தலையங்கம்.இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய அவலமான கொரோனா பெருந்தொற்று. கற்பனைகூடச் செய்து பார்க்க முடியாத இழப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது..அதில், மிக முக்கியமானது கல்வி. ஓர் ஆண்டுக்கு முன் 'சில நாட்களுக்கு' என்ற அறிவிப்புடன் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகளின் கதவுகள் 'திறக்காமலேயே போய்விடுமோ?' என்ற அச்சம் எழுமளவுக்குத் தொடர்ந்து மூடும் தொடர்கதையானது. இம்மாதம் முதல் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டபோது, சொல்லொணா துயரங்களோடு வீடுகளில் அடைந்து கிடந்த குழந்தைகள், பள்ளி நோக்கி ஆர்ப்பரித்து வந்த மாணவர்களை வரவேற்ற ஆசிரியர்களைக் கண்டு பெற்றோர்கள் மகிழ்ந்தனர். 'பள்ளி விடுமுறை' என்றால் பேரானந்தம் அடையும் சிறார்கள், முதல் முறையாகப் பள்ளித் திறப்பைக் கண்டு பேரானந்தத்தோடு பள்ளி நோக்கி ஓடிவந்த காட்சிகள் அண்மைக்காலத்தில் மனதைத் தொட்ட காட்சிகளில் ஒன்று..ஆனால், பள்ளிகள் மூடப்பட்டிருந்த காலத்தில் இணைய வழித்தொடர்புகள் மூலம் கல்வி பெறும் வாய்ப்புகளைப் பெற்ற மாணவர்கள் ஒருபுறம், அத்தகைய வசதிகள் இல்லாமலேயே கல்வியையும் கற்பதில் ஆர்வத்தையும் இழந்த கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்கள் ஒருபுறம் எனப் பிரிந்து நின்றனர். இப்படியான சம வயது, சம வகுப்புக் குழந்தைகள் மத்தியில் ஏற்பட்டுள்ள, 'கற்றல் இடைவெளியை அவர்களின் வாழ்நாள் முழுவதும் ஈடுசெய்ய முடியாத இடைவெளியாகிவிடுமோ' என்ற அச்சம் எழுந்தது..பல மாநிலங்களோடு ஒப்பிடும்போது, தமிழ்நாடு மேம்பட்டு இருந்தாலும், அனைவருக்கும் தரமான, சமமான பள்ளிக் கல்வியை நோக்கிப் பயணிக்க 'நாம் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியிருக்கிறது' என்பதை உணர்த்திய தருணம் இது..இந்த நிலையைச் சீராக்க அரசு அறிவித்திருக்கும் திட்டம் தான் 'இல்லம் தேடிக் கல்வி'. இந்தத் திட்டம் 18 மாதங்கள், கொரோனாவால் முற்றாகக் கல்வியை இழந்து தவிக்கும், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் சிறார்களுக்கானது. அந்த இழப்பை ஈடுசெய்யும் நோக்கம் கொண்டது. பள்ளி நேரம் முடிந்த பிறகு, மாலைப் பொழுதில், வாரத்தில் ஆறு மணி நேரம். நாள் ஒன்றுக்கு ஒன்றரை மணி நேரத்துக்கு மிகாமல், தன்னார்வலர்கள் வழியாக மாணவர்கள் குடியிருப்புப் பகுதிகளில் கற்றல் செயல்பாடுகளை முன்னெடுக்கவிருக்கிறார்கள். இவர்கள் பள்ளிப்பாடங்களுக்கு மட்டும் டியூஷன் எடுக்காமல், மாணவர்களைக் கவரும் ஆடல், பாடல், புதிர், விளையாட்டுகள் என்ற முறையில் பள்ளிச் செல்லும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் திட்டங்களை வகுத்திருக்கிறார்கள்..இதன் முக்கிய நோக்கம் பள்ளிக்குச் செல்லாமலிருந்த நீண்ட இடைவெளியில் பல ஆயிரக்கணக்கான கிராமப்புறக் குழந்தைகள் பள்ளி செல்வதைத் தவிர்த்துப் பணிகளுக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த இடைநிற்றல் விளிம்பில் நிற்கும் மாணவர்களை மீண்டும் பள்ளிகளுக்கு வரச்செய்ய வேண்டும் என்பதுதான்..இது ஒரு ஆறு மாதச் செயல்திட்டம். இதற்கான திட்டச் செலவு ரூ.200 கோடி. இந்த நிதியாண்டின் வரவு-செலவு அறிக்கையில், இத்திட்டத்துக்கான தேவையும் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன..இதுவரை நடைமுறையில் இல்லாத ஒரு செயல்திட்டம் இது. காலச்சுழலின் கட்டாயத்தால் எழுந்திருக்கும் இந்தத் திட்டத்தை வரவேற்போம்..ஒரு திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட அரசின் நிதி ஆதாரம், தன்னார்வலர்களின் ஆர்வம், அதிகாரிகளின் செயலாக்கும் திறன் மட்டுமே போதாது. இந்தத் திட்டத்தின் சிறப்பை, அது நம் கிராமப்புறக் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு உதவப்போகும் நல்ல முயற்சி என்பதை மக்கள் உணர்ந்து ஆதரவளிக்க வேண்டும்.மாணவர்களில் கல்வி இடை நிற்றல் நிகழ்ந்துவிடக்கூடாது.
