கடைசிப் பக்கம். சுஜாதா தேசிகன்.முதல் சைக்கிள் ஓட்டும் அனுபவம் எல்லோருக்கும் கிடைத்திருக்கும். வாடகை சைக்கிளில் சீட்டில் உட்கார்ந்தால் கால்கள் தரையில் உந்த முடியாமல், முதலிரவு பையன் போலத் தத்தளிக்க ஒருவழியாக அப்பா மெல்லத் தள்ளிவிட, பெடலை மெதித்து ஓட்டத் தொடங்கி, திரும்பிப் பார்க்கும் போது தூரத்தில் அப்பா தெரிய, பயத்தில் கீழே விழுந்தெழுந்து , ஒரு நாள் சட்டென்று 'பேலன்ஸ்' கிடைக்க அத்தருணம் மறக்க முடியாதது..சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்வதில் முக்கியமான பகுதி பெடலிங் மூலம் போதுமான வேகத்தை உருவாக்கி, நம் எடையை எவ்வாறு சைக்கிள் மீது விநியோகிப்பது என்பதுதான். மற்றவை இயற்பியல்..நின்று கொண்டு இருக்கும் சைக்கிளைவிட, ஓடிக்கொண்டு இருக்கும் சைக்கிளில் பேலன்ஸ் செய்வது ஏன் சுலபம் என்பதை வீட்டுப்பாடமாக யோசியுங்கள்..நண்பர் எதிராஜன் திருச்சி அருகே கிராமத்தில் இயற்கையுடன் நிம்மதியாக வாழ்பவர். பறவைகளின் படங்களை அடிக்கடிப் பகிர்வார். சமீபத்தில் சோளக் கதிர் உச்சியில் தாய் குருவி தன் குஞ்சுக்கு ஊட்டும் படம் என்னை வியப்பில் ஆழ்த்தி வசீகரித்தது. இந்தக் குருவிகளுக்கு யார் பேலன்ஸ் செய்யக் கற்றுக்கொடுத்திருப்பார்கள் ?.குழந்தை தவழ்ந்து, பிறகு நிற்க தொடங்கும் போது 'தொப்பென்று' விழுவதையும், தத்தி தத்தி தளர் நடை நடப்பதையும் பெரியாழ்வார் அனுபவிக்கிறார். நிற்கும் போது விழாமல் இருப்பதற்குக் காரணம் நம் உள் காதுகளுக்குள் ஆழமான C-வடிவத்தில் கால்வாய்களில் நிறப்பப்பட்டிருக்கும் திரவம் கொண்டு நம்மை நாமே சமநிலைப்படுத்திக்கொள்கிறோம். நாம் நகரும் போது இந்தத் திரவம் சுற்றி வளைந்து நாம் எவ்வாறு திசைதிருப்பப்படுகிறோம் போன்ற தகவல்களை மூளைக்கு அனுப்பி விழாமல் பேலன்ஸ் செய்ய முடிகிறது..பறவைகளுக்கும் நம்மைப்போல் C-வடிவக் கால்வாய்கள் உள்ளன. ஆனால், நம்மைக் காட்டிலும் அவை சமநிலைப்படுத்துவதில் சிறந்தவை. சமீபத்தில் பறவைகளின் பின்புற முனைகளில் லும்போசாக்ரல் உறுப்பு (lumbosacral) நம்முடைய முதுகெலும்பு மாதிரி ஒன்றும் இதற்கு முக்கிய காரணம் என்று கண்டுபிடித்துள்ளார்கள். கொக்கிற்கு இந்த உறுப்பு கொஞ்சம் பெரிதாக இருப்பதால் ஒற்றைக் காலில் அசால்டாக நிற்கிறது..எதிராஜனிடம் இந்தப் புகைப்படத்தை குறித்துக் கேட்க, அவர் இதுபோலப் பல புகைப்படங்களை அனுப்பி என்னைத் திக்குமுக்காடச் செய்தார். அவைகளை இங்கே பார்க்கலாம்.. அவரிடம் இந்தப் புகைப்படங்களை எப்படி எடுத்தீர்கள் என்று கேட்டேன். "பறவைகளைப் படம் பிடிப்பது கொஞ்சம் கஷ்டம். சிறு சலனம் ஏற்பட்டாலும் படமெடுக்கும் தருணத்தை இழக்க நேரிடும்! அதுவும் கம்பு, சோளக்காடுகளில் தூக்கணாங்குருவிகளையோ அல்லது அதையொத்த சிறு பறவைகளையோ புகைப்படமெடுக்க சற்றே மெனக்கெட வேண்டும், அடர் பச்சைநிற ஆடைகள், அதிக அசைவேற்படுத்தாத நகர்வுகள், உருமறைப்புகள் என சில மெனக்கெடல்களைச் செய்தால் நிச்சயமாக நல்ல தருணங்கள் அமைவது உறுதி" என்றார்..