உத்தவ கீதை – 20.– டி.வி. ராதாகிருஷ்ணன்.இறைவனை வழிபடும் முறை.கிருஷ்ணா… உன்னை எப்படி வழிபடுவது? எப்படி ஆராதிப்பது என்றும்… என்னென்ன வழிகளில் வழிபடுவது என்றும் விளக்கிக் கூறுங்கள்..வேத வியாசர், நாரத முனி, ஆச்சார்ய பிருகஸ்பதி போன்றவர்கள் முக்தி அடையும் சிறந்த வழி இதுவே… என்று கூறுகிறார்கள்..நீங்கள், முதலில் இதை பிரம்மாவிடம் கூறினீர்கள்… பிரம்மா, தன் புதல்வன் பிருகுவிடம் கூறினார்..அதுபோல, சிவபெருமானிடமும், பார்வதியிடமும் இதைத் தெரிவித்தீர்கள்..ஆகையால், உம்மை அடையச் சிறந்த வழி இதுவேயாகும் என்றும், இதுவே எல்லா வர்ணத்தாருக்கும் எல்லா உயிரினங்களுக்கும் சிறந்தது என்றும் எண்ணுகிறேன்..தாமரை மலர் போன்ற கண்களையுடைய கண்ணனே, கர்ம பந்தங்களிலிருந்து விடுபடுவது எப்படி என்று எனக்குக் கூறுங்கள்… என்றெல்லாம் உத்தவர கேட்க கண்ணன் கூறலானார்...உத்தவரே! எப்படி தெய்வ ஆராதனை, வழிபாடுகள் செய்வது என்று உமக்குச் சொல்கிறேன்….என்னை வழிபட… மூன்று விதிமுறைகள் உள்ளன. அவையாவன…."வைதீக", "தந்திரம்". "இரண்டும் கலந்தது". இந்த மூன்று முறைகளில் எந்த முறையினாலும் என்னை வணங்கலாம். பக்தனுக்கு எந்த முறையில் அதிகம் நாட்டம் ஏற்படுகின்றதோ… அந்த முறையில் முழு நம்பிக்கையுடன் என்னை வழிபட வேண்டும்..க்ஷத்திரியர்கள், வைசியர்கள், பிராம்மண குலத்தில் பிறந்தவர்கள் உரிய வயதில் புனித பூணூல் அணிந்து, வேதத்தில் கூறியது போல நம்பிக்கையுடனும், பக்தியுடனும் உரிய மரியாதையுடனும் என்னை வழிபட வேண்டும்..என்னை, ஒரு உருவத்திலோ, ஒரு புனித இடத்திலோ, நெருப்பிலோ, சூரியனிலோ, நீரிலோ அல்லது தன் இருதயத்திலோ நினைத்து ஆவாகனம் செய்து வழிபடலாம்..முதலில், தன் வாய், பற்களை சுத்தம் செய்து, பின்பு தூய நீரில் நீராடி, புனித மந்திரங்களை ஓத வேண்டும். புனித வேதங்களில் என்ன மந்திரங்கள், என்ன… என்ன நேரத்தில் ஓதப்படவேண்டும் என்று நான் (இறைவன்) கூறியுள்ளேன்..எனது வடிவங்கள் கீழே குறிப்பிட்டுள்ள எட்டு பொருளினால் செய்யப்படலாம்..கல், மரம், தங்கம், களிமண், மணல், ஆபரணங்கள், தீட்டப்பட்ட ஓவியங்கள், மேலும் மனதில் நினைக்கப்பட்ட உருவங்கள்..செய்யப்பட்ட உருவங்கள் இரண்டு வகைப்படும். ஒன்று நகர்த்தக் கூடியவை (அசைவன), நகர்த்த முடியாதவை..அசையாமலிருக்கும் உருவத்திற்கு கடவுளை ஆவாகனம் செய்வதும்,கடவுளை நிலைநிறுத்தலும், பின்பு அவற்றிலிருந்து வெளிப்படுத்துவதும்(பின்பு கடவுளை வெளிக் கொணர்வதும்) கிடையாது..