ஓவியம் : தெய்வா. – பாரதி.காந்தியின் அகிம்சை தத்துவத்தை தனக்கே உரிய ஆர்வத்துடன் விளக்கிக் கொண்டிருந்தாள் மனோகரி. கடைசி வரிசை மாணவர்கள் இருவர் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டிருந்ததைக் கவனித்தாள்..சட்டென்று தன் உரையை நிறுத்திக் கொண்டாள்.."போத் ஆஃப் யூ கெட் அப். அப்படி என்ன பேச வேண்டியிருக்கிறது? பாடத்தில் சந்தேகம் ஏதாவது இருந்தால் அதை என்னிடம் கேளுங்கள். பக்கத்தில் இருப்பவனிடம் கேட்டால் பதில் கிடைக்குமா என்ன?"."அது ஒண்ணுமில்லைங்க மேடம். காந்தியாலதான் பல பிரச்னைகள் இந்த நாட்டுக்கு வந்ததுன்னு இவன் சொல்றான்."."ஓ! அந்த அளவுக்கு காந்தியை தெரிந்து வைத்திருக்கிறாரோ? அவரைப் பற்றி எந்த புத்தகமெல்லாம் படித்திருக்கேப்பா, கொஞ்சம் சொல்லு.".எதுவும் படித்ததில்லை என்று அவன் தலையசைத்தான்.."எதையும் படிக்காமல் எதையும் தெரிந்து கொள்ளாமல் யாரோ எவரோ பேசுவதையெல்லாம் தலையில் ஏற்றிக் கொள்கிறீர்களே. அது உண்மையா இல்லையா என்று நாலு புத்தகங்களைப் படித்தாவது தெரிந்து கொள்ளலாமே. அதுவும் முடியாவிட்டால் வகுப்பில் நாங்கள் சொல்லித்தருவதையாவது பொறுமையாக கேட்கலாமே. ".இரண்டு மாணவர்களும் தலையைக் குனிந்தவாறு நின்று கொண்டிருந்தார்கள். இவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. பெரிய ஆளுமைகளைத் தூக்கி எறிந்து பேசுவது இப்போதெல்லாம் வழக்கமாகிவிட்டது. அப்படி பேசுவதால் தாங்கள் அவர்களைவிட உயர்ந்தவர்களாக ஆகிவிடுவதாக நினைக்கிறார்களோ?.மாணவர்களை உட்காரச் சொல்லிவிட்டு வகுப்பைத் தொடர்ந்தாள் மனோகரி..வராந்தாவில் நிர்மலா நின்றுக்கொண்டிருந்தாள். ஏதோ முக்கியமாக இருக்க வேண்டும். டிபார்ட்மெண்ட்டில் பேச முடியாது. சட்டென்று எழுந்து வெளியில் வந்தாள் மனோகரி.."என்ன ஆச்சு நிர்மலா? கையெழுத்து கிடைச்சுதா?"."ஆமாம் மேடம். முதல்ல கதவைத் திறந்தவர் எங்க எல்லோரையும் கூட்டமா பார்த்ததும் அதிர்ச்சி ஆயிட்டாரு. என்னை மட்டும் உள்ளே கூப்பிட்டு, 'எதுக்காக அமுல்ராஜையெல்லாம் கூட்டிக்கிட்டு வந்திருக்கே? அவன்கிட்ட எதையாவது உளறி வெச்சியா என்ன?' ன்னு கேட்டார்..'அதெல்லாம் ஒண்ணுமில்லை சார். எல்லா புரொபஸருங்க கிட்டேயும் சேர்ந்து போய் கையெழுத்து வாங்கலாம்னு சொன்னாங்க. அதுதான் சேர்ந்து வந்திருக்கோம்'ன்னு சொன்னேன்.."பிறகு என்ன நடந்தது?"."தீஸிஸை கொண்டான்னு சொல்லி கையெழுத்துப் போட்டு கொடுத்துட்டாரு" நிர்மலாவின் முகத்தில் ஒரு விஷமப் புன்னகை. சாமர்த்தியமாக ஜெயித்துவிட்ட பூரிப்பு..அமுல்ராஜ் இடதுசாரி மாணவர் அமைப்பைச் சேர்ந்தவன். அவனை அனுப்பியது நல்லதாகப் போயிற்று. அவனைப் பார்த்ததும் பயந்து போயிருக்கிறார் ரத்னசாமி. நிர்மலாவின் முகத்திலிருந்த விஷமப் புன்னகை இப்போது மனோகரிக்கும் தொற்றிக் கொண்டது..