சிறுகதை.– உஷா தீபன்.ஓவியம் : தமிழ்.எதிர்த்தாற்போல் நாற்காலியைப் போட்டுக்கொண்டு அதையே பார்த்துக்கொண்டிருந்தார் நாகசாமி. கலைந்து கிடந்த செய்தித் தினசரிகளைப் பிரித்து அடுக்கிக்கொண்டிருந்தான் அவன். அடுக்க அடுக்க அந்த வரிசை தந்த அழகு இவருக்குப் பிடித்திருந்தது..எதையுமே ஒழுங்காகச் செய்தால் அது எத்தனை அழகு பெறுகிறது? ஒரு விஷயம் சீராக இருப்பதில்தான் என்ன ஒரு கம்பீரம்? அதைப் பழைய பேப்பர் கடை என்று எவராலும் சொல்ல முடியுமா? அப்படி ஒரு சுத்தம்…."உங்க கடைல பார்த்திருக்கேன் அமாவாச…சைடு ரேக்குல பேப்பர்களக் கட்டிக் கட்டி நீங்க அடுக்கியிருக்கிற ஒழுங்கிருக்கே… அந்த அழகே தனி. கோடு போட்டமாதிரி ஓரமெல்லாம் கரெக்டா நிக்க, பரண்ல ஏத்தியிருக்கீங்களே… அத எவனும் கவனிக்காம இருக்க முடியாது!படுசுத்தமால்ல இருக்கு உங்க கடை வேலை…?" வேஸ்ட் பேப்பர் கடை மாதிரியா இருக்கு?."சுத்தம்ங்கிறதவிட அப்டி ஒழுங்கா அடுக்கி வச்சாத்தான் அந்தப் பத்துக்குப் பத்து ரூம்ல நிறைய வைக்க முடியுமுங்க…கடைக்குள்ளார வந்து பார்த்தீங்கன்னா தெரியும். மேலே உத்திரத்துல இடிக்கிறவரைக்கும் அடுக்கியிருப்போம். மூட்ட மூட்டயா இப்டி வாங்கிட்டுப் போறோம்ல, அதக்கொண்டு எறக்கினவுடனே காசக் கொடுத்திறமாட்டாரு மொதலாளி…எடையப்போட்டு அடுக்கிட்டுப் போடாம்பாரு….இல்லன்னா ஒரு ஒழுங்குக்கு வராதுங்க…கம்பனி அரவைக்கு அனுப்பறவரைக்கும் நாங்கதாங்க பொறுப்பு.."ஏன் அப்டிச் சொல்றே?"- நாகசாமிக்கு ஆர்வம் மேலிட்டது. "நாம் சம்பந்தப்படாத பலவற்றில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன" என்று தோன்றியது. எதையும் இளப்பமாகவோ, கேலியாகவோ, மதிப்புக் குறைவாகவோ நினைத்துவிடக் கூடாது. அவரவர் இடம் அவரவருக்கு மதிப்பானதுதான்.."நாங்க ஏழெட்டுப் பேர் இருக்கமுங்க. எங்க பிடிய விட்ரக் கூடாது முதல்ல. அத விட ஏரியாதாங்க ரொம்ப முக்கியம். வருமானவரி ஆபீசுக்கு இந்தப் பக்கம் இருக்கிற பகுதி பூராவும் நம்முளுதுதானுங்க…எங்களத் தவிர யாரும் நுழைஞ்சிட முடியாது. நுழைஞ்சிடக் கூடாதுங்கிறதுல ரொம்பக் கவனமா இருப்பாருங்க. நாங்களெல்லாரும் எல்லா ஏரியாவுக்கும் போயிட்டு வருவோமுங்க…நீங்க நல்லா கவனிச்சிருந்தீங்கன்னா தெரிஞ்சிருப்பீங்க…தெனந்தெனம் இந்தத் தெருவுல என்னமாதி்ரிப் பழைய பேப்பர், பழைய பேப்பர்னு கத்திட்டு பலரும் போறதப் பார்த்திருப்பீங்க…அவுக பூராவும் நம்ம ஆளுகதானுங்க… சைக்கிள் பின்னாடி சாக்கக் கட்டிக்கிட்டு ராகம் போட்டுக்கிட்டுப் போய்க்கிட்டேயிருப்பாங்க…யார் போனாலும் வந்தாலும் நீங்க எங்கிட்டத்தான் போடுவீங்கன்னு ஒண்ணு இருக்கு…அது வேற விசயம்… அதுதான் சார் பழக்கமுங்கிறது?"."அப்றம் எப்டி அமாவாச… வேறே ஆள்ட்டயா போட முடியும்? எனக்கு நீங்கதான் வரணும்…வீட்டுல கூட அவசரப்படுத்துவாங்க. இடம் ஒழிஞ்சா சரிங்கிறது அவங்க எண்ணம்… ஆனாலும் நான் மாட்டனே… நீங்க வரட்டும்னுதான் சொல்லுவேன்…".அமாவாசையின் முகத்தில் ஒரு பெருமிதமும், சந்தோஷமும் படர்வதைப் பார்த்தார் நாகசாமி. வெறும் பெருமைக்காகவோ, மெப்பனையாகவோ வந்த வார்த்தை அல்ல அது. ஆத்மார்த்தமாய் வருவது..சில மனிதர்கள் நம் மனதில் தவிர்க்க முடியாமல் பதிந்து போவார்கள். அதில் அமாவாசை முக்கியமானவர். மற்றவர்களுக்கும் வாடிக்கை வீடுகள் இருக்கும் என்பது அவனுக்குமோ அல்லது தனக்கோ தெரியாததல்ல. ஆனாலும் அந்தப் பகுதிக்கு வீடு கட்டிக் குடி வந்தது முதல் அமாவாசையிடம்தான் போடுகிறார் அவர். அவரை ஈர்த்தது அவன் கொடுக்கும் குரல். அது அவனை அடையாளப்படுத்தும். ஆள் வந்தாச்சு….ஒவ்வொரு தொழில் செய்பவரிடத்திலும் ஒவ்வொரு வகையிலான தன்மை என்பது இருக்கத்தான் செய்கிறது. அதை அவர்கள் விடாமல் கடைப்பிடிக்கிறார்கள். அதுதானே?.அந்த வீதியில் காய்கறி விற்பவரிலிருந்து பால், பேப்பர், பிளாஸ்டிக் சாமான்கள், உப்பு, கோலப் பொடி, வெங்காயம், தேங்காய், ஐஸ்கிரீம், என்று பலதையும் விற்றுக் கொண்டு வரும் ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொரு விதமான ஒலி, ராக அழைப்பினைக் கண்ணுற்றிருக்கிறார். தங்களை, தங்கள் வரவினை அடையாளப்படுத்துவதற்காக. அத்தனையும் ரசனைக்குரியவைதான். எல்லாவற்றிலும் ஏதோ ஒரு ராகத்தின், சங்கீதத்தின் இழை தொற்றிக் கொண்டு மிதப்பதாகவே தோன்றும்.."மீனு…மீனோய்….மீனு…மீனோய்…கெண்ட…கெளுத்தி…இரா…அயிர மீனோய்…."."அய்யய்ய…என்னங்க இது? இதெல்லாம் வருது இங்கே? உவ்வே…".அந்த வார்த்தைகளுக்கே வாயிலெடுத்து விடுவாள் போலிருந்தது. முன்பிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் மூன்றாம் தளத்தில் இந்த மாதிரிச் சத்தமெல்லாம் கேட்டதில்லை அவள்.."கெளசல்யா, சுப்ரஜா, ராம பூர்வா, சந்யா… ப்ரபப்ததே….உச்சிஷ்ட நரசாம்…".என்பதோடு சரி. பக்கத்து வீட்டுச் சத்தம் கூட காதில் விழ வழியில்லை. அதுதான் தனித் தனிப் புறாக் கூண்டுகள் ஆயிற்றே?."வீதின்னா எல்லாமும் வரத்தான் செய்யும்…எல்லாரும் கலந்துதானே குடியிருக்கோம்…".பட்டுப் பட்டென்று ஜன்னல் கதவுகளைச் சாத்துவாள் நாகலட்சுமி. "என்ன…என்னாச்சு?" என்பார் இவர் பதறிக்கொண்டு.."உங்களுக்கு மூக்குப்பொடி போட்டுப் போட்டு மூக்கே அடச்சுப் போயாச்சு…எந்த வாசனையும் தெரியறதில்லே…வீடம்புட்டும் ஒரே பொடி நாத்தம்…முதல்ல அத நிறுத்தப் பாருங்க…"."சரி… முயற்சி பண்றேன்… அதுக்கு ஜன்னல எதுக்கு சாத்துவானேன்?"."பக்கத்து வீட்ல என்.