந்தையிலும் பொன்னியின் செல்வனும் சுஜாதாவும் தான் விற்பனையில் முன்னணி என்பது ஆவணப்படுத்தப்பட்ட உண்மை!."விற்பனை தரத்தை நிர்ணயிக்குமா?".விவாதங்களுக்கு முடிவே இல்லை! மேலும் ஒருவரின் எழுத்து சாசுவதமா இல்லையா என்பதை ஏதோ ஒரு குழுவோ அதிகார மையமோ தீர்மானித்துவிட முடியாது. இதுவுமே வாசக நம்பிக்கைக்கு அப்பாற்பட்டதுதான்..நிலாவில் மனிதன் இறங்கினதே இல்லை. 1969இல் நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கும் எட்வின் ஆல்டிரின்னும் இறங்கிய டெலிவிஷன் காட்சிகள் அமெரிக்காவின் நெப்ராஸ்காவில் ஏதோ ஒரு ஸ்டூடியோவில் எடுக்கப்பட்டவை என்று சொல்லுபவர்கள் இன்றும் உண்டு!.ஷேக்ஸ்பியரின் பல நாடகங்களை அவர் எழுதவே இல்லை. கிறிஸ்டஃபர் மார்லோ, ஃப்ரான்ஸிஸ் பேக்கன், எட்வார்ட் டி வியர் என்று வேறு வேறு யாரோ எழுதினார்கள் என்றெல்லாம் கூட சர்ச்சைகள் உண்டு..அதெல்லாம் ஒரு ஓரமாக விசிறிக் கடாசிவிட்டு சுஜாதா சாசுவதரா இல்லியா என்னும் கனமான சப்ஜெக்டை விட்டு விடலாம். ஆனாலும் இன்றும் சுஜாதா ஏன் ஆர்வத்துடன் வாசிக்கப்படுகிறார், நாளையும் ஏன் வாசிக்கப்படுவார் என்று ஆரவாரமில்லாமல் கொஞ்சம் யோசிக்கலாம்..தமிழ் எழுத்துலகில் அவரின் முதல் பிரவேசமே நிறைய தாக்கமுள்ளதாக இருந்ததை யாரும் மறுக்க முடியாது. அறுபதுகளில் பெரும்பாலான கதைகளின் ஆரம்பம் இப்படி இருக்கும்.."உஸ்! அப்பாடா " என்று நாகராஜ சர்மா ஈஸி சேரில் வந்து உட்கார்ந்துகொண்டார்..வாசலில் சார் போஸ்ட்! என்ற குரல் கேட்டது.."நாகராஜா! அலமுவப் பொண் பார்த்துட்டு போனாளே அவா கடுதாசியான்னு பாரு" .நாகராஜ சர்மாவோ அவர் பெண்ணொ என்ன ஆனார்கள் என்பது பற்றி நமக்கு கவலை போயே போய்விடும்! ஆனால் சுஜாதா அந்தக்கால கட்டத்திலேயே கதையை இப்படித் தொடங்கினார்.."அவன் என்னைத்தான் பின் தொடர்ந்து கொண்டிருந்தான். பஸ் ஏறி, பஸ் இறங்கி, மாறின பிற்பாடும் அதே தூரத்தில், அதே மீசையுடன் என்னைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தான். ….மறுபடி மூலைக்கு வந்து நின்றேன். சிகரெட்டை வாயில் ஒட்ட வைத்துக்கொண்டேன் (ராத்மன்ஸ் கிங் சைஸ்). லைட்டரை ஏற்றினான். ஜோதியைக்கவர்ந்து கொண்டு….. .…எதற்காக என்னைத்தொடருகிறாய்? பொசுக்கி விடுவேன், துப்பாக்கி வைத்திருக்கிறேன், பெரெட்டா! லைஸென்ஸுடன்….(ஒரு அரேபிய இரவு (1960s))..இப்படித்தொடங்கும் கதையை அப்போதே மேலும் வாசிக்காவிட்டால் ஒரு பரபரப்பு உண்டாகுமா இல்லியா? இந்த சுவாரஸ்யமே பிரதானம் என்னும் பிரவேசத்துக்குப்பிறகு சுஜாதா அடித்து ஆடியது எல்லாமே ஆறு பாலும் சிக்ஸர் என்னும் அதிரடிப்புதுமை..சுவாரஸ்யம் தாண்டி சுஜாதாவின் எழுத்துக்களில் இருந்த கவர்ச்சி, கவனிக்க, நான் சொல்லும் கவர்ச்சி நீங்கள் நினைக்கும் ஜெயராஜ் படக் கவர்ச்சி அல்ல! மூத்த பத்திரிகையாளர் மாலன் சொல்லும் "தமிழைப்புதிதாக்கும் கவர்ச்சி"!."….