நகரக்கூடிய உருவத்தில் வழிபடும் போது (சாளகிராமத்தைத் தவிர) அந்த ஆவாகனம் செய்யும் முறை… பின்பற்ற வேண்டும். நீரைத் தெளித்து… இந்த விக்கிரங்களில் இறைவனை வழிபடுதலை (ஆவாஹனம்) செய்வதைச் செய்யலாம். இறைவனை மனத்தில் நினைக்கும்போது பக்தியால், தன் இருதயத்தில் நிறுத்தினால் போதுமானது..உருவத்தில் என்னை வழிபடும் போது, அந்த உருவத்திற்கு, நீராட்டலும்… பின் அலங்கரித்தலும் தேவையானவை..உயர்த்தப்பட்ட இடத்தில், அந்த இறைவனுன் உருவங்களை வைத்து வழிபட வேண்டும்..காணிக்கையாகப் பல பொருள்கள் நெருப்பில் இட வேண்டும். வாசனைப் பொருள்கள், பூக்கள் இவற்றால் செய்யும் பூஜையைவிட… பக்தியுடன் நீரினால் செய்யப்பட்ட 'அர்க்கியத்தையே" நான் அதிகம் விரும்புகிறேன். கிழக்குத் திசை நோக்கிப் பரப்பப்பட்ட தர்ப்பைப் புல்லால் ஆன ஆசனத்தில், கிழக்கு அல்லது வடக்குத் திசை நோக்கி அமர்ந்து, அல்லது என் உருவச்சிலை முன் அமர்ந்து… என்னை பூஜை செய்வது தொடங்கப்பட வேண்டும்..பின் விக்கிரகத்துக்கு அரைத்த சந்தனம் அணிவிக்க வேண்டும். பின்பு பூக்களால் அர்ச்சிக்க வேண்டும்..பின், ஒரு பாத்திரத்தில் புனித நீரை எடுத்துக் கொண்டு, பூஜை செய்யப்படும் இடங்களில் நீரைத் தெளித்து, அந்த இடங்களைப் புனிதப் படுத்த வேண்டும். தன் மீதும் நீரைத் தெளித்துக்கொள்ள வேண்டும்..பின்பு, மூன்று பாத்திரங்களில், அந்தப் புனித நீரை ஊற்ற வேண்டும். (பாத்யம், அர்க்கியம், ஆசமனியம்), அந்த மூன்று பாத்திரத்திலுள்ள நீரினால் கடவுளின் காலை கழுவுவதற்கும், கடவுளை அந்த உருவத்தில் வரவேற்பு செய்வதற்கும், பின் அந்தக் உருவத்தின் கால்களை, கைகளை, வாயைத் துடைப்பதற்கும் உபயோகப்படுத்த வேண்டும்..பின்பு, கடவுளைத் தியானம் செய்ய வேண்டும். அதன் பிறகு என்னை அந்த உருவத்தில் உருவகப்படுத்த வேண்டும். பின்னர், பூஜையை ஆரம்பிக்க வேண்டும். எனது ஆயுதங்களை (சுதர்சன சக்கரம், பாஞ்ச ஜன்யம் என்ற சங்கு, கதை, வாள், வில், அம்பு, உழவு, ஈட்டி, கௌத்துபம்(மார்பில் அணிந்திருக்கும் மணி), மாலை, ஸ்ரீவத்சம் முதலியவைகளை) வணங்க வேண்டும்..பின்பு, எனது பணியாளர்களான நந்தா, சுனந்தா, பிரகண்டா மற்றும் சண்டா, மகாபல, பலா, குமுத சேனா, அதுபோல எனது வாகனமான கருடன், மற்றும் துர்க்கை, விநாயகன், வியாசர், விஸ்வசேனா போன்றவர்களையும், எட்டு திசைகளின் அதிபதிகள் (அஷ்டதிக் பாலகர்கள்)போன்றோரையும் பூஜிக்க வேண்டும்..