
"இந்த டாக்டர்கிட்ட கடன் சொல்ல எல்லாருமே பயப்படுவாங்க."
"ஏன் அப்படி?"
"கடன் உயிரைக் குடிக்கும்னு போர்டு எழுதி வெச்சிருக்காரே."
– வி. ரேவதி, தஞ்சை
"ஆபிஸ்ல சிரிச்சதுக்கா உனக்கு மேனேஜர் மெமோ கொடுத்துட்டாரு?"
"ஆமாம். நான் சிரிச்சது தூக்கத்துல."
– தீபிகா சாரதி, சென்னை-5
"கடனைக் கொடுத்துட்டு வீட்டுல உள்ள பொம்பளைங்ககிட்ட பாட்டு வாங்கறது தேவை இல்லாத வேலைப்பா."
"ஏன் கொடுத்தீங்கன்னு உங்க மனைவி திட்றாங்களா?"
"மனைவி திட்டினாத்தான் பரவாயில்லையே. கடன் வாங்கிட்டுப் போனவனோடு பொண்டாட்டில்ல திட்டிட்டுப் போகுது."
– வி.ரேவதி, தஞ்சை
"தலைவரே, இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் பண்றப்ப எதுக்கு கிளாமர் நடிகை கிண்கிணி ஸ்ரீயை வரச்சொல்லி இருக்கீங்க?"
"கவர்ச்சிகரமான திட்டங்கள் இருக்குன்னு பூடகமா சொல்லத்தான்."
– சென்னிமலை சி.பி.செந்தில்குமார்
"அவர் என்ன மாஸ்க்கும் கோவணமும் மட்டும் கட்டிக்கிட்டுப் போறாரு?"
"பிரைவேட் ஆஸ்பத்திரிலே கொரோனா ட்ரீட்மென்ட் முடிந்து டிஸ்சார்ஜ் ஆகிப் போறாரு."
– வி. ரேவதி, தஞ்சை
"ஆனியன் ஊத்தப்பம் ஒண்ணு கொண்டு வாப்பா…"
"சின்னதா? பெரிசா சார்?"
"ஆனியன் சின்னது, ஊத்தப்பம் பெரிசு…"
– வி. ரேவதி, தஞ்சை