முகநூல் பக்கம்.தனக்குக் கீழ் பணிபுரியும் ஊழியருக்கு இதைவிடச் சிறப்பாக என்ன செய்ய முடியும்..பட்டினப்பாக்கம் ஆய்வாளர் ராஜேஷ்வரி அவர்களின் மனிதநேய பணி தொடர்கின்றது….26.02.22-ந் தேதி இரவு 9.30 மணியளவில் நான் பட்டினப்பாக்கம் காவல் நிலைய சரகத்தில் பணியில் இருந்தபோது சக பணியாளர் காவலர் சரவணன் மூக்கில் ரத்தம் வடிந்துகொண்டு வந்தார்..அவரிடம் நான், "யாராவது அடித்துவிட்டார்களா? எங்கேயாவது கீழே விழுந்துவிட்டாயா" என்று கேட்டபோது, "இல்லை… நான் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது தானாகவே மூக்கில் இருந்து ரத்தம் வந்தது. சரியாகிவிடும என்று நினைத்தேன். ஆனால் சரியாகவில்லை. அதேபோல் தனக்கு ஏற்கெனவே மூக்கில் இருந்து ரத்தம் வந்ததாகவும், அதை நான் யாரிடமும் கூறவில்லையென்றும், தற்போது அதிகமாக ரத்தம் வந்ததால் 'உயிர் போய்விடுமோ' என்று பயம் ஏற்பட்டது. உடனே உங்க ஞாபகம் வந்தது. என்னை எப்படியும் காப்பாற்றி விடுவீங்க என்று நினைத்து நீங்க இருக்கும் இடத்துக்கு தேடி வந்தேன்" என்று கூறினார்..தனக்கு சுகர் மற்றும் ரத்த அழுத்தம் அதிகம் இருப்பதாக தெரிவித்து மயங்கி விழந்தார். நான் உடனே என் வாகனத்தில் இருந்த துண்டை எடுத்து ரத்தத்தைத் துடைத்தேன். 108 வாகனம் வர தாமதம் ஆகும் என்பதால் உடனே என் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு மைலாப்பூரில் உள்ள BSS மந்துவமனையில் சிகிச்சைக்கு எடுத்துச் சென்றேன்..மருத்துவர் சிகிச்சை அளித்தார். ரத்தம் வருவது நிற்கவில்லை. அங்கிருந்து ENT மருத்துவமனை, அபிராமபுரம் கொண்டு செல்லப்பட்டது. உடனே மருத்துவர் சிகிச்சை அளித்தார். அவருக்கு உயர் அழுத்த ரத்தக் கொதிப்பு இருப்பதால் ரத்தம் வருகிறது. சிறிது நேரம் தாமதமாக வந்திருந்தால் மூளைக்குப் போகும் ரத்த நரம்பு வெடித்து உயிர்ச்சேதம் ஏற்பட்டு இருக்கும் என்று தெரிவித்து உடனே சிகிச்சை அளித்து admit செய்தார். இரவு சுமார் 01.00 மணி வரை அவர் உடன் இருந்து மருத்துவர் தீவிரச் சிகிச்சை அளித்த பின் உடல் நலம் முன்னேற்றம் ஏற்பட்டது. காவலர்கள் அனைவரும் உடன் இருந்து கவனித்துக் கொண்டனர்..காவலர் சரவணன் தனிமையில் வாழ்ந்து வருகிறார். உடன் இருந்து கவனிக்க யாரும் இல்லை என்பதால் மறுநாள் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவ Bill கட்ட 50.000|-எடுத்துச் சென்றேன்..காவலர் Discharge, Summary மற்றும் Bill receipt யை எடுத்து வரும்படி கூறினேன். காவலர் பூபதி நான்காவது மாடியில் இருந்து கீழ் தளத்தில் Bill கட்டும் இடத்திற்கு வந்து பணம் கட்டும் ரசீது கொடுத்தார்..Bill பார்த்ததும் அதிர்ந்துபோனேன்….அவற்றில் நோயாளி பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது..என்னை நோக்கி டாக்டர் மோகன காமேஸ்வரன் அவர்களுடைய துணைவியார் வந்தார். பார்ப்பதற்கு அம்மன் போன்று சிரித்த முகத்துடன் மகாலட்சுமி போன்று காட்சி அளித்தார்..அம்மா Bill எவ்வளவு கட்டவேண்டும் என்றேன்..என்னைக் கட்டி அணைத்துக்கொண்டு காவல்துறை செய்யும் தொண்டிற்கு ஈடு இணையில்லை. நீங்கள் பணம் எதுவும் கொடுக்க வேண்டாம் என்று கூறி பணம் வாங்க மறுத்துவிட்டார்..டாக்டரிடம் நான் தாங்கள் காவலர் உயிரைக் காப்பாற்றினீர்கள் மேலும் பணம் வாங்க மறுக்கின்றீர்களே என்று கூறியபோது,, இரவு நேரம் பணிமுடிந்து வீட்டுக்குப் போகும் நேரத்தில் தன்னிடம் பணிபுரியும் காவலர் உயிருக்குப் போராடும்போது அப்படியே விட்டு விட்டுப் போகாமல் மேலும் 108 வாகனம் வரும் வரை காத்திருக்காமல் அவரைச் சரியான நேரத்தில் உங்கள் வாகனத்தில் மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்து கூடவே நீங்கள் உங்கள் காவலர்களுடன் உடன் இருந்து அவரை கவனித்துக்கொண்டது மெய்சிலிர்க்க வைக்கிறது..உஷா வெங்கட் முகநூல் பக்கத்திலிருந்து…