தலையங்கம்.இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய அவலமான கொரோனா பெருந்தொற்று. கற்பனைகூடச் செய்து பார்க்க முடியாத இழப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது..அதில், மிக முக்கியமானது கல்வி. ஓர் ஆண்டுக்கு முன் 'சில நாட்களுக்கு' என்ற அறிவிப்புடன் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகளின் கதவுகள் 'திறக்காமலேயே போய்விடுமோ?' என்ற அச்சம் எழுமளவுக்குத் தொடர்ந்து மூடும் தொடர்கதையானது. இம்மாதம் முதல் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டபோது, சொல்லொணா துயரங்களோடு வீடுகளில் அடைந்து கிடந்த குழந்தைகள், பள்ளி நோக்கி ஆர்ப்பரித்து வந்த மாணவர்களை வரவேற்ற ஆசிரியர்களைக் கண்டு பெற்றோர்கள் மகிழ்ந்தனர். 'பள்ளி விடுமுறை' என்றால் பேரானந்தம் அடையும் சிறார்கள், முதல் முறையாகப் பள்ளித் திறப்பைக் கண்டு பேரானந்தத்தோடு பள்ளி நோக்கி ஓடிவந்த காட்சிகள் அண்மைக்காலத்தில் மனதைத் தொட்ட காட்சிகளில் ஒன்று..ஆனால், பள்ளிகள் மூடப்பட்டிருந்த காலத்தில் இணைய வழித்தொடர்புகள் மூலம் கல்வி பெறும் வாய்ப்புகளைப் பெற்ற மாணவர்கள் ஒருபுறம், அத்தகைய வசதிகள் இல்லாமலேயே கல்வியையும் கற்பதில் ஆர்வத்தையும் இழந்த கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்கள் ஒருபுறம் எனப் பிரிந்து நின்றனர். இப்படியான சம வயது, சம வகுப்புக் குழந்தைகள் மத்தியில் ஏற்பட்டுள்ள, 'கற்றல் இடைவெளியை அவர்களின் வாழ்நாள் முழுவதும் ஈடுசெய்ய முடியாத இடைவெளியாகிவிடுமோ' என்ற அச்சம் எழுந்தது..பல மாநிலங்களோடு ஒப்பிடும்போது, தமிழ்நாடு மேம்பட்டு இருந்தாலும், அனைவருக்கும் தரமான, சமமான பள்ளிக் கல்வியை நோக்கிப் பயணிக்க 'நாம் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியிருக்கிறது' என்பதை உணர்த்திய தருணம் இது..இந்த நிலையைச் சீராக்க அரசு அறிவித்திருக்கும் திட்டம் தான் 'இல்லம் தேடிக் கல்வி'. இந்தத் திட்டம் 18 மாதங்கள், கொரோனாவால் முற்றாகக் கல்வியை இழந்து தவிக்கும், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் சிறார்களுக்கானது. அந்த இழப்பை ஈடுசெய்யும் நோக்கம் கொண்டது. பள்ளி நேரம் முடிந்த பிறகு, மாலைப் பொழுதில், வாரத்தில் ஆறு மணி நேரம். நாள் ஒன்றுக்கு ஒன்றரை மணி நேரத்துக்கு மிகாமல், தன்னார்வலர்கள் வழியாக மாணவர்கள் குடியிருப்புப் பகுதிகளில் கற்றல் செயல்பாடுகளை முன்னெடுக்கவிருக்கிறார்கள். இவர்கள் பள்ளிப்பாடங்களுக்கு மட்டும் டியூஷன் எடுக்காமல், மாணவர்களைக் கவரும் ஆடல், பாடல், புதிர், விளையாட்டுகள் என்ற முறையில் பள்ளிச் செல்லும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் திட்டங்களை வகுத்திருக்கிறார்கள்..இதன் முக்கிய நோக்கம் பள்ளிக்குச் செல்லாமலிருந்த நீண்ட இடைவெளியில் பல ஆயிரக்கணக்கான கிராமப்புறக் குழந்தைகள் பள்ளி செல்வதைத் தவிர்த்துப் பணிகளுக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த இடைநிற்றல் விளிம்பில் நிற்கும் மாணவர்களை மீண்டும் பள்ளிகளுக்கு வரச்செய்ய வேண்டும் என்பதுதான்..இது ஒரு ஆறு மாதச் செயல்திட்டம். இதற்கான திட்டச் செலவு ரூ.200 கோடி. இந்த நிதியாண்டின் வரவு-செலவு அறிக்கையில், இத்திட்டத்துக்கான தேவையும் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன..இதுவரை நடைமுறையில் இல்லாத ஒரு செயல்திட்டம் இது. காலச்சுழலின் கட்டாயத்தால் எழுந்திருக்கும் இந்தத் திட்டத்தை வரவேற்போம்..ஒரு திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட அரசின் நிதி ஆதாரம், தன்னார்வலர்களின் ஆர்வம், அதிகாரிகளின் செயலாக்கும் திறன் மட்டுமே போதாது. இந்தத் திட்டத்தின் சிறப்பை, அது நம் கிராமப்புறக் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு உதவப்போகும் நல்ல முயற்சி என்பதை மக்கள் உணர்ந்து ஆதரவளிக்க வேண்டும்.மாணவர்களில் கல்வி இடை நிற்றல் நிகழ்ந்துவிடக்கூடாது.