– ரமணன்.இசைஞானி இளையராஜா இசைத்துறையில் வழங்கி வரும் தொடர் பங்களிப்புக்காக இதுவரை ஐந்து முறை தேசிய விருது பெற்றுள்ளார்.'சாகர சங்கமம்', 'ருத்ர வீணா' என இரு தெலுங்கு படங்களுக்கும்'சிந்து பைரவி' என்ற தமிழ் படத்திற்கும் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வென்றுள்ளார். 'பழசிராஜா' மற்றும் 'தாரை தப்பட்டை' படத்துக்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதையும் இளையராஜா வென்றுள்ளார். 2018ஆம் ஆண்டு இந்திய அரசின் இரண்டாவது மிக உயரிய விருதான ''பத்ம விபூஷண்" விருது இளையராஜாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது..அண்மையில் இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராக குடியரசு தலைவரின் நியமன உறுப்பினர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்..நியமன உறுப்பினர்கள் எப்படி நியமிக்கப்படுகிறார்கள்?.1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி இந்திய அரசியலமைப்பின் நான்காவது அட்டவணையின்படி, மாநிலங்களவையில் 216 உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும், அதில் 12 உறுப்பினர்கள் குடியரசு தலைவரால் பரிந்துரைக்கப்பட வேண்டும், மீதமுள்ள 204 பேர், மாநிலங்களைப் பிரதிநிதித்துவப்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த 12 பேரை நியமன உறுப்பினர்களாக நியமிக்கும் மரபு இப்போதும் கடைப்பிடிக்கப்படுகிறது..இருப்பினும், தற்போதைய பலமான 245 உறுப்பினர்களில் 233 பேர் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள். 12 பேர் குடியரசு தலைவரால் நியமிக்கப்படுபவர்கள்..மாநிலங்களவையை மக்களவை போல பெரும்பான்மை பலம் இல்லை என்று கூறி கலைத்துவிட முடியாது. அதன் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் ஒவ்வோர் இரண்டாவது வருடமும் ஓய்வு பெறுகின்றனர். மக்களவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முழு பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். ஆனால், மாநிலங்களவையில் ஒருவர் எம்.பி பதவி ஏற்றுக் கொண்ட நாளில் இருந்து ஆறு வருடங்களுக்கு அந்தப் பதவியில் இருக்க முடியும். இடையில் மக்களவை கலைக்கப்பட்டாலும் மாநிலங்களவை அப்படியே தொடரும்..மாநிலங்களவையில் கட்சிகளின் பலம் அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட்டு தேர்வாகும் உறுப்பினர்கள் நீங்கலாக மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டோ குடியரசு தலைவரால் அவரது அதிகாரத்துக்கு உள்பட்டு நேரடியாக நியமிக்கப்படக் கூடிய தகுதியை 12 உறுப்பினர்கள் பெறுகின்றனர். அவர்கள் பொதுவாக இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமூக சேவையில் சிறப்பு பங்களிப்பை வழங்கியவர்களாக இருப்பது நடைமுறையில் கடைப்பிடிக்கப்படும் மரபு. மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிக்க உரிமை இல்லை. எனினும், அவர்கள் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கலாம்..டெல்லியில் எம்.பி. குடியிருப்பு வளாகத்தில் ஒரு குடியிருப்பு, பிராட்பேண்ட் வசதியுடன் கூடிய தொலைபேசி இணைப்பு, எரிவாயு இணைப்பு வசதிகள், மாத ஊதியம், அலுவலக படி, உதவியாளர் படி, நாடாளுமன்ற கூட்டத்தொடர் காலத்தில் வந்து போக விமானம் அல்லது ரயில் இலவச பயணச் சலுகை, இதுதவிர பிற எம்.பி.க்களுக்கு என்னவெல்லாம் சலுகைகள், ஊதியம் தரப்படுகிறதோ அதையே நியமன உறுப்பினர்களும் பாரபட்சமின்றி பெறுவார்கள்..