சிறுகதை ஓவியம்: தமிழ். – ஜெயராமன் ரகுநாதன்.இந்த புதன் கிழமைதான் புத்தகச்சந்தை தொடங்கியிருந்தது. என் ஸ்டாலுக்கெல்லாம் அவ்வளவு வராது என்று எனக்குத் தெரியும். நான் வெறும் குழந்தைகள் புத்தகம் அச்சிட்டு விற்பவன். 'லாப நோக்கம் ஏதுமில்லாமல் குழந்தைகள் இலக்கியத்துக்கு என்னால் செய்ய வேண்டிய கடமைபோல செய்து வருகிறேன்' என்று சொன்னால் "ஹக்" என்பீர்கள். ஆனால் அதுதான் உண்மை..எனக்கு தனி வேலை உண்டு. பெரிய ஐடி கம்பெனியின்சப் காண்டிராக்டர் என்னும் தொழில் விற்பன்னன் நான். சின்ன வயசிலிருந்தே படிப்பில் ஆர்வம் அதிகம். அதுவும் குழந்தைகள் இலக்கியத்தின் மீது அபார பற்று. லைப்ரரி சயன்ஸ் எடுத்துப் படிக்கத்தான் ஆசைப்பட்டேன்.."பைத்தியமா உனக்கு? ப்ளஸ் டூவுவில் இத்தன நல்ல மார்க் வாங்கியிருக்க! பேசாம இன்ஜினீயரிங் படிச்சு ஐடி கம்பெனி வேலைக்குப்போ! கல்யாணம் கார்த்தி ஆக வேண்டாமா?".படித்து முடித்து பெரிய கம்பெனியில் புரோகிராமராகச் சேர்ந்து ஐந்து வருடங்களில் அந்த துறையில் – உங்களுக்கு பைதன் என்றால் புரியுமா – அதில் விற்பன்னனாகிவிட்டேன். கல்யாணம் கார்த்தியும் ஆகிவிட்டது. கையில் சேமிப்பு வந்தவுடன் வேலையை விட்டேன்.."என்னங்க இது? நல்ல வேலைய விட்டுட்டு என்ன பண்றதா உத்தேசம்! குழந்தைங்க புஸ்தகமா?".அப்பாவின் தொடர்ச்சியாக மனைவி.."த பாரு உன்னைப் பொறுத்தவரையில் மாசாமாசம் மிந்தி மாதிரியே காசு தந்துர்ரேன். எப்படியோ ஃப்ரீலான்ஸ் பண்ணி சம்பாதிச்சுடுவேன். ஆனா மத்தபடிக்கு என் ஆர்வத்துக்கு முட்டுக்கடை போடக்கூடாது!".அவள் வாயை அடைத்தேன். குழந்தைகள் வாசிப்புக்காகவே புத்தகங்கள் எழுதுவோரை தேடித்தேடி காசு கொடுத்து வாங்கி அச்சிட்டு விற்பனை செய்தேன். ஸ்கூல் ஸ்கூலாகப்போய் பேசுவேன். டீவிலெல்லாம் வந்திருக்கேன். வருஷம் தவறாமல் புக் ஃபேரில் கடை போட்டு விடுவேன். 'பொன்னியின் செல்வன்' அளவுக்கெல்லாம் போகாது. ஆனால் குழந்தைகள் வந்து ஆர்வத்துடன் புத்தகங்களை எடுத்துப் புரட்டிப்பார்த்து, அப்பா அம்மாவிடம் கெஞ்சி வாங்கிக்கொண்டு போகும் இன்பத்தை எதற்கு ஈடாக சொல்ல முடியும்?.மத்தியானத்துக்கு மேல் எதிர்பார்த்தபடி கூட்டம். என் ஸ்டாலில் அத்தனை கூட்டமில்லை. நடமாடும் ஜனத்தைப் பார்த்தபடி உட்கார்ந்திருக்கையில் ஒரு சின்னக் குழந்தை என் ஸ்டாலுக்குள் வந்தது..குழந்தை என்றா சொன்னேன்?.