– சுப்ர. பாலன் .ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் கல்கி வார இதழில் வெளியான அமரர் கல்கியின் வாழ்க்கை வரலாற்றுத் தொடர் ஒரு சுவையான நாவலை விடவும் படு சுவாரஸ்யமாகப் பலராலும் படிக்கப்பட்டுப் பாராட்டுப் பெற்றது ஒரு சுகமான இலக்கிய வரலாறு! எழுதியவர் வானொலியில் செய்தி தயாரிப்பாளர், வாசிப்பாளராகப் பழுத்த அனுபவம் பெற்ற 'சுந்தா' என்னும் மே.ரா.மீ.சுந்தரம். காவிரிக்கரைக் காற்றையும், நீரையும், சூழலையும் அனுபவித்து வளர்ந்த கல்கி அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலுக்குப் 'பொன்னியின் புதல்வர்' என்றே மகுடமிட்டு வெளியிட்டது பெருமிதம் தரக்கூடிய நிகழ்வு..இப்போது அந்தத் தமிழக அரசியல் இலக்கிய வாழ்வின் அரிய ஆவணப் பதிவாகத் திகழ்கிற நூலை, மூல ஆசிரியர் அனுபவித்து எழுதிய உணர்வு சிறிதும் குன்றாமல் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டிருக்கிறார் தாத்தாவின் மடியில் குழந்தையாகத் தவழ்ந்த கௌரி ராம்நாராயண்..கல்கி அவர்களின் வரலாற்றை எழுதுவதற்காக தில்லி வாழ்க்கையிலிருந்து பணி ஓய்வு பெற்றுச் சென்னைவாசியாக இடம்பெயர்ந்து வந்தபோது சுந்தா தம்முடன் எடுத்து வந்தது சார்ல்ஸ் டிக்கன்ஸ், நெப்போலியன், பேர்ல்ஸ் பக் போன்றோரின் பத்துக்கும் மேற்பட்ட ஆழமான வாழ்க்கை வரலாற்று நூல்களைத்தான்! தம்முடைய ஆய்வுப் பணிக்கு இவை முன்மாதிரியாக நிச்சயம் உதவும் என்று எண்ணியே இவற்றை வாங்கி வந்தார். ஆனால், தனக்கென்று ஒரு பாணியை வகுத்துக் கொண்டு சுவை குன்றாமல் எழுதினார்! வருங்காலத்தில் வாழ்க்கை வரலாறுகளை எழுதத் துணிகிறவர்கள் சுந்தா எடுத்துவந்த நூல்களின் பட்டியலில் கௌரி ராம்நாராயண் மொழிமாற்றம் செய்து வெளியிட்டுள்ள 'Kalki Krishnamurthy His Life and Times' நூலையும் முன்மாதிரியாகச் சேர்த்துக் கொள்ளலாம். ஹிந்தி மொழிப் படைப்புலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த முன்ஷி ப்ரேம் சந்த் அவர்களோடு கல்கி அவர்களை ஒப்பிட்டு ராஜ்மோகன் காந்தி எழுதியுள்ள அணிந்துரை இந்த நூலுக்கு மகுடாபிஷேகமே செய்திருக்கிறது! கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கைச் சரிதத்தை சுந்தா அவர்கள் எழுதியுள்ள பாங்கைக் குறிப்பிடுகையில் compiled, compressed and composed என்று எழுதியிருப்பதை என்னால் அதே ஜீவனோடு தமிழாக்க இயலவில்லை!.சென்னைக் கோட்டூர்புரத்தில் உள்ள 'மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்' அரங்கில் வெளியிட்டார்கள். நீதியரசர் சந்துரு அவர்கள் நூலை வெளியிட, மூத்த பத்திரிகையாளர் மாலன் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். இருவரும் சுருக்கமான முறையில் அமரர் கல்கியின் அரசியல், இலக்கிய ஆளுமையையும் மொழியாக்கத்தின் சிறப்பையும் பற்றிப் பகிர்ந்துகொண்டார்கள்..நூலின் சுவையான பகுதிகளுள் ஒன்றான காங்கிரஸ் காரியாலயத்தில் வேலைக்கு அமர்ந்து ராஜாஜி சம்பள உயர்வு 'அளந்த' பகுதியை யோகன் சாக்கோ தமக்கே உரிய கம்பீரமான குரல் வளத்தில் படித்தார்.கௌரி ராம்நாராயண் தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.விழா நிறைவில் அமரர் கல்கியின் அருமையான 'சோர்வுகொள்ளாதே மனமே…' பாடலை அழகான குரல்வளத்தில் பாடி அவையோரை நெகிழ்வித்தார் சிக்கில் குருசரண்..நிகழ்ச்சியை அகிலா ராம்நாராயண் தொகுத்தளிக்க, கச்சிதமாக தொண்ணூறு நிமிடங்களில் விழா நிறைவடைந்தது சென்னையில் ஓர் அரிய இலக்கிய அனுபவம்! ஆங்கில நூல் என்பதாலோ என்னவோ முற்றிலும் ஆங்கிலத்திலேயே நடத்திவிட்டார்கள்..(புத்தகத்தை www.kalkibiography.com ல் ஆர்டர் செய்து பெறலாம். .விலை: ரூ. 1500/-)
