– எம் அசோக் ராஜா.கார்கில் போர் முடிந்து சில வருடங்களுக்குப் பிறகு உத்தர பிரதேச மாநிலத்தின் ஒரு கிராமத்திலிருந்து பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ஒரு கடிதம் வருகிறது. அதை எழுதியவர், 'தான் ஒரு கிராமத்து பள்ளிக்கூட ஆசிரியர்' என்று அறிமுகப்படுத்திக் கொண்டு ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறார்..அதாவது, "தனது ஒரே மகன் கார்கில் யுத்தத்தில் வீர மரணம் அடைந்து விட்டதாகவும், அவனது இறந்த தினம் அதாவது 'நினைவு நாள்' இன்னும் சில நாட்களில் வரப்போவதாகவும், அவருடைய மகன் இறந்த நினைவு நாளில் அவரது மகன் இறந்து வீழ்ந்த இடத்தை தானும் தன் மனைவியும் பார்க்க விரும்புவதாகவும், முடிந்தால் அதற்கு ஏற்பாடு செய்யுங்கள். முடியாவிட்டால் பரவாயில்லை. நாங்கள் அந்த இடத்தை பார்க்க விரும்புவது தேச பாதுகாப்புக்கு தொந்தரவாக இருந்தால் வேண்டாம். எனது விண்ணப்பத்தை திரும்ப பெற்று கொள்கிறேன்" என்ற விண்ணப்ப கடிதம் வந்தது..கடிதத்தைப் படித்த உயரதிகாரி, "என்ன செலவு ஆனாலும் பரவாயில்லை, அந்த வீரனின் பெற்றோர்கள் வந்து போகும் செலவை , நான் எனது சம்பளத்திலிருந்து தருகிறேன். அந்த ஆசிரியரையும் அவரது மனைவியையும் அவர்களின் மகன் அந்த வீரன் இறந்த இடத்திற்கு அழைத்து வாருங்கள்" என்று அன்புகட்டளை பிறப்பித்தார்..அந்த வீரமகனின் நினைவு நாளன்று அந்த மலைமுகட்டிற்கு அந்த வயதான தம்பதிகளை இந்திய ராணுவத்தினர் தக்க மரியாதையுடன் கொண்டு வந்தனர். மகன் இறந்து வீழ்ந்த இடத்திற்கு அருகே அழைத்து சென்றபோது அங்கே டூட்டியில் இருந்த அனைவரும் அட்டன்ஷனில் விறைப்பாக நின்று வீரவணக்கம் (சல்யூட்) செய்தனர்..ஒரு வீரர் மட்டும் அந்த வயதான வீர தந்தையின் கால்களில் கைப்பிடி மலர்களை தூவி குனிந்து வணங்கி அவர் பாதத்தை தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டார் . பின்னர் நிமிர்ந்து ஏனையோரை போல அட்டன்ஷனில் விறைப்பாக நின்று சல்யூட் செய்தார்..அந்த வாத்தியார் பதறிப்போய், 'என்னப்பா இது, நீ எவ்ளோ பெரிய ஆஃபீசர், நீ போய் என் காலை தொட்டு வணங்கலாமா? மத்தவங்களை போல நீயும் சல்யூட் மட்டும் செய்தால் போதாதா? நானும் பதிலுக்கு வணக்கம் சொல்லியிருப்பேனே என்று கேட்க, "இல்லை ஐயா. இங்கே நான் அவர்களைவிட மாறுபட்டு இருக்கிறேன். அதாவது, இங்கே இருப்பவர்கள் போன மாதம்தான் இந்த இடத்துக்கு பணியில் வந்திருப்பவர்கள். நான் உங்க மகனோடு ஒரே படைப்பிரிவில் இதே மலை முகட்டில் பாகிஸ்தானியரோடு சண்டையிட்டவன். உங்கள் மகனின் வீரத்தை களத்தில் நேரடியாக பார்த்தவன். அதுமட்டுமல்ல" என்று சொல்லி நிறுத்தினார்..அந்த கிராமத்து ஆசிரியர் அந்த ஜே.ஸி.ஓ.வின் கைகளைப் பிடித்துக்கொண்டு "சொல்லுப்பா, எதுவா இருந்தாலும் தயங்காமல் சொல்லு… நான் அழமாட்டேன்…" என்று கூறினார்.."