இல்லை சிறுமி என்பது சரியாக இருக்கும். அவளுக்கு ஆறு வயது இருக்கலாம். எண்ணை படாத தலை வாரலில் இரட்டைப்பின்னல். நுனியில் அவிழ்ந்து கலைந்து ஊசலாடியது. நெற்றிப்பொட்டு இல்லை. அவளின் கண்களும் வாயும் புருவங்களும் முகத்தில்; தென்பட்ட அலட்சியமும் அவளை வசதியான குடும்பமாக காட்டியது.."கமின்!"."தாங்க் யூ!".நேர்த்தியான கான்வெண்ட் ஆங்கிலம். நானும் ஆங்கிலத்துக்குத் தாவினேன்.."எங்கே உன் பெற்றோர்?".அவள் முகத்தில் ஆயாசம் தோன்றியது.."உங்கள் ஸ்டாலுக்கு பெற்றோருடன்தான் வர வேண்டுமா?".இடக்காக கேட்டது.."ஓ நோ! நாட் அட் ஆல்!"."தாங்க்ஸ் அகெயின்!".புத்தகங்களைப்புரட்டிப்பார்க்க ஆரமித்தது. காமிக்ஸ் பக்கம் போகவே இல்லை. கொஞ்சம் தடித்த புத்தகங்களின் அருகில் போயிற்று.."தனியாகத்தான் வந்தாயா?"."அப்பா அம்மாவைத் தொலைத்துவிட்டேன்!"."என்னது?"."தே ஆர் ய பிக் போர் அங்கிள்! தொலைத்து விட்டேன்!".எனக்கு என்ன சொல்லுவது என்று தெரியவில்லை.."டோண்ட் ஒர்ரி! வந்துவிடுவார்கள்! நான் ஏதாவது வாங்கினால் அவர்களிடம் காசு வாங்கிக்கொடுத்து விடுவேன்!".நான் கொஞ்சம் அசட்டு சிரிப்பு சிரித்து வைத்தேன்.."ஆமாம் நீ ஏன் தனியாக ஒதுங்கி வந்தாய்? அவர்களுடனேயே வந்திருக்கலாமே?"."சொன்னேனே அவர்களுக்கு சண்டை போடவே நேரம் போதவில்லை! ஹான்ஸ்ட்லி ஐயாம் ஃபெட் அப்!".பெரிய மனுஷத்தனமாக பேசியது. கொஞ்சம் அவளின் கசப்பை தணிக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. பேச்சை மாற்றினேன்.."ஈஸாப் ஃபேபிள் வாசிப்பாயா?"."ஈஸாப்? மீ? அவைகள் எல்லம் குழந்தைகள் சமாசாரம்!".நான் சிரித்தேன்.."மாடர்ன் ஈஸாப் கேட்டிருக்கிறாயா?"."அது என்ன மாடர்ன் ஈஸாப்?".சொல்கிறேன் கேள்!".அந்தப் பெண்ணுடன் பேசுவது எனக்கு சுவாரஸ்யமாக இருந்தது. அவளை குழந்தைகள் உலகத்துக்கு இழுக்க ஆசைப்பட்டேன். வீட்டு ரகளைகளில் அவள் தன் குழந்தைத்தன்மையை சீக்கிரம் இழந்துவிடுவாள் என்று பயமாக இருந்தது. சிறுமி இப்போது என்னமோ முணுமுணுத்தது. உற்றுக்கேட்டதில் I wanna be there என்ற மைக்கேல் ஜாக்சன் வரிகள்.."சரி எனக்கு ஒரு கதை சொல்கிறாயா?"."நோ! எனக்கு கேட்பதுதான் இஷ்டம்!"."ஓ!"."எனவே நீங்கள் ஒரு கதை சொல்லுங்களேன்!".ஆச்சரியத்துடன் அவளைப்பார்த்தேன்.."ம் சொல்கிறீர்களா?".அதட்டியது.."நீ இரவில் நிலாவைப் பார்த்திருக்கிறாயா?"."ம், பல தடவை!"."அதில் என்ன தெரியும்?"."ஏன்? ஒன்றும் தெரியாதே!"."ம்ஹும்! சரியாகக் கவனித்தால் அதில் ஒரு முயல் பாய்வது போன்று நிழலாகத் தெரியுமே, பார்த்ததில்லை,.?"