வி. சமைப்பாங்க போலிருக்கு… ஒரே நாத்தம் தாங்க முடியலை… ஜன்னல்கிட்டப் போய் மூக்கை வச்சுப் பாருங்க… அப்பவாவது வாடை தெரியுதா பார்ப்பம்…"."அதுக்கென்ன பண்றது? எல்லாந்தான் இருக்கும்… அப்டிப் பார்த்தா உன் பேர்லயும் என் பேர்லயும் இருக்கே நாகம்…அதையே உரிச்சு சமைச்சு சாப்பிடறவா இருக்கா தெரியுமோல்லியோ…உணவே கிடைக்கலேன்னு வச்சிக்கோ…மனுஷன மனுஷனே அடிச்சிக்கூடத் தின்னுடுவான்…நடந்த கதையெல்லாம் இருக்கு…உட்கார்ந்து கேட்கறியா…சொல்றேன்…"."போதும்… இப்டித்தான் எதுக்கோ எதையோ சொல்ல ஆரம்பிச்சிடுவீங்க…உங்கஜென்ரல் நாலெட்ஜ் எல்லாம் உங்களோடவே இருக்கட்டும்… எனக்கு வேண்டாம்…".நாகசாமிக்கு, 'நாகலெட்சுமி' என்ற பெயரே பிடித்துப்போய்த்தான் கல்யாணம் கட்ட சம்மதித்தார். "நீ பார்த்திட்டீல்ல…நீ பார்த்திட்டீல்லம்மா…முடி…கல்யாணத்த முடிங்கிறேன்…" என்று படிக்காத மேதை ரங்கன் பாணியில்தான் அவர் சம்மதம் தெரிவித்தார். அதை நினைவு கூறும் தன் தந்தையை அடிக்கடி நினைத்துக் கொள்வார் இப்போது.."அது எப்படிரா…சம்மதிச்சே? நாங்கூட ஒங்கம்மாவ அவளுக்கே தெரியாம அடிக்கடி கோயிலுக்குப் போயிப் பார்த்துத்தான் உறுதி செஞ்சேன்…எம் பிள்ள நீ இப்படியிருக்கியே?"."நா உங்களப் போலல்லப்பா…எங்க அம்மாவப் போல… அவுங்க உங்களையே சம்மதிச்சிருக்காங்களே… அதுக்கு மேலயா?"."அடி செருப்பால… திமிரெடுத்தப் பயலே…"."விடுங்க… அவன் உண்மையைத்தானே சொல்றான்… அதுக்கேன் உங்களுக்கு இம்புட்டுக் கோவம் வருது…"."கோபமில்லடி கோபமில்ல…எல்லாம் ஒரு விளையாட்டுத்தான்… அவன் என்னைக் கேலி பண்றதுனால நானென்ன குறைஞ்சா போயிடப் போறேன்?.அது ஒண்ணுமில்லே… என் கோபமெல்லாம் உன்னைக் கல்யாணம் பண்ணின அன்னியோட காணாமப் போயிடுச்சு… பையன் தோளுக்கு மேலே என்னிக்கு வளர்ந்தானோ அன்னைக்கு சுத்தமா வடிஞ்சு போச்சு…பிடிக்காதவங்க ரெண்டு பேர் சேர்ந்து பிடிச்சதா ஆக்கிக்கிறதுதானே இந்த வாழ்க்கையே…! சமரசம் உலாவும் இடம்ங்கிறது இதுதான்…."பரவால்ல…அப்படியாச்சும் ஒரு நல்லது நடந்திருக்கே…".நாகலெட்சுமியோடு பேசும்போதெல்லாம் சுவாரஸ்யம் பிய்த்துக்கொண்டு போகும் இவருக்கு. பொதுவாக ஒரு வீட்டில் உள்ள ஆம்பிளைகளுக்குத்தான் நகைச்சுவை உணர்வு உண்டுன்னு பார்த்திருக்கேன், கேள்விப்பட்டிருக்கேன்…இங்க நீயே இந்தப் போடு போடுறியே…" என்று மனைவியின் வாத்சல்யத்தை வாய்விட்டு அடிக்கடி புகழ்ந்திருக்கிறார் இவர். ஒருவருக்கொருவர் கிண்டலடித்துக் கொள்வதைப் பார்த்து பையனே விழுந்து விழுந்து சிரித்திருக்கிறான்..ரொம்பக் கேலிக்கூத்தான குடும்பம் – என்றான் ஒருநாள். அதற்கும் தன்னை மறந்து சிரித்துக் களித்தார் நாகசாமி..'எனக்கு மட்டும் நகைச்சுவையுணர்வு இல்லையென்றால் என்றோ நான் தற்கொலை செய்து கொண்டிருப்பேன்' – சொன்னார் மகாத்மாகாந்தி. அந்த உணர்வு மனசை எவ்வளவு லேசாக்கி விடுகிறது?.வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும். எவ்வளவு அழகாய்ச் சொல்லி வைத்திருக்கிறார்கள். இந்தச் சிரிப்பு என்கிற மா மருந்துதான் தன்னை இதுநாள்வரை நோய் அற்றவனாக நிறுத்தி வைத்திருக்கிறதோ என்னவோ?."அப்பா, நீங்க சிரிச்சா பழைய புராணப் படங்கள்ல வர்ற ராட்சசன் மாதிரியே இருக்குப்பா…" – ஒரு நாள் சொல்லியே விட்டான் பையன். அதுநாள் வரை சொல்ல முடியாமல் மனதுக்குள்ளேயே வைத்திருந்த அழுத்தம் வடிந்தது அவனுக்கு..கொஞ்சம் ஓவர்தான் என்று தோன்றியது இவருக்கு. ஆனாலும் சமாளித்துக் கொண்டார் உடனே.."நீ உங்க தாத்தா, கொள்ளுத்தாத்தா, எள்ளுத்தாத்தா சிரிப்பெல்லாம் பார்த்ததில்லையே…காண்பிக்கிறேன் பாரு…" என்றார். சொன்ன கையோடு உள்ளே டிரங்குப் பெட்டிக்குள் கையை விட்டு, பாட்டி கையால் பத்திரப்படுத்தி வைத்திருந்த இரண்டு மூன்று புகைப்படங்களை எடுத்துக் காண்பித்தார்..காண்பிக்கும் முன் ஒரு கண்டிஷன் போட்டார். போட்டோவைப் பார்த்துப் பயந்து புத்தி பேதலித்தால் தான் பொறுப்பில்லை என்று.."என்னப்பா இது! அனிமல்ஸ் மாதிரியே இருக்காங்க எல்லாரும்…" என்றான் எடுத்த எடுப்பில்.."எவ்வளவு பெரிய மூக்கு, எவ்வளவு பெரிய மண்டை, எவ்வளவு பெரிய காது, எவ்வளவு பெரிய கண்ணு, மணிபர்ஸ் வாய்…அதுக்குள்ளாற அடங்காத பெரிய பெரிய…அடேங்கப்பா…என்ன இது பல்லெல்லாம் இம்புட்டுப் பெரிசா இருக்கு? யப்பாடீ…!!"."வாய் விட்டுச் சிரிக்கிறார் பாரு, அதான் உங்க தாத்தாவாக்கும்…என் கல்யாணம் முடிஞ்சு ஹாய்யா உட்கார்ந்து தாம்பூலம் தரிக்கிற நேரம் அது… வெத்தலைச் செல்லத்துல எம்புட்டு வெத்தல இருக்கு பார்த்தியா? அதுகூட கனக் கரெக்டா விழுந்திருக்கு பாரு…"."ஆடு கொழை தின்ன மாதிரி வச்சுத் திணிப்பாங்க போலிருக்கு…"."கல்யாணத்துக்கு முன்னாடி உங்க அப்பா சிரிச்சிருந்தார்னு வச்சிக்கோ… நிச்சயம் நானும் இங்க இருந்திருக்க மாட்டேன்… நீயும் வந்திருக்க மாட்டே…என்ன பண்றது? எல்லாம் தலவிதி…லிபி…நெத்தில அழுத்தமாத்தான் எழுதியிருக்கு…இப்படிக் குப்பை கொட்டணும்னு…".மூவரும் அன்று வாய்விட்டுக் கைகொட்டிச் சிரித்தனர். எப்பொழுதும் அப்படிச் சிரித்துக்கொண்டேயிருந்தால் போதுமா? ஆக வேண்டிய காரியங்கள்? எப்போதோ வெளிப்படும் நகைச்சுவை மொத்த மனத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டி விடுமா? எல்லாரும் வெள்ளந்தியான ஆட்கள் என்று சொல்லிவிடத்தான் முடியுமா? காரியார்த்தமாய் இயங்கும்போது எவ்வளவு மாறிப் போகிறோம்?."