– M.A. முஸ்தபா.ஆஸ்திரேலியாவில் மெல்பர்ன் நகர தெரு ஒன்றுக்கு தமிழ்க் கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் பெயர் சூட்டப்படுகிறது..'பித்தா பிறைசூடிப் பெருமானே அருளாளா' என்று தொடங்கும் சுந்தரர் தேவாரப் பாடல் எப்படி பக்தி இயக்கக் காலத்தின் அடையாளமாக இருக்கிறதோ அதைப்போல அப்துல் ரகுமான் எழுதிய 'பித்தன்' கவிதைகள் நவீனத்துவ தமிழ்க் கவிதை மரபில் ஓர் அழியாத அடையாளம்..'கவிக்கோ' என்று புகழப்படும் அப்துல் ரகுமானின் 'பால்வீதி' கவிதைத் தொகுப்பு இன்றும் தமிழில் படிமங்களைப் பயில்வோருக்கு ஒரு பயிற்சிப் பட்டறையாக இருக்கும் நூல். தமிழில் தோன்றிய நவீனத்துவ கவிதை இயக்கமான வானம்பாடி இயக்கத்தில் முக்கிய பங்கேற்பாளர் அப்துல் ரகுமான்..இப்படி தமிழ்க் கவிதையின் அழுத்தமான அடையாளமாக உள்ள கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவாக ஆஸ்திரேலிய நாட்டில் ஒரு தெருவுக்குப்பெயர் சூட்டப்படுகிறது..மெல்பர்ன் நகரில் உள்ள ஒரு தெருவுக்கு 'கவிக்கோ' தெரு என்று பெயர் சூட்டப்படுவதாகவும், அப்துல் ரகுமான் நினைவாகவே இந்தப் பெயர் வைக்கப்பட்டதாகச் சொல்லுகிறார் இதற்கான பெரும் முயற்சிகளை எடுத்த சிங்கப்பூர் தொழிலதிபர் எம்.ஏ.முஸ்தபா..ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் அமைய உள்ள புதிய குடியிருப்புப் பகுதியில் ஒரு தெரு இனி, 'கவிக்கோ ஸ்டிரீட்' (Kavikko Street) என்று குறிப்பிடப்படும் என்றும், இது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியைஅளிக்கும் செய்தி..மெல்பர்ன் நகரில் தனக்குச் சொந்தமான இடத்தில் புதிய குடியிருப்புப் பகுதி ஒன்றை அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ள அவர், அங்குள்ள தெருக்களுக்கு தமிழில் பெயர் சூட்ட விரும்பியுள்ளார். இதையடுத்து, ஆஸ்திரேலிய அரசாங்கத்திடம் இதற்கான விண்ணப்பத்தை அளித்துள்ளார்.."ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை ஒரு தெருவுக்குப் பெயர் சூட்டுவது என்றால், மூன்று பெயர்களைப் பொதுமக்கள் அரசுக்குப் பரிந்துரைக்கலாம். அவற்றை அரசாங்கம் பரிசீலிக்கும். ஏதேனும் ஒரு பெயர் ஏற்கப்பட்டால் விவரம் தெரிவிக்கப்படும். இல்லையெனில் மூன்று பெயர்களும் நிராகரிக்கப்படும்.."அந்த அரசாங்கம் எதன் அடிப்படையில் நாம் பரிந்துரைக்கும் பெயர்களை ஏற்றுக்கொள்கிறது என்பது தெரியாது. எனினும் 'கவிக்கோ' என்று நான் முன்மொழிந்தது ஏற்றுக்கொள்ளப்பட்டதாக எனக்கு அதிகாரபூர்வத் தகவல் கிடைத்தது. ஆஸ்திரேலியாவில் இதுவரை எந்தவொரு தெருவுக்கும் தமிழ்ப் பெயர் சூட்டப்பட்டதில்லை என்றே அறிகிறேன். அந்த வகையில் 'கவிக்கோ' பெயரை ஒரு தெரு தாங்கிப்பிடிக்கும் என்பது மகிழ்ச்சி தருகிறது," என்கிறார் முஸ்தபா.."பத்து ஆண்டுகளுக்கு முன்னர் தாம் தில்லி சென்றிருந்தபோது அங்குள்ள ஒரு சாலைக்கு மகாகவி பாரதியின் பெயர் சூட்டப்பட்டிருப்பதை தாம் பார்க்க நேரிட்டதாகக் குறிப்பிடுபவர், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவில் உள்ள ஒரு சாலைக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் வைக்கப்பட்டதை கேள்விப்பட்டுள்ளார். அதன் பிறகே தமக்கும் அத்தகைய எண்ணம் ஏற்பட்டது" என்கிறார்.."ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்ட்டன் (Melton) என்ற இடத்தில் ஒரு குடியிருப்புப் பகுதியை நிர்மாணிக்கும் பணியைத் தொடங்கி உள்ளோம். அப்போது மகாகவி பாரதியார், ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர்களில் அமைந்த தெருக்களின் நினைவு வந்தது. அதேபோன்று ஆஸ்திரேலியாவில் ஏன் நாம் முயற்சி செய்யக்கூடாது? என்று தோன்றியது..இதையடுத்து, கவிக்கோ தெரு, கவிக்கோ அப்துல் ரஹ்மான், பொயட் கவிக்கோ (Poet Kavikko) என மூன்று பெயர்களை அரசாங்கத்திடம் பரிந்துரைத்தேன். அவற்றுள் 'கவிக்கோ தெரு' என்ற பெயருக்கு அனுமதி கிடைத்துள்ளது.."இதில் சிபாரிசுக்கு இடமே இல்லை. அரசாங்கம் விரும்பவில்லை எனில் மூன்று பெயர்களுமே நிராகரிக்கப்படலாம். நாங்கள் பரிந்துரைத்த பெயர்கள் குறித்து ஏதேனும் ஆய்வு மேற்கொண்டனரா, ஏதேனும் நடைமுறையைப் பின்பற்றுகிறார்களா என்பது எல்லாம் தெரியாது.."இதற்காக நான் அதிகம் மெனக்கெட்டேன், உழைத்தேன் என்று சொல்வதெல்லாம் மிகை. விவரம் அறிந்து முயற்சி செய்தேன். அது கைகூடியது, அவ்வளவுதான். மிக விரைவில் அந்தக் குடியிருப்புப் பகுதி நிர்மாணிக்கப்படும். அங்கு கவிக்கோவின் பெயர் தாங்கிய பலகை அங்குள்ள தெருவில் காணப்படும் என்பதுதான் தகவல்," என்கிறார் முஸ்தபா..கவிக்கோ பெயரைப் பரிந்துரைக்க என்ன காரணம்? என்று கேட்டால், 'உலக அளவில் அப்துல் ரகுமான் குறித்துப் பேச வேண்டும்' என்பதே தமது விருப்பம் என்கிறார். மேலும், 'திரையுலக வெளிச்சம் அதிகம் படாத பெரும் படைப்பாளர்களை உலகறியச் செய்ய வேண்டும்' என்று தாம் விரும்புவதாகவும் சொல்கிறார்..நன்றி : பிபிசி தமிழ்
– M.A. முஸ்தபா.ஆஸ்திரேலியாவில் மெல்பர்ன் நகர தெரு ஒன்றுக்கு தமிழ்க் கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் பெயர் சூட்டப்படுகிறது..'பித்தா பிறைசூடிப் பெருமானே அருளாளா' என்று தொடங்கும் சுந்தரர் தேவாரப் பாடல் எப்படி பக்தி இயக்கக் காலத்தின் அடையாளமாக இருக்கிறதோ அதைப்போல அப்துல் ரகுமான் எழுதிய 'பித்தன்' கவிதைகள் நவீனத்துவ தமிழ்க் கவிதை மரபில் ஓர் அழியாத அடையாளம்..'கவிக்கோ' என்று புகழப்படும் அப்துல் ரகுமானின் 'பால்வீதி' கவிதைத் தொகுப்பு இன்றும் தமிழில் படிமங்களைப் பயில்வோருக்கு ஒரு பயிற்சிப் பட்டறையாக இருக்கும் நூல். தமிழில் தோன்றிய நவீனத்துவ கவிதை இயக்கமான வானம்பாடி இயக்கத்தில் முக்கிய பங்கேற்பாளர் அப்துல் ரகுமான்..இப்படி தமிழ்க் கவிதையின் அழுத்தமான அடையாளமாக உள்ள கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவாக ஆஸ்திரேலிய நாட்டில் ஒரு தெருவுக்குப்பெயர் சூட்டப்படுகிறது..மெல்பர்ன் நகரில் உள்ள ஒரு தெருவுக்கு 'கவிக்கோ' தெரு என்று பெயர் சூட்டப்படுவதாகவும், அப்துல் ரகுமான் நினைவாகவே இந்தப் பெயர் வைக்கப்பட்டதாகச் சொல்லுகிறார் இதற்கான பெரும் முயற்சிகளை எடுத்த சிங்கப்பூர் தொழிலதிபர் எம்.ஏ.முஸ்தபா..ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் அமைய உள்ள புதிய குடியிருப்புப் பகுதியில் ஒரு தெரு இனி, 'கவிக்கோ ஸ்டிரீட்' (Kavikko Street) என்று குறிப்பிடப்படும் என்றும், இது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியைஅளிக்கும் செய்தி..