"அப்பாக்கு திடீர்னு மூச்சுத் திணறல் அதிகமா இருக்கு சாரதி … இப்போ என்ன பண்றது?" அப்பா போனில் டாக்டர் சாரதி அங்கிளிடம் கூறியது காதில் விழ பரீட்சைக்கு படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை சட்டென்று மூடிவிட்டு தாத்தாவின் அறைக்கு ஓடினேன்..கண்கள் ரெண்டும் சொருக 'ஹாஹா …' என்று மூச்சுக்கு திணறிக் கொண்டிருந்தார்… அம்மா அவருக்கு ஆக்சிஜன் மாஸ்க்கை மாட்டிவிட கொஞ்சம் திணறல் குறைந்தது போல தோணியது…."ஜானு உடனே அப்பாவை அட்மிட் பண்ண சொல்லிட்டான் சாரதி. இப்போவே எல்லா சப்போர்ட்டோட ஆம்புலன்ஸ் அனுப்பறதா சொல்லி இருக்கான்… நீ ரெடியாய்கோ. கிருஷ்ணா நானும் அம்மாவும் தாத்தாவோட ஆம்புலன்ஸ்லயே சாரதி ஹாஸ்பிடலுக்கு போயிடறோம். போய் என்னன்னு உனக்கு அப்டேட் பண்றேன். நாளைக்கு பரீட்சை இருக்குல்ல… அதனால தேவைன்னா சொல்றேன், அப்போ வா. அதுவரைக்கும் படிச்சிட்டு இரு சரியா" படபடன்னு பேசின அப்பாவை பார்த்து தலையை மட்டும் ஆட்டினேன்… பார்வை திரும்ப தாத்தாவிடம் போனது. இப்போ கொஞ்சம் திணறல் குறைஞ்ச மாதிரிதான் தெரிந்தது. ஆனாலும் அவர் முகத்தை பார்த்தப்போ என்னமோ செய்தது…."டேய்ய்ய்ய் குட்டிப்பயலே நீ தான…" கண்களை பொத்தி இருந்த என் கைகளை தடவிட்டே தாத்தா சொல்ல "போங்க தாத்தா எப்படிதான்கரெக்ட்டா கண்டுபிடிக்கறீங்களோ …" ன்னு சிணுங்கினேன்.."உன்னோட கை குட்டியா இருக்கு இல்லையா… அதுமில்லாம என்னோட கிச்சா கை எனக்கு தெரியாதா"ன்னு பெருமையா சிரிச்சார். விபூதி கீத்தும் நடுவுல குங்குமமும் இருக்கற அந்த வரிகள் விழுந்த நெத்தியும், அவர் சிரிக்கும்போது கூடவே சிரிக்கும் அவர் கண்களும் அதன் ஓரத்து சுருக்கங்களும் , மெல்லிசான உதடு பிரிஞ்சு ஒரு பக்கம் மட்டும் இருக்கற அந்த தெத்து பல்லும்ன்னு சிரிக்கும்போது என்னோட தாத்தா தான் எவ்வளவு அழகுன்னு பெருமையா அவர் முகத்தையே பாத்தேன்.."என்னடா அப்டி பாக்கற"."நீங்க சிரிக்கும்போது எவ்வளவு அழகா இருக்கீங்க தாத்தா…"னேன்..உடனே சட்னு ஒரு வெட்கம் அவர் முகத்துல பரவ "படவா …" ன்னு என்முன்னுச்சி தலையை மென்மையா தடவினார். தலையை கலைக்கக்கூட மாட்டார். இப்படி மெல்லிசா தடவிதான் விடுவார்...