சில வருடங்கள் முன் நான் காலை நடைப்பயிற்சி செல்லும் பாதையில் திடீர் என்று தலையில் 'மடார்' என்று பெரிய பாரம் ஒன்று விழுந்து, பறந்து சென்றது. நடந்தது இது தான் – பெரிய கழுகு தன் கால்களை என் தலையில் வைத்து என்னைத் தூக்கப் பார்த்து முடியாமல் மேலே பறந்து சென்றது. கழுகை இவ்வளவு அருகில் டிஸ்கவரி சேனலில் கூடப் பார்த்ததில்லை. அதிர்ச்சியில் கத்தக் கூட முடியவில்லை.."கழுகு தலையைத் தட்டினால்… ?" என்று சிலரைக் கேட்டேன். "என்ன, தலையில் கழுகு தட்டியதா ? காக்கா அல்லது ஆந்தை இப்படிச் செய்தால் ஏதாவது ப்ரீதி செய்ய வேண்டும், கழுகு, கருடன் எல்லாம் நோ ப்ராபளம். விஷ்ணுவின் அருள் உங்களுக்கு இருக்கிறது அவ்வளவு தான்… கவலைப்படாதீர்கள் அடுத்த முறை வரும் போது 'கோவிந்தா' என்று சொன்னால் ஒன்றும் செய்யாது போய்விடும். குரங்குக் கூட்டமாக வந்தால் 'ராமா ராமா' என்று சொல்லுவதில்லையா? அது மாதிரி!".கழுகு தட்டினால் என்ன பயனோ தெரியாது. ஆனால் தட்டியவர்கள் இந்த மாதிரி ஒரு கட்டுரை எழுதவும், இன்னும் தட்டப்படாதவர்களுக்கு அதைப் படிக்கும் பாக்கியம் கிடைக்கும்.
கடைசிப் பக்கம். சுஜாதா தேசிகன்.முதல் சைக்கிள் ஓட்டும் அனுபவம் எல்லோருக்கும் கிடைத்திருக்கும். வாடகை சைக்கிளில் சீட்டில் உட்கார்ந்தால் கால்கள் தரையில் உந்த முடியாமல், முதலிரவு பையன் போலத் தத்தளிக்க ஒருவழியாக அப்பா மெல்லத் தள்ளிவிட, பெடலை மெதித்து ஓட்டத் தொடங்கி, திரும்பிப் பார்க்கும் போது தூரத்தில் அப்பா தெரிய, பயத்தில் கீழே விழுந்தெழுந்து , ஒரு நாள் சட்டென்று 'பேலன்ஸ்' கிடைக்க அத்தருணம் மறக்க முடியாதது..சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்வதில் முக்கியமான பகுதி பெடலிங் மூலம் போதுமான வேகத்தை உருவாக்கி, நம் எடையை எவ்வாறு சைக்கிள் மீது விநியோகிப்பது என்பதுதான். மற்றவை இயற்பியல்..நின்று கொண்டு இருக்கும் சைக்கிளைவிட, ஓடிக்கொண்டு இருக்கும் சைக்கிளில் பேலன்ஸ் செய்வது ஏன் சுலபம் என்பதை வீட்டுப்பாடமாக யோசியுங்கள்..நண்பர் எதிராஜன் திருச்சி அருகே கிராமத்தில் இயற்கையுடன் நிம்மதியாக வாழ்பவர். பறவைகளின் படங்களை அடிக்கடிப் பகிர்வார். சமீபத்தில் சோளக் கதிர் உச்சியில் தாய் குருவி தன் குஞ்சுக்கு ஊட்டும் படம் என்னை வியப்பில் ஆழ்த்தி வசீகரித்தது. இந்தக் குருவிகளுக்கு யார் பேலன்ஸ் செய்யக் கற்றுக்கொடுத்திருப்பார்கள் ?.