இப்டீ சேர்த்து வச்சிட்டேயிருந்தா என்னைக்குத்தான் இந்தக் குப்பைகளையெல்லாம் ஒழிக்கிறது? எவ்வளவு தூசி அடையறது? இதையெல்லாம் காலி பண்ணினா வீடு ஒழியும்… " – ரொம்பவும் சங்கடப்பட்டு நச்சு நச்சென்று தும்மித் தீர்த்தாள் நாகலெட்சுமி..அவளின் கோரிக்கையை நிறைவேற்றும் முகமாகத்தான் காரியம் ஆகிக் கொண்டிருக்கிறது இப்போது!."சரிங்கையா… சொல்லுங்க… நிறுக்கட்டுமா… இல்லே இப்டியே ஒரு ரேட் போட்டு எடுத்துக்கவா…?" – தராசைக் கையிலெடுத்தான் அமாவாசை.."நிறுக்கறதுக்கு என்ன குவிஞ்சா கெடக்கு? என்ன ஒரு ஆரேழு மாசம்தானே ஆகும்?"."இல்லீங்கய்யா… மூணு மாசம் கூட ஆகலைன்னு நினைக்கிறேன்… பேப்பர் அளவைப் பார்த்தா எனக்குத் தெரியும்ல…அஞ்சு கிலோ கூடத் தேறாதுங்க…"."சரி எடுத்துக்குங்க…" – சொல்லியவாறே அடுப்படியில் ஒரு பையில் சேர்த்து வைத்திருந்த பால் பைகளையும் கொண்டு வந்து போட்டார்..இப்படி அவன் வரும்போது ஒழித்தால்தான். வேறு என்னவெல்லாம் கழிக்க வேண்டும் என்று நாகுவுக்குத்தான் தெரியும்.."கொஞ்சம் இரு வந்திர்றேன்…" என்று விட்டு மொட்டை மாடியைப் பார்த்து ஓடினார். சற்று மிரண்டு பார்க்க ஆரம்பித்தான் அமாவாசை.."இருங்க…இருங்க…வேட்டை…ஸ்லாப்பை மூடிடாதீங்க…நா பார்க்கணும்…".அங்கே தண்ணீர் தொட்டியைக் கழுவிக் கொண்டிருந்த வேட்டையனைத் தடுத்தார் நாகசாமி.."நீங்க பார்க்காம மூட மாட்டேங்கய்யா…"."மதியம் மூணு மணி வரைக்கும் தொட்டி திறந்தே இருக்கட்டும்…சூரிய ஒளில அப்பதான் அந்தப் பாசி, மக்கு வாடையெல்லாம் போகும்…சுண்டக் காயட்டும்…பிறகு நான் மூடிக்கிறேன்…."."அப்போ இப்பத் தண்ணி ஏத்தலீங்களா…?"."ஊஉறீம்… நல்லாக் காய்ஞ்ச பின்னாடிதான்…"."நீ வேணா ஏத்திக்கோ… காசு தர்றேன்…" வாய் நுனி வரை வந்ததை அடக்கிக் கொண்டார்..இந்த அதீத நகைச்சுவையுணர்வு பல சமயங்களில் அதிகப்பிரசங்கித்தனமாகப் போய் விடுகிறது. தண்ணிப் போடும் பழக்கம் அவனுக்கு இருக்கும் என்றாலும் அதைத் தான் சொல்வது எப்படிச் சரியாகும்? தன் வீட்டுக்கு வேலைக்கு வரும்போது அப்படி வந்து நின்றால் 'இப்டியெல்லாம் வரக்கூடாது' என்று கண்டிக்கலாம். உடம்பை ஏன் கெடுத்துக்கிறே? என்று அட்வைஸ் பண்ணலாம். ஆனால் வேட்டையன் அப்படியில்லையே? தன்னிடம் எத்தனை மதிப்பு அவனுக்கு?."அய்யா, நீங்களெல்லாம் இருந்தபோது கிடைச்ச மரியாதையெல்லாம் இப்ப சுத்தமா இல்லைங்க ஆபீசுல…ஆளாளுக்கு வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுறாங்கய்யா… எல்லாமே தலைகீழா மாறிப் போச்சு…"."ஏன் அப்டிச் சொல்றே?" – அக்கறையோடு கேட்டார்.."என்னத்தங்கய்யா சொல்றது? டூட்டி நேரத்துல ஆபீசரே தண்ணியப் போட்டுட்டு வந்து உட்கார்ந்தா வெளங்குமாங்கய்யா…? பொம்பளைங்கல்லாம் ரொம்பப் பயப்படுறாங்கய்யா…அவர் ரூமுக்குள்ள போகமாட்டேங்கிறாங்க…நீங்க இருக்கைல எல்லாத்தையும் வெளக்கிச் சொல்லி நீங்களே அம்புட்டுக் கையெழுத்தையும் வாங்கிப்புடுவீங்க…இப்பல்லாம் அதில்ல…கொண்டு வையுங்கிறதோட சரி. கையெழுத்தாகி வந்த அன்னிக்குத்தான் நிச்சயம்… என்னோட ஜி.பி.எஃப். போட்டு இருபது நாளாச்சுங்கய்யா…இன்னும் காசு கைக்கு வந்தபாடில்ல…என் மவளுக்கு ஒரு மாப்ள பார்த்திருக்கேன்…பரிசம் போட்டுடலாம்னு நினைச்சா பைசா கைக்கு வரமாட்டேங்குது…நாள் குறிக்க முடிலங்கய்யா…அதுக்குத்தான் சொன்னேன்…நீங்க வெளியேறைல என்னையும் தயவுசெஞ்சு வெளியேத்திடுங்கன்னு…நீங்க செய்யாமப் போயிட்டீங்க…".வேட்டையனுக்கு ஒரு மாறுதல் வாங்கிக் கொடுக்க முடியவில்லையே என்பதில் நாகசாமிக்கும் வருத்தம் உண்டு. 'வெளியூர் போட்டால், ஆள் இல்லாமல் அவன் குடும்பம் பரிதவிக்குமே' என்ற எண்ணம்தான் இவருக்கு. 'தனக்கு அவ்வப்போது வந்து வீட்டு வேலை செய்வது தடைபடுமே என்ற எண்ணமிருக்குமோ' என்று அவனாகவே நினைத்துக்கொண்டு அதையும் வாய்விட்டுச் சொல்லிவிட்டான்.."லீவுல வந்து செய்து கொடுக்கிறேன்யா… அதப்பத்தியெல்லாம் நீங்க ஒண்ணும் நினைக்க வேண்டாம்… அதுக்கு நா பொறுப்பு…" என்று வேறு சொல்லிக் கொண்டான். வாழ்க்கையில் வறுமையையும் கஷ்டத்தையும் உணர்ந்தவனுக்குத்தானே மற்றவர்கள் கஷ்டத்தையும், நிலைமையையும் உள் வாங்க முடியும்?."சரி, வாங்க… கீழே போகலாம்…" என்று சொல்லிவிட்டு இறங்கினார் இவர்..சுற்றிலும் கூட்டி சுத்தம் செய்து செடி கொடிகளை முறைப்படுத்தி தண்ணீர் இறங்கப் பாத்தி கட்டி, சலிக்காமல் ஒவ்வொன்றுக்கும் ரெண்டு வாளித் தண்ணீராவது ஊற்றி அழகு பார்த்திருந்தார் வேட்டை. அப்பப்பா! வேட்டையன் ஒருமுறை வந்து போனால் வீடு எவ்வளவு சுத்தமாகி, திருத்தமாகி விடுகிறது? எல்லாவற்றிற்கும் பரந்த மனசு வேண்டும்..இந்தாங்க…இதைக் கொண்டு போய்டுங்க…என்று டேப் ரிக்கார்டரை எடுத்துக் கொடுத்திருக்கிறார்…நன்றாய் ஓடும் டேபிள் ஃபேன்…தலை நிற்கவில்லை என்று சலித்து, அவனுக்காவது பயன்படட்டும் என்று எடுத்துப் போகச் சொல்லியிருக்கிறார். பிளாஸ்டிக் வாளி, பெயின்ட் வாளி என்று எது கேட்டாலும் இந்தா பிடி…தான்.!…எதைக் கொண்டு வந்தோம்…கொண்டு செல்ல…?.கொல்லைப்புறம் சென்று வாளியில் கிடந்த தண்ணீரில் கை, கால் கழுவ ஆரம்பித்தார் வேட்டையன். வாசலில் அமாவாசையை அனாவசியமாய் காக்க வைத்து விட்டோமே என்கிற ஆதங்கத்தில் – "நேரமாயிடுச்சா… நீங்க பல எடத்துக்குப் போறவரு… உங்களைக் காக்க வச்சிட்டனே…" என்றார்.."இருக்கட்டுங்கய்யா…" என்று சொல்லியவாறே தராசில் நிறுக்க ஆரம்பித்தான் அமாவாசை. அவர் முன் அல்லது மாமியின் முன்தான் எடை போட வேண்டும் என்கிற நல்லெண்ணம்.."