மெல்பர்ன் நகரில் தனக்குச் சொந்தமான இடத்தில் புதிய குடியிருப்புப் பகுதி ஒன்றை அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ள அவர், அங்குள்ள தெருக்களுக்கு தமிழில் பெயர் சூட்ட விரும்பியுள்ளார். இதையடுத்து, ஆஸ்திரேலிய அரசாங்கத்திடம் இதற்கான விண்ணப்பத்தை அளித்துள்ளார்.."ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை ஒரு தெருவுக்குப் பெயர் சூட்டுவது என்றால், மூன்று பெயர்களைப் பொதுமக்கள் அரசுக்குப் பரிந்துரைக்கலாம். அவற்றை அரசாங்கம் பரிசீலிக்கும். ஏதேனும் ஒரு பெயர் ஏற்கப்பட்டால் விவரம் தெரிவிக்கப்படும். இல்லையெனில் மூன்று பெயர்களும் நிராகரிக்கப்படும்.."அந்த அரசாங்கம் எதன் அடிப்படையில் நாம் பரிந்துரைக்கும் பெயர்களை ஏற்றுக்கொள்கிறது என்பது தெரியாது. எனினும் 'கவிக்கோ' என்று நான் முன்மொழிந்தது ஏற்றுக்கொள்ளப்பட்டதாக எனக்கு அதிகாரபூர்வத் தகவல் கிடைத்தது. ஆஸ்திரேலியாவில் இதுவரை எந்தவொரு தெருவுக்கும் தமிழ்ப் பெயர் சூட்டப்பட்டதில்லை என்றே அறிகிறேன். அந்த வகையில் 'கவிக்கோ' பெயரை ஒரு தெரு தாங்கிப்பிடிக்கும் என்பது மகிழ்ச்சி தருகிறது," என்கிறார் முஸ்தபா.."பத்து ஆண்டுகளுக்கு முன்னர் தாம் தில்லி சென்றிருந்தபோது அங்குள்ள ஒரு சாலைக்கு மகாகவி பாரதியின் பெயர் சூட்டப்பட்டிருப்பதை தாம் பார்க்க நேரிட்டதாகக் குறிப்பிடுபவர், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவில் உள்ள ஒரு சாலைக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் வைக்கப்பட்டதை கேள்விப்பட்டுள்ளார். அதன் பிறகே தமக்கும் அத்தகைய எண்ணம் ஏற்பட்டது" என்கிறார்.."ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்ட்டன் (Melton) என்ற இடத்தில் ஒரு குடியிருப்புப் பகுதியை நிர்மாணிக்கும் பணியைத் தொடங்கி உள்ளோம். அப்போது மகாகவி பாரதியார், ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர்களில் அமைந்த தெருக்களின் நினைவு வந்தது. அதேபோன்று ஆஸ்திரேலியாவில் ஏன் நாம் முயற்சி செய்யக்கூடாது? என்று தோன்றியது..இதையடுத்து, கவிக்கோ தெரு, கவிக்கோ அப்துல் ரஹ்மான், பொயட் கவிக்கோ (Poet Kavikko) என மூன்று பெயர்களை அரசாங்கத்திடம் பரிந்துரைத்தேன். அவற்றுள் 'கவிக்கோ தெரு' என்ற பெயருக்கு அனுமதி கிடைத்துள்ளது.."இதில் சிபாரிசுக்கு இடமே இல்லை. அரசாங்கம் விரும்பவில்லை எனில் மூன்று பெயர்களுமே நிராகரிக்கப்படலாம். நாங்கள் பரிந்துரைத்த பெயர்கள் குறித்து ஏதேனும் ஆய்வு மேற்கொண்டனரா, ஏதேனும் நடைமுறையைப் பின்பற்றுகிறார்களா என்பது எல்லாம் தெரியாது.."இதற்காக நான் அதிகம் மெனக்கெட்டேன், உழைத்தேன் என்று சொல்வதெல்லாம் மிகை. விவரம் அறிந்து முயற்சி செய்தேன். அது கைகூடியது, அவ்வளவுதான். மிக விரைவில் அந்தக் குடியிருப்புப் பகுதி நிர்மாணிக்கப்படும். அங்கு கவிக்கோவின் பெயர் தாங்கிய பலகை அங்குள்ள தெருவில் காணப்படும் என்பதுதான் தகவல்," என்கிறார் முஸ்தபா..கவிக்கோ பெயரைப் பரிந்துரைக்க என்ன காரணம்? என்று கேட்டால், 'உலக அளவில் அப்துல் ரகுமான் குறித்துப் பேச வேண்டும்' என்பதே தமது விருப்பம் என்கிறார். மேலும், 'திரையுலக வெளிச்சம் அதிகம் படாத பெரும் படைப்பாளர்களை உலகறியச் செய்ய வேண்டும்' என்று தாம் விரும்புவதாகவும் சொல்கிறார்..நன்றி : பிபிசி தமிழ்