ஒரு நாடளுமன்ற உருப்பினர் என்ற கெளரவம் ஒரு தமிழக இசைக்கலைஞனுக்கு அளிக்கப்பட்டிருப்பதில் அனைவருக்கும் மகிழ்ச்சிதான். இசையில் அவர் தொட்ட உயரங்களுக்கு அவருக்கு இன்னும் சிறப்பான கெளரவங்கள் அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே பலரின் கருத்து..ஆனால், அவருடைய நியமனம் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. அதற்கு காரணம் ஒரு புத்தகமும் அதன் முன்னுரையும் தான். அந்த ஆங்கில புத்தகம் இளையராஜாவின் முன்னுரையுடன் சில மாதங்களுக்கு முன் வெளிவந்திருக்கிறது, அந்த முன்னுரையில் இளையராஜா அவரது இயல்புக்கு மாறாக, மோடியைப் புகழ்ந்து அம்பேத்காருடன் ஒப்பிட்டு எழுதியதும், அடுத்த ஒருசில மாதங்களில் எம்.பி. பதவி கிடைத்திருப்பதற்கும் பின்னிருக்கும் அரசியல்தான் சர்ச்சையாகியிருக்கிறது..இளையராஜா தானாக விரும்பி இந்த சர்ச்சையில் சிக்கினாரா, சிக்கவைக்கப்பட்டாரா என்பது அவருக்கு மட்டுமே தெரியும். மற்றபடி, அவருக்கு பத்மவிபூஷண் பட்டம் கொடுக்கப்பட்டபோதோ, மற்ற தேசிய விருதுகள் கிடைத்தபோதோ அவர்மீது தனிப்பட்ட விமர்சனம் ஏதும் எழவில்லை. ஏனென்றால், அப்போது இளையராஜா இசையில் மட்டுமே கவனத்திலிருந்தார்..ஆனால், தற்போது வழங்கப்பட்டுள்ள நான்கு நியமன எம்.பி. பதவிகளும் தென்னிந்திய மாநிலங்களுக்கே வழங்கப்பட்டுள்ளன. இளையராஜாவோடு, இயக்குநர் ராஜமௌலியின் தந்தை கதாசிரியர் விஜயேந்திர பிரசாத், வீரேந்திர ஹெக்டே மற்றும் பி.டி.உஷா ஆகியோர் நியமன எம்.பி. ஆகிறார்கள். இளையராஜா தவிர்த்த மூவரும்கூட தங்களை மோடி ஆதரவாளர்களாகக் காட்டிக்கொண்டவர்கள்தான். இந்த நியமனம் மூலம் ராஜாவும் அரசுக்கு எதிரான கருத்துகளை அது நியாமானதாகயிருந்தாலும் சொல்ல முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறார்..தென்னிந்தியாவில் காலூன்ற முயற்சி செய்யும் மோடி-அமித்ஷா திட்டத்தின்(சமீப ஹைதராபாத் கூட்டத்தில் பேசபட்டது) ஓர் அங்கமாகவே தற்போதைய நியமனப் பதவிகள் பார்க்கப்படுகின்றன..சர்ச்சை எழுந்திருப்பதற்கு மற்றொரு காரணம் இந்த நியமனம் குறித்து வெளியாகியிருக்கும் ஒன்றிய அரசின் செய்திக்குறிப்பு.."தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தலித் குடும்பத்தில் பிறந்தவர். இவர் இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார், இளையராஜா இந்த நிலையை எட்டுவதற்கு எண்ணற்ற இன்னல்களையும், சாதி அடிப்படையிலான பாகுபாடுகளையும் சந்திக்க நேர்ந்தது, இருப்பினும் அவர் அத்தகைய தடைகளை எல்லாம் உடைத்து நாட்டின் முன்னணி இசைக் கலைஞர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார்" என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. குடியரசு தலைவரின் நியமன உறுப்பினராவதற்கு சாதி/ இனம் ஒரு தகுதியில்லை. மேலும் சில ஆண்டுகளுக்கு முன் இளையராஜாவின் வாழ்க்கை கதையை ஒரு எழுத்தாளர் எழுதியபோது அதில் அவர் தலித் என அடையாளம் காட்டபட்டதற்காக கோபம் அடைந்து (ராஜாவின் கோபம் உலகம் அறிந்தது). வழக்கறிஞர் நோட்டிஸ் அனுப்பியவர். அந்த நிலையில் இந்த வார்த்தைகள் பலரை கோபத்துக்குள்ளாக்கியிருக்கிறது..மேலும், இம்மாதிரி கெளரவ நியமனம் பெற்ற சச்சின், லதா மங்கேஷ்கர். பிரபலங்கள் மாநிலங்கள் அவையில் மக்கள் பிரச்னைகளைப் பேசியதே இல்லை. சச்சின் அவைக்கூட்டங்களில் கூட கலந்து கொண்டதில்லை. குடியரசு தினம் போன்ற அரசு விழாக்களில் கூட கலந்துகொண்டதில்லை..சில கெளரவங்களை பெறாமல் கெளரவமாக மறுப்பதுதான் மிகப்பெரிய கெளரவம்..இசை அரசன் அதைச் செய்யாமல் இசைந்திருக்கக் கூடாது.