நீங்க அழ மாட்டீங்கன்னு தெரியும் ஐயா . நான் அழாமல் இருக்கணும்ல " என்று சொல்லிவிட்டு தொடர்ந்தார்.."அதோ அங்கேதான் பாகிஸ்தானியர் எங்களை நோக்கி எச்.எம்.ஜியால் வினாடிக்கு நூற்றுக்கணக்கான குண்டுகளை தெறிக்கவிட்டு கொண்டிருந்தனர் . முப்பதடி தூரம் வரைக்கும் நாங்க ஐந்து பேரும் முன்னேறிட்டோம் , அதோ பாருங்க அந்த பாறைக்கு பின்னாடிதான் பதுங்கி இருந்தோம். பாகிஸ்தானிகளும் பாறைக்கு பின்னாடி நாங்க இருக்குறத பாத்துட்டாங்க. கொஞ்சம் கையோ காலோ அல்லது எங்களது கிட் பையோ வெளியே தெரிஞ்சதால குண்டுகளை படபட வென்று தெறிக்கவிட்டானுங்க. பிரிகேட் ஸ்ட்ரன்த் அளவிலான இந்திய முன்னேற்றம் இன்னும் கொஞ்ச நேரத்துல ஆரம்பிக்கப் போவுது ..என்ன பண்ணுறதுனே தெரியல, அப்போதான் . . . என்று சொல்லி அந்த ஜே.ஸி.ஓ. கொஞ்சம் பெருமூச்சு விட்டார்.."என்னப்பா ஆச்சு சொல்லு?" என்று அந்த வீர தந்தை கேட்க, ஜே.ஸி.ஓ தொடர்ந்தார். "இவனுங்க சுட்டுக்கிட்டேதான் இருப்பானுங்க, இது வேலைக்காவாது, நான் இந்த முப்பதடிக்கு டெத் சார்ஜ் (death charge) பண்ணப்போறேன். அதாவது அவனுங்க சுடுற குண்டுகளை உடம்பில் வாங்கிக்கொண்டு அவனுங்க பங்கர் வரை ஓடி பங்கருக்குள் இந்த வெடிகுண்டை வீசப்போறேன். அவனுங்களை ஒழிச்சப்புறம் நீங்க பங்கரை புடிச்சிருங்கன்னு சொல்லிட்டு கிரெனேடோட ஓட தயாரானேன்..அப்போதுதான் உங்க மகன் என்னை பார்த்து, "பைத்தியமாடா நீ? உன்னை நம்பி வீட்ல பொண்டாட்டியும் ரெண்டு சின்ன குழந்தைகளும் இருக்கு. நான் இன்னும் கல்யாணமாகாதவன். நான் அந்த டெத் சார்ஜ் பண்ணுறேன். நீ கவரிங் ஃபயர் கொடு. அது போதும்" ன்னு சொல்லிட்டு என் கையிலிருந்த கிரெனெடை பிடுங்கிக்கொண்டு டெத் சார்ஜ் பண்ணார் சார்..பாகிஸ்தானியர் எச்.எம்.ஜி. யிலிருந்து மழை போல குண்டுகள் பாஞ்சது . உங்க மகன் வளைந்து வளைந்து டாட்ஜ் பண்ணி பாகிஸ்தானியரின் பங்கரை அடைந்து வெடிகுண்டின் பின்னை எடுத்துவிட்டு வெடிகுண்டை பங்கருக்குள் சரியாக வீசி பதிமூணு பாகிஸ்தானியரை மேலுலகிற்கு அனுப்பி வைத்த வீரன் சார். அந்த எச்.எம்.ஜி. செயலிழந்து அந்த பகுதி எங்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்தது..உங்க மகனின் உடலை நான்தான் முதலில் தூக்கி எவாக்குவேஷன் செய்தேன். நாப்பத்திரெண்டு குண்டுகளை உடம்பில் வாங்கியிருந்தார் சார். அவரோட தலையை என் கையில்தான் சார் தூக்கினேன். என் கையில் இருக்கும் போதுதான் சார் உயிர் போச்சு. அவரோட சவப்பெட்டியை உங்க வீட்டுக்கு கொண்டு போகும் பொறுப்பு டூட்டியை எனக்குத் தாங்கன்னு மேலதிகாரியிடம் கேட்டுப் பார்த்தேன் சார். இல்லை என்று சொல்லி வேறு முக்கிய டூட்டி போட்டுட்டாங்க சார்..ஒருவேளை அந்த சவப்பெட்டியை தூக்கும் பாக்கியம் கிடைச்சிருந்தா இந்த மலர்களை அவனோட காலடியில்தான் போட்டிருப்பேன். அது கிடைக்கல. அதனால், உங்கள் பாதங்களில் மலரை போடும் பாக்கியம் கிடைத்தது சார்" என்று பெருமூச்சுடன் முடித்தார்..