எதுக்கு? நாந்தான் வேணாம்னல்ல…!" தூக்கிப் போடுங்க சாக்குல…" என்றார் இவர்..அமாவாசையின் முகத்தில் மெல்லிய புன்னகை. இதற்குள் நாகு எதை எதையோ கொண்டுவந்து போட்டிருந்தாள் அங்கே..காலி அட்டைப் பெட்டிகள், பாட்டில்கள், டப்பாக்கள், உடைந்த பைப்கள், இரும்புகள், பழைய செருப்புகள்.. பழைய துணிகள்….என்று என்னென்னவோ இருந்தன.."இதுக்கு, இந்தப் பால் பாக்கெட்டுகளுக்கு, எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு ரேட் போட்டுக்கிறேன்யா…மொத்தமா ஆறு கிலோ வருது. வேறே ஏதாச்சும் இருக்குங்களா…?"."அவ்வளவுதான் அமாவாச… ஒரு நாளைக்கு பரண் மேல இருக்கிறதெல்லாம் ஒழிக்கணும்… என்னால ஒத்தையா முடியாது…எனக்கு தூசி, ஒட்டடை ஆகாது…"."உங்களுக்கு என்னைக்குத் தோதுப்படும்னு சொல்லுங்கய்யா…அன்னைக்கு சரி பண்ணிடுவோம்…" – சொல்லியவாறே அவன் நீட்டிய காசைத் தயக்கத்தோடேயே வாங்கக் கை நீட்டினார் நாகசாமி..இந்தக் காச வச்சிட்டு என்ன செய்ய? இதெல்லாம் கணக்குப் பண்ணிக் கொடுக்கணுமா? நீங்க வந்து எடுத்துக்கிட்டதே பெரிய விஷயம்…ரெகுலரா வர்றீங்க பாருங்க…அதான் வேணும்…காசு பெரிசில்லை…இடம் ஒழிஞ்சிது…வீடு சுத்தமாச்சு….அதுக்கு மேலே என்ன?.இந்தாங்க பிடிங்க… – இருபது ரூபாயை எடுத்துத் திரும்பக் கொடுத்தார் நாகசாமி. டீ சாப்பிடுங்க என்றார்.."இருக்கட்டுங்கய்யா…! அம்மாதான் காபி கொடுத்தாகள்ள…? என்றவாறே மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டான் அமாவாசை..வெளியே நின்ற சைக்கிளில் சாக்கு மூட்டையை வைத்துக் கட்டும் சத்தம். அதைத் தொடர்ந்து "போயிட்டு வர்றேங்கய்யா…"."இந்தா பிடி…" கையிலிருந்த மீதிக் காசை நாகுவிடம் நீட்டினார் நாகசாமி.."என்னாச்சு…இவ்வளவுதானா? ப்ளாஸ்டிக் சாமான்லாம் போட்டது? தராசுல நிறுத்தானா இல்லையா? கிலோவுக்கு எவ்வளவுன்னு கேட்டீங்களா? எதையும் கேட்கமாட்டீங்க நீங்க…?"."இதென்ன கேள்வி பீத்தத்தனமா? பிச்சையெடுக்குமாம் பெருமாளு… அதப் பிடுங்குமாம் அனுமாருன்னானாம்?… இதுக்கு மேல எம்புட்டு வரும்… இது ஒரு காசு…இதையும் அவன்ட்டக் கை நீட்டி வாங்கித்தான் ஆகணுமா?… எத்தனையோ வீடுகள்ல பழைய பேன்ட், சட்டை…புடைவைன்னெல்லாம் அப்டி…அப்டியே தூக்கிக் கொடுத்திடுறாங்க… எடம் காலியானாப் போதும்னு…நாமதான் கை நீட்டிக் காசு வாங்கிட்டிருக்கோம்… மனசுக்கு அசிங்கமாயிருக்கு எனக்கு…."."எல்லாரும் அப்டி இருப்பாங்களா…ஒருத்தர் அப்டீன்னா, ஒருத்தர் இப்டித்தான்… அவனா கொடுக்கிறதத்தானே வாங்கிக்கிறோம்…? கணக்குப் பண்ணி ஒண்ணும் கேட்கிறதில்லையே…? வழக்கத்துல இருக்கிறதைத்தானே செய்றோம்? என்னமோ தப்பு மாதிரிச் சொல்றீங்க?."இன்னும் அது வேறே வேணுமா? அப்புறம் இந்தப் பக்கம் தல வச்சுக் கூடப் படுக்கமாட்டானாக்கும்… சும்மாத் தூக்கிக் கொடுத்தாலும் நாம ஒண்ணும் குறைஞ்சு போகப் போறதில்லை…" – வாசலில் திரும்ப கேட் திறக்கும் சத்தம்.."அய்யா… நா வர்றேனுங்க…" வேட்டையனின் விடை பெறும் குரல்.."கிளம்பியாச்சா…இதோ வந்துட்டேன்…" என்றவாறே பர்சை எடுத்துக்கொண்டு ஓடினார் நாகசாமி. அதிலிருந்து உருவி ஒரு நூறு ரூபாயை நீட்டினார்.."வேண்டாங்கய்யா… இருக்கட்டும்… அம்மா தோசை சுட்டுக் கொடுத்தாங்க… வயிறு நிறையச் சாப்டுட்டேன் அதுவே போதும்…" – சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவனை மீறி ஒரு பெரிய ஏப்பம் வந்தது வேட்டையனுக்கு. சிரித்துக் கொண்டே, அடுத்த நிமிடம் சைக்கிளை எடுத்துக் கொண்டு பறந்து விட்டார்..என்ன ஒரு மன நியாயம்? நாகசாமி அப்படியே திண்ணையில் நின்றிருந்தார். கையிலிருந்த பணம் கனத்தது. அமாவாசை கொடுத்ததை இவ்வளவுதானா என்கிறாள். வேட்டைக்கு ஏன் காசு கொடுக்கவில்லை என்று கேட்க வேண்டாமா? அதுதானே நியாயம்? செய்த வேலைக்குக் கூலி அந்த டிபனா? இதென்ன மனசு?- நினைத்தவாறே பொடியை சிட்டிகை எடுத்து ஒரு இழுப்பு இழுத்தார் நாகசாமி. கொஞ்சம் கோபத்தோடு இழுத்ததில் மூளையில் போய்த் தாக்கியது அது..இந்தக் காலத்திலும் இப்டிப் பொடி போடுற ஆசாமியா இருக்கீங்களே? அசிங்கம்…அசிங்கம்…. இந்த நாட்டுல இனிமே யாரும் மூக்குப் பொடி போடக் கூடாதுன்னு ஒரு சட்டம் கொண்டு வரணும்… – நாகலட்சுமியின் அந்த ஓங்கி ஒலித்த குரல் அவளது உள்ளக் கிளர்ச்சியை வெளிப்படுத்துவதாய்த் தோன்றியது..காசு மிச்சமானதில் அத்தனை மகிழ்ச்சியோ…? வயிற்றுக்குப் போட்டதுதான் கூலி என்று நினைத்துவிட்டாள் போலும்…!.துல்லியமாய் எடைப் போட்டு, அதற்கெனக் கணக்கிட்ட காசை மறைக்காமல் அமாவாசை கௌரவமாகக் கொடுத்துவிட்டுப் போகிறார். அந்தப் பழைய பேப்பர் கடையில் எல்லாமும் அடுக்கி, கட்டி, திருத்தமாய் உயரே அடுக்கி வைக்கப்பட்டிருப்பதின் காட்சி ஞாபகம் வந்தது. அமாவாசையின் தொழில் நயம் அதன் பிரதிபலிப்போ?.வேட்டையன் 'பணம் வேண்டாம்' என்று சர்வ சாதாரணமாய்ச் சொல்லிச் செல்கிறார்..! வயிறு நிரம்பியதில் அவருக்கு மனசும் நிரம்பி விட்டது. இல்லாதவர்களுக்குத்தான் இந்த மனசு பரந்து விரிந்து கிடக்கும் போலும்..! இருப்பவர்களின் மனசு எல்லாவற்றிற்கும் கணக்குப் பார்க்கிறது. சுருங்கிப் போய் வேறொன்றை நினைக்கிறது. உள்ளம் நினைப்பதை உதடுகள் உச்சரிப்பதில்லை, அல்லது அங்கீகரிப்பதில்லை. தடை போட்டு கவனமாய் வெளிப்படுத்துகிறது. 'எப்போது, எதற்கு, அவரவர் தலை ஓட்டுக்குள் ஒடுங்கும்' என்று நிர்ணயிக்க முடிவதில்லை. "மனிதர்களே அலாதியானவர்கள்தான். அதிலும் குறிப்பாகப் பெண்கள்…" என்று கொள்ளலாமா?