எப்பவுமே அழகா நீட்டா எல்லாத்தையும் வெச்சுக்கதான் அவருக்கு பிடிக்கும். அது அவர் தினமும் துடைச்சு வெச்சுக்கற அவர் வண்டி ஆகட்டும், நீவி மடிச்சு வெச்சுக்கற துணிகளாகட்டும், அலமாரியில் அழகா அடுக்கியிருக்கற புத்தகங்கள் ஆகட்டும் , அழகா பண்டில் மாதிரி கட்டி வெச்சுக்கற ஷேவிங் செட் ஆகட்டும், டப்பால போட்டு வெச்சுருக்கற மருந்துகளாகட்டும், அவர் படிய சீவியிருக்கும் அவர் நரைத்த தலைமுடியாகட்டும், எல்லாத்துலயும் ஒரு துல்லியம், அழகு… அவர் ரூமில் எதுவுமே இடம் மாறியோ கலைந்தோ நான் பார்த்ததேயில்லை. அதும் பாட்டி இறந்து போன அப்பறம்கூட அவங்களோட துணிகளையும் பொருட்களையும் அதோட இடத்தில இருந்து கூட மாத்தாம அப்படியே வெச்சிருந்தார். ஜன்னலோரத்துல ஒரு மணி பிளான்ட். மர கட்டிலை ஒட்டிய சைட் போர்ட்ல அவர் வாசிக்கும் புஸ்தகங்கள், ஒரு ட்ரேல நெயில்கட்டர், சீப்பு, தேங்காய் எண்ணெய், போரோப்ளஸ் பவுடர் , அவரோட வாட்ச், பர்ஸ்ன்னு அடுக்கியிருக்கறதுல கூட ஒரு ஒழுங்கு இருக்கும். எப்பவுமே மெல்லிசா ஒரு வாசனை அது ஊதுபத்தியா இல்ல காதி பிளவர் டஸ்ட்டா இல்ல தாத்தா வாசனையா என்னனு தெரியாது… ஆனா அந்த ரூமுக்குள்ள நுழைஞ்சாலே அப்படி ரம்மியமா இருக்கும்..ஆஸ்பத்திரிகளில் இருப்பதை போன்ற உயரத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வெள்ளை நிற கட்டில், டயப்பர் ஷீட் விரித்த பெட், பக்கத்திலேயே எப்போது தேவைனாலும் ட்ரிப்ஸ் போட தேவையான ஸ்டாண்ட், கட்டிலை ஒட்டிய அந்த சைட் போர்டில் ஏதேதோ மருந்துகள், இன்ஜெக்ஷன் சிரிஞ்சுகள், ப்ரெஷர் மானிட்டர், தெர்மாமீட்டர், பல்ஸ் ஆக்சிமீட்டர், அடல்ட் டயப்பர், அவசரத்துக்கு தேவையான ட்ரே, அவருக்கு மிக பிரியமான பழனி முருகன் படம், பாடி லோஷன், க்ளென்சிங் லிக்விட் இப்படி என்னென்னவோ … அம்மா அந்த அறையை முடிந்த அளவு க்ளீனாகதான் வைத்திருந்தாள். ஆனாலும் அது தாத்தாவோட அறையாக எனக்கு தெரியவில்லை..பக்கத்தில் போய் ஆக்சிஜன் மாஸ்க் மாட்டியிருக்கும் அவர் முகத்தையே பார்த்தேன். கண்களெல்லாம் குழி விழுந்து, கன்னங்கள் ஒட்டிப்போய் உடம்பே மெலிஞ்சு பத்து வயசு பையனை போல இருந்தார். மெதுவா அவர் கையை தொட்டேன். என் கைதொடுதலில் அவரிடம் ஒரு மெல்லிய அசைவு தெரிந்தது. கண்களை மெல்லத் திறந்தார். அவர் முகத்திற்கு அருகே குனிந்து "தாத்தா…" என்று அழைத்தேன்..."