தலையங்கம்.அண்மையில் 13 மாநிலங்களில் 3 மக்களவை தொகுதி, 29 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றன. சட்டமன்ற உறுப்பினர்களின் மரணங்கள், கட்சி தாவல்களினால் இந்த இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டன. 29 சட்டசபை தொகுதிகளில் 15-ல் பாஜக வென்ற இடங்கள்; 9 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. எஞ்சிய இடங்களில் மாநிலக் கட்சிகள் வென்றிருந்தன..இந்திய அரசியல் களத்தில் இன்னும் பல பத்தாண்டுகளுக்குப் பாரதிய ஜனதா கட்சியை (பாஜக) அசைக்கவே முடியாது என்று தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்த கருத்துகளை 14 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் தவிடு பொடியாக்கித் தெறிக்கவிட்டிருக்கிறது..நாட்டின் வடகிழக்கு மாநிலமான அஸாமில்தான் பா.ஜ.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பெருமிதப்படும்படியான வெற்றியைப் பெற்றுள்ளன. அஸாமில் 5 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. இந்த 5 தொகுதிகளில் 3-ல் பா.ஜ.க.வும், 2-ல் அதன் கூட்டணிக் கட்சியும் அமோகமான வெற்றியைப் பெற்றுள்ளன..மே.வங்கத்தில் பா.ஜ.க. படுதோல்வியைச் சந்திருக்கிறது. மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் "திரிணாமுல் காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றலாம்" என்கிற பா.ஜ.க.வின் கனவு அனேகமாகக் "கண்ணுக்கெட்டிய தொலைவில் சாத்தியமே இல்லை" என்கிற வகையில்தான் இந்த இடைத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன..மே. வங்கத்தில் இடதுசாரிகள், காங்கிரஸின் வாக்கு வங்கியைக் கபளீகரம் செய்துதான் பா.ஜ.க. அங்கே காலூன்ற முயன்றது. ஆனாலும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மீதான மக்களின் மகத்தான நம்பிக்கை முன்னால் பா.ஜ.க.வின் கனவுகள் அத்தனையும் தூள் தூளாகச் சிதறடிக்கப்பட்டிருக்கிறது. ஹிமாச்சல பிரதேசத்தில் பா.ஜ.க.வுக்கு மரண அடி. ஹிமாச்சல் பிரதேசத்தில் ஆளும் கட்சியான பா.ஜ.க., 3 தொகுதி இடைத்தேர்தல்களில் படுமோசமான தோல்வியைத் தழுவி இருக்கிறது.3 தொகுதிகளிலும் காங்கிரஸ் வென்றிருக்கிறது..மம்தா பானர்ஜி ஏற்கெனவே சொன்னதைப் போல "பா.ஜ.க. ஒன்றும் வீழ்த்தவே முடியாத ஒரு வல்லமை கொண்ட சக்தி அல்ல" என்பதை இடைத்தேர்தல் முடிவுகள் தெள்ளத் தெளிவாகவே நிரூபித்திருக்கின்றன..தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடனேயே பெட்ரோல் டீசல் விலையில் கலால் வரியை குறைத்திருப்பது, சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு சுங்க வரிக் குறைப்பு போன்ற அதிரடிகள். ஆளும் கட்சி அதிர்ச்சியில் ஆடிப்போயிருப்பதைத்தான் காட்டுகிறது..பெரும்பாலும் ஆளும் கட்சிக்கு ஆதரவாகத்தான் இடைத்தேர்தல் முடிவுகள் அமைவது வழக்கம். இந்தத் தேர்தல்களில் அது நிகழாததால் மக்களிடையே ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலையும் அதிருப்தியும் நிலவுகிறது என்று பொருள்..பா.ஜ.க. தலைவர்கள் சிந்திக்கவேண்டிய நேரம் இது.
தலையங்கம்.அண்மையில் 13 மாநிலங்களில் 3 மக்களவை தொகுதி, 29 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றன. சட்டமன்ற உறுப்பினர்களின் மரணங்கள், கட்சி தாவல்களினால் இந்த இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டன. 29 சட்டசபை தொகுதிகளில் 15-ல் பாஜக வென்ற இடங்கள்; 9 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. எஞ்சிய இடங்களில் மாநிலக் கட்சிகள் வென்றிருந்தன..இந்திய அரசியல் களத்தில் இன்னும் பல பத்தாண்டுகளுக்குப் பாரதிய ஜனதா கட்சியை (பாஜக) அசைக்கவே முடியாது என்று தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்த கருத்துகளை 14 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் தவிடு பொடியாக்கித் தெறிக்கவிட்டிருக்கிறது..நாட்டின் வடகிழக்கு மாநிலமான அஸாமில்தான் பா.ஜ.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பெருமிதப்படும்படியான வெற்றியைப் பெற்றுள்ளன. அஸாமில் 5 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. இந்த 5 தொகுதிகளில் 3-ல் பா.ஜ.க.வும், 2-ல் அதன் கூட்டணிக் கட்சியும் அமோகமான வெற்றியைப் பெற்றுள்ளன..மே.வங்கத்தில் பா.ஜ.க. படுதோல்வியைச் சந்திருக்கிறது. மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் "திரிணாமுல் காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றலாம்" என்கிற பா.ஜ.க.வின் கனவு அனேகமாகக் "கண்ணுக்கெட்டிய தொலைவில் சாத்தியமே இல்லை" என்கிற வகையில்தான் இந்த இடைத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன..மே. வங்கத்தில் இடதுசாரிகள், காங்கிரஸின் வாக்கு வங்கியைக் கபளீகரம் செய்துதான் பா.ஜ.க. அங்கே காலூன்ற முயன்றது. ஆனாலும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மீதான மக்களின் மகத்தான நம்பிக்கை முன்னால் பா.ஜ.க.வின் கனவுகள் அத்தனையும் தூள் தூளாகச் சிதறடிக்கப்பட்டிருக்கிறது. ஹிமாச்சல பிரதேசத்தில் பா.ஜ.க.வுக்கு மரண அடி. ஹிமாச்சல் பிரதேசத்தில் ஆளும் கட்சியான பா.ஜ.க., 3 தொகுதி இடைத்தேர்தல்களில் படுமோசமான தோல்வியைத் தழுவி இருக்கிறது.3 தொகுதிகளிலும் காங்கிரஸ் வென்றிருக்கிறது..மம்தா பானர்ஜி ஏற்கெனவே சொன்னதைப் போல "பா.ஜ.க. ஒன்றும் வீழ்த்தவே முடியாத ஒரு வல்லமை கொண்ட சக்தி அல்ல" என்பதை இடைத்தேர்தல் முடிவுகள் தெள்ளத் தெளிவாகவே நிரூபித்திருக்கின்றன..தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடனேயே பெட்ரோல் டீசல் விலையில் கலால் வரியை குறைத்திருப்பது, சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு சுங்க வரிக் குறைப்பு போன்ற அதிரடிகள். ஆளும் கட்சி அதிர்ச்சியில் ஆடிப்போயிருப்பதைத்தான் காட்டுகிறது..பெரும்பாலும் ஆளும் கட்சிக்கு ஆதரவாகத்தான் இடைத்தேர்தல் முடிவுகள் அமைவது வழக்கம். இந்தத் தேர்தல்களில் அது நிகழாததால் மக்களிடையே ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலையும் அதிருப்தியும் நிலவுகிறது என்று பொருள்..பா.ஜ.க. தலைவர்கள் சிந்திக்கவேண்டிய நேரம் இது.