சிறுகதை.– உஷா தீபன்.ஓவியம் : தமிழ்.எதிர்த்தாற்போல் நாற்காலியைப் போட்டுக்கொண்டு அதையே பார்த்துக்கொண்டிருந்தார் நாகசாமி. கலைந்து கிடந்த செய்தித் தினசரிகளைப் பிரித்து அடுக்கிக்கொண்டிருந்தான் அவன். அடுக்க அடுக்க அந்த வரிசை தந்த அழகு இவருக்குப் பிடித்திருந்தது..எதையுமே ஒழுங்காகச் செய்தால் அது எத்தனை அழகு பெறுகிறது? ஒரு விஷயம் சீராக இருப்பதில்தான் என்ன ஒரு கம்பீரம்? அதைப் பழைய பேப்பர் கடை என்று எவராலும் சொல்ல முடியுமா? அப்படி ஒரு சுத்தம்…."உங்க கடைல பார்த்திருக்கேன் அமாவாச…சைடு ரேக்குல பேப்பர்களக் கட்டிக் கட்டி நீங்க அடுக்கியிருக்கிற ஒழுங்கிருக்கே… அந்த அழகே தனி. கோடு போட்டமாதிரி ஓரமெல்லாம் கரெக்டா நிக்க, பரண்ல ஏத்தியிருக்கீங்களே… அத எவனும் கவனிக்காம இருக்க முடியாது!படுசுத்தமால்ல இருக்கு உங்க கடை வேலை…?" வேஸ்ட் பேப்பர் கடை மாதிரியா இருக்கு?."சுத்தம்ங்கிறதவிட அப்டி ஒழுங்கா அடுக்கி வச்சாத்தான் அந்தப் பத்துக்குப் பத்து ரூம்ல நிறைய வைக்க முடியுமுங்க…கடைக்குள்ளார வந்து பார்த்தீங்கன்னா தெரியும். மேலே உத்திரத்துல இடிக்கிறவரைக்கும் அடுக்கியிருப்போம். மூட்ட மூட்டயா இப்டி வாங்கிட்டுப் போறோம்ல, அதக்கொண்டு எறக்கினவுடனே காசக் கொடுத்திறமாட்டாரு மொதலாளி…எடையப்போட்டு அடுக்கிட்டுப் போடாம்பாரு….இல்லன்னா ஒரு ஒழுங்குக்கு வராதுங்க…கம்பனி அரவைக்கு அனுப்பறவரைக்கும் நாங்கதாங்க பொறுப்பு.."ஏன் அப்டிச் சொல்றே?"- நாகசாமிக்கு ஆர்வம் மேலிட்டது. "நாம் சம்பந்தப்படாத பலவற்றில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன" என்று தோன்றியது. எதையும் இளப்பமாகவோ, கேலியாகவோ, மதிப்புக் குறைவாகவோ நினைத்துவிடக் கூடாது. அவரவர் இடம் அவரவருக்கு மதிப்பானதுதான்.."நாங்க ஏழெட்டுப் பேர் இருக்கமுங்க. எங்க பிடிய விட்ரக் கூடாது முதல்ல. அத விட ஏரியாதாங்க ரொம்ப முக்கியம். வருமானவரி ஆபீசுக்கு இந்தப் பக்கம் இருக்கிற பகுதி பூராவும் நம்முளுதுதானுங்க…எங்களத் தவிர யாரும் நுழைஞ்சிட முடியாது. நுழைஞ்சிடக் கூடாதுங்கிறதுல ரொம்பக் கவனமா இருப்பாருங்க. நாங்களெல்லாரும் எல்லா ஏரியாவுக்கும் போயிட்டு வருவோமுங்க…நீங்க நல்லா கவனிச்சிருந்தீங்கன்னா தெரிஞ்சிருப்பீங்க…தெனந்தெனம் இந்தத் தெருவுல என்னமாதி்ரிப் பழைய பேப்பர், பழைய பேப்பர்னு கத்திட்டு பலரும் போறதப் பார்த்திருப்பீங்க…அவுக பூராவும் நம்ம ஆளுகதானுங்க… சைக்கிள் பின்னாடி சாக்கக் கட்டிக்கிட்டு ராகம் போட்டுக்கிட்டுப் போய்க்கிட்டேயிருப்பாங்க…யார் போனாலும் வந்தாலும் நீங்க எங்கிட்டத்தான் போடுவீங்கன்னு ஒண்ணு இருக்கு…அது வேற விசயம்… அதுதான் சார் பழக்கமுங்கிறது?"."அப்றம் எப்டி அமாவாச… வேறே ஆள்ட்டயா போட முடியும்? எனக்கு நீங்கதான் வரணும்…வீட்டுல கூட அவசரப்படுத்துவாங்க. இடம் ஒழிஞ்சா சரிங்கிறது அவங்க எண்ணம்… ஆனாலும் நான் மாட்டனே… நீங்க வரட்டும்னுதான் சொல்லுவேன்…".அமாவாசையின் முகத்தில் ஒரு பெருமிதமும், சந்தோஷமும் படர்வதைப் பார்த்தார் நாகசாமி. வெறும் பெருமைக்காகவோ, மெப்பனையாகவோ வந்த வார்த்தை அல்ல அது. ஆத்மார்த்தமாய் வருவது..சில மனிதர்கள் நம் மனதில் தவிர்க்க முடியாமல் பதிந்து போவார்கள். அதில் அமாவாசை முக்கியமானவர். மற்றவர்களுக்கும் வாடிக்கை வீடுகள் இருக்கும் என்பது அவனுக்குமோ அல்லது தனக்கோ தெரியாததல்ல. ஆனாலும் அந்தப் பகுதிக்கு வீடு கட்டிக் குடி வந்தது முதல் அமாவாசையிடம்தான் போடுகிறார் அவர். அவரை ஈர்த்தது அவன் கொடுக்கும் குரல். அது அவனை அடையாளப்படுத்தும். ஆள் வந்தாச்சு….ஒவ்வொரு தொழில் செய்பவரிடத்திலும் ஒவ்வொரு வகையிலான தன்மை என்பது இருக்கத்தான் செய்கிறது. அதை அவர்கள் விடாமல் கடைப்பிடிக்கிறார்கள். அதுதானே?.அந்த வீதியில் காய்கறி விற்பவரிலிருந்து பால், பேப்பர், பிளாஸ்டிக் சாமான்கள், உப்பு, கோலப் பொடி, வெங்காயம், தேங்காய், ஐஸ்கிரீம், என்று பலதையும் விற்றுக் கொண்டு வரும் ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொரு விதமான ஒலி, ராக அழைப்பினைக் கண்ணுற்றிருக்கிறார். தங்களை, தங்கள் வரவினை அடையாளப்படுத்துவதற்காக. அத்தனையும் ரசனைக்குரியவைதான். எல்லாவற்றிலும் ஏதோ ஒரு ராகத்தின், சங்கீதத்தின் இழை தொற்றிக் கொண்டு மிதப்பதாகவே தோன்றும்.."மீனு…மீனோய்….மீனு…மீனோய்…கெண்ட…கெளுத்தி…இரா…அயிர மீனோய்…."."அய்யய்ய…என்னங்க இது? இதெல்லாம் வருது இங்கே? உவ்வே…".அந்த வார்த்தைகளுக்கே வாயிலெடுத்து விடுவாள் போலிருந்தது. முன்பிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் மூன்றாம் தளத்தில் இந்த மாதிரிச் சத்தமெல்லாம் கேட்டதில்லை அவள்.."கெளசல்யா, சுப்ரஜா, ராம பூர்வா, சந்யா… ப்ரபப்ததே….உச்சிஷ்ட நரசாம்…".என்பதோடு சரி. பக்கத்து வீட்டுச் சத்தம் கூட காதில் விழ வழியில்லை. அதுதான் தனித் தனிப் புறாக் கூண்டுகள் ஆயிற்றே?."வீதின்னா எல்லாமும் வரத்தான் செய்யும்…எல்லாரும் கலந்துதானே குடியிருக்கோம்…".பட்டுப் பட்டென்று ஜன்னல் கதவுகளைச் சாத்துவாள் நாகலட்சுமி. "என்ன…என்னாச்சு?" என்பார் இவர் பதறிக்கொண்டு.."உங்களுக்கு மூக்குப்பொடி போட்டுப் போட்டு மூக்கே அடச்சுப் போயாச்சு…எந்த வாசனையும் தெரியறதில்லே…வீடம்புட்டும் ஒரே பொடி நாத்தம்…முதல்ல அத நிறுத்தப் பாருங்க…"."சரி… முயற்சி பண்றேன்… அதுக்கு ஜன்னல எதுக்கு சாத்துவானேன்?"."பக்கத்து வீட்ல என்.