அறிவு பொய்த் தோற்றங்களை ஆய்ந்து, அனுமானித்து ஏற்கிறது. ஞானமோ திரைக்குப் பின் நோக்கி, காட்சியைப் பெறுகிறது. எண்ணம் என்பது உண்மையை நோக்கி எய்யப்படும் ஓர் அம்பு. தன் இலக்கின் புள்ளியை மட்டுமே அதனால் தொட இயலும்; முழு இலக்கையும் அதனால் அடைய இயலாது. ஆனால் எய்தவனோ தான் வெற்றி பெற்று விட்டதாய்க் கருதி, ‘இன்னுமென்னவேண்டும்’ என்ற பெரும் திருப்தியுடன் இருக்கிறான்.
l இறைவன் இப்படியிருக்க வேண்டும், அப்படியிருக்க வேண்டும்; இல்லையெனில் அவன் இறைவன் அல்லன் என்று எவரோ விதி விதித்தார். ஆனால் எனக்கோ, ‘இறைவன் எத்தகையவன் என்பதைத்தான் என்னால் அறிய முடியும். அவன் எப்படி இருக்க வேண்டும் என்று எவ்வாறு நான் அவனுக்குக் கூற முடியும்?’ என்றுதான் தோன்றியது. இறைவனை நாம் மதிப்பிடக் கூடிய அளவைதான் ஏது? இம் மதிப்பீடுகள் எல்லாம் நம் அகங்காரத்தின் மடமைகளே.
l எல்லா அறிவையும் தான் வெற்றி கொண்டு விட்டதைப் போல் விஞ்ஞானம் பேசுகிறது; நடந்து கொள்கின்றது. தனித்துச் செல்லும் விவேகமோ, அளவற்ற ஞானக் கடல்களின் விளிம்புகளில் எதிரொலிக்கும் தன் காலடியோசையைக் கேட்டவாறே நடையிடுகின்றாள்.
l ஞானம் நம்முள் அடியெடுத்து வைக்கும்போது அது அளிக்கும் முதற்பாடம் இதுவே- “ அறிவென்பது ஏதுமில்லை; வரம்பற்ற இறைவனைச் சுட்டிக்காட்டும் குறிப்புகள் மட்டுமே உண்டு.”
அருளுரையில் ஞானம் நம்முள் அடியெடுத்து வைக்கும் போது அது அளிக்கும் முதல் பாடம்,’ ‘அறிவென்பது வெறும் குறிப்புகள்…’ தான் என்பதை சுருக்கமாக சொன்ன விளக்கத்தில் வீரிய வெளிச்சம்
அமிழ்ந்திருந்தது உண்மை!
இன்றையநவீன காலத்தில் சில பாெ ய்முகங்கள் இருப்பதால் தான்
நியாயங்கள் உடனடி வெற்றிபெறுவதில்லை.மீண்டும் மீண்டும் இறை வழியில் செயல் பட்டால் ஆன்மிகம் அருள் கிட்ட நியாயம் வசப்படும் என்பது
நூற்றுக்கு நூறு உண்மையே ! அருளுரை
ஆண்டின் துவக்கத்தின் முதல் இத ழில்
வெ ளியிட்ட “கல்கி”க்கு பாராட்டுகள்.
து.சே ரன்
ஆலங்குளம்
அறிவும்,இறைவனும்.அறிவால் ஒரு இலக்கின் புள்ளியை மட்டுமே தொடமுடியும்.
இறைவனால் அந்த இலக்கை முழுமை அடைய செய்ய முடியும்.ஞானம் நம்முள் அடி
எடுத்து வைக்கும்போது அறிவு ஏதுமில்லை.
அழகான வரிகள்