கண்ணன் அரண்மனை வாசலுக்கே ஓடி வந்து 'சுதாமாஆ' ன்னு அன்பா அணைஞ்சுண்டு அவனுக்கு சரியா சமமா உக்கார வெச்சு பேச பேச குசேலனுக்கு ஒரே பிரமிப்பு … 'இவனுக்கு குடுக்க எங்கிட்ட இந்த அவல் மட்டும் தானே இருக்கு'ன்னு கூச்சம் வேற. ஆனா, அதை கொடுத்ததும் கண்ணனுக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா… கண்ணா கிட்ட வேற எதுவுமே கேக்காம குசேலன் திரும்ப வீட்டுக்கு கிளம்பிட்டான் … ஆனா, அவன் கேக்காமலே கண்ணன் அந்த ஒரு பிடி அவலுக்கு பதிலா அவன் பிரெண்ட்க்கு என்னலாம் கொடுத்தான்னு தெரியுமா?" கண்கள் விரிய, அபிநயத்தோடு கதை சொல்லிக்கொண்டே இருந்த தாத்தா சட்ன்னு நிறுத்தினார்.."தாத்தா சொல்லுங்க தாத்தா கண்ணா என்ன கொடுத்தார் பிரெண்ட்க்கு?"."ஹம்ம்ஹும்ம் இப்போ நீ ஒழுங்கா உன்னோட ஹோம் வொர்க்க முடிச்சிட்டு வருவியாம், அப்போதான் மீதிய சொல்லுவேன் …" கையில் இருந்த அமர்சித்ர கதா புத்தகத்தை மூடிவைத்துக் கொண்டே சொன்னார் தாத்தா ….ஸ்கூலில் இருந்து வந்ததுமே பூஸ்ட்டை கலந்து தருவதிலிருந்து , விளையாட பக்கத்து பார்க்குக்கு அழைத்து போவது, காய்கறி பழம் வாங்கப் போகும் போது கூடவே அழைத்துக்கொண்டு போய் ஒவ்வொன்றையும் காட்டிக்காட்டி அதை பற்றி சொல்வது , ஸ்லோகங்கள் சொல்லித் தருவது, ஹோம் வொர்க் செய்ய வைப்பது , புத்தகங்களை படித்து காண்பித்து கதை சொல்வது , புத்தகங்களை படிக்க வைத்தது என ஆபீஸில் இருந்து அம்மாவும் அப்பாவும் வரைவரைக்கும் எல்லாமே தாத்தாதான் ….டீனேஜில் ஒரு நாள் பக்கத்து பெஞ்சு பையன் ரொம்ப வெறுப்பேத்தியதில் அவனை நான் அறைந்துவிட, ஸ்கூலுக்கு அப்பாவை அழைத்துவர சொல்லிவிட்டார்கள். வீட்டில் சொல்ல பயந்து மறுநாளே காய்ச்சல். தாத்தா மட்டும் எப்படியோ ஏதோ பிரச்னை இருக்குன்னு கண்டுபிடித்துவிட்டார். மெதுவா அவர்க்கிட்ட மட்டும் சொல்ல , அவரே பக்குவமாய் அப்பாக்கிட்ட சொல்லி, எனக்கும் அட்வைஸ் பண்ணி, 'நாந்தான் உனக்கு சரியா எதுவும் சொல்லிக் குடுக்கலன்னு நினைக்கிறேன் 'ன்னு என்கிட்ட அவர் சொன்ன வார்த்தைகள்தான் அதுக்கப்பறம் நான் ஒருநாளும் அதுபோன்ற தவறை செய்யவேயில்லை..கிழிந்த நாராய் மூச்சுத் திணறி கிடந்திருந்தவர் என் குரல் கேட்டதும் மெல்ல கண் திறந்து எந்த ஒரு சலனமும் இல்லாமல் என்னை பார்த்த அந்த நொடி எனக்குள்ளே என்னமோ உடைந்தது. எப்போதிருந்து இப்படி ஆனார் என்று யோசிக்கும் போதே வலித்தது. முதலில் கைவிரல்களில் ஒரு நடுக்கம், பின்னே கொஞ்சம் கொஞ்சமாக கைகளின் இயக்கம் குறைய ஆரம்பித்த போதே சாரதி அங்கிளிடம் போய் விட்டோம் …."