வி. சமைப்பாங்க போலிருக்கு… ஒரே நாத்தம் தாங்க முடியலை… ஜன்னல்கிட்டப் போய் மூக்கை வச்சுப் பாருங்க… அப்பவாவது வாடை தெரியுதா பார்ப்பம்…"."அதுக்கென்ன பண்றது? எல்லாந்தான் இருக்கும்… அப்டிப் பார்த்தா உன் பேர்லயும் என் பேர்லயும் இருக்கே நாகம்…அதையே உரிச்சு சமைச்சு சாப்பிடறவா இருக்கா தெரியுமோல்லியோ…உணவே கிடைக்கலேன்னு வச்சிக்கோ…மனுஷன மனுஷனே அடிச்சிக்கூடத் தின்னுடுவான்…நடந்த கதையெல்லாம் இருக்கு…உட்கார்ந்து கேட்கறியா…சொல்றேன்…"."போதும்… இப்டித்தான் எதுக்கோ எதையோ சொல்ல ஆரம்பிச்சிடுவீங்க…உங்கஜென்ரல் நாலெட்ஜ் எல்லாம் உங்களோடவே இருக்கட்டும்… எனக்கு வேண்டாம்…".நாகசாமிக்கு, 'நாகலெட்சுமி' என்ற பெயரே பிடித்துப்போய்த்தான் கல்யாணம் கட்ட சம்மதித்தார். "நீ பார்த்திட்டீல்ல…நீ பார்த்திட்டீல்லம்மா…முடி…கல்யாணத்த முடிங்கிறேன்…" என்று படிக்காத மேதை ரங்கன் பாணியில்தான் அவர் சம்மதம் தெரிவித்தார். அதை நினைவு கூறும் தன் தந்தையை அடிக்கடி நினைத்துக் கொள்வார் இப்போது.."அது எப்படிரா…சம்மதிச்சே? நாங்கூட ஒங்கம்மாவ அவளுக்கே தெரியாம அடிக்கடி கோயிலுக்குப் போயிப் பார்த்துத்தான் உறுதி செஞ்சேன்…எம் பிள்ள நீ இப்படியிருக்கியே?"."நா உங்களப் போலல்லப்பா…எங்க அம்மாவப் போல… அவுங்க உங்களையே சம்மதிச்சிருக்காங்களே… அதுக்கு மேலயா?"."அடி செருப்பால… திமிரெடுத்தப் பயலே…"."விடுங்க… அவன் உண்மையைத்தானே சொல்றான்… அதுக்கேன் உங்களுக்கு இம்புட்டுக் கோவம் வருது…"."கோபமில்லடி கோபமில்ல…எல்லாம் ஒரு விளையாட்டுத்தான்… அவன் என்னைக் கேலி பண்றதுனால நானென்ன குறைஞ்சா போயிடப் போறேன்?.அது ஒண்ணுமில்லே… என் கோபமெல்லாம் உன்னைக் கல்யாணம் பண்ணின அன்னியோட காணாமப் போயிடுச்சு… பையன் தோளுக்கு மேலே என்னிக்கு வளர்ந்தானோ அன்னைக்கு சுத்தமா வடிஞ்சு போச்சு…பிடிக்காதவங்க ரெண்டு பேர் சேர்ந்து பிடிச்சதா ஆக்கிக்கிறதுதானே இந்த வாழ்க்கையே…! சமரசம் உலாவும் இடம்ங்கிறது இதுதான்…."பரவால்ல…அப்படியாச்சும் ஒரு நல்லது நடந்திருக்கே…".நாகலெட்சுமியோடு பேசும்போதெல்லாம் சுவாரஸ்யம் பிய்த்துக்கொண்டு போகும் இவருக்கு. பொதுவாக ஒரு வீட்டில் உள்ள ஆம்பிளைகளுக்குத்தான் நகைச்சுவை உணர்வு உண்டுன்னு பார்த்திருக்கேன், கேள்விப்பட்டிருக்கேன்…இங்க நீயே இந்தப் போடு போடுறியே…" என்று மனைவியின் வாத்சல்யத்தை வாய்விட்டு அடிக்கடி புகழ்ந்திருக்கிறார் இவர். ஒருவருக்கொருவர் கிண்டலடித்துக் கொள்வதைப் பார்த்து பையனே விழுந்து விழுந்து சிரித்திருக்கிறான்..ரொம்பக் கேலிக்கூத்தான குடும்பம் – என்றான் ஒருநாள். அதற்கும் தன்னை மறந்து சிரித்துக் களித்தார் நாகசாமி..'எனக்கு மட்டும் நகைச்சுவையுணர்வு இல்லையென்றால் என்றோ நான் தற்கொலை செய்து கொண்டிருப்பேன்' – சொன்னார் மகாத்மாகாந்தி. அந்த உணர்வு மனசை எவ்வளவு லேசாக்கி விடுகிறது?.வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும். எவ்வளவு அழகாய்ச் சொல்லி வைத்திருக்கிறார்கள். இந்தச் சிரிப்பு என்கிற மா மருந்துதான் தன்னை இதுநாள்வரை நோய் அற்றவனாக நிறுத்தி வைத்திருக்கிறதோ என்னவோ?."அப்பா, நீங்க சிரிச்சா பழைய புராணப் படங்கள்ல வர்ற ராட்சசன் மாதிரியே இருக்குப்பா…" – ஒரு நாள் சொல்லியே விட்டான் பையன். அதுநாள் வரை சொல்ல முடியாமல் மனதுக்குள்ளேயே வைத்திருந்த அழுத்தம் வடிந்தது அவனுக்கு..கொஞ்சம் ஓவர்தான் என்று தோன்றியது இவருக்கு. ஆனாலும் சமாளித்துக் கொண்டார் உடனே.."நீ உங்க தாத்தா, கொள்ளுத்தாத்தா, எள்ளுத்தாத்தா சிரிப்பெல்லாம் பார்த்ததில்லையே…காண்பிக்கிறேன் பாரு…" என்றார். சொன்ன கையோடு உள்ளே டிரங்குப் பெட்டிக்குள் கையை விட்டு, பாட்டி கையால் பத்திரப்படுத்தி வைத்திருந்த இரண்டு மூன்று புகைப்படங்களை எடுத்துக் காண்பித்தார்..காண்பிக்கும் முன் ஒரு கண்டிஷன் போட்டார். போட்டோவைப் பார்த்துப் பயந்து புத்தி பேதலித்தால் தான் பொறுப்பில்லை என்று.."என்னப்பா இது! அனிமல்ஸ் மாதிரியே இருக்காங்க எல்லாரும்…" என்றான் எடுத்த எடுப்பில்.."எவ்வளவு பெரிய மூக்கு, எவ்வளவு பெரிய மண்டை, எவ்வளவு பெரிய காது, எவ்வளவு பெரிய கண்ணு, மணிபர்ஸ் வாய்…அதுக்குள்ளாற அடங்காத பெரிய பெரிய…அடேங்கப்பா…என்ன இது பல்லெல்லாம் இம்புட்டுப் பெரிசா இருக்கு? யப்பாடீ…!!"."வாய் விட்டுச் சிரிக்கிறார் பாரு, அதான் உங்க தாத்தாவாக்கும்…என் கல்யாணம் முடிஞ்சு ஹாய்யா உட்கார்ந்து தாம்பூலம் தரிக்கிற நேரம் அது… வெத்தலைச் செல்லத்துல எம்புட்டு வெத்தல இருக்கு பார்த்தியா? அதுகூட கனக் கரெக்டா விழுந்திருக்கு பாரு…"."ஆடு கொழை தின்ன மாதிரி வச்சுத் திணிப்பாங்க போலிருக்கு…"."கல்யாணத்துக்கு முன்னாடி உங்க அப்பா சிரிச்சிருந்தார்னு வச்சிக்கோ… நிச்சயம் நானும் இங்க இருந்திருக்க மாட்டேன்… நீயும் வந்திருக்க மாட்டே…என்ன பண்றது? எல்லாம் தலவிதி…லிபி…நெத்தில அழுத்தமாத்தான் எழுதியிருக்கு…இப்படிக் குப்பை கொட்டணும்னு…".மூவரும் அன்று வாய்விட்டுக் கைகொட்டிச் சிரித்தனர். எப்பொழுதும் அப்படிச் சிரித்துக்கொண்டேயிருந்தால் போதுமா? ஆக வேண்டிய காரியங்கள்? எப்போதோ வெளிப்படும் நகைச்சுவை மொத்த மனத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டி விடுமா? எல்லாரும் வெள்ளந்தியான ஆட்கள் என்று சொல்லிவிடத்தான் முடியுமா? காரியார்த்தமாய் இயங்கும்போது எவ்வளவு மாறிப் போகிறோம்?."