."ஆம் பார்த்திருக்கிறேன்!".கொஞ்சம் அலட்சியமாக பதில் வந்தது.."ம். ஓகே! இதோ கதை! ஒரு காட்டில் நான்கு நண்பர்கள். ஒரு முயல், நரி, காகம் மற்றும் ஒரு அணில்"..சிறுமியின் முகத்தில் லேசான அசுவாரஸ்யம் தட்டியதோ என்று எனக்கு ஒரு சம்சயம். தொடர்ந்தேன்.."நான்கும் தினமும் சந்தித்து பேசி விளையாடி என்று பொழுது போக்கும். ஒரு நாள் முயல் சொல்லிற்று:."மனிதர்கள் நம்மை விட மேலானவர்கள், நல்லவர்கள்!"."நல்லவர்களா?"."ஆம்? நாளை அவர்களுக்கு ஒரு புண்ணிய நாள். பகல் முழுவதும் அவர்கள் ஒன்றுமே சாப்பிடமாட்டார்கள். தண்ணீர்கூட அருந்துவதில்லை. மாலை சூரியன் சாய்ந்த பின் உணவு உட்கொள்ளுவார்கள். அதுவும் யாராவது அவர்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களுக்கும் உணவளித்தபின் தான் சாப்பிடுவார்கள்! எப்படிபட்ட நல்ல குணம் பார்த்தீர்களா?"."ஆம் உண்மைதான்!".கொஞ்சம் உற்சாகத்துடன் முயல் பேசியது.."நாளை நாமும் அவர்களைப்போல் பகல் முழுவதும் பட்டினி கிடப்போமா? சூரியன் சாய்ந்த பிறகு சாப்பிடலாம், என்ன?"."ஒப்புக்கொண்டு நான்கும் பிரிந்தன. முயலுக்கு வேறு யோஜனை!"."என்ன யோஜனை?"."சொல்கிறேன். ஒரு வேளை வீட்டுக்கு யாராவது சாப்பிட வந்தால் என்ன கொடுப்பது. நான் சாப்பிடுவது கேரட்டும் இலைகளும். அவை போதாதே! சரி இன்று எவர் வீட்டுக்கு வந்தாலும் என்னையே சமைத்து சாப்பிட்டு விடுங்கள் என்று தந்துவிடப்போகிறேன்!".இப்படி முடிவு செய்து முயலும் படுத்துத்தூங்கியது..இதை மேகக்கூட்டத்திடையில் சோம்பலாக உட்கார்ந்திருந்த கடவுளின் அஸிஸ்டெண்டான உபகடவுள் பார்த்தார். முயலைச் சோதிக்க வேண்டுமென முடிவு செய்து, மாலை முயலின் வீட்டுக்கருகில் வந்தார்.."ஆஹா! இன்று உணவு கேட்க ஒருவர் வந்துவிட்டாரே!"."என்ன வேண்டும்?"."முயலே! எனக்கு ஒரே பசி! ஏதானும் உணவு தருவாயா?"."நீங்கள் சாப்பிடும்படி என்னிடம் என்ன இருக்கும். ஆனால் முயலின் மாமிசம் சுவையானது என்று மனிதர்கள் பேசிக்கேட்டிருக்கிறேன். எனவே, என்னையே உங்களுக்கு உணவாகத் தருகிறேன். என்னைக் கொன்று சாப்பிடுங்கள்!"."ஆஹா என்னே உன் தியாகம்! ஆனால் இன்று புனித நன்னாள். ஆகையால் நான் உயிர்க்கொலை செய்யலாகாதே!"."ஓ அப்படியா? சரி, நீங்கள் தீயை மூட்டுங்கள்! நானே அதில் குதித்து விடுகிறேன். நன்றாகச்சுட்ட பிறகு என் மாமிசத்தை நீங்க உண்ணலாம்!"."சரி அப்படியே செய்யலாம்!".