– ரமணன்.இசைஞானி இளையராஜா இசைத்துறையில் வழங்கி வரும் தொடர் பங்களிப்புக்காக இதுவரை ஐந்து முறை தேசிய விருது பெற்றுள்ளார்.'சாகர சங்கமம்', 'ருத்ர வீணா' என இரு தெலுங்கு படங்களுக்கும்'சிந்து பைரவி' என்ற தமிழ் படத்திற்கும் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வென்றுள்ளார். 'பழசிராஜா' மற்றும் 'தாரை தப்பட்டை' படத்துக்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதையும் இளையராஜா வென்றுள்ளார். 2018ஆம் ஆண்டு இந்திய அரசின் இரண்டாவது மிக உயரிய விருதான ''பத்ம விபூஷண்" விருது இளையராஜாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது..அண்மையில் இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராக குடியரசு தலைவரின் நியமன உறுப்பினர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்..நியமன உறுப்பினர்கள் எப்படி நியமிக்கப்படுகிறார்கள்?.1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி இந்திய அரசியலமைப்பின் நான்காவது அட்டவணையின்படி, மாநிலங்களவையில் 216 உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும், அதில் 12 உறுப்பினர்கள் குடியரசு தலைவரால் பரிந்துரைக்கப்பட வேண்டும், மீதமுள்ள 204 பேர், மாநிலங்களைப் பிரதிநிதித்துவப்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த 12 பேரை நியமன உறுப்பினர்களாக நியமிக்கும் மரபு இப்போதும் கடைப்பிடிக்கப்படுகிறது..இருப்பினும், தற்போதைய பலமான 245 உறுப்பினர்களில் 233 பேர் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள். 12 பேர் குடியரசு தலைவரால் நியமிக்கப்படுபவர்கள்..மாநிலங்களவையை மக்களவை போல பெரும்பான்மை பலம் இல்லை என்று கூறி கலைத்துவிட முடியாது. அதன் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் ஒவ்வோர் இரண்டாவது வருடமும் ஓய்வு பெறுகின்றனர். மக்களவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முழு பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். ஆனால், மாநிலங்களவையில் ஒருவர் எம்.பி பதவி ஏற்றுக் கொண்ட நாளில் இருந்து ஆறு வருடங்களுக்கு அந்தப் பதவியில் இருக்க முடியும். இடையில் மக்களவை கலைக்கப்பட்டாலும் மாநிலங்களவை அப்படியே தொடரும்..மாநிலங்களவையில் கட்சிகளின் பலம் அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட்டு தேர்வாகும் உறுப்பினர்கள் நீங்கலாக மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டோ குடியரசு தலைவரால் அவரது அதிகாரத்துக்கு உள்பட்டு நேரடியாக நியமிக்கப்படக் கூடிய தகுதியை 12 உறுப்பினர்கள் பெறுகின்றனர். அவர்கள் பொதுவாக இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமூக சேவையில் சிறப்பு பங்களிப்பை வழங்கியவர்களாக இருப்பது நடைமுறையில் கடைப்பிடிக்கப்படும் மரபு. மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிக்க உரிமை இல்லை. எனினும், அவர்கள் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கலாம்..டெல்லியில் எம்.பி. குடியிருப்பு வளாகத்தில் ஒரு குடியிருப்பு, பிராட்பேண்ட் வசதியுடன் கூடிய தொலைபேசி இணைப்பு, எரிவாயு இணைப்பு வசதிகள், மாத ஊதியம், அலுவலக படி, உதவியாளர் படி, நாடாளுமன்ற கூட்டத்தொடர் காலத்தில் வந்து போக விமானம் அல்லது ரயில் இலவச பயணச் சலுகை, இதுதவிர பிற எம்.பி.க்களுக்கு என்னவெல்லாம் சலுகைகள், ஊதியம் தரப்படுகிறதோ அதையே நியமன உறுப்பினர்களும் பாரபட்சமின்றி பெறுவார்கள்..