என்ன காரணம், எதற்காக கையெழுத்து வாங்க ஒன்றாகப் போக வேண்டும் என்று எதையுமே அமுல்ராஜுக்கு விளக்கி சொல்லவில்லை மனோகரி..சேர்ந்து போங்கன்னு சொன்னது மனோகரியாக இருந்ததால் 'ஏதாவது காரணம் இருக்கும்' என்று ஒரு கேள்வியும் கேட்காமல் ஒப்புக் கொண்டான் அமுல்ராஜ்..வகுப்பைத் தொடர்ந்து நடத்திவிட்டு லைப்ரரிக்குப் போனாள் மனோகரி..வில் ட்யூ ரண்ட்டின் தொகுப்புகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் நான்காவது தொகுப்பை எடுத்து வைத்துக் கொண்டு வாசிக்க ஆரம்பித்தாள்..உலக நாகரீகங்களின் வரலாற்றை ஆய்வு செய்து பத்து தொகுப்புகளுக்கு மேல் எழுதியிருக்கிறார் வில் ட்யூ ரண்ட் . என்ன ஒரு அற்புதமான மொழி நடை! ஒவ்வொரு தொகுப்புக்கும் அவர் வைத்திருக்கும் தலைப்பே கவித்துவமாக இருக்கிறதே!."என்ன மனோகரி, ஹிஸ்ட்ரி புக்கெல்லாம் படிச்சிக்கிட்டு இருக்கீங்க?" என்று கேட்டவாறு எதிரில் உட்கார்ந்தாள் லீலாவதி.."நிறைய ஹிஸ்டோரியன்ஸ் தத்துவ ஞானிகளும்கூட. தெரியுமா உனக்கு?"."உங்ககிட்ட எதைக் கேட்டாலும் ஸீரியசாதான் பதில் வரும்"."பாண்டிச்சேரி யுனிவர்சிட்டியில புரொபஸர் சிவனேசன்னு யாரையாவது தெரியுமா லீலா உனக்கு? உங்க டிபார்ட்மெண்ட்தான்"."சிவநேசனா? அவரைத் தெரியாதவங்களே இருக்க முடியாது. பெரிய ஸ்காலர். டீச்சிங், ரிசர்ச் இரண்டுலேயும் மேதாவியா சில பேர்தான் இருக்க முடியும். அவர் அந்த ரகம். எதுக்கு கேட்கறீங்க?"."அவர் எந்த காலேஜில படிச்சாரு தெரியுமா?"."அந்த விவரமெல்லாம் தெரியல மனோகரி. எங்க இங்கிலீஷ் அசோஸியேஷன் மீட்டிங் ஒண்ணு ஆர்கனைஸ் பண்ணனும். யாரைக் கூப்பிடலாம்னு யோசிச்சிட்டிருந்தேன். இப்ப நீங்க எனக்கு ஐடியா கொடுத்துட்டீங்க".சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்பினாள் லீலா. அவளுடைய இரண்டாவது பையனுக்கு டெங்கு வந்தது. நாத்தனார் கல்யாணத்துக்கு சீர் செய்ய வேண்டியிருந்தது என்று ஏதேதோ விஷயங்களை தொட்டுப் பேசிவிட்டுக் கிளம்பினாள்..அடுத்த பத்து நாட்களில் ஆங்கிலத் துறையில் டாக்டர் சிவனேசனை வரவேற்க விமரிசையாக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன..லீலாவதி பதட்டத்தில் இருந்தாள்.."இன்னிக்கு ஏதோ மாணவர்கள் போராட்டம் இருக்கும்னு பேசிக்கிறாங்க மனோகரி. இந்த ஃபங்ஷன் ஒழுங்கா நடக்கணுமேன்னு கவலையா இருக்கு. டாக்டர் சிவநேசன் பத்து மணி ஃபங்ஷனுக்கு ஒன்பதரைக்கே வந்துடுவாராம். அவர் வந்தால் பிரின்சிபால் ரூமில் உட்கார வைக்கிறேன். நீங்க வந்து கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருக்கீங்களா?"."