குழந்தை தவழ்ந்து, பிறகு நிற்க தொடங்கும் போது 'தொப்பென்று' விழுவதையும், தத்தி தத்தி தளர் நடை நடப்பதையும் பெரியாழ்வார் அனுபவிக்கிறார். நிற்கும் போது விழாமல் இருப்பதற்குக் காரணம் நம் உள் காதுகளுக்குள் ஆழமான C-வடிவத்தில் கால்வாய்களில் நிறப்பப்பட்டிருக்கும் திரவம் கொண்டு நம்மை நாமே சமநிலைப்படுத்திக்கொள்கிறோம். நாம் நகரும் போது இந்தத் திரவம் சுற்றி வளைந்து நாம் எவ்வாறு திசைதிருப்பப்படுகிறோம் போன்ற தகவல்களை மூளைக்கு அனுப்பி விழாமல் பேலன்ஸ் செய்ய முடிகிறது..பறவைகளுக்கும் நம்மைப்போல் C-வடிவக் கால்வாய்கள் உள்ளன. ஆனால், நம்மைக் காட்டிலும் அவை சமநிலைப்படுத்துவதில் சிறந்தவை. சமீபத்தில் பறவைகளின் பின்புற முனைகளில் லும்போசாக்ரல் உறுப்பு (lumbosacral) நம்முடைய முதுகெலும்பு மாதிரி ஒன்றும் இதற்கு முக்கிய காரணம் என்று கண்டுபிடித்துள்ளார்கள். கொக்கிற்கு இந்த உறுப்பு கொஞ்சம் பெரிதாக இருப்பதால் ஒற்றைக் காலில் அசால்டாக நிற்கிறது..எதிராஜனிடம் இந்தப் புகைப்படத்தை குறித்துக் கேட்க, அவர் இதுபோலப் பல புகைப்படங்களை அனுப்பி என்னைத் திக்குமுக்காடச் செய்தார். அவைகளை இங்கே பார்க்கலாம்.. அவரிடம் இந்தப் புகைப்படங்களை எப்படி எடுத்தீர்கள் என்று கேட்டேன். "பறவைகளைப் படம் பிடிப்பது கொஞ்சம் கஷ்டம். சிறு சலனம் ஏற்பட்டாலும் படமெடுக்கும் தருணத்தை இழக்க நேரிடும்! அதுவும் கம்பு, சோளக்காடுகளில் தூக்கணாங்குருவிகளையோ அல்லது அதையொத்த சிறு பறவைகளையோ புகைப்படமெடுக்க சற்றே மெனக்கெட வேண்டும், அடர் பச்சைநிற ஆடைகள், அதிக அசைவேற்படுத்தாத நகர்வுகள், உருமறைப்புகள் என சில மெனக்கெடல்களைச் செய்தால் நிச்சயமாக நல்ல தருணங்கள் அமைவது உறுதி" என்றார்..சில வருடங்கள் முன் நான் காலை நடைப்பயிற்சி செல்லும் பாதையில் திடீர் என்று தலையில் 'மடார்' என்று பெரிய பாரம் ஒன்று விழுந்து, பறந்து சென்றது. நடந்தது இது தான் – பெரிய கழுகு தன் கால்களை என் தலையில் வைத்து என்னைத் தூக்கப் பார்த்து முடியாமல் மேலே பறந்து சென்றது. கழுகை இவ்வளவு அருகில் டிஸ்கவரி சேனலில் கூடப் பார்த்ததில்லை. அதிர்ச்சியில் கத்தக் கூட முடியவில்லை.."கழுகு தலையைத் தட்டினால்… ?" என்று சிலரைக் கேட்டேன். "என்ன, தலையில் கழுகு தட்டியதா ? காக்கா அல்லது ஆந்தை இப்படிச் செய்தால் ஏதாவது ப்ரீதி செய்ய வேண்டும், கழுகு, கருடன் எல்லாம் நோ ப்ராபளம். விஷ்ணுவின் அருள் உங்களுக்கு இருக்கிறது அவ்வளவு தான்… கவலைப்படாதீர்கள் அடுத்த முறை வரும் போது 'கோவிந்தா' என்று சொன்னால் ஒன்றும் செய்யாது போய்விடும். குரங்குக் கூட்டமாக வந்தால் 'ராமா ராமா' என்று சொல்லுவதில்லையா? அது மாதிரி!".கழுகு தட்டினால் என்ன பயனோ தெரியாது. ஆனால் தட்டியவர்கள் இந்த மாதிரி ஒரு கட்டுரை எழுதவும், இன்னும் தட்டப்படாதவர்களுக்கு அதைப் படிக்கும் பாக்கியம் கிடைக்கும்.