கிராமத்து ஆசிரியரின் மனைவியோ புடைவை தலைப்பால் வாயை பொத்திக்கொண்டு சத்தம் வராமல் அழுதுகொண்டிருந்தாள். வாத்தியார் அழவில்லை..அந்த ஜே.ஸி.ஓ. வீரரை தீர்க்கமாக பார்த்தார், வீரரும் அழவில்லை. ஆசிரியரைப் பார்த்தார்..வாத்தியார் தன்னுடைய தோளில் தொங்கிக் கொண்டிருந்த ஜோல்னா பையிலிருந்து ஒரு பொட்டலத்தை எடுத்து ஜே.ஸி.ஓ. வீரரின் கையில் கொடுத்துவிட்டு "என் பையன் விடுமுறையில் ஊருக்கு வந்தால் போட்டுக்கட்டும்னு ஒரு சட்டை வாங்கி வச்சிருந்தேன். ஆனால் அவன் வரல. அவனது வீர மரணம் பற்றிய செய்திதான் அப்போ வந்துச்சு..இனிமேல் அந்த சட்டையை யார் போடப்போறாங்க. அதான் அவன் உயிர் விட்ட இடத்துலேயே வச்சிறலாம்னு கொண்டு வந்தேன். ஆனால் இந்த சட்டையை யார் போட்டுக்கணும்னு இப்போ தெரிஞ்சிடுச்சு. மாட்டேன்னு சொல்லாம இதை வாங்கிக்க என்று கொடுத்தார் ..கை நீட்டி வாங்கிக்கொண்ட வீரரின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது சத்தியம்..*பின்குறிப்பு :.லடாக்கில் கார்கில் மலைப்பகுதிக்கு அருகில் அந்தப் போரில் உயிர் தியாகம் செய்த அனைவருக்கும் அவர்கள் பெயர்களுடன் நினைவு கற்கள் நடப்பட்டிருக்கிறது. இந்திய ராணுவம் பராமரிக்கும் இந்த வீர பூமியில் ஒவ்வொரு கார்கில் நினைவு நாளன்றும் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்படுகிறது.
– எம் அசோக் ராஜா.கார்கில் போர் முடிந்து சில வருடங்களுக்குப் பிறகு உத்தர பிரதேச மாநிலத்தின் ஒரு கிராமத்திலிருந்து பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ஒரு கடிதம் வருகிறது. அதை எழுதியவர், 'தான் ஒரு கிராமத்து பள்ளிக்கூட ஆசிரியர்' என்று அறிமுகப்படுத்திக் கொண்டு ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறார்..அதாவது, "தனது ஒரே மகன் கார்கில் யுத்தத்தில் வீர மரணம் அடைந்து விட்டதாகவும், அவனது இறந்த தினம் அதாவது 'நினைவு நாள்' இன்னும் சில நாட்களில் வரப்போவதாகவும், அவருடைய மகன் இறந்த நினைவு நாளில் அவரது மகன் இறந்து வீழ்ந்த இடத்தை தானும் தன் மனைவியும் பார்க்க விரும்புவதாகவும், முடிந்தால் அதற்கு ஏற்பாடு செய்யுங்கள். முடியாவிட்டால் பரவாயில்லை. நாங்கள் அந்த இடத்தை பார்க்க விரும்புவது தேச பாதுகாப்புக்கு தொந்தரவாக இருந்தால் வேண்டாம். எனது விண்ணப்பத்தை திரும்ப பெற்று கொள்கிறேன்" என்ற விண்ணப்ப கடிதம் வந்தது..கடிதத்தைப் படித்த உயரதிகாரி, "என்ன செலவு ஆனாலும் பரவாயில்லை, அந்த வீரனின் பெற்றோர்கள் வந்து போகும் செலவை , நான் எனது சம்பளத்திலிருந்து தருகிறேன். அந்த ஆசிரியரையும் அவரது மனைவியையும் அவர்களின் மகன் அந்த வீரன் இறந்த இடத்திற்கு அழைத்து வாருங்கள்" என்று அன்புகட்டளை பிறப்பித்தார்..