கட்டாயம் வர்றேன். நீ போய் மற்ற வேலைகளை கவனி" என்று சொல்லிவிட்டு மெல்ல எழுந்து பிரின்சிபால் ரூமுக்குப் போனாள் மனோகரி..யார் இந்த சிவநேசன்? இனியா சொல்கிறாள் அவருக்கு இவளைத் தெரியும் என்று. ஒருவேளை கல்லூரியில் இவளுடன் படித்தவரோ? நேரில் பார்த்தால் தெரிந்துவிடும். மனோகரிக்குள் ஒரு புதிய ஆர்வம் பரபரத்தது..போர்டிகோவில் டாக்டர் சிவநேசனை வரவேற்று பிரின்சிபல் அறைக்கு அழைத்து வந்தாள் லீலாவதி. எதிரில் வந்த இனியா புன்சிரிப்புடன் அவருக்கு வணக்கம் சொன்னாள்.."ஓ, நீ அந்த ரிசர்ச் ஸ்காலர்தானே? பாண்டிச்சேரிக்கு வந்திருந்தாய் இல்லையா?"."ஆமாம் சார்"."எங்கே உங்க கைடு, டாக்டர் தேவ மனோகரி?"."அவங்க ஃபிலாசஃபி டிபார்ட்மெண்ட் சார். பிரின்சிபால் ரூமுல உங்களுக்காகதான் காத்துக்கிட்டிருக்காங்க" என்று முந்திக்கொண்டு பதில் சொன்னாள் லீலாவதி..'இந்த மனோகரி சரியான அழுத்தக்காரி. இவரை நல்லாத் தெரியும்னு சொல்லவேயில்லையே. உனக்குத் தெரியுமான்னுல்ல நம்மகிட்ட கேட்டுக்கிட்டிருந்தாங்க' என்ற லீலாவதியின் எண்ண ஓட்டம் அவள் முகத்திலும் தெரிந்தது..வராந்தாவின் எதிரில் தபதபவென்று ஓடிவந்த மாணவர் கூட்டத்தை இவர்கள் ஒருவரும் எதிர்பார்க்கவில்லை. சட்டென்று சுதாரித்துக் கொண்டது இனியாதான்.."சார், நாம கொஞ்சம் ஒதுங்கி நிற்கலாம்" என்று சொல்லிவிட்டு டாக்டர் சிவநேசனின் கையைப் பிடித்து வராந்தாவின் ஓரமாக அவரை நகர்த்தினாள் இனியா. ஆனால் அதற்குள் அந்த விபரீதம் நடந்துவிட்டது..கிரிக்கெட் பேட் ஒன்றை தூக்கிக்கொண்டு ஒருவரையொருவர் துரத்திக் கொண்டு ஓடிய மாணவர்கள் இவர்களைக் கடந்த போது மட்டையின் முனை சிவநேசனின் நெற்றிப் பொட்டைத் தாக்கி அவரை நிலைகுலைய வைத்தது..இனியா பதற்றத்தில் வீரிட்டாள். லீலாவதிக்கு நிலைமை புரிவதற்குள் சிவநேசன் சுவற்றைப் பிடித்துக் கொண்டே சரிந்தார். மயங்கி விழுந்தார்..அடுத்த கணம் பேராசிரியர்களும், அலுவலக ஊழியர்களும் ஓடி வந்தார்கள். பிரின்சிபாலும் மனோகரியும் கூட சத்தம் கேட்டு வெளியில் வந்தார்கள்..விருந்தினராக வந்த ஒருவரை தாக்கிவிட்டு ஓடிய மாணவர்களை நினைத்து எல்லோருக்குமே பதறியது..சிவநேசனுக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதைப் புரிந்துகொண்டாள் மனோகரி..மெல்ல கண் திறந்து சுற்றிலும் பார்வையை சுழலவிட்டார் சிவநேசன். கூச்சத்துடன் எழுந்திருக்க முயற்சி செய்தார். உதவிக்கு கைகள் நீண்டன. எழுந்து நின்றபோது மீண்டும் தலை சுற்றியது..அவரைப் படிக்கட்டில் மெதுவாக இறங்க வைத்து காரில் ஏற்றிக் கொண்டு பக்கத்திலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துப் போனார்கள்..அவசர சிகிச்சை பிரிவில் சிவநேசனுக்கு பி.