செல்வம் படைத்த பக்தர்கள் என் உருவத்தை தினமும் வாசனையுள்ள சந்தன நீரினால் அபிஷேகம் செய்து, மணமுள்ள பூக்களால் அர்ச்சித்து..சாம வேதங்கள் போன்றவற்றை ஓத வேண்டும்..எனது பக்தன் கால்கள், கைகள், வாய் முதலியவற்றைக் கழுவுவதற்கு நீரை அளித்து பின்பு, அட்சதை (முனை உடையாத அரிசி), மணமுள்ள பூக்கள், வாசனைப் பொருள்கள், தீபம், உணவுப் பொருள்கள் ஆகியவற்றைப் படைக்க வேண்டும்..செல்வம் அதிகம் உடையவர்களானால் நெய், சர்க்கரை சாதம், பாயசம், எள்ளில் செய்யப்பட்ட இனிப்புகள், சர்க்கரைப் பாகில் செய்யப்பட்ட இனிப்புகள், தயிர், கோதுமை மாவில் செய்யப்பட்ட இனிப்புகள் ஆகையவைகள் நைவேத்தியங்களாகச் செய்யப்பட வேண்டும்..அதைப்போலவே, பல் விளக்குவதற்குச் சிறு மரக்கிளையினால் சிறிய குச்சி, உடலில் தடவிக்கொள்ள எண்ணெய் வகைகள், பால், தயிர், தேன், வாசனைத் திரவியங்கள், உடுத்த வஸ்திரங்கள், ஆபரணங்கள், முகம் பார்க்கும் கண்ணாடி போன்றவைகள், பௌர்ணமி… ஏகாதசி போன்ற நாட்களில் எனக்குப் படைக்கப்பட வேண்டும். பின்பு, தர்ப்பைப் புற்களால் சூழப்பட்டு, நீர் தெளித்துப் புனிதமாக்கப்பட்ட இடத்தில், வேதங்களிலும், ஆகமங்களிலும் கூறப்பட்ட முறையில் ஹோமங்கள் செய்யப்பட வேண்டும்..என் உருவத்தை மனதில் தியானித்து, ஸமித்துகளை (அரசமர குச்சிகள்), நெய்யில் நனைத்து அக்கினியில் இடவேண்டும். உரிய மந்திரங்களை ஜெபிக்க வேண்டும். ஓம் நமோ நாராயணா போன்ற மந்திரங்களும் ஜெபிக்கப்பட வேண்டும்..பின்பு எனக்குப் படைக்கப்பட்ட உணவு எனது உதவியாளர்களுக்கும் படைக்கப்பட வேண்டும்..பின்பு, தாம்பூலம் போன்றவைகள் அளிக்கப்பட வேண்டும்..பின்பு, இறைவனைப் பெருமையாகக் கூறும் பாடல்கள் பாடப்பட வேண்டும். ஆடல்களும் நடைபெற வேண்டும். என்னைப் பற்றிக் கூறும் கதைகளும் சொல்லப்பட வேண்டும்..பின்பு, என்னை வணங்கி, என் முன்னால் உடலைத் தரையிலிட்டு நமஸ்காரம் செய்ய வேண்டும்..தன் தலையை, எனது கால்களில் வைத்துக் கைகளால் பாதத்தைப் பிடித்துக்கொண்டு நமஸ்காரம் செய்ய வேண்டும். இந்தப் பிறவிப் பிணியிலிருந்து விடுதலை கொடுங்கள் என்று வேண்ட வேண்டும்..இவையே தியானம், ஆவாஹனம், சிம்ஹாசனம், பாத்யம், அர்க்கம், ஆசமனியம், ஸ்நானம், வாஸ்திரம், உபவீதம், கந்தம், புஷ்பம் என்று இறைவனை வழிபடும் முறையாகப் பின்பற்றப்படுகிறது..