– வினோத்.ஹாலிவுட்டில் நடிக – நடிகைகள் திருமணத்தில் இணைவதும் பின்னர் விவாகரத்தில் பிரிவதும் இன்று செய்தியில்லை. விவாகரத்துப் பெற்ற ஒரு நட்சத்திர தம்பதியினர் பரஸ்பரம் குற்றம்சாட்டி தொடர்ந்த வழக்குகளில் வெளியான அதரடி தீர்ப்புதான் இன்று ஹாலிவுட்டை கலக்கிக் கொண்டிருக்கும் செய்தி..ஜானி டெப். இவர், 'பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன்' திரைப்படங்கள் கேப்டன் ஜாக் ஸ்பேரோ கதாபாத்திரத்தில் நடித்து உலகளவில் பிரபலமான ஒரு நடிகர். ஜானி, 2015ம் ஆண்டு தன்னை விட 25 வயது குறைவான நடிகை ஆம்பர் ஹேர்ட்டை காதலித்து திருமணம் செய்தார். இந்த மணவாழ்க்கை 2 ஆண்டுகளே நீடித்தது. பின்னர், 2017ம் ஆண்டு ஜானி டெப் – ஆம்பர் திருமண பந்தம் முறிந்தது. விவாகரத்து செய்து கொண்டனர்..2019ம் ஆண்டு பிரபல அமெரிக்க பத்திரிக்கையான 'தி வாஷிங்டன் போஸ்ட்'-ல் ஜானி டெப்பின், முன்னாள் மனைவி ஆம்பர் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில், தனது முன்னாள் கணவரான டெப், தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாகவும், தான் குடும்ப வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். தான் பல வகையில் துன்புறுத்தபட்டதை விவரித்திருந்தார்.. இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த ஜானி டெப், அவர் மீது மான நஷ்டஈடு வழக்கு தொடர்ந்தார். இழப்பீடாக ₹380 கோடி கோரினார். அதேநேரத்தில் நடிகை , ஆம்பரும், தனக்கு நஷ்ட ஈடாக ₹776 கோடி இழப்பீடு வழக்கக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்..இந்த வழக்குகள் அனைத்தும் அமெரிக்காவில் வெர்ஜீனியா மாநில நீதிமன்றத்தில் 2019ம் ஆண்டு முதல் நடந்து வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு அண்மையில் வெளியாயிருக்கிறது. . ஜானி டெப்பிற்கு எதிராக அவதூறு பரப்பும் நோக்கத்துடன் ஆம்பர் செயல்பட்டது உறுதியானது. ஜானி மீது ஆம்பர் தெரிவித்த பாலியல் குற்றச்சாட்டுகளும் போலியானவை. இதன் மூலம் அவதூறு பரப்பும் வகையில் பொய்யாக குற்றச்சாட்டுகளைமுன் வைத்ததற்காக ஆம்பர், தனது முன்னாள் கணவர் ஜானிக்கு இழப்பீடாக ₹ 78 கோடியும் (10 மில்லியன்), அபராதமாக ₹38 கோடியும்( 5 மில்லியன்) என மொத்தம் ₹116 கோடி (15 மில்லியன்) வழங்க வேண்டும் என்பது தீர்ப்பு..பத்திரிகைகளில் தவறான செய்தி அவதூறு பரப்பும் கட்டுரைகளுக்காக அதன் ஆசிரியர்கள், பதிப்பாளார்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டதுண்டு. ஆனால், ஒரு நடிகை பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் மூலம் அவதூறு பரப்பியிருக்கிறார் என்பதற்காக நஷ்ட ஈடாகவும் அபராதமாகவும் இவ்வளவு பெரிய தொகை செலுத்த வேண்டும் என்ற தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது இதுதான் முதல் முறை.
– வினோத்.ஹாலிவுட்டில் நடிக – நடிகைகள் திருமணத்தில் இணைவதும் பின்னர் விவாகரத்தில் பிரிவதும் இன்று செய்தியில்லை. விவாகரத்துப் பெற்ற ஒரு நட்சத்திர தம்பதியினர் பரஸ்பரம் குற்றம்சாட்டி தொடர்ந்த வழக்குகளில் வெளியான அதரடி தீர்ப்புதான் இன்று ஹாலிவுட்டை கலக்கிக் கொண்டிருக்கும் செய்தி..ஜானி டெப். இவர், 'பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன்' திரைப்படங்கள் கேப்டன் ஜாக் ஸ்பேரோ கதாபாத்திரத்தில் நடித்து உலகளவில் பிரபலமான ஒரு நடிகர். ஜானி, 2015ம் ஆண்டு தன்னை விட 25 வயது குறைவான நடிகை ஆம்பர் ஹேர்ட்டை காதலித்து திருமணம் செய்தார். இந்த மணவாழ்க்கை 2 ஆண்டுகளே நீடித்தது. பின்னர், 2017ம் ஆண்டு ஜானி டெப் – ஆம்பர் திருமண பந்தம் முறிந்தது. விவாகரத்து செய்து கொண்டனர்..2019ம் ஆண்டு பிரபல அமெரிக்க பத்திரிக்கையான 'தி வாஷிங்டன் போஸ்ட்'-ல் ஜானி டெப்பின், முன்னாள் மனைவி ஆம்பர் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில், தனது முன்னாள் கணவரான டெப், தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாகவும், தான் குடும்ப வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். தான் பல வகையில் துன்புறுத்தபட்டதை விவரித்திருந்தார்.. இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த ஜானி டெப், அவர் மீது மான நஷ்டஈடு வழக்கு தொடர்ந்தார். இழப்பீடாக ₹380 கோடி கோரினார். அதேநேரத்தில் நடிகை , ஆம்பரும், தனக்கு நஷ்ட ஈடாக ₹776 கோடி இழப்பீடு வழக்கக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்..இந்த வழக்குகள் அனைத்தும் அமெரிக்காவில் வெர்ஜீனியா மாநில நீதிமன்றத்தில் 2019ம் ஆண்டு முதல் நடந்து வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு அண்மையில் வெளியாயிருக்கிறது. . ஜானி டெப்பிற்கு எதிராக அவதூறு பரப்பும் நோக்கத்துடன் ஆம்பர் செயல்பட்டது உறுதியானது. ஜானி மீது ஆம்பர் தெரிவித்த பாலியல் குற்றச்சாட்டுகளும் போலியானவை. இதன் மூலம் அவதூறு பரப்பும் வகையில் பொய்யாக குற்றச்சாட்டுகளைமுன் வைத்ததற்காக ஆம்பர், தனது முன்னாள் கணவர் ஜானிக்கு இழப்பீடாக ₹ 78 கோடியும் (10 மில்லியன்), அபராதமாக ₹38 கோடியும்( 5 மில்லியன்) என மொத்தம் ₹116 கோடி (15 மில்லியன்) வழங்க வேண்டும் என்பது தீர்ப்பு..பத்திரிகைகளில் தவறான செய்தி அவதூறு பரப்பும் கட்டுரைகளுக்காக அதன் ஆசிரியர்கள், பதிப்பாளார்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டதுண்டு. ஆனால், ஒரு நடிகை பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் மூலம் அவதூறு பரப்பியிருக்கிறார் என்பதற்காக நஷ்ட ஈடாகவும் அபராதமாகவும் இவ்வளவு பெரிய தொகை செலுத்த வேண்டும் என்ற தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது இதுதான் முதல் முறை.