பி. செக் செய்யப்பட்டது. அரை மயக்க நிலையில் ஈ.சி.ஜி.யும் எடுத்தார்கள்..இவருக்கு உடம்பில் என்ன கோளாறு இருக்கிறதோ என்னவோ, டாக்டர்கள் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாமல் விழித்தாள் லீலாவதி. வெளியில் நின்று கொண்டிருந்த மனோகரியிடம் விசாரித்தாள்.."உங்களுக்கு அவரைத் தெரியும் போலிருக்கிறதே மனோகரி? இங்கே டாக்டர்கள் ஏதேதோ கேட்கறாங்க, எனக்கு ஒரு விவரமும் தெரியலை"."ஸாரி லீலாவதி, அவர் தான் என்னைத் தெரியும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். எனக்கு இவரை யாரென்றே தெரியவில்லை. நான் உனக்கு உதவி செய்யதான் இங்கே நிற்கிறேன். ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட்".இருவரும் உள்ளே போனபோது அரைமயக்க நிலையில் இருந்தார் சிவநேசன். இவர்கள் இருவரையும் கைகாட்டி "இவங்க யார்னு அடையாளம் தெரியுதா சார்?" என்று கேட்டார் டாக்டர்..சிவநேசனின் பார்வை ஒரு கணம் மனோகரியின் மீது நிலைத்தது. 'தேவா' என்று அவர் உதடுகள் முணுமுணுத்தது. மீண்டும் சோர்வுடன் கண்களை மூடிக்கொண்டார்..தன் முகத்தில் தோன்றிய மெல்லிய அதிர்ச்சியை மறைத்துக் கொள்ள ஜன்னலுக்கு வெளியே தொலைதூரத்தில் யாரையோ தேடுவதுபோல் பார்த்துக் கொண்டிருந்தாள் மனோகரி. தன்னை சமாளித்துக்கொள்ள அவளுக்கு சிறிது நேரமாயிற்று..(தொடரும்)
ஓவியம் : தெய்வா. – பாரதி.காந்தியின் அகிம்சை தத்துவத்தை தனக்கே உரிய ஆர்வத்துடன் விளக்கிக் கொண்டிருந்தாள் மனோகரி. கடைசி வரிசை மாணவர்கள் இருவர் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டிருந்ததைக் கவனித்தாள்..சட்டென்று தன் உரையை நிறுத்திக் கொண்டாள்.."போத் ஆஃப் யூ கெட் அப். அப்படி என்ன பேச வேண்டியிருக்கிறது? பாடத்தில் சந்தேகம் ஏதாவது இருந்தால் அதை என்னிடம் கேளுங்கள். பக்கத்தில் இருப்பவனிடம் கேட்டால் பதில் கிடைக்குமா என்ன?"."அது ஒண்ணுமில்லைங்க மேடம். காந்தியாலதான் பல பிரச்னைகள் இந்த நாட்டுக்கு வந்ததுன்னு இவன் சொல்றான்."."ஓ! அந்த அளவுக்கு காந்தியை தெரிந்து வைத்திருக்கிறாரோ? அவரைப் பற்றி எந்த புத்தகமெல்லாம் படித்திருக்கேப்பா, கொஞ்சம் சொல்லு.".எதுவும் படித்ததில்லை என்று அவன் தலையசைத்தான்.."எதையும் படிக்காமல் எதையும் தெரிந்து கொள்ளாமல் யாரோ எவரோ பேசுவதையெல்லாம் தலையில் ஏற்றிக் கொள்கிறீர்களே. அது உண்மையா இல்லையா என்று நாலு புத்தகங்களைப் படித்தாவது தெரிந்து கொள்ளலாமே. அதுவும் முடியாவிட்டால் வகுப்பில் நாங்கள் சொல்லித்தருவதையாவது பொறுமையாக கேட்கலாமே. ".