– ஹர்ஷா.தமிழ்நாடு நாள் பற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாகியிருக்கிறது. அது குறித்த ஒரு பார்வை….மொழிவாரி மாநிலங்கள்.பல்வேறு போராட்டங்கள், ஆலோசனைகளுக்குப் பிறகு '1956, நவம்பர் 1-ம் தேதி முதல், மொழிவாரி மாநிலங்கள் செயல்படும்' என்ற அறிவிப்பு நடைமுறைக்கு வந்தது. மற்ற மாநிலங்களுக்கு அவர்கள் விரும்பிய பெயரே சூட்டப்பட்ட நிலையில், தமிழ்நாட்டுக்கு மட்டும் 'மதராஸ்' என்ற பெயரே தொடரும் என அரசு அறிவித்தது.." 'மெட்ராஸ் ஸ்டேட்' என்பதை மாற்றி 'தமிழ்நாடு' என பெயர் சூட்ட வேண்டும்" என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி, விருதுநகரைச் சேர்ந்த சங்கரலிங்கனார் 1956, ஜூலை 27-ம் தேதி உண்ணாவிரதத்தைத் தொடங்கி, 76 நாள் போராட்டத்துக்குப் பிறகு உயிரிழந்தார். சங்கரலிங்கத்தின் மறைவு இந்தப் போராட்டத்துக்குப் புதிய உத்வேகத்தை அளித்தது. 1957-ல் தி.மு.க. முதன்முறையாகச் சட்டமன்றத்துக்குள் நுழைந்தபோதே 'மெட்ராஸ் ஸ்டேட்' என்பது 'தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றப்படவேண்டும் என்ற தீர்மானத்தோடுதான் நுழைந்தது. 1957, மே 7-ம் தேதி வாக்கெடுப்புக்கு வந்த தி.மு.க.வின் தீர்மானத்துக்கு 42 பேர் ஆதரவாகவும், 127 பேர் எதிராகவும் வாக்களித்ததை அடுத்து அந்தத் தீர்மானம் அப்போது தோல்வியடைந்தது..1967-ல் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்த தி.மு.க., ஜூலை 18-ம் தேதி 'மெட்ராஸ் ஸ்டேட்' என்பதை 'தமிழ்நாடு' என பெயர் மாற்றம் செய்யும் தீர்மானத்தைக் கொண்டுவந்து பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றியது. அதைத் தொடர்ந்து 23.11.1968-ல் தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, 1969, ஜனவரி 14-ல் 'மெட்ராஸ் ஸ்டேட்' என்பது 'தமிழ்நாடு' என அதிகாரப்பூர்வமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது..மெட்ராஸ் ஸ்டேட்டிலிருந்து பிறமொழி பேசும் பகுதிகள் பிரிந்து சென்ற "நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும்" என 2019-ல் அ.தி.மு.க. அரசு அறிவித்தது. 1956-ம் ஆண்டு, நவம்பர் 1-ம் தேதி, இந்தியா முழுவதும் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதனடிப்படையில், அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகியவற்றின் சில பகுதிகள் பிரிந்து சென்றன. 2019-ம் ஆண்டு முதல், நவம்பர் 1-ம் தேதியைத் தமிழ்நாடு மாநில நாளாக அப்போதைய அரசு அறிவித்திருந்தது..இந்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினர், தமிழ் உணர்வாளர்கள், தமிழ்க் கூட்டமைப்பினர், தமிழ் அறிஞர்கள், 'நவம்பர் 1-ம் தேதி எல்லைப் போராட்டத்தை நினைவுகூரும் நாளாகத்தான் அமையுமே தவிர, தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது' என்றும், அறிஞர் அண்ணாவால் 'மெட்ராஸ் மாகாணம்' என்று இருந்ததை 'தமிழ்நாடு' என்று மாற்றி, '1967-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, பெயரிடப்பட்ட அந்த நாள்தான் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்பட வேண்டும்' என்றும், தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர்..ஆட்சி மாறிய பிறகு, தற்போது ஜூலை 18-ம் தேதியைத் தமிழ்நாடு நாளாக இனி கொண்டாட அரசாணை விரைவில் வெளியிடப்படும் என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..