அந்த வீரமகனின் நினைவு நாளன்று அந்த மலைமுகட்டிற்கு அந்த வயதான தம்பதிகளை இந்திய ராணுவத்தினர் தக்க மரியாதையுடன் கொண்டு வந்தனர். மகன் இறந்து வீழ்ந்த இடத்திற்கு அருகே அழைத்து சென்றபோது அங்கே டூட்டியில் இருந்த அனைவரும் அட்டன்ஷனில் விறைப்பாக நின்று வீரவணக்கம் (சல்யூட்) செய்தனர்..ஒரு வீரர் மட்டும் அந்த வயதான வீர தந்தையின் கால்களில் கைப்பிடி மலர்களை தூவி குனிந்து வணங்கி அவர் பாதத்தை தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டார் . பின்னர் நிமிர்ந்து ஏனையோரை போல அட்டன்ஷனில் விறைப்பாக நின்று சல்யூட் செய்தார்..அந்த வாத்தியார் பதறிப்போய், 'என்னப்பா இது, நீ எவ்ளோ பெரிய ஆஃபீசர், நீ போய் என் காலை தொட்டு வணங்கலாமா? மத்தவங்களை போல நீயும் சல்யூட் மட்டும் செய்தால் போதாதா? நானும் பதிலுக்கு வணக்கம் சொல்லியிருப்பேனே என்று கேட்க, "இல்லை ஐயா. இங்கே நான் அவர்களைவிட மாறுபட்டு இருக்கிறேன். அதாவது, இங்கே இருப்பவர்கள் போன மாதம்தான் இந்த இடத்துக்கு பணியில் வந்திருப்பவர்கள். நான் உங்க மகனோடு ஒரே படைப்பிரிவில் இதே மலை முகட்டில் பாகிஸ்தானியரோடு சண்டையிட்டவன். உங்கள் மகனின் வீரத்தை களத்தில் நேரடியாக பார்த்தவன். அதுமட்டுமல்ல" என்று சொல்லி நிறுத்தினார்..அந்த கிராமத்து ஆசிரியர் அந்த ஜே.ஸி.ஓ.வின் கைகளைப் பிடித்துக்கொண்டு "சொல்லுப்பா, எதுவா இருந்தாலும் தயங்காமல் சொல்லு… நான் அழமாட்டேன்…" என்று கூறினார்.."நீங்க அழ மாட்டீங்கன்னு தெரியும் ஐயா . நான் அழாமல் இருக்கணும்ல " என்று சொல்லிவிட்டு தொடர்ந்தார்.."அதோ அங்கேதான் பாகிஸ்தானியர் எங்களை நோக்கி எச்.எம்.ஜியால் வினாடிக்கு நூற்றுக்கணக்கான குண்டுகளை தெறிக்கவிட்டு கொண்டிருந்தனர் . முப்பதடி தூரம் வரைக்கும் நாங்க ஐந்து பேரும் முன்னேறிட்டோம் , அதோ பாருங்க அந்த பாறைக்கு பின்னாடிதான் பதுங்கி இருந்தோம். பாகிஸ்தானிகளும் பாறைக்கு பின்னாடி நாங்க இருக்குறத பாத்துட்டாங்க. கொஞ்சம் கையோ காலோ அல்லது எங்களது கிட் பையோ வெளியே தெரிஞ்சதால குண்டுகளை படபட வென்று தெறிக்கவிட்டானுங்க. பிரிகேட் ஸ்ட்ரன்த் அளவிலான இந்திய முன்னேற்றம் இன்னும் கொஞ்ச நேரத்துல ஆரம்பிக்கப் போவுது ..என்ன பண்ணுறதுனே தெரியல, அப்போதான் . . . என்று சொல்லி அந்த ஜே.ஸி.ஓ. கொஞ்சம் பெருமூச்சு விட்டார்.."என்னப்பா ஆச்சு சொல்லு?" என்று அந்த வீர தந்தை கேட்க, ஜே.ஸி.ஓ தொடர்ந்தார். "இவனுங்க சுட்டுக்கிட்டேதான் இருப்பானுங்க, இது வேலைக்காவாது, நான் இந்த முப்பதடிக்கு டெத் சார்ஜ் (death charge) பண்ணப்போறேன். அதாவது அவனுங்க சுடுற குண்டுகளை உடம்பில் வாங்கிக்கொண்டு அவனுங்க பங்கர் வரை ஓடி பங்கருக்குள் இந்த வெடிகுண்டை வீசப்போறேன். அவனுங்களை ஒழிச்சப்புறம் நீங்க பங்கரை புடிச்சிருங்கன்னு சொல்லிட்டு கிரெனேடோட ஓட தயாரானேன்..