இரண்டு மாணவர்களும் தலையைக் குனிந்தவாறு நின்று கொண்டிருந்தார்கள். இவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. பெரிய ஆளுமைகளைத் தூக்கி எறிந்து பேசுவது இப்போதெல்லாம் வழக்கமாகிவிட்டது. அப்படி பேசுவதால் தாங்கள் அவர்களைவிட உயர்ந்தவர்களாக ஆகிவிடுவதாக நினைக்கிறார்களோ?.மாணவர்களை உட்காரச் சொல்லிவிட்டு வகுப்பைத் தொடர்ந்தாள் மனோகரி..வராந்தாவில் நிர்மலா நின்றுக்கொண்டிருந்தாள். ஏதோ முக்கியமாக இருக்க வேண்டும். டிபார்ட்மெண்ட்டில் பேச முடியாது. சட்டென்று எழுந்து வெளியில் வந்தாள் மனோகரி.."என்ன ஆச்சு நிர்மலா? கையெழுத்து கிடைச்சுதா?"."ஆமாம் மேடம். முதல்ல கதவைத் திறந்தவர் எங்க எல்லோரையும் கூட்டமா பார்த்ததும் அதிர்ச்சி ஆயிட்டாரு. என்னை மட்டும் உள்ளே கூப்பிட்டு, 'எதுக்காக அமுல்ராஜையெல்லாம் கூட்டிக்கிட்டு வந்திருக்கே? அவன்கிட்ட எதையாவது உளறி வெச்சியா என்ன?' ன்னு கேட்டார்..'அதெல்லாம் ஒண்ணுமில்லை சார். எல்லா புரொபஸருங்க கிட்டேயும் சேர்ந்து போய் கையெழுத்து வாங்கலாம்னு சொன்னாங்க. அதுதான் சேர்ந்து வந்திருக்கோம்'ன்னு சொன்னேன்.."பிறகு என்ன நடந்தது?"."தீஸிஸை கொண்டான்னு சொல்லி கையெழுத்துப் போட்டு கொடுத்துட்டாரு" நிர்மலாவின் முகத்தில் ஒரு விஷமப் புன்னகை. சாமர்த்தியமாக ஜெயித்துவிட்ட பூரிப்பு..அமுல்ராஜ் இடதுசாரி மாணவர் அமைப்பைச் சேர்ந்தவன். அவனை அனுப்பியது நல்லதாகப் போயிற்று. அவனைப் பார்த்ததும் பயந்து போயிருக்கிறார் ரத்னசாமி. நிர்மலாவின் முகத்திலிருந்த விஷமப் புன்னகை இப்போது மனோகரிக்கும் தொற்றிக் கொண்டது..என்ன காரணம், எதற்காக கையெழுத்து வாங்க ஒன்றாகப் போக வேண்டும் என்று எதையுமே அமுல்ராஜுக்கு விளக்கி சொல்லவில்லை மனோகரி..சேர்ந்து போங்கன்னு சொன்னது மனோகரியாக இருந்ததால் 'ஏதாவது காரணம் இருக்கும்' என்று ஒரு கேள்வியும் கேட்காமல் ஒப்புக் கொண்டான் அமுல்ராஜ்..வகுப்பைத் தொடர்ந்து நடத்திவிட்டு லைப்ரரிக்குப் போனாள் மனோகரி..வில் ட்யூ ரண்ட்டின் தொகுப்புகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் நான்காவது தொகுப்பை எடுத்து வைத்துக் கொண்டு வாசிக்க ஆரம்பித்தாள்..உலக நாகரீகங்களின் வரலாற்றை ஆய்வு செய்து பத்து தொகுப்புகளுக்கு மேல் எழுதியிருக்கிறார் வில் ட்யூ ரண்ட் . என்ன ஒரு அற்புதமான மொழி நடை! ஒவ்வொரு தொகுப்புக்கும் அவர் வைத்திருக்கும் தலைப்பே கவித்துவமாக இருக்கிறதே!."என்ன மனோகரி, ஹிஸ்ட்ரி புக்கெல்லாம் படிச்சிக்கிட்டு இருக்கீங்க?" என்று கேட்டவாறு எதிரில் உட்கார்ந்தாள் லீலாவதி.."நிறைய ஹிஸ்டோரியன்ஸ் தத்துவ ஞானிகளும்கூட. தெரியுமா உனக்கு?"."உங்ககிட்ட எதைக் கேட்டாலும் ஸீரியசாதான் பதில் வரும்"."பாண்டிச்சேரி யுனிவர்சிட்டியில புரொபஸர் சிவனேசன்னு யாரையாவது தெரியுமா லீலா உனக்கு? உங்க டிபார்ட்மெண்ட்தான்"."