உபகடவுள் தீயை மூட்ட முயல் தயங்காமல் அதில் குதித்துவிட்டது..இப்போது அந்தச் சிறுமியைப் பார்த்து கேட்டேன்.."முயலுக்கு என்ன ஆச்சு சொல்லு பார்க்கலாம்?"."ப்ச்ச! நீங்களே சொல்லிவிடுங்கள்!".சுற்றிலும் எரிந்த தீ முயலை ஒன்றுமே பண்ணவில்லை. சில்லென்று குளிராக பனிபடர்ந்த புற்களுக்கு நடுவில் இருப்பது போல சுகமாக இருந்தது. சற்று நேரத்தில் தீயும் அணைந்து விட முயல் முன்னைவிட தேஜஸுடன் வெளி வந்தது..உபகடவுள் முயலிடம் சொன்னார்:."உன் தியாகம் மகத்தானது! அதற்கு நல்ல பரிசு தரவேண்டும். இதோ பார் என்று வானில் இருந்த துல்லிய நிலாவைநோக்கி தம் கையால் முயல் போன்ற உருவத்தை காற்றில் எழுதினார். உடனே நிலாவில் அந்த முயல் பாய்வது போல நிழலுருவம் ஏற்பட்டது.."இனி வரும் நாட்களில் உலகில் யார் எங்கேயிருந்து பார்த்தாலும் முயலின் நிழலுருவம் பாய்வது போல அழகாக நிலவில் தெரியும்! வாழ்க நீ!.உபகடவுள் மறைந்துவிட்டார்..கதையை முடித்து விட்டு வெற்றிப் புன்னகையுடன் சிறுமியைப் பார்த்தேன். அவள் முகத்தில் ஒருவித அலட்சியம்தான் தெரிந்தது.."ஏன் கதை நன்றாக இல்லையா?".இதற்குள் அவள் பெற்றோர் பதற்றத்துடன் வந்துவிட்டார்கள்.."ஓ ஸ்ரேயா! இங்கயா இருக்கே? பதற்றமாய்டுத்து! சொல்லிட்டு வர்ரதில்லை? பெரிய மனுஷத்தனம்! உன்னைக்காணும்ன்னவுடன் நானும் அப்பாவும் பதறிட்டோம்! சரி சரி, வா போகலாம்! இரு, ஏதாவது புக் வாங்கிக்கணுமா?"."ம்ஹும்! இங்க எல்லாம் குழந்தைத்தனமான புத்தகங்களாக இருக்கின்றன!".இப்போது ஸ்ரேயா நிதானமாக என்னைப் பார்த்தாள்.."அங்கிள்! உங்கள் கதை அபத்தம்!".கொஞ்சம் ஆடித்தான் போனேன்.."லெட் மி எக்ஸ்ப்ளெயின் அங்கிள்!".சுத்தமான ஆங்கிலத்தில் சொன்னாள்.."மிருகங்கள் பேசாது! அவைகளுக்கு இண்டலக்ட் கிடையாது. மேகங்களுக்கு நடுவில்..! ஹக்! ஆல்டோக்யுமுலஸ் அல்லது ஆல்டோஸ்ட்ராடஸ் மேகமாக இருக்க முடியாது. நாம் விமானத்திலேயே அவைகளுக்கு மேலே போகிறோம். அதற்கும் மேலே சிர்ரோ க்யுமுலஸ் சிர்ரோ ஸ்ட்ரேடஸாகவும் இருக்க வாய்ப்பில்லை. மேலும் கடவுள், உபகடவுள்,…….கிவ் மீ ய ப்ரேக் அங்கிள்! இன்றைய பௌதிகத்தில் கடவுளுக்கே இடமில்லை! உபகடவுளா? ஹ்ஹ்ஹ!".கச்சிதமாக சிரித்தாள்.."என்னது?"."ஸ்டீஃபன் ஹாக்கிங், படிச்சதில்லையா அங்கிள்!".இப்போது அம்மா கையைப்பிடித்துக் கொண்டு நடந்தவாறே பேசிற்று.."நீங்கள் படிக்கும் புத்தக லிஸ்டை மறுபரிசீலனை பண்ணிவிடுங்கள், அங்கிள்!"