ஒரு நாடளுமன்ற உருப்பினர் என்ற கெளரவம் ஒரு தமிழக இசைக்கலைஞனுக்கு அளிக்கப்பட்டிருப்பதில் அனைவருக்கும் மகிழ்ச்சிதான். இசையில் அவர் தொட்ட உயரங்களுக்கு அவருக்கு இன்னும் சிறப்பான கெளரவங்கள் அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே பலரின் கருத்து..ஆனால், அவருடைய நியமனம் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. அதற்கு காரணம் ஒரு புத்தகமும் அதன் முன்னுரையும் தான். அந்த ஆங்கில புத்தகம் இளையராஜாவின் முன்னுரையுடன் சில மாதங்களுக்கு முன் வெளிவந்திருக்கிறது, அந்த முன்னுரையில் இளையராஜா அவரது இயல்புக்கு மாறாக, மோடியைப் புகழ்ந்து அம்பேத்காருடன் ஒப்பிட்டு எழுதியதும், அடுத்த ஒருசில மாதங்களில் எம்.பி. பதவி கிடைத்திருப்பதற்கும் பின்னிருக்கும் அரசியல்தான் சர்ச்சையாகியிருக்கிறது..இளையராஜா தானாக விரும்பி இந்த சர்ச்சையில் சிக்கினாரா, சிக்கவைக்கப்பட்டாரா என்பது அவருக்கு மட்டுமே தெரியும். மற்றபடி, அவருக்கு பத்மவிபூஷண் பட்டம் கொடுக்கப்பட்டபோதோ, மற்ற தேசிய விருதுகள் கிடைத்தபோதோ அவர்மீது தனிப்பட்ட விமர்சனம் ஏதும் எழவில்லை. ஏனென்றால், அப்போது இளையராஜா இசையில் மட்டுமே கவனத்திலிருந்தார்..ஆனால், தற்போது வழங்கப்பட்டுள்ள நான்கு நியமன எம்.பி. பதவிகளும் தென்னிந்திய மாநிலங்களுக்கே வழங்கப்பட்டுள்ளன. இளையராஜாவோடு, இயக்குநர் ராஜமௌலியின் தந்தை கதாசிரியர் விஜயேந்திர பிரசாத், வீரேந்திர ஹெக்டே மற்றும் பி.டி.உஷா ஆகியோர் நியமன எம்.பி. ஆகிறார்கள். இளையராஜா தவிர்த்த மூவரும்கூட தங்களை மோடி ஆதரவாளர்களாகக் காட்டிக்கொண்டவர்கள்தான். இந்த நியமனம் மூலம் ராஜாவும் அரசுக்கு எதிரான கருத்துகளை அது நியாமானதாகயிருந்தாலும் சொல்ல முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறார்..தென்னிந்தியாவில் காலூன்ற முயற்சி செய்யும் மோடி-அமித்ஷா திட்டத்தின்(சமீப ஹைதராபாத் கூட்டத்தில் பேசபட்டது) ஓர் அங்கமாகவே தற்போதைய நியமனப் பதவிகள் பார்க்கப்படுகின்றன..சர்ச்சை எழுந்திருப்பதற்கு மற்றொரு காரணம் இந்த நியமனம் குறித்து வெளியாகியிருக்கும் ஒன்றிய அரசின் செய்திக்குறிப்பு.."தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தலித் குடும்பத்தில் பிறந்தவர். இவர் இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார், இளையராஜா இந்த நிலையை எட்டுவதற்கு எண்ணற்ற இன்னல்களையும், சாதி அடிப்படையிலான பாகுபாடுகளையும் சந்திக்க நேர்ந்தது, இருப்பினும் அவர் அத்தகைய தடைகளை எல்லாம் உடைத்து நாட்டின் முன்னணி இசைக் கலைஞர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார்" என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. குடியரசு தலைவரின் நியமன உறுப்பினராவதற்கு சாதி/ இனம் ஒரு தகுதியில்லை. மேலும் சில ஆண்டுகளுக்கு முன் இளையராஜாவின் வாழ்க்கை கதையை ஒரு எழுத்தாளர் எழுதியபோது அதில் அவர் தலித் என அடையாளம் காட்டபட்டதற்காக கோபம் அடைந்து (ராஜாவின் கோபம் உலகம் அறிந்தது). வழக்கறிஞர் நோட்டிஸ் அனுப்பியவர். அந்த நிலையில் இந்த வார்த்தைகள் பலரை கோபத்துக்குள்ளாக்கியிருக்கிறது..மேலும், இம்மாதிரி கெளரவ நியமனம் பெற்ற சச்சின், லதா மங்கேஷ்கர். பிரபலங்கள் மாநிலங்கள் அவையில் மக்கள் பிரச்னைகளைப் பேசியதே இல்லை. சச்சின் அவைக்கூட்டங்களில் கூட கலந்து கொண்டதில்லை. குடியரசு தினம் போன்ற அரசு விழாக்களில் கூட கலந்துகொண்டதில்லை..சில கெளரவங்களை பெறாமல் கெளரவமாக மறுப்பதுதான் மிகப்பெரிய கெளரவம்..இசை அரசன் அதைச் செய்யாமல் இசைந்திருக்கக் கூடாது.