இந்த முறையில் என்னை ஆராதிப்பதால், அந்தப் பக்தன் இப்பிறவியிலும், மறுபிறவியிலும் தான் இறைவனிடம் வேண்டியதைப் பெறுகிறான்..பொருளாதார வசதி அதிகம் படைத்தவர்கள் எனக்கு ஓர் ஆலயம் அமைத்து, அதில் என் உருவத்தை பிரதிஷ்டை செய்ய வேண்டும். அங்கு பூச்செடிகள் நிறைந்த ஒரு நந்தவனம் அமைக்கப்பட வேண்டும். மேலும் இத் தெய்வக் காரியங்கள், பூஜைகள் தொடர்ந்து நடந்துவர வருமானம் வர அந்தக் கோயிலுக்கு நிலங்கள், கிராமங்கள் ஆகியவற்றைத் தானமாகக் கொடுக்க வேண்டும்..அப்படிச் செய்வதால் என்னை அடையும் தகுதி பெறுகிறான். இதுவே என்னை அடைய எளிய முறையாகும். அந்தப் பக்தன், பிரம்மனுக்கு இணையாக மூன்று உலகங்களையும் ஆளும் தகுதியினைப் பெறுகிறான். அந்தப் பக்தன், என்னையே நினைத்து, என்னை பூஜித்து என்னையே அடைகிறான்..எனக்காகக் கொடுக்கப்பட்ட சொத்துக்களிலிருந்து வரும் பணத்தைத் திருடுபவன், பல ஆயிரக்கணக்கான கீழான பிறவிகளில் பிறந்து துன்பம் அனுபவிப்பான். அந்தப் பாவிக்கு உதவி செய்பவர்களும், தங்கள் பாபத்திற்குத் தகுந்தவாறு கர்ம விதியின்படி தண்டனை அனுபவிப்பார்கள்..(தொடரும்)
உத்தவ கீதை – 20.– டி.வி. ராதாகிருஷ்ணன்.இறைவனை வழிபடும் முறை.கிருஷ்ணா… உன்னை எப்படி வழிபடுவது? எப்படி ஆராதிப்பது என்றும்… என்னென்ன வழிகளில் வழிபடுவது என்றும் விளக்கிக் கூறுங்கள்..வேத வியாசர், நாரத முனி, ஆச்சார்ய பிருகஸ்பதி போன்றவர்கள் முக்தி அடையும் சிறந்த வழி இதுவே… என்று கூறுகிறார்கள்..நீங்கள், முதலில் இதை பிரம்மாவிடம் கூறினீர்கள்… பிரம்மா, தன் புதல்வன் பிருகுவிடம் கூறினார்..அதுபோல, சிவபெருமானிடமும், பார்வதியிடமும் இதைத் தெரிவித்தீர்கள்..ஆகையால், உம்மை அடையச் சிறந்த வழி இதுவேயாகும் என்றும், இதுவே எல்லா வர்ணத்தாருக்கும் எல்லா உயிரினங்களுக்கும் சிறந்தது என்றும் எண்ணுகிறேன்..தாமரை மலர் போன்ற கண்களையுடைய கண்ணனே, கர்ம பந்தங்களிலிருந்து விடுபடுவது எப்படி என்று எனக்குக் கூறுங்கள்… என்றெல்லாம் உத்தவர கேட்க கண்ணன் கூறலானார்...உத்தவரே! எப்படி தெய்வ ஆராதனை, வழிபாடுகள் செய்வது என்று உமக்குச் சொல்கிறேன்….என்னை வழிபட… மூன்று விதிமுறைகள் உள்ளன. அவையாவன…."வைதீக", "தந்திரம்". "இரண்டும் கலந்தது". இந்த மூன்று முறைகளில் எந்த முறையினாலும் என்னை வணங்கலாம். பக்தனுக்கு எந்த முறையில் அதிகம் நாட்டம் ஏற்படுகின்றதோ… அந்த முறையில் முழு நம்பிக்கையுடன் என்னை வழிபட வேண்டும்..