அவன் அப்படியே ஊஞ்சலில் உட்கார்ந்தான். உள்ளே ரசம் கொதிக்கும் வாசனை. எங்கோ துணி துவைக்கும் சத்தம். இன்னொரு அறையில், அய்யங்காரின் பேத்தி போலும், ரஞ்சனி ராகத்தை அழிச்சாட்டியம் பண்ணிக்கொண்டிருந்தது…!".புதுமையை அவர் தன் முதல் கதையான "சசி காத்திருக்கிறாளி"லிருந்து கடைசியாக எழுதிய "அப்போலோ தினங்கள்" வரை செய்துகொண்டே இருந்தார்.."எனக்கென்னவோ நரகத்துக்குப்போகத்தான் ஆசை. அங்கேதான் பல சுவாரஸ்ய ஆசாமிகளைச் சந்திக்கலாம். மேலும் சொர்க்கத்தின் அகண்ட பஜனை எனக்கு சில நிமிஷங்களுக்கு மேல் தாங்காது!".எழுத்து என்பது ஒரு தவம். அது அடிவயிற்றில் இருந்து பீரிட்டுக்கொண்டு வரும் ஏக்கத்தின் சீரிய வெளிப்பாடு என்பதெல்லம் அவர் ஒப்புக்கொண்டதில்லை. இந்த தவம், பீரிட்டு என்பதெல்லாம் அவர் பாஷையிலேயே சொல்வதானால் வெறும் "ஜல்லி அல்லது ஜபேட்டு!."எழுதறது ரொம்ப சுலபம்யா! ஆரம்பமே வாசகனை கதைக்குள் இழுத்துடணும்……"."அவர் பாலகுமாரனுக்கும் சுப்பிரமணிய ராஜுவுக்கும் எக்மோரில் ஒரு பூங்காவில் கால் மாற்றி மாற்றி நின்று கொண்டு சொன்னதைப் படித்தால் கதை எழுதுவதை யார் வேண்டுமானாலும் செய்யலாம்" என்ற ரீதியிலேயே அவர் எழுத்தை அணுகினார் என்பது புரியும். சுஜாதாவின் கைகளில் எழுத்து ஒரு கைவினையாகத்தான் (craft)மிளிர்ந்தது..சுஜாதாவின் எழுத்துக்களில் இன்றும் வாசகர்கள் தேடுவது அறிவுசார் விஷயங்கள். சுஜாதா தொடாத சப்ஜெக்டே இல்லை என்னும்படி அவர் தன் பரந்த வாசிப்பின் மூலம் அவற்றையெல்லாம் சாதாரண வாசகனுக்கும் கடத்தினார். கணையாழியின் கடைசிப் பக்கங்களும் கற்றதும் பெற்றதுவும், விஞ்ஞானக்கேள்வி பதில்களும், ஏனைய கட்டுரைகளும் சுஜாதாவின் அறிவுத்தாகத்தையும் அவரின் மிக ஆழமான வாசிப்பையும் எளிமையாக அதை எழுதினப் பாங்கையும் சொல்லும் ஆவணங்களாக நிற்கின்றன..நாம் இன்று genre என்றும் சொல்லும் வகைகளில் சுஜாதா விட்டுவைக்காத வகையே இல்லை எனலாம்..நைலான் கயிறு என்று கிரைம் எழுத ஆரம்பித்தாலும் அப்போதே உள் மன விசாரங்களை ஆழ்ந்து நோக்கிய "தனிமை கொண்டு" எழுதினார்..கணேஷ் – வசந்த் என்று துப்பறியும் கதைகளின் நடுவே காகித சங்கிலிகள் என்று கிட்னி தானம் பற்றின யதார்த்தத்தை எழுதி மனதைத்தொட்டார்..'ஜீனோ', 'ஆத்மா நித்யா', 'திமலா', 'சொர்க்கத்தீவு' என்று சயன்ஸ் ஃபிக்ஷன் கதைகளோடு நிற்காமல் 'ரத்தம் ஒரே நிறம்', 'காந்தளூர் வசந்தகுமாரன்' என்று சரித்திரத்தையும் தொட்டார்..சயன்ஸ் ஃபிக்ஷனில்கூட கம்ப்யூட்டர் ரேப் என்று சம்பிரதாயக்கதைகளைத்தாண்டி நச்சுப்பொய்கை என்று புராணத்திலும் ஒரு கதையில் இரண்டு கதைகள் என்று சோழர்காலத்திலும் விஞ்ஞானப்புனைவுகளை எழுதி பிரமிக்க வைத்தார்..'கரையெல்லாம் செண்பகப்பூ' நாவலில் ஒரு எளிய கொலை முடிச்சை கிராமத்தில் நடத்தி நாட்டுப்பாடல்களைப் புகுத்தி கதையின் தரத்தையே வேறு லெவலுக்கு கொண்டு போனார்..