நாராயணமேனன், மஹாகவி சுப்பிரமணிய பாரதி ஆகிய இரண்டு மஹாகவிகளையும் நினைவுகூரும் இலக்கிய விழாவில், இந்த ஆண்டு மலையாளக் கவிஞருடன் ஒரு தமிழ் கவிஞரும் கெளரவிக்கப்பட்டார். பாலக்காடு விக்டோரியா கல்லூரியின் முன்னாள் முதல்வரும், மலையாளக் கவிஞருமான முனைவர் பி.முரளிக்கும், தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளில் நூற்றுக்கணக்கான கவிதைகள் எழுதி வெளியிட்டுள்ள சென்னை வழக்கறிஞர், கவிஞர், வானவில் கே.ரவிக்கும், வள்ளத்தோள்-பாரதி விருதுகள் வழங்கப்பட்டன. பிரபல மலையாள சொற்பொழிவாளர், பேராசிரியர் ராமன் உன்னி தலைமை தாங்கி மலையாள மொழியின் அன்னை மொழி தமிழே என்பதை எடுத்துக் காட்டுகளுடன் விளக்கித் தலைமையுரையாற்றினார்.