சிறுகதை ஓவியம்: தமிழ். – ஜெயராமன் ரகுநாதன்.இந்த புதன் கிழமைதான் புத்தகச்சந்தை தொடங்கியிருந்தது. என் ஸ்டாலுக்கெல்லாம் அவ்வளவு வராது என்று எனக்குத் தெரியும். நான் வெறும் குழந்தைகள் புத்தகம் அச்சிட்டு விற்பவன். 'லாப நோக்கம் ஏதுமில்லாமல் குழந்தைகள் இலக்கியத்துக்கு என்னால் செய்ய வேண்டிய கடமைபோல செய்து வருகிறேன்' என்று சொன்னால் "ஹக்" என்பீர்கள். ஆனால் அதுதான் உண்மை..எனக்கு தனி வேலை உண்டு. பெரிய ஐடி கம்பெனியின்சப் காண்டிராக்டர் என்னும் தொழில் விற்பன்னன் நான். சின்ன வயசிலிருந்தே படிப்பில் ஆர்வம் அதிகம். அதுவும் குழந்தைகள் இலக்கியத்தின் மீது அபார பற்று. லைப்ரரி சயன்ஸ் எடுத்துப் படிக்கத்தான் ஆசைப்பட்டேன்.."பைத்தியமா உனக்கு? ப்ளஸ் டூவுவில் இத்தன நல்ல மார்க் வாங்கியிருக்க! பேசாம இன்ஜினீயரிங் படிச்சு ஐடி கம்பெனி வேலைக்குப்போ! கல்யாணம் கார்த்தி ஆக வேண்டாமா?".படித்து முடித்து பெரிய கம்பெனியில் புரோகிராமராகச் சேர்ந்து ஐந்து வருடங்களில் அந்த துறையில் – உங்களுக்கு பைதன் என்றால் புரியுமா – அதில் விற்பன்னனாகிவிட்டேன். கல்யாணம் கார்த்தியும் ஆகிவிட்டது. கையில் சேமிப்பு வந்தவுடன் வேலையை விட்டேன்.."என்னங்க இது? நல்ல வேலைய விட்டுட்டு என்ன பண்றதா உத்தேசம்! குழந்தைங்க புஸ்தகமா?".அப்பாவின் தொடர்ச்சியாக மனைவி.."த பாரு உன்னைப் பொறுத்தவரையில் மாசாமாசம் மிந்தி மாதிரியே காசு தந்துர்ரேன். எப்படியோ ஃப்ரீலான்ஸ் பண்ணி சம்பாதிச்சுடுவேன். ஆனா மத்தபடிக்கு என் ஆர்வத்துக்கு முட்டுக்கடை போடக்கூடாது!".அவள் வாயை அடைத்தேன். குழந்தைகள் வாசிப்புக்காகவே புத்தகங்கள் எழுதுவோரை தேடித்தேடி காசு கொடுத்து வாங்கி அச்சிட்டு விற்பனை செய்தேன். ஸ்கூல் ஸ்கூலாகப்போய் பேசுவேன். டீவிலெல்லாம் வந்திருக்கேன். வருஷம் தவறாமல் புக் ஃபேரில் கடை போட்டு விடுவேன். 'பொன்னியின் செல்வன்' அளவுக்கெல்லாம் போகாது. ஆனால் குழந்தைகள் வந்து ஆர்வத்துடன் புத்தகங்களை எடுத்துப் புரட்டிப்பார்த்து, அப்பா அம்மாவிடம் கெஞ்சி வாங்கிக்கொண்டு போகும் இன்பத்தை எதற்கு ஈடாக சொல்ல முடியும்?.மத்தியானத்துக்கு மேல் எதிர்பார்த்தபடி கூட்டம். என் ஸ்டாலில் அத்தனை கூட்டமில்லை. நடமாடும் ஜனத்தைப் பார்த்தபடி உட்கார்ந்திருக்கையில் ஒரு சின்னக் குழந்தை என் ஸ்டாலுக்குள் வந்தது..குழந்தை என்றா சொன்னேன்?.