கனவுத்தொழிற்சாலையில் தமிழ் சினிமா உலகின் யதார்த்தங்களையும் சிவந்த கைகள் – கலைந்த பொய்களில் இந்திய கார்ப்பரேட் உலகின் நுணுக்கங்களையும் தமிழ் வாசகனுக்கு பரிமாறினார்..அனிதாவின் காதல்கள் எழுதினதோடு இல்லாமல் ஆழ்வார்கள் எளிய அறிமுகமும் பிரம்ம சூத்திரத்துக்கு விளக்கமும் எழுதினார்..வார்த்தைகளில் சிக்கனம் என்பதை அவர் ஒரு தவம் போல கடைபிடித்தார்.."எழுத்தில் சுருக்கம் (brevity) இல்லையென்றால் கையை ஒடி! என்னும் சித்தாந்தத்தைக்கொண்ட அவர் அந்த எளிமையைக்கூட அபார நகைச்சுவையுடன் அனாயசமாகக் கையாண்டார்.."ஆறு பக்கம் கதை எழுதறது பெரிய விஷயமே இல்லைய்யா! அதை மூணு பக்கத்துக்குச் சுருக்கணும், அதுதான் கலை!".தமிழிலும் தமிழையும் புதிதாக்கிய அவர் தன் எழுத்தை உயர் தர craft லெவலுக்கு எடுத்துப்போய் வாசிப்பவனை பல படிகள் உயர்த்தினார். சுருங்கச் சொல்வதில் விற்பன்னர். நாம் நான்கைந்து வரிகள் எடுத்துக்கொள்வதை ஒரே வார்த்தைப் பிரயோகத்தில் அடித்துப் போட்டுவிட்டுப் போய்விடுவார்..கீழ்க்கண்ட இந்த வரிகளைக் கவனியுங்கள்.."ஞாயிற்றுக்கிழமை மத்தியானம் சுந்தரேசனைப் பார்க்கப் போயிருந்தோம். வாசலில் வெற்றுடம்புடன் உட்கார்ந்துக்கொண்டிருந்தார். எங்களைப் பார்த்ததும் உள்ளே போய் பனியன் மாட்டிக்கொண்டு வந்தார்.".இது நானும் நீங்களும் எழுதும் வரிகள். அவர்?."ஞாயிறு மதியம் அவரைப் பார்க்கப்போன எங்களைக் கண்டதும் சுந்தரேசன் "சலுகையாக" பனியன் போட்டுக்கொண்டு வந்தார்!".சலுகையாக என்னும் ஒரே வார்த்தை!.இன்னும் ஒரிரு மின்னல்களைக் கவனியுங்கள்.." சார்! நீங்க ஸ்ரீரங்கம்தானே?"."ஆமா! நீங்க யாருன்னு..?"."நாந்தான் சார்! ……! நம்ம ஃபண்டாஃபீஸ் மாதவராவ் தெரியுமோனோ?"."ஆமாம் மாதவராவ் தெரியுமே!".அவருக்குகூட வாட்ட சாட்டமாக மாலினின்னு ஒரு பொண்ணு இருப்பாளே!".தெரியாது என்றேன்…….இதோடு நிறுத்தினால் அதை எழுதியது நீங்களோ நானோ! ஆனால் சுஜாதா…?."தெரியாது என்றேன், அவசரமாக!".அந்த "அவசரமாக"வில் இருக்கிறது ஓராயிரம் விஷமம் (அ) விஷயம்!.இந்த மிருகத்துக்கு என்ன பேர் சொன்னீங்க, தேவ் ஆனந்தா?""யோவ்! தேவாங்குய்யா!".தேவானந்த் ரசிகர்களுக்குக்கூட சிரிப்பு வருகிறதா?. "நேற்று வந்த நண்பர் கோபப்பட்டார். "என்ன சார் இது, ஸ்டார் டி.வி.யில ராத்திரி பன்னண்டு மணிக்கு சென்சார் பண்ணாத படமெல்லாம் காட்றானுங்க! அயோக்கியத்தனம்! சின்னப்பசங்க பார்த்தா என்ன ஆறது! நா விடப்போறதில்ல… இன்னிக்கே டெல்லிக்கு எழுதப்போறேன்!"."என்றார்" என்று முடித்தால் அது நீங்களும் நானும்! ஆனால் அவர்…?." என்றார், தூக்கமில்லாத கண்களுடன்" என்று முடிப்பார்.!.ராட்சசன்!.ஆமாம் அவர் என்ன எப்போதுமே சுருக்கமாத்தான் எழுதுவாரா?".இல்லியே! விலாவரியாகவும் எழுதுவாரே!.அப்ப இந்த brevity பத்தியெல்லாம் நாப்பது வரிக்கு முன்னால சொன்னியே?.அவர் நீண்ட வரி எழுதினால் கண்ல தண்ணி வருமே, இல்லை, சிலிர்த்துப் போகுமே!."