தலையங்கம்."மொழிகளால் பிரிந்து மனதால் இணைந்தவர்கள் இந்தியர்கள்" என்கிறான் ஒரு ஹிந்திக் கவிஞன். ஆனால் "ஒரே மொழியால் இந்தியர்கள் இணையவேண்டும்" என்கிறது இன்றைய ஒன்றிய அரசு..அண்மையில் நடந்த நாடாளுமன்ற அலுவல் மொழிக் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அலுவல்மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றும் நேரம் வந்துவிட்டது என்று பேசியிருப்பது, அரசியல் வெளியில் மீண்டும் விவாதப் பொருளாகியிருக்கிறது..இந்தியை தொடர்புமொழியாகப் பயன்படுத்துமாறு சொல்லுவது, இந்தியைப் பிரதானமாகப் பேசும் வட இந்தியாவுக்குப் பொருத்தமாக இருக்கலாம். இந்திக்கு முற்றிலும் மாறுபட்ட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தென்னிந்தியாவுக்கு அது எப்படிப் பொருத்தமாகும்? என்பது இயல்பாக எழும் கேள்வி. மேலும் நாட்டின் பல தலையாய பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இதுபோன்ற விஷயங்களை முன்னிலைப்படுத்துவது "அந்தப் பிரச்னைகளிலிருந்து மக்களைத் திசை திருப்பும் முயற்சியோ" என்ற சந்தேகத்தை எழுப்புகிறது..இந்திய அரசமைப்பு நடைமுறைக்கு வந்து 15 ஆண்டுகளுக்குப் பின்னர், "இந்தியை அலுவல்மொழியாக நாடு முழுவதும் ஏற்பது" என்ற கருத்துக்கு தமிழ்நாட்டில் எழுந்த கடுமையான போராட்டங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் பிறகு காலவரையற்றுத் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. எனினும், இந்திய அரசமைப்பைப் பொறுத்தவரை அலுவல்மொழி என்பது இந்தி என்பதாகவே இன்னும் இருக்கிறது. இந்தி பேசாத மாநிலங்கள் தங்களது மொழியை மாநிலத்துக்குள்ளும் ஆங்கிலத்தை மத்திய அரசுடனான தொடர்புகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று விலக்களிக்கப்பட்டுள்ளது..தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இந்தியை அலுவல்மொழியாக ஏற்பது மாநிலத் தன்னாட்சிக்கும் மொழியுரிமைக்கும் பெரும் அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது. இந்திக்குப் பதிலாக ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக ஏற்றதன் வாயிலாக, உலகளாவிய வேலைவாய்ப்புகளையும் தமிழ்நாடு பெற்றிருக்கிறது. எனவே, இந்தியை அலுவல்மொழியாக மட்டுமின்றி, தொடர்புமொழியாகவும் பின்பற்ற வேண்டிய தேவை இங்கு எழவில்லை. மத்திய உள்துறை அமைச்சரின் சமீபத்திய உரை, அலுவல்மொழி என்பதைக் காட்டிலும் தொடர்புமொழியாகவே இந்தியை ஏற்கச் செய்வதை வலியுறுத்துகிறது..வெவ்வேறு இந்திய மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், தங்களுக்கிடையில் ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியை மத்திய உள்துறை அமைச்சரின் இந்தக் கருத்து, தென்இந்திய மாநிலங்களில் மீண்டும் ஒரு மொழிப்பிரச்னையை உருவாக்கிவிடும்..அகில இந்திய தொடர்பு மொழி பற்றி பேசும் அமைச்சர் தென் இந்தியாவில் மொழிகளுக்கும் அரசியலுக்கும் உள்ள தொடர்புகளை சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும்.
தலையங்கம்."மொழிகளால் பிரிந்து மனதால் இணைந்தவர்கள் இந்தியர்கள்" என்கிறான் ஒரு ஹிந்திக் கவிஞன். ஆனால் "ஒரே மொழியால் இந்தியர்கள் இணையவேண்டும்" என்கிறது இன்றைய ஒன்றிய அரசு..அண்மையில் நடந்த நாடாளுமன்ற அலுவல் மொழிக் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அலுவல்மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றும் நேரம் வந்துவிட்டது என்று பேசியிருப்பது, அரசியல் வெளியில் மீண்டும் விவாதப் பொருளாகியிருக்கிறது..இந்தியை தொடர்புமொழியாகப் பயன்படுத்துமாறு சொல்லுவது, இந்தியைப் பிரதானமாகப் பேசும் வட இந்தியாவுக்குப் பொருத்தமாக இருக்கலாம். இந்திக்கு முற்றிலும் மாறுபட்ட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தென்னிந்தியாவுக்கு அது எப்படிப் பொருத்தமாகும்? என்பது இயல்பாக எழும் கேள்வி. மேலும் நாட்டின் பல தலையாய பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இதுபோன்ற விஷயங்களை முன்னிலைப்படுத்துவது "அந்தப் பிரச்னைகளிலிருந்து மக்களைத் திசை திருப்பும் முயற்சியோ" என்ற சந்தேகத்தை எழுப்புகிறது..இந்திய அரசமைப்பு நடைமுறைக்கு வந்து 15 ஆண்டுகளுக்குப் பின்னர், "இந்தியை அலுவல்மொழியாக நாடு முழுவதும் ஏற்பது" என்ற கருத்துக்கு தமிழ்நாட்டில் எழுந்த கடுமையான போராட்டங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் பிறகு காலவரையற்றுத் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. எனினும், இந்திய அரசமைப்பைப் பொறுத்தவரை அலுவல்மொழி என்பது இந்தி என்பதாகவே இன்னும் இருக்கிறது. இந்தி பேசாத மாநிலங்கள் தங்களது மொழியை மாநிலத்துக்குள்ளும் ஆங்கிலத்தை மத்திய அரசுடனான தொடர்புகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று விலக்களிக்கப்பட்டுள்ளது..தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இந்தியை அலுவல்மொழியாக ஏற்பது மாநிலத் தன்னாட்சிக்கும் மொழியுரிமைக்கும் பெரும் அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது. இந்திக்குப் பதிலாக ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக ஏற்றதன் வாயிலாக, உலகளாவிய வேலைவாய்ப்புகளையும் தமிழ்நாடு பெற்றிருக்கிறது. எனவே, இந்தியை அலுவல்மொழியாக மட்டுமின்றி, தொடர்புமொழியாகவும் பின்பற்ற வேண்டிய தேவை இங்கு எழவில்லை. மத்திய உள்துறை அமைச்சரின் சமீபத்திய உரை, அலுவல்மொழி என்பதைக் காட்டிலும் தொடர்புமொழியாகவே இந்தியை ஏற்கச் செய்வதை வலியுறுத்துகிறது..வெவ்வேறு இந்திய மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், தங்களுக்கிடையில் ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியை மத்திய உள்துறை அமைச்சரின் இந்தக் கருத்து, தென்இந்திய மாநிலங்களில் மீண்டும் ஒரு மொழிப்பிரச்னையை உருவாக்கிவிடும்..அகில இந்திய தொடர்பு மொழி பற்றி பேசும் அமைச்சர் தென் இந்தியாவில் மொழிகளுக்கும் அரசியலுக்கும் உள்ள தொடர்புகளை சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும்.