
கணவன் : கடவுள்கிட்ட என்ன வேண்டிக்கிட்ட?
மனைவி : ஏழு பிறவியிலும், நீங்கதான் என் கணவரா அமையணும்னு வேண்டிகிட்டேன். நீங்க?
கணவன் : இது ஏழாவது பிறவியா இருக்கணும்னு வேண்டிகிட்டேன்."
"அப்பவெல்லாம் மக்கள் கையில் பணம் இருந்துச்சு… சாமியார்கள் கையில் திருவோடு இருந்துச்சு…"
"சரி… அதுக்கென்ன இப்ப..?"
"இப்பெல்லாம் சாமியார்கள் கையில் பணம் இருக்கு… மக்கள் கையில்தான் திருவோடு இருக்கு…"
– எம்.ராஜதிலகா, அரவக்குறிச்சிப்பட்டி
"அந்த பைனான்ஸ் கம்பெனிக்குப் பின்னால் ஒரு பாதை வச்சிருக்காங்களே, எதுக்கு?"
"அது ரன்வே!"
– சி.ஆர்.ஹரிஹரன், ஆலுவா, கேரளா
"பொழுது போகலன்னு பேச வந்தார்…"
"சரி, என்ன ஆச்சு?"
"பொழுது போய் நைட் வந்தாச்சு… இன்னும் அவர் எழுந்து போகிற மாதிரி தெரியல…"
– ஏ.நாகராஜன், பம்மல்
போலீஸ் : "உங்க வீட்டுக்கு வந்த திருடனுக்கு நீங்களே ஏன் கத்தியைத் தீட்டிக்கொடுத்தீங்க ?"
வந்தவர் : "அடுத்தது அவன் பக்கத்து வீட்டுக்குப் போகப் போறேன்னு சொன்னான் சார்."
– தீபிகா சாரதி, சென்னை
"அந்தப் பத்திரிகையில் நடிகை நளினாஸ்ரீ பிக்னிக் போனதையெல்லாம் ஒரு பெரிய நியூஸ்னு போட்டிருக்காங்களே…?"
"பிக்னிக் போனதுக்காக அந்த நியூஸ் இல்லே… பிகினி ட்ரெஸ்ல போனதாலதான் அந்த நியூஸ் "
– வி.ரேவதி, தஞ்சை