க்ஷத்திரியர்கள், வைசியர்கள், பிராம்மண குலத்தில் பிறந்தவர்கள் உரிய வயதில் புனித பூணூல் அணிந்து, வேதத்தில் கூறியது போல நம்பிக்கையுடனும், பக்தியுடனும் உரிய மரியாதையுடனும் என்னை வழிபட வேண்டும்..என்னை, ஒரு உருவத்திலோ, ஒரு புனித இடத்திலோ, நெருப்பிலோ, சூரியனிலோ, நீரிலோ அல்லது தன் இருதயத்திலோ நினைத்து ஆவாகனம் செய்து வழிபடலாம்..முதலில், தன் வாய், பற்களை சுத்தம் செய்து, பின்பு தூய நீரில் நீராடி, புனித மந்திரங்களை ஓத வேண்டும். புனித வேதங்களில் என்ன மந்திரங்கள், என்ன… என்ன நேரத்தில் ஓதப்படவேண்டும் என்று நான் (இறைவன்) கூறியுள்ளேன்..எனது வடிவங்கள் கீழே குறிப்பிட்டுள்ள எட்டு பொருளினால் செய்யப்படலாம்..கல், மரம், தங்கம், களிமண், மணல், ஆபரணங்கள், தீட்டப்பட்ட ஓவியங்கள், மேலும் மனதில் நினைக்கப்பட்ட உருவங்கள்..செய்யப்பட்ட உருவங்கள் இரண்டு வகைப்படும். ஒன்று நகர்த்தக் கூடியவை (அசைவன), நகர்த்த முடியாதவை..அசையாமலிருக்கும் உருவத்திற்கு கடவுளை ஆவாகனம் செய்வதும்,கடவுளை நிலைநிறுத்தலும், பின்பு அவற்றிலிருந்து வெளிப்படுத்துவதும்(பின்பு கடவுளை வெளிக் கொணர்வதும்) கிடையாது..நகரக்கூடிய உருவத்தில் வழிபடும் போது (சாளகிராமத்தைத் தவிர) அந்த ஆவாகனம் செய்யும் முறை… பின்பற்ற வேண்டும். நீரைத் தெளித்து… இந்த விக்கிரங்களில் இறைவனை வழிபடுதலை (ஆவாஹனம்) செய்வதைச் செய்யலாம். இறைவனை மனத்தில் நினைக்கும்போது பக்தியால், தன் இருதயத்தில் நிறுத்தினால் போதுமானது..உருவத்தில் என்னை வழிபடும் போது, அந்த உருவத்திற்கு, நீராட்டலும்… பின் அலங்கரித்தலும் தேவையானவை..உயர்த்தப்பட்ட இடத்தில், அந்த இறைவனுன் உருவங்களை வைத்து வழிபட வேண்டும்..காணிக்கையாகப் பல பொருள்கள் நெருப்பில் இட வேண்டும். வாசனைப் பொருள்கள், பூக்கள் இவற்றால் செய்யும் பூஜையைவிட… பக்தியுடன் நீரினால் செய்யப்பட்ட 'அர்க்கியத்தையே" நான் அதிகம் விரும்புகிறேன். கிழக்குத் திசை நோக்கிப் பரப்பப்பட்ட தர்ப்பைப் புல்லால் ஆன ஆசனத்தில், கிழக்கு அல்லது வடக்குத் திசை நோக்கி அமர்ந்து, அல்லது என் உருவச்சிலை முன் அமர்ந்து… என்னை பூஜை செய்வது தொடங்கப்பட வேண்டும்..பின் விக்கிரகத்துக்கு அரைத்த சந்தனம் அணிவிக்க வேண்டும். பின்பு பூக்களால் அர்ச்சிக்க வேண்டும்..