ஆனால் இந்தக் கொண்டாட்ட நாள் மாற்றம் சில அரசியல் கட்சிகளால் விமர்சிக்கப்படுகிறது.."ஓர் அலுவலகமோ, கட்டடமோ முழுவதுமாக முடிக்கப்பட்டு என்றைக்குத் திறந்து வைக்கப்படுகிறதோ அந்த நாள்தான் தோன்றிய நாளாகக் கருதப்படுமே தவிர, திட்ட அறிக்கை தயார் செய்தது, நிர்வாக அனுமதி அளித்தது, நிதி ஒதுக்கீடு செய்தது, அடிக்கல் நாட்டியது ஆகியவற்றையெல்லாம் அந்த அலுவலகமோ, கட்டடமோ தோன்றிய நாளாகக் கருத முடியாது" என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்..`தமிழ்நாடு' என்ற பெயரில் தற்போது அழைக்கப்படும் நிலப்பரப்பு மட்டுமே புதிய சென்னை மாகாணமாக 1956-ல் அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு 11 ஆண்டுகள் கழித்து, 1967-ம் ஆண்டுதான் சென்னை மாகாணத்துக்குத் 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டின் இன்றைய நிலப்பரப்பைக்கொண்ட புதிய மாநிலம் பிறந்தநாள் நவம்பர் 1-ம் தேதிதான். அதற்கு `தமிழ்நாடு' என்று பெயர் சூட்டப்பட்ட நாள் 1969, ஜனவரி 14-ம் தேதி. இரண்டுக்கும் நடுவே சென்னை மாகாணத்துக்கு, `தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டலாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள்தான் 1967, ஜூலை 18-ம் தேதி. ஒரு மாநிலம் பிறந்த நாளைத்தான் அந்த மாநில நாளாகக் கொண்டாட முடியும். பெயர் சூட்டப்பட்ட நாளையோ, ஒரு குறிப்பிட்ட பெயரைச் சூட்டலாம் என்று கோரிக்கை வைக்கப்பட்ட நாளையோ பிறந்தநாளாகக் கொண்டாட முடியாது. இது பின்னாளில் தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தும். அதைத் தமிழ்நாடு அரசு தவிர்க்க வேண்டும்" என்கிறார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ்.
– ஹர்ஷா.தமிழ்நாடு நாள் பற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாகியிருக்கிறது. அது குறித்த ஒரு பார்வை….மொழிவாரி மாநிலங்கள்.பல்வேறு போராட்டங்கள், ஆலோசனைகளுக்குப் பிறகு '1956, நவம்பர் 1-ம் தேதி முதல், மொழிவாரி மாநிலங்கள் செயல்படும்' என்ற அறிவிப்பு நடைமுறைக்கு வந்தது. மற்ற மாநிலங்களுக்கு அவர்கள் விரும்பிய பெயரே சூட்டப்பட்ட நிலையில், தமிழ்நாட்டுக்கு மட்டும் 'மதராஸ்' என்ற பெயரே தொடரும் என அரசு அறிவித்தது.." 'மெட்ராஸ் ஸ்டேட்' என்பதை மாற்றி 'தமிழ்நாடு' என பெயர் சூட்ட வேண்டும்" என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி, விருதுநகரைச் சேர்ந்த சங்கரலிங்கனார் 1956, ஜூலை 27-ம் தேதி உண்ணாவிரதத்தைத் தொடங்கி, 76 நாள் போராட்டத்துக்குப் பிறகு உயிரிழந்தார். சங்கரலிங்கத்தின் மறைவு இந்தப் போராட்டத்துக்குப் புதிய உத்வேகத்தை அளித்தது. 1957-ல் தி.மு.க. முதன்முறையாகச் சட்டமன்றத்துக்குள் நுழைந்தபோதே 'மெட்ராஸ் ஸ்டேட்' என்பது 'தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றப்படவேண்டும் என்ற தீர்மானத்தோடுதான் நுழைந்தது. 1957, மே 7-ம் தேதி வாக்கெடுப்புக்கு வந்த தி.மு.க.வின் தீர்மானத்துக்கு 42 பேர் ஆதரவாகவும், 127 பேர் எதிராகவும் வாக்களித்ததை அடுத்து அந்தத் தீர்மானம் அப்போது தோல்வியடைந்தது..1967-ல் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்த தி.மு.க., ஜூலை 18-ம் தேதி 'மெட்ராஸ் ஸ்டேட்' என்பதை 'தமிழ்நாடு' என பெயர் மாற்றம் செய்யும் தீர்மானத்தைக் கொண்டுவந்து பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றியது. அதைத் தொடர்ந்து 23.11.1968-ல் தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, 1969, ஜனவரி 14-ல் 'மெட்ராஸ் ஸ்டேட்' என்பது 'தமிழ்நாடு' என அதிகாரப்பூர்வமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது..மெட்ராஸ் ஸ்டேட்டிலிருந்து பிறமொழி பேசும் பகுதிகள் பிரிந்து சென்ற "நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும்" என 2019-ல் அ.தி.மு.க. அரசு அறிவித்தது. 1956-ம் ஆண்டு, நவம்பர் 1-ம் தேதி, இந்தியா முழுவதும் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதனடிப்படையில், அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகியவற்றின் சில பகுதிகள் பிரிந்து சென்றன. 2019-ம் ஆண்டு முதல், நவம்பர் 1-ம் தேதியைத் தமிழ்நாடு மாநில நாளாக அப்போதைய அரசு அறிவித்திருந்தது..இந்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினர், தமிழ் உணர்வாளர்கள், தமிழ்க் கூட்டமைப்பினர், தமிழ் அறிஞர்கள், 'நவம்பர் 1-ம் தேதி எல்லைப் போராட்டத்தை நினைவுகூரும் நாளாகத்தான் அமையுமே தவிர, தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது' என்றும், அறிஞர் அண்ணாவால் 'மெட்ராஸ் மாகாணம்' என்று இருந்ததை 'தமிழ்நாடு' என்று மாற்றி, '1967-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, பெயரிடப்பட்ட அந்த நாள்தான் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்பட வேண்டும்' என்றும், தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர்..ஆட்சி மாறிய பிறகு, தற்போது ஜூலை 18-ம் தேதியைத் தமிழ்நாடு நாளாக இனி கொண்டாட அரசாணை விரைவில் வெளியிடப்படும் என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..ஆனால் இந்தக் கொண்டாட்ட நாள் மாற்றம் சில அரசியல் கட்சிகளால் விமர்சிக்கப்படுகிறது.."ஓர் அலுவலகமோ, கட்டடமோ முழுவதுமாக முடிக்கப்பட்டு என்றைக்குத் திறந்து வைக்கப்படுகிறதோ அந்த நாள்தான் தோன்றிய நாளாகக் கருதப்படுமே தவிர, திட்ட அறிக்கை தயார் செய்தது, நிர்வாக அனுமதி அளித்தது, நிதி ஒதுக்கீடு செய்தது, அடிக்கல் நாட்டியது ஆகியவற்றையெல்லாம் அந்த அலுவலகமோ, கட்டடமோ தோன்றிய நாளாகக் கருத முடியாது" என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்..`தமிழ்நாடு' என்ற பெயரில் தற்போது அழைக்கப்படும் நிலப்பரப்பு மட்டுமே புதிய சென்னை மாகாணமாக 1956-ல் அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு 11 ஆண்டுகள் கழித்து, 1967-ம் ஆண்டுதான் சென்னை மாகாணத்துக்குத் 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டின் இன்றைய நிலப்பரப்பைக்கொண்ட புதிய மாநிலம் பிறந்தநாள் நவம்பர் 1-ம் தேதிதான். அதற்கு `தமிழ்நாடு' என்று பெயர் சூட்டப்பட்ட நாள் 1969, ஜனவரி 14-ம் தேதி. இரண்டுக்கும் நடுவே சென்னை மாகாணத்துக்கு, `தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டலாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள்தான் 1967, ஜூலை 18-ம் தேதி. ஒரு மாநிலம் பிறந்த நாளைத்தான் அந்த மாநில நாளாகக் கொண்டாட முடியும். பெயர் சூட்டப்பட்ட நாளையோ, ஒரு குறிப்பிட்ட பெயரைச் சூட்டலாம் என்று கோரிக்கை வைக்கப்பட்ட நாளையோ பிறந்தநாளாகக் கொண்டாட முடியாது. இது பின்னாளில் தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தும். அதைத் தமிழ்நாடு அரசு தவிர்க்க வேண்டும்" என்கிறார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ்.