இல்லை சிறுமி என்பது சரியாக இருக்கும். அவளுக்கு ஆறு வயது இருக்கலாம். எண்ணை படாத தலை வாரலில் இரட்டைப்பின்னல். நுனியில் அவிழ்ந்து கலைந்து ஊசலாடியது. நெற்றிப்பொட்டு இல்லை. அவளின் கண்களும் வாயும் புருவங்களும் முகத்தில்; தென்பட்ட அலட்சியமும் அவளை வசதியான குடும்பமாக காட்டியது.."கமின்!"."தாங்க் யூ!".நேர்த்தியான கான்வெண்ட் ஆங்கிலம். நானும் ஆங்கிலத்துக்குத் தாவினேன்.."எங்கே உன் பெற்றோர்?".அவள் முகத்தில் ஆயாசம் தோன்றியது.."உங்கள் ஸ்டாலுக்கு பெற்றோருடன்தான் வர வேண்டுமா?".இடக்காக கேட்டது.."ஓ நோ! நாட் அட் ஆல்!"."தாங்க்ஸ் அகெயின்!".புத்தகங்களைப்புரட்டிப்பார்க்க ஆரமித்தது. காமிக்ஸ் பக்கம் போகவே இல்லை. கொஞ்சம் தடித்த புத்தகங்களின் அருகில் போயிற்று.."தனியாகத்தான் வந்தாயா?"."அப்பா அம்மாவைத் தொலைத்துவிட்டேன்!"."என்னது?"."தே ஆர் ய பிக் போர் அங்கிள்! தொலைத்து விட்டேன்!".எனக்கு என்ன சொல்லுவது என்று தெரியவில்லை.."டோண்ட் ஒர்ரி! வந்துவிடுவார்கள்! நான் ஏதாவது வாங்கினால் அவர்களிடம் காசு வாங்கிக்கொடுத்து விடுவேன்!".நான் கொஞ்சம் அசட்டு சிரிப்பு சிரித்து வைத்தேன்.."ஆமாம் நீ ஏன் தனியாக ஒதுங்கி வந்தாய்? அவர்களுடனேயே வந்திருக்கலாமே?"."சொன்னேனே அவர்களுக்கு சண்டை போடவே நேரம் போதவில்லை! ஹான்ஸ்ட்லி ஐயாம் ஃபெட் அப்!".பெரிய மனுஷத்தனமாக பேசியது. கொஞ்சம் அவளின் கசப்பை தணிக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. பேச்சை மாற்றினேன்.."ஈஸாப் ஃபேபிள் வாசிப்பாயா?"."ஈஸாப்? மீ? அவைகள் எல்லம் குழந்தைகள் சமாசாரம்!".நான் சிரித்தேன்.."மாடர்ன் ஈஸாப் கேட்டிருக்கிறாயா?"."அது என்ன மாடர்ன் ஈஸாப்?".சொல்கிறேன் கேள்!".அந்தப் பெண்ணுடன் பேசுவது எனக்கு சுவாரஸ்யமாக இருந்தது. அவளை குழந்தைகள் உலகத்துக்கு இழுக்க ஆசைப்பட்டேன். வீட்டு ரகளைகளில் அவள் தன் குழந்தைத்தன்மையை சீக்கிரம் இழந்துவிடுவாள் என்று பயமாக இருந்தது. சிறுமி இப்போது என்னமோ முணுமுணுத்தது. உற்றுக்கேட்டதில் I wanna be there என்ற மைக்கேல் ஜாக்சன் வரிகள்.."சரி எனக்கு ஒரு கதை சொல்கிறாயா?"."நோ! எனக்கு கேட்பதுதான் இஷ்டம்!"."ஓ!"."எனவே நீங்கள் ஒரு கதை சொல்லுங்களேன்!".ஆச்சரியத்துடன் அவளைப்பார்த்தேன்.."ம் சொல்கிறீர்களா?".அதட்டியது.."நீ இரவில் நிலாவைப் பார்த்திருக்கிறாயா?"."ம், பல தடவை!"."அதில் என்ன தெரியும்?"."ஏன்? ஒன்றும் தெரியாதே!"."ம்ஹும்! சரியாகக் கவனித்தால் அதில் ஒரு முயல் பாய்வது போன்று நிழலாகத் தெரியுமே, பார்த்ததில்லை,.?"