இப்டீ சேர்த்து வச்சிட்டேயிருந்தா என்னைக்குத்தான் இந்தக் குப்பைகளையெல்லாம் ஒழிக்கிறது? எவ்வளவு தூசி அடையறது? இதையெல்லாம் காலி பண்ணினா வீடு ஒழியும்… " – ரொம்பவும் சங்கடப்பட்டு நச்சு நச்சென்று தும்மித் தீர்த்தாள் நாகலெட்சுமி..அவளின் கோரிக்கையை நிறைவேற்றும் முகமாகத்தான் காரியம் ஆகிக் கொண்டிருக்கிறது இப்போது!."சரிங்கையா… சொல்லுங்க… நிறுக்கட்டுமா… இல்லே இப்டியே ஒரு ரேட் போட்டு எடுத்துக்கவா…?" – தராசைக் கையிலெடுத்தான் அமாவாசை.."நிறுக்கறதுக்கு என்ன குவிஞ்சா கெடக்கு? என்ன ஒரு ஆரேழு மாசம்தானே ஆகும்?"."இல்லீங்கய்யா… மூணு மாசம் கூட ஆகலைன்னு நினைக்கிறேன்… பேப்பர் அளவைப் பார்த்தா எனக்குத் தெரியும்ல…அஞ்சு கிலோ கூடத் தேறாதுங்க…"."சரி எடுத்துக்குங்க…" – சொல்லியவாறே அடுப்படியில் ஒரு பையில் சேர்த்து வைத்திருந்த பால் பைகளையும் கொண்டு வந்து போட்டார்..இப்படி அவன் வரும்போது ஒழித்தால்தான். வேறு என்னவெல்லாம் கழிக்க வேண்டும் என்று நாகுவுக்குத்தான் தெரியும்.."கொஞ்சம் இரு வந்திர்றேன்…" என்று விட்டு மொட்டை மாடியைப் பார்த்து ஓடினார். சற்று மிரண்டு பார்க்க ஆரம்பித்தான் அமாவாசை.."இருங்க…இருங்க…வேட்டை…ஸ்லாப்பை மூடிடாதீங்க…நா பார்க்கணும்…".அங்கே தண்ணீர் தொட்டியைக் கழுவிக் கொண்டிருந்த வேட்டையனைத் தடுத்தார் நாகசாமி.."நீங்க பார்க்காம மூட மாட்டேங்கய்யா…"."மதியம் மூணு மணி வரைக்கும் தொட்டி திறந்தே இருக்கட்டும்…சூரிய ஒளில அப்பதான் அந்தப் பாசி, மக்கு வாடையெல்லாம் போகும்…சுண்டக் காயட்டும்…பிறகு நான் மூடிக்கிறேன்…."."அப்போ இப்பத் தண்ணி ஏத்தலீங்களா…?"."ஊஉறீம்… நல்லாக் காய்ஞ்ச பின்னாடிதான்…"."நீ வேணா ஏத்திக்கோ… காசு தர்றேன்…" வாய் நுனி வரை வந்ததை அடக்கிக் கொண்டார்..இந்த அதீத நகைச்சுவையுணர்வு பல சமயங்களில் அதிகப்பிரசங்கித்தனமாகப் போய் விடுகிறது. தண்ணிப் போடும் பழக்கம் அவனுக்கு இருக்கும் என்றாலும் அதைத் தான் சொல்வது எப்படிச் சரியாகும்? தன் வீட்டுக்கு வேலைக்கு வரும்போது அப்படி வந்து நின்றால் 'இப்டியெல்லாம் வரக்கூடாது' என்று கண்டிக்கலாம். உடம்பை ஏன் கெடுத்துக்கிறே? என்று அட்வைஸ் பண்ணலாம். ஆனால் வேட்டையன் அப்படியில்லையே? தன்னிடம் எத்தனை மதிப்பு அவனுக்கு?."அய்யா, நீங்களெல்லாம் இருந்தபோது கிடைச்ச மரியாதையெல்லாம் இப்ப சுத்தமா இல்லைங்க ஆபீசுல…ஆளாளுக்கு வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுறாங்கய்யா… எல்லாமே தலைகீழா மாறிப் போச்சு…"."ஏன் அப்டிச் சொல்றே?" – அக்கறையோடு கேட்டார்.."என்னத்தங்கய்யா சொல்றது? டூட்டி நேரத்துல ஆபீசரே தண்ணியப் போட்டுட்டு வந்து உட்கார்ந்தா வெளங்குமாங்கய்யா…? பொம்பளைங்கல்லாம் ரொம்பப் பயப்படுறாங்கய்யா…அவர் ரூமுக்குள்ள போகமாட்டேங்கிறாங்க…நீங்க இருக்கைல எல்லாத்தையும் வெளக்கிச் சொல்லி நீங்களே அம்புட்டுக் கையெழுத்தையும் வாங்கிப்புடுவீங்க…இப்பல்லாம் அதில்ல…கொண்டு வையுங்கிறதோட சரி. கையெழுத்தாகி வந்த அன்னிக்குத்தான் நிச்சயம்… என்னோட ஜி.பி.எஃப். போட்டு இருபது நாளாச்சுங்கய்யா…இன்னும் காசு கைக்கு வந்தபாடில்ல…என் மவளுக்கு ஒரு மாப்ள பார்த்திருக்கேன்…பரிசம் போட்டுடலாம்னு நினைச்சா பைசா கைக்கு வரமாட்டேங்குது…நாள் குறிக்க முடிலங்கய்யா…அதுக்குத்தான் சொன்னேன்…நீங்க வெளியேறைல என்னையும் தயவுசெஞ்சு வெளியேத்திடுங்கன்னு…நீங்க செய்யாமப் போயிட்டீங்க…".வேட்டையனுக்கு ஒரு மாறுதல் வாங்கிக் கொடுக்க முடியவில்லையே என்பதில் நாகசாமிக்கும் வருத்தம் உண்டு. 'வெளியூர் போட்டால், ஆள் இல்லாமல் அவன் குடும்பம் பரிதவிக்குமே' என்ற எண்ணம்தான் இவருக்கு. 'தனக்கு அவ்வப்போது வந்து வீட்டு வேலை செய்வது தடைபடுமே என்ற எண்ணமிருக்குமோ' என்று அவனாகவே நினைத்துக்கொண்டு அதையும் வாய்விட்டுச் சொல்லிவிட்டான்.."லீவுல வந்து செய்து கொடுக்கிறேன்யா… அதப்பத்தியெல்லாம் நீங்க ஒண்ணும் நினைக்க வேண்டாம்… அதுக்கு நா பொறுப்பு…" என்று வேறு சொல்லிக் கொண்டான். வாழ்க்கையில் வறுமையையும் கஷ்டத்தையும் உணர்ந்தவனுக்குத்தானே மற்றவர்கள் கஷ்டத்தையும், நிலைமையையும் உள் வாங்க முடியும்?."சரி, வாங்க… கீழே போகலாம்…" என்று சொல்லிவிட்டு இறங்கினார் இவர்..சுற்றிலும் கூட்டி சுத்தம் செய்து செடி கொடிகளை முறைப்படுத்தி தண்ணீர் இறங்கப் பாத்தி கட்டி, சலிக்காமல் ஒவ்வொன்றுக்கும் ரெண்டு வாளித் தண்ணீராவது ஊற்றி அழகு பார்த்திருந்தார் வேட்டை. அப்பப்பா! வேட்டையன் ஒருமுறை வந்து போனால் வீடு எவ்வளவு சுத்தமாகி, திருத்தமாகி விடுகிறது? எல்லாவற்றிற்கும் பரந்த மனசு வேண்டும்..இந்தாங்க…இதைக் கொண்டு போய்டுங்க…என்று டேப் ரிக்கார்டரை எடுத்துக் கொடுத்திருக்கிறார்…நன்றாய் ஓடும் டேபிள் ஃபேன்…தலை நிற்கவில்லை என்று சலித்து, அவனுக்காவது பயன்படட்டும் என்று எடுத்துப் போகச் சொல்லியிருக்கிறார். பிளாஸ்டிக் வாளி, பெயின்ட் வாளி என்று எது கேட்டாலும் இந்தா பிடி…தான்.!…எதைக் கொண்டு வந்தோம்…கொண்டு செல்ல…?.கொல்லைப்புறம் சென்று வாளியில் கிடந்த தண்ணீரில் கை, கால் கழுவ ஆரம்பித்தார் வேட்டையன். வாசலில் அமாவாசையை அனாவசியமாய் காக்க வைத்து விட்டோமே என்கிற ஆதங்கத்தில் – "நேரமாயிடுச்சா… நீங்க பல எடத்துக்குப் போறவரு… உங்களைக் காக்க வச்சிட்டனே…" என்றார்.."இருக்கட்டுங்கய்யா…" என்று சொல்லியவாறே தராசில் நிறுக்க ஆரம்பித்தான் அமாவாசை. அவர் முன் அல்லது மாமியின் முன்தான் எடை போட வேண்டும் என்கிற நல்லெண்ணம்.."