நயன்தாரா டீ.– வினோத்.டீ கேரளாவின் தேசிய பானம் என்று கொண்டாடப்பட்டாலும் அது தமிழர்களின் உணர்வோடும் உடலோடும் கலந்துவிட்ட ஒரு பானம். கிராமம், சிறுநகரம் பெருநகரம் என எல்லா இடங்களிலும் எப்போதும் கிடைக்கும் ஒரே பானம் டீ. இப்போது இதில் கார்ப்பரேட்களின் கண் விழுந்திருக்கிறது. காபி டே, ஸ்டார் பக் போன்ற அழகாக அமைக்கப்பட்ட சிறு விடுதிகளைச் சங்கிலித்தொடர் போல் பல நகரங்களிலும், ஒரே நகரில் பல இடங்களிலும் தமிழகம் முழுவதும் தொடங்க ஆரம்பித்திருக்கிறார்கள் 'சாய் வாலா' என்ற நிறுவனம்..இப்போது சென்னை நகரில் சில இடங்களில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இந்தச் சாய்வாலா கடைகள் விரைவில் 35 கிளைகளுடன் விரிவடையப் போகிறது, 20க்கும் மேற்பட்ட டீ வகைகள் கிடைக்கும்..சரி. இதில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா எங்கிருந்து வந்தார்?.ஆர்வத்துடன் புதிய ஐடியாக்களுடன் தொழில் தொடங்க விழையும் இளைஞர்களுக்கு, அவர்களின் திட்டத்தைப் பரிசீலித்து, நிச்சயம் லாபம் ஈட்டுமென்று தெரிந்தால் அதில் முதலீடு செய்பவர்களை 'ஏஞ்சல் இன்வெஸ்ட்டர்கள்' என்று அழைப்பார்கள். அப்படி ஒரு நிறுவனத்தின் மூலம் இந்தச் சாய்வாலா டீ விடுதிகளில் முதலீடு செய்திருக்கிறார் நடிகைநயன்தாரா..திரைக்கலைஞர்கள் தங்கள் எதிர்காலத்துக்காகத் திரைத்துறையில் ஈட்டியதைப் பல வகைகளில் முதலீடு செய்வது ஒன்றும் புதிதல்ல. பல கலைஞர்கள் செய்திருக்கிறார்கள். ஆனால் இதுபோல ஏஞ்சல் முதலீட்டாளராக மாட்டார்கள். காரணம் இதில் நஷ்டம் அடையக்கூடிய, ஏன் முதலீட்டையே இழக்கக் கூடிய ரிஸ்க் இருக்கிறது. இங்குதான் நயந்தாரா தன் துணிவைக் காட்டியிருக்கிறார். அவரது நண்பர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து இதில் முதலீடு செய்திருக்கிறார். வெறும் முதலீடு மட்டும் செய்து ஒதுங்கி விடாமல் நிர்வாகம் எப்படி நடக்கிறது என்றும் அவ்வப்போது பார்க்கிறார். சாய்வாலா கடைகளுக்கு சர்ப்ரைஸ் விஸ்ட் அடித்து வாடிக்கையாளர்களிடம் தரம் பற்றி, சர்வீஸ் பற்றி விசாரிக்கிறார்..நீங்கள் சாய்வாலா ஷாப்பில் நயன்தாரா ஜாடையில் ஒரு பெண் வந்து நீங்கள் சாப்பிடும் டீ பற்றி விசாரித்தால் அவர் உண்மையிலேயே நயன்தான். ஏனென்றால் அப்படிக் கடைகளுக்குச் செல்லும்போது எளிய உடையில் மேக்அப் இல்லாமல்தான் போகிறார்..ஒரு காலத்தில் டீ விற்ற சாய் வாலா இன்று நாட்டின் பிரதமராகியிருக்கிறார். இப்போது ஒரு அகில இந்திய சினிமா ஸ்டார் டீ விற்கத் தொடங்கியிருக்கிறார்.