பின், ஒரு பாத்திரத்தில் புனித நீரை எடுத்துக் கொண்டு, பூஜை செய்யப்படும் இடங்களில் நீரைத் தெளித்து, அந்த இடங்களைப் புனிதப் படுத்த வேண்டும். தன் மீதும் நீரைத் தெளித்துக்கொள்ள வேண்டும்..பின்பு, மூன்று பாத்திரங்களில், அந்தப் புனித நீரை ஊற்ற வேண்டும். (பாத்யம், அர்க்கியம், ஆசமனியம்), அந்த மூன்று பாத்திரத்திலுள்ள நீரினால் கடவுளின் காலை கழுவுவதற்கும், கடவுளை அந்த உருவத்தில் வரவேற்பு செய்வதற்கும், பின் அந்தக் உருவத்தின் கால்களை, கைகளை, வாயைத் துடைப்பதற்கும் உபயோகப்படுத்த வேண்டும்..பின்பு, கடவுளைத் தியானம் செய்ய வேண்டும். அதன் பிறகு என்னை அந்த உருவத்தில் உருவகப்படுத்த வேண்டும். பின்னர், பூஜையை ஆரம்பிக்க வேண்டும். எனது ஆயுதங்களை (சுதர்சன சக்கரம், பாஞ்ச ஜன்யம் என்ற சங்கு, கதை, வாள், வில், அம்பு, உழவு, ஈட்டி, கௌத்துபம்(மார்பில் அணிந்திருக்கும் மணி), மாலை, ஸ்ரீவத்சம் முதலியவைகளை) வணங்க வேண்டும்..பின்பு, எனது பணியாளர்களான நந்தா, சுனந்தா, பிரகண்டா மற்றும் சண்டா, மகாபல, பலா, குமுத சேனா, அதுபோல எனது வாகனமான கருடன், மற்றும் துர்க்கை, விநாயகன், வியாசர், விஸ்வசேனா போன்றவர்களையும், எட்டு திசைகளின் அதிபதிகள் (அஷ்டதிக் பாலகர்கள்)போன்றோரையும் பூஜிக்க வேண்டும்..செல்வம் படைத்த பக்தர்கள் என் உருவத்தை தினமும் வாசனையுள்ள சந்தன நீரினால் அபிஷேகம் செய்து, மணமுள்ள பூக்களால் அர்ச்சித்து..சாம வேதங்கள் போன்றவற்றை ஓத வேண்டும்..எனது பக்தன் கால்கள், கைகள், வாய் முதலியவற்றைக் கழுவுவதற்கு நீரை அளித்து பின்பு, அட்சதை (முனை உடையாத அரிசி), மணமுள்ள பூக்கள், வாசனைப் பொருள்கள், தீபம், உணவுப் பொருள்கள் ஆகியவற்றைப் படைக்க வேண்டும்..செல்வம் அதிகம் உடையவர்களானால் நெய், சர்க்கரை சாதம், பாயசம், எள்ளில் செய்யப்பட்ட இனிப்புகள், சர்க்கரைப் பாகில் செய்யப்பட்ட இனிப்புகள், தயிர், கோதுமை மாவில் செய்யப்பட்ட இனிப்புகள் ஆகையவைகள் நைவேத்தியங்களாகச் செய்யப்பட வேண்டும்..அதைப்போலவே, பல் விளக்குவதற்குச் சிறு மரக்கிளையினால் சிறிய குச்சி, உடலில் தடவிக்கொள்ள எண்ணெய் வகைகள், பால், தயிர், தேன், வாசனைத் திரவியங்கள், உடுத்த வஸ்திரங்கள், ஆபரணங்கள், முகம் பார்க்கும் கண்ணாடி போன்றவைகள், பௌர்ணமி… ஏகாதசி போன்ற நாட்களில் எனக்குப் படைக்கப்பட வேண்டும். பின்பு, தர்ப்பைப் புற்களால் சூழப்பட்டு, நீர் தெளித்துப் புனிதமாக்கப்பட்ட இடத்தில், வேதங்களிலும், ஆகமங்களிலும் கூறப்பட்ட முறையில் ஹோமங்கள் செய்யப்பட வேண்டும்..