அருணா பஸ்ஸின் மேல் கம்பியைப் பிடித்துக்கொண்டு ஒரு கையால் ஹேண்ட்பாகிலிருந்து ஒரு ரூபாய் எடுத்து கண்டக்டரிடம் கொடுத்து டிக்கட் வாங்கி, அதை வாயில் பிடித்துக்கொண்டு இன்னொரு கையால்…அருணா படும் கஷ்டத்தைப்பார்த்து ஒரு வயதானவர் எழுந்து தன் சீட்டைக்கொடுக்க, அருணா மறுக்க கிழவர் வற்புறுத்த, அதற்குள் அந்த சீட்டில் வேறு ஏதோ ஒரு கவுடன் உட்கார்ந்துகொண்டுவிட, அருணாவும் அந்த அழகான தாத்தாவும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டதில் துல்லியமான வாத்ஸல்யம் கலந்திருந்தது!".அழுகை வருகிறதா?.குறும்பும் நகைச்சுவையும் சுஜாதாவின் எழுத்தில் நர்த்தனமாடுவதைப்பார்க்கலாம்.."குதிரை கடிக்காதே" என்றார் ஏதோ குதிரைக்கடியில் பிஹெச்டி பண்ணினவர் போல (குதிரை கிச்சாமி) ."எட்டடிச்சா படுத்துண்டுடுவேன்!". "அதான் ஏழு புள்ளைங்களா?" (கரை கண்ட ராமன்). "வாட் கேன் ஐ டு ஃபார் யூ சர்?""தமிழ் தெரியாதா?""ராயபுரங்க!" (மேற்கே ஒரு குற்றம்). "கற்புக்கரசி கண்ணகி" என்று சொல்லி முடிப்பதற்குள் படுத்துக்கொண்டுவிடும் கேஸ்!" (கனவுத் தொழிற்சாலை). சுஜாதாவின் எழுத்துக்களில் சமூகப்பார்வை இல்லை என்று சிலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அது நிச்சயம் நியாயமற்ற விமரிசனம்..மகாபலி (எங்கே தவறு செய்தோம்? நம் தேசத்து இளைஞர்களை நாமே நம் கடற்கரையில் சுட்டும்கொல்லும் அளவுக்கு தவறு எங்கே நிகழ்ந்தது),.ஒரு லட்சம் புத்தகங்கள் (ஒரு கோடி தமிழ் வார்த்தைகள் எரிந்து போயிருக்கின்றன அய்யா!"), கற்றதும் பெற்றதும் ("அந்த ஹனுமாரின் சிலை மேல் வெண்ணை கோலி அடித்து நாசப்படுத்தியிருக்கிறோம்!", பழையவைகளைப் பழயவையாகவே வைத்திருப்பதின் உன்னதம் நமக்குப்புரியவே இல்லை!).இவையெல்லாம் சமூக அக்கறை இல்லாமல் வேறென்ன?.சினிமாவில் கூட இன்றைய இளைய தலைமுறையை ஈர்கும்படி அவர் எழுதிய வசனங்கள் அமைந்தன.."மேல் நாட்டிலும் லஞ்சம் உண்டு. ஆனால் அங்கே கடமையை மீற லஞ்சம் வாங்குவார்கள். ஆனா இந்தியாவில கடமையைச் செய்யறதுக்கெ லஞ்சம்!" (இந்தியன்)."நேர்மைங்கறது ஒண்ணும் பனியன் சைஸ் இல்ல, அடிக்கடி மாத்தறதுக்கு!" (அந்நியன்).சுஜாதாவின் படைப்புகளில் மிக முக்கிய அம்சம் அவர் பாசாங்கற்ற எழுத்துக்களையே தந்தார்.."என் எழுத்தில் உள்ள பாசாங்குகளை முதலில் அடையாளம் கண்டு நீக்கிவிடுவேன். முதல் வாசகனான என்னைத் தாண்டித்தான் என் எழுத்து வெளியேறியாக வேண்டும்!".ஒரு தலைமுறைக்கு வாசிக்க சுவாரஸ்யம், புதுமை, நகைச்சுவை, அறிவார்ந்த விஷயங்களை எளிதாகச் சொல்லுதல், உள்மனதை ஊடுருவக்கூடிய பிரயோகங்கள் மூலம் உணர்ச்சிகளைச் சொல்லும் கலை, முழுமையான வாசிப்பனுபவம் அதைப் படித்த உடனேயே இன்னொருவருக்குச் சொல்ல வேண்டும் என்கிற ஆவலை வாசகன் மனத்தில் உண்டாக்கும் எழுத்துக்களைத் தந்த சுஜாதா அடுத்த தலைமுறையிலும் ஆர்வமாக வாசிக்கப்படுவார்.