சிவநேசனா? அவரைத் தெரியாதவங்களே இருக்க முடியாது. பெரிய ஸ்காலர். டீச்சிங், ரிசர்ச் இரண்டுலேயும் மேதாவியா சில பேர்தான் இருக்க முடியும். அவர் அந்த ரகம். எதுக்கு கேட்கறீங்க?"."அவர் எந்த காலேஜில படிச்சாரு தெரியுமா?"."அந்த விவரமெல்லாம் தெரியல மனோகரி. எங்க இங்கிலீஷ் அசோஸியேஷன் மீட்டிங் ஒண்ணு ஆர்கனைஸ் பண்ணனும். யாரைக் கூப்பிடலாம்னு யோசிச்சிட்டிருந்தேன். இப்ப நீங்க எனக்கு ஐடியா கொடுத்துட்டீங்க".சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்பினாள் லீலா. அவளுடைய இரண்டாவது பையனுக்கு டெங்கு வந்தது. நாத்தனார் கல்யாணத்துக்கு சீர் செய்ய வேண்டியிருந்தது என்று ஏதேதோ விஷயங்களை தொட்டுப் பேசிவிட்டுக் கிளம்பினாள்..அடுத்த பத்து நாட்களில் ஆங்கிலத் துறையில் டாக்டர் சிவனேசனை வரவேற்க விமரிசையாக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன..லீலாவதி பதட்டத்தில் இருந்தாள்.."இன்னிக்கு ஏதோ மாணவர்கள் போராட்டம் இருக்கும்னு பேசிக்கிறாங்க மனோகரி. இந்த ஃபங்ஷன் ஒழுங்கா நடக்கணுமேன்னு கவலையா இருக்கு. டாக்டர் சிவநேசன் பத்து மணி ஃபங்ஷனுக்கு ஒன்பதரைக்கே வந்துடுவாராம். அவர் வந்தால் பிரின்சிபால் ரூமில் உட்கார வைக்கிறேன். நீங்க வந்து கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருக்கீங்களா?"."கட்டாயம் வர்றேன். நீ போய் மற்ற வேலைகளை கவனி" என்று சொல்லிவிட்டு மெல்ல எழுந்து பிரின்சிபால் ரூமுக்குப் போனாள் மனோகரி..யார் இந்த சிவநேசன்? இனியா சொல்கிறாள் அவருக்கு இவளைத் தெரியும் என்று. ஒருவேளை கல்லூரியில் இவளுடன் படித்தவரோ? நேரில் பார்த்தால் தெரிந்துவிடும். மனோகரிக்குள் ஒரு புதிய ஆர்வம் பரபரத்தது..போர்டிகோவில் டாக்டர் சிவநேசனை வரவேற்று பிரின்சிபல் அறைக்கு அழைத்து வந்தாள் லீலாவதி. எதிரில் வந்த இனியா புன்சிரிப்புடன் அவருக்கு வணக்கம் சொன்னாள்.."ஓ, நீ அந்த ரிசர்ச் ஸ்காலர்தானே? பாண்டிச்சேரிக்கு வந்திருந்தாய் இல்லையா?"."ஆமாம் சார்"."எங்கே உங்க கைடு, டாக்டர் தேவ மனோகரி?"."அவங்க ஃபிலாசஃபி டிபார்ட்மெண்ட் சார். பிரின்சிபால் ரூமுல உங்களுக்காகதான் காத்துக்கிட்டிருக்காங்க" என்று முந்திக்கொண்டு பதில் சொன்னாள் லீலாவதி..'இந்த மனோகரி சரியான அழுத்தக்காரி. இவரை நல்லாத் தெரியும்னு சொல்லவேயில்லையே. உனக்குத் தெரியுமான்னுல்ல நம்மகிட்ட கேட்டுக்கிட்டிருந்தாங்க' என்ற லீலாவதியின் எண்ண ஓட்டம் அவள் முகத்திலும் தெரிந்தது..வராந்தாவின் எதிரில் தபதபவென்று ஓடிவந்த மாணவர் கூட்டத்தை இவர்கள் ஒருவரும் எதிர்பார்க்கவில்லை. சட்டென்று சுதாரித்துக் கொண்டது இனியாதான்.."