என் உருவத்தை மனதில் தியானித்து, ஸமித்துகளை (அரசமர குச்சிகள்), நெய்யில் நனைத்து அக்கினியில் இடவேண்டும். உரிய மந்திரங்களை ஜெபிக்க வேண்டும். ஓம் நமோ நாராயணா போன்ற மந்திரங்களும் ஜெபிக்கப்பட வேண்டும்..பின்பு எனக்குப் படைக்கப்பட்ட உணவு எனது உதவியாளர்களுக்கும் படைக்கப்பட வேண்டும்..பின்பு, தாம்பூலம் போன்றவைகள் அளிக்கப்பட வேண்டும்..பின்பு, இறைவனைப் பெருமையாகக் கூறும் பாடல்கள் பாடப்பட வேண்டும். ஆடல்களும் நடைபெற வேண்டும். என்னைப் பற்றிக் கூறும் கதைகளும் சொல்லப்பட வேண்டும்..பின்பு, என்னை வணங்கி, என் முன்னால் உடலைத் தரையிலிட்டு நமஸ்காரம் செய்ய வேண்டும்..தன் தலையை, எனது கால்களில் வைத்துக் கைகளால் பாதத்தைப் பிடித்துக்கொண்டு நமஸ்காரம் செய்ய வேண்டும். இந்தப் பிறவிப் பிணியிலிருந்து விடுதலை கொடுங்கள் என்று வேண்ட வேண்டும்..இவையே தியானம், ஆவாஹனம், சிம்ஹாசனம், பாத்யம், அர்க்கம், ஆசமனியம், ஸ்நானம், வாஸ்திரம், உபவீதம், கந்தம், புஷ்பம் என்று இறைவனை வழிபடும் முறையாகப் பின்பற்றப்படுகிறது..இந்த முறையில் என்னை ஆராதிப்பதால், அந்தப் பக்தன் இப்பிறவியிலும், மறுபிறவியிலும் தான் இறைவனிடம் வேண்டியதைப் பெறுகிறான்..பொருளாதார வசதி அதிகம் படைத்தவர்கள் எனக்கு ஓர் ஆலயம் அமைத்து, அதில் என் உருவத்தை பிரதிஷ்டை செய்ய வேண்டும். அங்கு பூச்செடிகள் நிறைந்த ஒரு நந்தவனம் அமைக்கப்பட வேண்டும். மேலும் இத் தெய்வக் காரியங்கள், பூஜைகள் தொடர்ந்து நடந்துவர வருமானம் வர அந்தக் கோயிலுக்கு நிலங்கள், கிராமங்கள் ஆகியவற்றைத் தானமாகக் கொடுக்க வேண்டும்..அப்படிச் செய்வதால் என்னை அடையும் தகுதி பெறுகிறான். இதுவே என்னை அடைய எளிய முறையாகும். அந்தப் பக்தன், பிரம்மனுக்கு இணையாக மூன்று உலகங்களையும் ஆளும் தகுதியினைப் பெறுகிறான். அந்தப் பக்தன், என்னையே நினைத்து, என்னை பூஜித்து என்னையே அடைகிறான்..எனக்காகக் கொடுக்கப்பட்ட சொத்துக்களிலிருந்து வரும் பணத்தைத் திருடுபவன், பல ஆயிரக்கணக்கான கீழான பிறவிகளில் பிறந்து துன்பம் அனுபவிப்பான். அந்தப் பாவிக்கு உதவி செய்பவர்களும், தங்கள் பாபத்திற்குத் தகுந்தவாறு கர்ம விதியின்படி தண்டனை அனுபவிப்பார்கள்..(தொடரும்)