நயன்தாரா டீ.– வினோத்.டீ கேரளாவின் தேசிய பானம் என்று கொண்டாடப்பட்டாலும் அது தமிழர்களின் உணர்வோடும் உடலோடும் கலந்துவிட்ட ஒரு பானம். கிராமம், சிறுநகரம் பெருநகரம் என எல்லா இடங்களிலும் எப்போதும் கிடைக்கும் ஒரே பானம் டீ. இப்போது இதில் கார்ப்பரேட்களின் கண் விழுந்திருக்கிறது. காபி டே, ஸ்டார் பக் போன்ற அழகாக அமைக்கப்பட்ட சிறு விடுதிகளைச் சங்கிலித்தொடர் போல் பல நகரங்களிலும், ஒரே நகரில் பல இடங்களிலும் தமிழகம் முழுவதும் தொடங்க ஆரம்பித்திருக்கிறார்கள் 'சாய் வாலா' என்ற நிறுவனம்..இப்போது சென்னை நகரில் சில இடங்களில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இந்தச் சாய்வாலா கடைகள் விரைவில் 35 கிளைகளுடன் விரிவடையப் போகிறது, 20க்கும் மேற்பட்ட டீ வகைகள் கிடைக்கும்..சரி. இதில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா எங்கிருந்து வந்தார்?.ஆர்வத்துடன் புதிய ஐடியாக்களுடன் தொழில் தொடங்க விழையும் இளைஞர்களுக்கு, அவர்களின் திட்டத்தைப் பரிசீலித்து, நிச்சயம் லாபம் ஈட்டுமென்று தெரிந்தால் அதில் முதலீடு செய்பவர்களை 'ஏஞ்சல் இன்வெஸ்ட்டர்கள்' என்று அழைப்பார்கள். அப்படி ஒரு நிறுவனத்தின் மூலம் இந்தச் சாய்வாலா டீ விடுதிகளில் முதலீடு செய்திருக்கிறார் நடிகைநயன்தாரா..திரைக்கலைஞர்கள் தங்கள் எதிர்காலத்துக்காகத் திரைத்துறையில் ஈட்டியதைப் பல வகைகளில் முதலீடு செய்வது ஒன்றும் புதிதல்ல. பல கலைஞர்கள் செய்திருக்கிறார்கள். ஆனால் இதுபோல ஏஞ்சல் முதலீட்டாளராக மாட்டார்கள். காரணம் இதில் நஷ்டம் அடையக்கூடிய, ஏன் முதலீட்டையே இழக்கக் கூடிய ரிஸ்க் இருக்கிறது. இங்குதான் நயந்தாரா தன் துணிவைக் காட்டியிருக்கிறார். அவரது நண்பர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து இதில் முதலீடு செய்திருக்கிறார். வெறும் முதலீடு மட்டும் செய்து ஒதுங்கி விடாமல் நிர்வாகம் எப்படி நடக்கிறது என்றும் அவ்வப்போது பார்க்கிறார். சாய்வாலா கடைகளுக்கு சர்ப்ரைஸ் விஸ்ட் அடித்து வாடிக்கையாளர்களிடம் தரம் பற்றி, சர்வீஸ் பற்றி விசாரிக்கிறார்..நீங்கள் சாய்வாலா ஷாப்பில் நயன்தாரா ஜாடையில் ஒரு பெண் வந்து நீங்கள் சாப்பிடும் டீ பற்றி விசாரித்தால் அவர் உண்மையிலேயே நயன்தான். ஏனென்றால் அப்படிக் கடைகளுக்குச் செல்லும்போது எளிய உடையில் மேக்அப் இல்லாமல்தான் போகிறார்..ஒரு காலத்தில் டீ விற்ற சாய் வாலா இன்று நாட்டின் பிரதமராகியிருக்கிறார். இப்போது ஒரு அகில இந்திய சினிமா ஸ்டார் டீ விற்கத் தொடங்கியிருக்கிறார்.