சார், நாம கொஞ்சம் ஒதுங்கி நிற்கலாம்" என்று சொல்லிவிட்டு டாக்டர் சிவநேசனின் கையைப் பிடித்து வராந்தாவின் ஓரமாக அவரை நகர்த்தினாள் இனியா. ஆனால் அதற்குள் அந்த விபரீதம் நடந்துவிட்டது..கிரிக்கெட் பேட் ஒன்றை தூக்கிக்கொண்டு ஒருவரையொருவர் துரத்திக் கொண்டு ஓடிய மாணவர்கள் இவர்களைக் கடந்த போது மட்டையின் முனை சிவநேசனின் நெற்றிப் பொட்டைத் தாக்கி அவரை நிலைகுலைய வைத்தது..இனியா பதற்றத்தில் வீரிட்டாள். லீலாவதிக்கு நிலைமை புரிவதற்குள் சிவநேசன் சுவற்றைப் பிடித்துக் கொண்டே சரிந்தார். மயங்கி விழுந்தார்..அடுத்த கணம் பேராசிரியர்களும், அலுவலக ஊழியர்களும் ஓடி வந்தார்கள். பிரின்சிபாலும் மனோகரியும் கூட சத்தம் கேட்டு வெளியில் வந்தார்கள்..விருந்தினராக வந்த ஒருவரை தாக்கிவிட்டு ஓடிய மாணவர்களை நினைத்து எல்லோருக்குமே பதறியது..சிவநேசனுக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதைப் புரிந்துகொண்டாள் மனோகரி..மெல்ல கண் திறந்து சுற்றிலும் பார்வையை சுழலவிட்டார் சிவநேசன். கூச்சத்துடன் எழுந்திருக்க முயற்சி செய்தார். உதவிக்கு கைகள் நீண்டன. எழுந்து நின்றபோது மீண்டும் தலை சுற்றியது..அவரைப் படிக்கட்டில் மெதுவாக இறங்க வைத்து காரில் ஏற்றிக் கொண்டு பக்கத்திலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துப் போனார்கள்..அவசர சிகிச்சை பிரிவில் சிவநேசனுக்கு பி.பி. செக் செய்யப்பட்டது. அரை மயக்க நிலையில் ஈ.சி.ஜி.யும் எடுத்தார்கள்..இவருக்கு உடம்பில் என்ன கோளாறு இருக்கிறதோ என்னவோ, டாக்டர்கள் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாமல் விழித்தாள் லீலாவதி. வெளியில் நின்று கொண்டிருந்த மனோகரியிடம் விசாரித்தாள்.."உங்களுக்கு அவரைத் தெரியும் போலிருக்கிறதே மனோகரி? இங்கே டாக்டர்கள் ஏதேதோ கேட்கறாங்க, எனக்கு ஒரு விவரமும் தெரியலை"."ஸாரி லீலாவதி, அவர் தான் என்னைத் தெரியும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். எனக்கு இவரை யாரென்றே தெரியவில்லை. நான் உனக்கு உதவி செய்யதான் இங்கே நிற்கிறேன். ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட்".இருவரும் உள்ளே போனபோது அரைமயக்க நிலையில் இருந்தார் சிவநேசன். இவர்கள் இருவரையும் கைகாட்டி "இவங்க யார்னு அடையாளம் தெரியுதா சார்?" என்று கேட்டார் டாக்டர்..சிவநேசனின் பார்வை ஒரு கணம் மனோகரியின் மீது நிலைத்தது. 'தேவா' என்று அவர் உதடுகள் முணுமுணுத்தது. மீண்டும் சோர்வுடன் கண்களை மூடிக்கொண்டார்..தன் முகத்தில் தோன்றிய மெல்லிய அதிர்ச்சியை மறைத்துக் கொள்ள ஜன்னலுக்கு வெளியே தொலைதூரத்தில் யாரையோ தேடுவதுபோல் பார்த்துக் கொண்டிருந்தாள் மனோகரி. தன்னை சமாளித்துக்கொள்ள அவளுக்கு சிறிது நேரமாயிற்று..(தொடரும்)