– சுப்ர. பாலன் .ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் கல்கி வார இதழில் வெளியான அமரர் கல்கியின் வாழ்க்கை வரலாற்றுத் தொடர் ஒரு சுவையான நாவலை விடவும் படு சுவாரஸ்யமாகப் பலராலும் படிக்கப்பட்டுப் பாராட்டுப் பெற்றது ஒரு சுகமான இலக்கிய வரலாறு! எழுதியவர் வானொலியில் செய்தி தயாரிப்பாளர், வாசிப்பாளராகப் பழுத்த அனுபவம் பெற்ற 'சுந்தா' என்னும் மே.ரா.மீ.சுந்தரம். காவிரிக்கரைக் காற்றையும், நீரையும், சூழலையும் அனுபவித்து வளர்ந்த கல்கி அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலுக்குப் 'பொன்னியின் புதல்வர்' என்றே மகுடமிட்டு வெளியிட்டது பெருமிதம் தரக்கூடிய நிகழ்வு..இப்போது அந்தத் தமிழக அரசியல் இலக்கிய வாழ்வின் அரிய ஆவணப் பதிவாகத் திகழ்கிற நூலை, மூல ஆசிரியர் அனுபவித்து எழுதிய உணர்வு சிறிதும் குன்றாமல் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டிருக்கிறார் தாத்தாவின் மடியில் குழந்தையாகத் தவழ்ந்த கௌரி ராம்நாராயண்..கல்கி அவர்களின் வரலாற்றை எழுதுவதற்காக தில்லி வாழ்க்கையிலிருந்து பணி ஓய்வு பெற்றுச் சென்னைவாசியாக இடம்பெயர்ந்து வந்தபோது சுந்தா தம்முடன் எடுத்து வந்தது சார்ல்ஸ் டிக்கன்ஸ், நெப்போலியன், பேர்ல்ஸ் பக் போன்றோரின் பத்துக்கும் மேற்பட்ட ஆழமான வாழ்க்கை வரலாற்று நூல்களைத்தான்! தம்முடைய ஆய்வுப் பணிக்கு இவை முன்மாதிரியாக நிச்சயம் உதவும் என்று எண்ணியே இவற்றை வாங்கி வந்தார். ஆனால், தனக்கென்று ஒரு பாணியை வகுத்துக் கொண்டு சுவை குன்றாமல் எழுதினார்! வருங்காலத்தில் வாழ்க்கை வரலாறுகளை எழுதத் துணிகிறவர்கள் சுந்தா எடுத்துவந்த நூல்களின் பட்டியலில் கௌரி ராம்நாராயண் மொழிமாற்றம் செய்து வெளியிட்டுள்ள 'Kalki Krishnamurthy His Life and Times' நூலையும் முன்மாதிரியாகச் சேர்த்துக் கொள்ளலாம். ஹிந்தி மொழிப் படைப்புலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த முன்ஷி ப்ரேம் சந்த் அவர்களோடு கல்கி அவர்களை ஒப்பிட்டு ராஜ்மோகன் காந்தி எழுதியுள்ள அணிந்துரை இந்த நூலுக்கு மகுடாபிஷேகமே செய்திருக்கிறது! கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கைச் சரிதத்தை சுந்தா அவர்கள் எழுதியுள்ள பாங்கைக் குறிப்பிடுகையில் compiled, compressed and composed என்று எழுதியிருப்பதை என்னால் அதே ஜீவனோடு தமிழாக்க இயலவில்லை!.சென்னைக் கோட்டூர்புரத்தில் உள்ள 'மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்' அரங்கில் வெளியிட்டார்கள். நீதியரசர் சந்துரு அவர்கள் நூலை வெளியிட, மூத்த பத்திரிகையாளர் மாலன் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். இருவரும் சுருக்கமான முறையில் அமரர் கல்கியின் அரசியல், இலக்கிய ஆளுமையையும் மொழியாக்கத்தின் சிறப்பையும் பற்றிப் பகிர்ந்துகொண்டார்கள்..நூலின் சுவையான பகுதிகளுள் ஒன்றான காங்கிரஸ் காரியாலயத்தில் வேலைக்கு அமர்ந்து ராஜாஜி சம்பள உயர்வு 'அளந்த' பகுதியை யோகன் சாக்கோ தமக்கே உரிய கம்பீரமான குரல் வளத்தில் படித்தார்.கௌரி ராம்நாராயண் தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.விழா நிறைவில் அமரர் கல்கியின் அருமையான 'சோர்வுகொள்ளாதே மனமே…' பாடலை அழகான குரல்வளத்தில் பாடி அவையோரை நெகிழ்வித்தார் சிக்கில் குருசரண்..நிகழ்ச்சியை அகிலா ராம்நாராயண் தொகுத்தளிக்க, கச்சிதமாக தொண்ணூறு நிமிடங்களில் விழா நிறைவடைந்தது சென்னையில் ஓர் அரிய இலக்கிய அனுபவம்! ஆங்கில நூல் என்பதாலோ என்னவோ முற்றிலும் ஆங்கிலத்திலேயே நடத்திவிட்டார்கள்..(புத்தகத்தை www.kalkibiography.com ல் ஆர்டர் செய்து பெறலாம். .விலை: ரூ. 1500/-)