எதுக்கு? நாந்தான் வேணாம்னல்ல…!" தூக்கிப் போடுங்க சாக்குல…" என்றார் இவர்..அமாவாசையின் முகத்தில் மெல்லிய புன்னகை. இதற்குள் நாகு எதை எதையோ கொண்டுவந்து போட்டிருந்தாள் அங்கே..காலி அட்டைப் பெட்டிகள், பாட்டில்கள், டப்பாக்கள், உடைந்த பைப்கள், இரும்புகள், பழைய செருப்புகள்.. பழைய துணிகள்….என்று என்னென்னவோ இருந்தன.."இதுக்கு, இந்தப் பால் பாக்கெட்டுகளுக்கு, எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு ரேட் போட்டுக்கிறேன்யா…மொத்தமா ஆறு கிலோ வருது. வேறே ஏதாச்சும் இருக்குங்களா…?"."அவ்வளவுதான் அமாவாச… ஒரு நாளைக்கு பரண் மேல இருக்கிறதெல்லாம் ஒழிக்கணும்… என்னால ஒத்தையா முடியாது…எனக்கு தூசி, ஒட்டடை ஆகாது…"."உங்களுக்கு என்னைக்குத் தோதுப்படும்னு சொல்லுங்கய்யா…அன்னைக்கு சரி பண்ணிடுவோம்…" – சொல்லியவாறே அவன் நீட்டிய காசைத் தயக்கத்தோடேயே வாங்கக் கை நீட்டினார் நாகசாமி..இந்தக் காச வச்சிட்டு என்ன செய்ய? இதெல்லாம் கணக்குப் பண்ணிக் கொடுக்கணுமா? நீங்க வந்து எடுத்துக்கிட்டதே பெரிய விஷயம்…ரெகுலரா வர்றீங்க பாருங்க…அதான் வேணும்…காசு பெரிசில்லை…இடம் ஒழிஞ்சிது…வீடு சுத்தமாச்சு….அதுக்கு மேலே என்ன?.இந்தாங்க பிடிங்க… – இருபது ரூபாயை எடுத்துத் திரும்பக் கொடுத்தார் நாகசாமி. டீ சாப்பிடுங்க என்றார்.."இருக்கட்டுங்கய்யா…! அம்மாதான் காபி கொடுத்தாகள்ள…? என்றவாறே மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டான் அமாவாசை..வெளியே நின்ற சைக்கிளில் சாக்கு மூட்டையை வைத்துக் கட்டும் சத்தம். அதைத் தொடர்ந்து "போயிட்டு வர்றேங்கய்யா…"."இந்தா பிடி…" கையிலிருந்த மீதிக் காசை நாகுவிடம் நீட்டினார் நாகசாமி.."என்னாச்சு…இவ்வளவுதானா? ப்ளாஸ்டிக் சாமான்லாம் போட்டது? தராசுல நிறுத்தானா இல்லையா? கிலோவுக்கு எவ்வளவுன்னு கேட்டீங்களா? எதையும் கேட்கமாட்டீங்க நீங்க…?"."இதென்ன கேள்வி பீத்தத்தனமா? பிச்சையெடுக்குமாம் பெருமாளு… அதப் பிடுங்குமாம் அனுமாருன்னானாம்?… இதுக்கு மேல எம்புட்டு வரும்… இது ஒரு காசு…இதையும் அவன்ட்டக் கை நீட்டி வாங்கித்தான் ஆகணுமா?… எத்தனையோ வீடுகள்ல பழைய பேன்ட், சட்டை…புடைவைன்னெல்லாம் அப்டி…அப்டியே தூக்கிக் கொடுத்திடுறாங்க… எடம் காலியானாப் போதும்னு…நாமதான் கை நீட்டிக் காசு வாங்கிட்டிருக்கோம்… மனசுக்கு அசிங்கமாயிருக்கு எனக்கு…."."எல்லாரும் அப்டி இருப்பாங்களா…ஒருத்தர் அப்டீன்னா, ஒருத்தர் இப்டித்தான்… அவனா கொடுக்கிறதத்தானே வாங்கிக்கிறோம்…? கணக்குப் பண்ணி ஒண்ணும் கேட்கிறதில்லையே…? வழக்கத்துல இருக்கிறதைத்தானே செய்றோம்? என்னமோ தப்பு மாதிரிச் சொல்றீங்க?."இன்னும் அது வேறே வேணுமா? அப்புறம் இந்தப் பக்கம் தல வச்சுக் கூடப் படுக்கமாட்டானாக்கும்… சும்மாத் தூக்கிக் கொடுத்தாலும் நாம ஒண்ணும் குறைஞ்சு போகப் போறதில்லை…" – வாசலில் திரும்ப கேட் திறக்கும் சத்தம்.."அய்யா… நா வர்றேனுங்க…" வேட்டையனின் விடை பெறும் குரல்.."கிளம்பியாச்சா…இதோ வந்துட்டேன்…" என்றவாறே பர்சை எடுத்துக்கொண்டு ஓடினார் நாகசாமி. அதிலிருந்து உருவி ஒரு நூறு ரூபாயை நீட்டினார்.."வேண்டாங்கய்யா… இருக்கட்டும்… அம்மா தோசை சுட்டுக் கொடுத்தாங்க… வயிறு நிறையச் சாப்டுட்டேன் அதுவே போதும்…" – சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவனை மீறி ஒரு பெரிய ஏப்பம் வந்தது வேட்டையனுக்கு. சிரித்துக் கொண்டே, அடுத்த நிமிடம் சைக்கிளை எடுத்துக் கொண்டு பறந்து விட்டார்..என்ன ஒரு மன நியாயம்? நாகசாமி அப்படியே திண்ணையில் நின்றிருந்தார். கையிலிருந்த பணம் கனத்தது. அமாவாசை கொடுத்ததை இவ்வளவுதானா என்கிறாள். வேட்டைக்கு ஏன் காசு கொடுக்கவில்லை என்று கேட்க வேண்டாமா? அதுதானே நியாயம்? செய்த வேலைக்குக் கூலி அந்த டிபனா? இதென்ன மனசு?- நினைத்தவாறே பொடியை சிட்டிகை எடுத்து ஒரு இழுப்பு இழுத்தார் நாகசாமி. கொஞ்சம் கோபத்தோடு இழுத்ததில் மூளையில் போய்த் தாக்கியது அது..இந்தக் காலத்திலும் இப்டிப் பொடி போடுற ஆசாமியா இருக்கீங்களே? அசிங்கம்…அசிங்கம்…. இந்த நாட்டுல இனிமே யாரும் மூக்குப் பொடி போடக் கூடாதுன்னு ஒரு சட்டம் கொண்டு வரணும்… – நாகலட்சுமியின் அந்த ஓங்கி ஒலித்த குரல் அவளது உள்ளக் கிளர்ச்சியை வெளிப்படுத்துவதாய்த் தோன்றியது..காசு மிச்சமானதில் அத்தனை மகிழ்ச்சியோ…? வயிற்றுக்குப் போட்டதுதான் கூலி என்று நினைத்துவிட்டாள் போலும்…!.துல்லியமாய் எடைப் போட்டு, அதற்கெனக் கணக்கிட்ட காசை மறைக்காமல் அமாவாசை கௌரவமாகக் கொடுத்துவிட்டுப் போகிறார். அந்தப் பழைய பேப்பர் கடையில் எல்லாமும் அடுக்கி, கட்டி, திருத்தமாய் உயரே அடுக்கி வைக்கப்பட்டிருப்பதின் காட்சி ஞாபகம் வந்தது. அமாவாசையின் தொழில் நயம் அதன் பிரதிபலிப்போ?.வேட்டையன் 'பணம் வேண்டாம்' என்று சர்வ சாதாரணமாய்ச் சொல்லிச் செல்கிறார்..! வயிறு நிரம்பியதில் அவருக்கு மனசும் நிரம்பி விட்டது. இல்லாதவர்களுக்குத்தான் இந்த மனசு பரந்து விரிந்து கிடக்கும் போலும்..! இருப்பவர்களின் மனசு எல்லாவற்றிற்கும் கணக்குப் பார்க்கிறது. சுருங்கிப் போய் வேறொன்றை நினைக்கிறது. உள்ளம் நினைப்பதை உதடுகள் உச்சரிப்பதில்லை, அல்லது அங்கீகரிப்பதில்லை. தடை போட்டு கவனமாய் வெளிப்படுத்துகிறது. 'எப்போது, எதற்கு, அவரவர் தலை ஓட்டுக்குள் ஒடுங்கும்' என்று நிர்ணயிக்க முடிவதில்லை. "மனிதர்களே அலாதியானவர்கள்தான். அதிலும் குறிப்பாகப் பெண்கள்…" என்று கொள்ளலாமா?