அப்போதுதான் உங்க மகன் என்னை பார்த்து, "பைத்தியமாடா நீ? உன்னை நம்பி வீட்ல பொண்டாட்டியும் ரெண்டு சின்ன குழந்தைகளும் இருக்கு. நான் இன்னும் கல்யாணமாகாதவன். நான் அந்த டெத் சார்ஜ் பண்ணுறேன். நீ கவரிங் ஃபயர் கொடு. அது போதும்" ன்னு சொல்லிட்டு என் கையிலிருந்த கிரெனெடை பிடுங்கிக்கொண்டு டெத் சார்ஜ் பண்ணார் சார்..பாகிஸ்தானியர் எச்.எம்.ஜி. யிலிருந்து மழை போல குண்டுகள் பாஞ்சது . உங்க மகன் வளைந்து வளைந்து டாட்ஜ் பண்ணி பாகிஸ்தானியரின் பங்கரை அடைந்து வெடிகுண்டின் பின்னை எடுத்துவிட்டு வெடிகுண்டை பங்கருக்குள் சரியாக வீசி பதிமூணு பாகிஸ்தானியரை மேலுலகிற்கு அனுப்பி வைத்த வீரன் சார். அந்த எச்.எம்.ஜி. செயலிழந்து அந்த பகுதி எங்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்தது..உங்க மகனின் உடலை நான்தான் முதலில் தூக்கி எவாக்குவேஷன் செய்தேன். நாப்பத்திரெண்டு குண்டுகளை உடம்பில் வாங்கியிருந்தார் சார். அவரோட தலையை என் கையில்தான் சார் தூக்கினேன். என் கையில் இருக்கும் போதுதான் சார் உயிர் போச்சு. அவரோட சவப்பெட்டியை உங்க வீட்டுக்கு கொண்டு போகும் பொறுப்பு டூட்டியை எனக்குத் தாங்கன்னு மேலதிகாரியிடம் கேட்டுப் பார்த்தேன் சார். இல்லை என்று சொல்லி வேறு முக்கிய டூட்டி போட்டுட்டாங்க சார்..ஒருவேளை அந்த சவப்பெட்டியை தூக்கும் பாக்கியம் கிடைச்சிருந்தா இந்த மலர்களை அவனோட காலடியில்தான் போட்டிருப்பேன். அது கிடைக்கல. அதனால், உங்கள் பாதங்களில் மலரை போடும் பாக்கியம் கிடைத்தது சார்" என்று பெருமூச்சுடன் முடித்தார்..கிராமத்து ஆசிரியரின் மனைவியோ புடைவை தலைப்பால் வாயை பொத்திக்கொண்டு சத்தம் வராமல் அழுதுகொண்டிருந்தாள். வாத்தியார் அழவில்லை..அந்த ஜே.ஸி.ஓ. வீரரை தீர்க்கமாக பார்த்தார், வீரரும் அழவில்லை. ஆசிரியரைப் பார்த்தார்..வாத்தியார் தன்னுடைய தோளில் தொங்கிக் கொண்டிருந்த ஜோல்னா பையிலிருந்து ஒரு பொட்டலத்தை எடுத்து ஜே.ஸி.ஓ. வீரரின் கையில் கொடுத்துவிட்டு "என் பையன் விடுமுறையில் ஊருக்கு வந்தால் போட்டுக்கட்டும்னு ஒரு சட்டை வாங்கி வச்சிருந்தேன். ஆனால் அவன் வரல. அவனது வீர மரணம் பற்றிய செய்திதான் அப்போ வந்துச்சு..இனிமேல் அந்த சட்டையை யார் போடப்போறாங்க. அதான் அவன் உயிர் விட்ட இடத்துலேயே வச்சிறலாம்னு கொண்டு வந்தேன். ஆனால் இந்த சட்டையை யார் போட்டுக்கணும்னு இப்போ தெரிஞ்சிடுச்சு. மாட்டேன்னு சொல்லாம இதை வாங்கிக்க என்று கொடுத்தார் ..கை நீட்டி வாங்கிக்கொண்ட வீரரின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது சத்தியம்..*பின்குறிப்பு :.லடாக்கில் கார்கில் மலைப்பகுதிக்கு அருகில் அந்தப் போரில் உயிர் தியாகம் செய்த அனைவருக்கும் அவர்கள் பெயர்களுடன் நினைவு கற்கள் நடப்பட்டிருக்கிறது. இந்திய ராணுவம் பராமரிக்கும் இந்த வீர பூமியில் ஒவ்வொரு கார்கில் நினைவு நாளன்றும் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்படுகிறது.