முகநூல் பக்கம்.தனக்குக் கீழ் பணிபுரியும் ஊழியருக்கு இதைவிடச் சிறப்பாக என்ன செய்ய முடியும்..பட்டினப்பாக்கம் ஆய்வாளர் ராஜேஷ்வரி அவர்களின் மனிதநேய பணி தொடர்கின்றது….26.02.22-ந் தேதி இரவு 9.30 மணியளவில் நான் பட்டினப்பாக்கம் காவல் நிலைய சரகத்தில் பணியில் இருந்தபோது சக பணியாளர் காவலர் சரவணன் மூக்கில் ரத்தம் வடிந்துகொண்டு வந்தார்..அவரிடம் நான், "யாராவது அடித்துவிட்டார்களா? எங்கேயாவது கீழே விழுந்துவிட்டாயா" என்று கேட்டபோது, "இல்லை… நான் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது தானாகவே மூக்கில் இருந்து ரத்தம் வந்தது. சரியாகிவிடும என்று நினைத்தேன். ஆனால் சரியாகவில்லை. அதேபோல் தனக்கு ஏற்கெனவே மூக்கில் இருந்து ரத்தம் வந்ததாகவும், அதை நான் யாரிடமும் கூறவில்லையென்றும், தற்போது அதிகமாக ரத்தம் வந்ததால் 'உயிர் போய்விடுமோ' என்று பயம் ஏற்பட்டது. உடனே உங்க ஞாபகம் வந்தது. என்னை எப்படியும் காப்பாற்றி விடுவீங்க என்று நினைத்து நீங்க இருக்கும் இடத்துக்கு தேடி வந்தேன்" என்று கூறினார்..தனக்கு சுகர் மற்றும் ரத்த அழுத்தம் அதிகம் இருப்பதாக தெரிவித்து மயங்கி விழந்தார். நான் உடனே என் வாகனத்தில் இருந்த துண்டை எடுத்து ரத்தத்தைத் துடைத்தேன். 108 வாகனம் வர தாமதம் ஆகும் என்பதால் உடனே என் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு மைலாப்பூரில் உள்ள BSS மந்துவமனையில் சிகிச்சைக்கு எடுத்துச் சென்றேன்..மருத்துவர் சிகிச்சை அளித்தார். ரத்தம் வருவது நிற்கவில்லை. அங்கிருந்து ENT மருத்துவமனை, அபிராமபுரம் கொண்டு செல்லப்பட்டது. உடனே மருத்துவர் சிகிச்சை அளித்தார். அவருக்கு உயர் அழுத்த ரத்தக் கொதிப்பு இருப்பதால் ரத்தம் வருகிறது. சிறிது நேரம் தாமதமாக வந்திருந்தால் மூளைக்குப் போகும் ரத்த நரம்பு வெடித்து உயிர்ச்சேதம் ஏற்பட்டு இருக்கும் என்று தெரிவித்து உடனே சிகிச்சை அளித்து admit செய்தார். இரவு சுமார் 01.00 மணி வரை அவர் உடன் இருந்து மருத்துவர் தீவிரச் சிகிச்சை அளித்த பின் உடல் நலம் முன்னேற்றம் ஏற்பட்டது. காவலர்கள் அனைவரும் உடன் இருந்து கவனித்துக் கொண்டனர்..காவலர் சரவணன் தனிமையில் வாழ்ந்து வருகிறார். உடன் இருந்து கவனிக்க யாரும் இல்லை என்பதால் மறுநாள் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவ Bill கட்ட 50.000|-எடுத்துச் சென்றேன்..காவலர் Discharge, Summary மற்றும் Bill receipt யை எடுத்து வரும்படி கூறினேன். காவலர் பூபதி நான்காவது மாடியில் இருந்து கீழ் தளத்தில் Bill கட்டும் இடத்திற்கு வந்து பணம் கட்டும் ரசீது கொடுத்தார்..Bill பார்த்ததும் அதிர்ந்துபோனேன்….அவற்றில் நோயாளி பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது..என்னை நோக்கி டாக்டர் மோகன காமேஸ்வரன் அவர்களுடைய துணைவியார் வந்தார். பார்ப்பதற்கு அம்மன் போன்று சிரித்த முகத்துடன் மகாலட்சுமி போன்று காட்சி அளித்தார்..அம்மா Bill எவ்வளவு கட்டவேண்டும் என்றேன்..என்னைக் கட்டி அணைத்துக்கொண்டு காவல்துறை செய்யும் தொண்டிற்கு ஈடு இணையில்லை. நீங்கள் பணம் எதுவும் கொடுக்க வேண்டாம் என்று கூறி பணம் வாங்க மறுத்துவிட்டார்..டாக்டரிடம் நான் தாங்கள் காவலர் உயிரைக் காப்பாற்றினீர்கள் மேலும் பணம் வாங்க மறுக்கின்றீர்களே என்று கூறியபோது,, இரவு நேரம் பணிமுடிந்து வீட்டுக்குப் போகும் நேரத்தில் தன்னிடம் பணிபுரியும் காவலர் உயிருக்குப் போராடும்போது அப்படியே விட்டு விட்டுப் போகாமல் மேலும் 108 வாகனம் வரும் வரை காத்திருக்காமல் அவரைச் சரியான நேரத்தில் உங்கள் வாகனத்தில் மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்து கூடவே நீங்கள் உங்கள் காவலர்களுடன் உடன் இருந்து அவரை கவனித்துக்கொண்டது மெய்சிலிர்க்க வைக்கிறது..உஷா வெங்கட் முகநூல் பக்கத்திலிருந்து…