."ஆம் பார்த்திருக்கிறேன்!".கொஞ்சம் அலட்சியமாக பதில் வந்தது.."ம். ஓகே! இதோ கதை! ஒரு காட்டில் நான்கு நண்பர்கள். ஒரு முயல், நரி, காகம் மற்றும் ஒரு அணில்"..சிறுமியின் முகத்தில் லேசான அசுவாரஸ்யம் தட்டியதோ என்று எனக்கு ஒரு சம்சயம். தொடர்ந்தேன்.."நான்கும் தினமும் சந்தித்து பேசி விளையாடி என்று பொழுது போக்கும். ஒரு நாள் முயல் சொல்லிற்று:."மனிதர்கள் நம்மை விட மேலானவர்கள், நல்லவர்கள்!"."நல்லவர்களா?"."ஆம்? நாளை அவர்களுக்கு ஒரு புண்ணிய நாள். பகல் முழுவதும் அவர்கள் ஒன்றுமே சாப்பிடமாட்டார்கள். தண்ணீர்கூட அருந்துவதில்லை. மாலை சூரியன் சாய்ந்த பின் உணவு உட்கொள்ளுவார்கள். அதுவும் யாராவது அவர்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களுக்கும் உணவளித்தபின் தான் சாப்பிடுவார்கள்! எப்படிபட்ட நல்ல குணம் பார்த்தீர்களா?"."ஆம் உண்மைதான்!".கொஞ்சம் உற்சாகத்துடன் முயல் பேசியது.."நாளை நாமும் அவர்களைப்போல் பகல் முழுவதும் பட்டினி கிடப்போமா? சூரியன் சாய்ந்த பிறகு சாப்பிடலாம், என்ன?"."ஒப்புக்கொண்டு நான்கும் பிரிந்தன. முயலுக்கு வேறு யோஜனை!"."என்ன யோஜனை?"."சொல்கிறேன். ஒரு வேளை வீட்டுக்கு யாராவது சாப்பிட வந்தால் என்ன கொடுப்பது. நான் சாப்பிடுவது கேரட்டும் இலைகளும். அவை போதாதே! சரி இன்று எவர் வீட்டுக்கு வந்தாலும் என்னையே சமைத்து சாப்பிட்டு விடுங்கள் என்று தந்துவிடப்போகிறேன்!".இப்படி முடிவு செய்து முயலும் படுத்துத்தூங்கியது..இதை மேகக்கூட்டத்திடையில் சோம்பலாக உட்கார்ந்திருந்த கடவுளின் அஸிஸ்டெண்டான உபகடவுள் பார்த்தார். முயலைச் சோதிக்க வேண்டுமென முடிவு செய்து, மாலை முயலின் வீட்டுக்கருகில் வந்தார்.."ஆஹா! இன்று உணவு கேட்க ஒருவர் வந்துவிட்டாரே!"."என்ன வேண்டும்?"."முயலே! எனக்கு ஒரே பசி! ஏதானும் உணவு தருவாயா?"."நீங்கள் சாப்பிடும்படி என்னிடம் என்ன இருக்கும். ஆனால் முயலின் மாமிசம் சுவையானது என்று மனிதர்கள் பேசிக்கேட்டிருக்கிறேன். எனவே, என்னையே உங்களுக்கு உணவாகத் தருகிறேன். என்னைக் கொன்று சாப்பிடுங்கள்!"."ஆஹா என்னே உன் தியாகம்! ஆனால் இன்று புனித நன்னாள். ஆகையால் நான் உயிர்க்கொலை செய்யலாகாதே!"."ஓ அப்படியா? சரி, நீங்கள் தீயை மூட்டுங்கள்! நானே அதில் குதித்து விடுகிறேன். நன்றாகச்சுட்ட பிறகு என் மாமிசத்தை நீங்க உண்ணலாம்!"."சரி அப்படியே செய்யலாம்!".