வாசகர்கள் ஜோக்ஸ் ஓவியம் : ரஜினி."சென்னையில போய் செட்டிலாகப் பயிற்சி எடுக்குது அந்தக் குடும்பம்!"."அதுக்கு என்ன சார் பயிற்சி?"."நீச்சல் பயிற்சிதான்…!". – வி.ரேவதி, தஞ்சை."உங்க வீட்டுக்கு வந்த திருடன் எப்படி சார் இருந்தான்?"."வேண்டாம் சார், விடுங்க! சொன்னா, உங்களுக்குக் கோபம் வரும்!".– வி.ரேவதி, தஞ்சை."போலீஸ் ஸ்டேஷன்ல யாராவது லஞ்சம் வாங்கினா எங்க இன்ஸ் பெக்டர் தொலைச்சுடுவாரு."."அடடா, பத்திரமா வெச்சுக்க மாட்டாரா? சின்னப்பையன் மாதிரி தொலைச்சுடுவாரா?".– சி.பி.செந்தில்குமார், ஈரோடு."டி.வி.ல நான் நியூஸ் பார்க்கும்போது மனைவி உள்பட யாருமே என்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க!"."நீங்க லக்கிமேன் சார்!"."ஹி.. ஹி… ராத்திரி 12 மணிக்கு மேலதான் நான் நியூஸே பார்ப்பேன்!".– வி.வேதி, தஞ்சை."கடனா ஆயிரம் ரூபா கொடுங்க சார்…."."தப்பா நினைக்காதீங்க. கடன் கொடுத்தா நமது நட்பு கெட்டுடும்."."அப்படியெல்லாம் இல்ல சார். திருப்பிக் கேட்டாதான் நட்பு கெடும்!".– எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி."அமைச்சர் ஆகிற வாய்ப்பு எனக்கு அமோகமா இருக்குன்னு எப்படிச் சொல்றீங்க ஜோதிடரே?"."கிரக அமைப்புகளைப் பார்த்தால் உங்களுக்கு ஊழலில் சிறைத்தண்டனை உண்டுன்னு சொல்லுதே சார்?".– வி.ரேவதி, தஞ்சை
வாசகர்கள் ஜோக்ஸ் ஓவியம் : ரஜினி."சென்னையில போய் செட்டிலாகப் பயிற்சி எடுக்குது அந்தக் குடும்பம்!"."அதுக்கு என்ன சார் பயிற்சி?"."நீச்சல் பயிற்சிதான்…!". – வி.ரேவதி, தஞ்சை."உங்க வீட்டுக்கு வந்த திருடன் எப்படி சார் இருந்தான்?"."வேண்டாம் சார், விடுங்க! சொன்னா, உங்களுக்குக் கோபம் வரும்!".– வி.ரேவதி, தஞ்சை."போலீஸ் ஸ்டேஷன்ல யாராவது லஞ்சம் வாங்கினா எங்க இன்ஸ் பெக்டர் தொலைச்சுடுவாரு."."அடடா, பத்திரமா வெச்சுக்க மாட்டாரா? சின்னப்பையன் மாதிரி தொலைச்சுடுவாரா?".– சி.பி.செந்தில்குமார், ஈரோடு."டி.வி.ல நான் நியூஸ் பார்க்கும்போது மனைவி உள்பட யாருமே என்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க!"."நீங்க லக்கிமேன் சார்!"."ஹி.. ஹி… ராத்திரி 12 மணிக்கு மேலதான் நான் நியூஸே பார்ப்பேன்!".– வி.வேதி, தஞ்சை."கடனா ஆயிரம் ரூபா கொடுங்க சார்…."."தப்பா நினைக்காதீங்க. கடன் கொடுத்தா நமது நட்பு கெட்டுடும்."."அப்படியெல்லாம் இல்ல சார். திருப்பிக் கேட்டாதான் நட்பு கெடும்!".– எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி."அமைச்சர் ஆகிற வாய்ப்பு எனக்கு அமோகமா இருக்குன்னு எப்படிச் சொல்றீங்க ஜோதிடரே?"."கிரக அமைப்புகளைப் பார்த்தால் உங்களுக்கு ஊழலில் சிறைத்தண்டனை உண்டுன்னு சொல்லுதே சார்?".– வி.ரேவதி, தஞ்சை