உபகடவுள் தீயை மூட்ட முயல் தயங்காமல் அதில் குதித்துவிட்டது..இப்போது அந்தச் சிறுமியைப் பார்த்து கேட்டேன்.."முயலுக்கு என்ன ஆச்சு சொல்லு பார்க்கலாம்?"."ப்ச்ச! நீங்களே சொல்லிவிடுங்கள்!".சுற்றிலும் எரிந்த தீ முயலை ஒன்றுமே பண்ணவில்லை. சில்லென்று குளிராக பனிபடர்ந்த புற்களுக்கு நடுவில் இருப்பது போல சுகமாக இருந்தது. சற்று நேரத்தில் தீயும் அணைந்து விட முயல் முன்னைவிட தேஜஸுடன் வெளி வந்தது..உபகடவுள் முயலிடம் சொன்னார்:."உன் தியாகம் மகத்தானது! அதற்கு நல்ல பரிசு தரவேண்டும். இதோ பார் என்று வானில் இருந்த துல்லிய நிலாவைநோக்கி தம் கையால் முயல் போன்ற உருவத்தை காற்றில் எழுதினார். உடனே நிலாவில் அந்த முயல் பாய்வது போல நிழலுருவம் ஏற்பட்டது.."இனி வரும் நாட்களில் உலகில் யார் எங்கேயிருந்து பார்த்தாலும் முயலின் நிழலுருவம் பாய்வது போல அழகாக நிலவில் தெரியும்! வாழ்க நீ!.உபகடவுள் மறைந்துவிட்டார்..கதையை முடித்து விட்டு வெற்றிப் புன்னகையுடன் சிறுமியைப் பார்த்தேன். அவள் முகத்தில் ஒருவித அலட்சியம்தான் தெரிந்தது.."ஏன் கதை நன்றாக இல்லையா?".இதற்குள் அவள் பெற்றோர் பதற்றத்துடன் வந்துவிட்டார்கள்.."ஓ ஸ்ரேயா! இங்கயா இருக்கே? பதற்றமாய்டுத்து! சொல்லிட்டு வர்ரதில்லை? பெரிய மனுஷத்தனம்! உன்னைக்காணும்ன்னவுடன் நானும் அப்பாவும் பதறிட்டோம்! சரி சரி, வா போகலாம்! இரு, ஏதாவது புக் வாங்கிக்கணுமா?"."ம்ஹும்! இங்க எல்லாம் குழந்தைத்தனமான புத்தகங்களாக இருக்கின்றன!".இப்போது ஸ்ரேயா நிதானமாக என்னைப் பார்த்தாள்.."அங்கிள்! உங்கள் கதை அபத்தம்!".கொஞ்சம் ஆடித்தான் போனேன்.."லெட் மி எக்ஸ்ப்ளெயின் அங்கிள்!".சுத்தமான ஆங்கிலத்தில் சொன்னாள்.."மிருகங்கள் பேசாது! அவைகளுக்கு இண்டலக்ட் கிடையாது. மேகங்களுக்கு நடுவில்..! ஹக்! ஆல்டோக்யுமுலஸ் அல்லது ஆல்டோஸ்ட்ராடஸ் மேகமாக இருக்க முடியாது. நாம் விமானத்திலேயே அவைகளுக்கு மேலே போகிறோம். அதற்கும் மேலே சிர்ரோ க்யுமுலஸ் சிர்ரோ ஸ்ட்ரேடஸாகவும் இருக்க வாய்ப்பில்லை. மேலும் கடவுள், உபகடவுள்,…….கிவ் மீ ய ப்ரேக் அங்கிள்! இன்றைய பௌதிகத்தில் கடவுளுக்கே இடமில்லை! உபகடவுளா? ஹ்ஹ்ஹ!".கச்சிதமாக சிரித்தாள்.."என்னது?"."ஸ்டீஃபன் ஹாக்கிங், படிச்சதில்லையா அங்கிள்!".இப்போது அம்மா கையைப்பிடித்துக் கொண்டு நடந்தவாறே பேசிற்று.."நீங்கள் படிக்கும் புத்தக லிஸ்டை மறுபரிசீலனை பண்ணிவிடுங்கள், அங்கிள்!"