பார்க்கின்ஸன் மாதிரி தோணறது டா வாசு… எதுக்கும் மேற்கொண்டு சில டெஸ்ட்ஸ்லாம் பண்ணிட்டு சொல்றேன்./." கொஞ்சம் டெஸ்ட் செய்து பாத்தவுடனேயே சாரதி அங்கிள் அப்பாவிடம் சொன்னது அதுதான்..சாரதி அங்கிள் அப்பாவோட ரொம்ப க்ளோஸ் பிரெண்ட். நியூரோலஜிஸ்ட்… தாத்தாக்கு வந்திருப்பது பார்கின்ஸன் தான்னு சொல்லிட்டார். அம்மா வேலையை விட்டுட்டு வீட்ல இருந்து அவர பாத்துக்க ஆரம்பிச்சா. அதுக்கப்பறம் பார்க்க பார்க்கவே கொஞ்சம் கொஞ்சமா தாத்தாக்கிட்ட எவ்வளவு மாற்றங்கள்… நடையில் ஒரு வித்தியாசம், தடுமாறுவது, பேங்க் விஷயங்களில் ஒரு கையெழுத்து போடுவதற்குள் அந்த பேனாவை பிடிப்பதற்குகூட அவர் பட்ட பாடு … அந்த நாள் காலை இப்பவும் நினைவிருக்கு… மறக்கக்கூடியதா என்ன அந்த நாள். என் ப்ரியமான தாத்தாவை தொலைத்துவிட்டதாய் உள்ளே அதீதமாக வலித்த நாள்… காலேஜ் கேம்பஸ் இன்டர்வ்யூவில செலக்ட் ஆகி சந்தோஷமாக சுவீட்டோட வீட்டுக்கு வந்து, பால்கனில உக்காந்து கைல ஏதோ புத்தகத்தை வெச்சிட்டு அதையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்த தாத்தாவிடம் சுவீட் பாக்சை நீட்டிக்கொண்டே "தாத்தா நான் கேம்பஸ்ல செலக்ட் ஆகிட்டேன்…" ன்னு சொன்னேன்… பதிலுக்கு எந்த அசைவுமில்லை அவரிடம்… "தாத்த … தாத்தா …" ன்னு அவர் தோளை தொட்டு அசைத்தேன் … திரும்பி என்னை பார்த்தாரே ஒரு பார்வை … யாரையோ பார்ப்பதை போல ஒரு பார்வை …. உதட்டில் அதுவரை நான் பார்த்திராத ஒரு சிரிப்பு ….அவரையே அதிர்ச்சியோட பார்த்த என்னை பார்த்து அப்படியே ஒரு வார்த்தைக்கூட பேசாமல் சிரித்துக்கொண்டே இருந்தார். மறதி… தன்னையே மறந்துவிட்ட மறதி. என்னை அவருக்கு தெரியவேயில்லை. நான் காலேஜ் சேர்ந்த முதல் வருஷத்தில் அவருக்கு பார்க்கின்ஸன் பாதித்தது. காலையில ஆறுமணி பஸ்ல காலேஜுக்கு கிளம்பி சாயங்காலம் ஆறுமணிக்கு வீட்டுக்கு வந்து , ப்ராஜெக்ட்ஸ்,பிரண்ட்ஸ், செமஸ்டர்ஸ்ன்னு நாலு வருஷங்களா அவர் பக்கத்துல உக்காந்து அவருகிட்ட கதை கேட்க முடியாத, பேச முடியாத என்னை அன்னைக்கு அவரோட வெறித்த பார்வையும் சிரிப்பும் உள்ளே என்னமோ செய்தது. சாயங்காலம் வீட்டுக்கு வந்த அப்பா "அப்பா என்ன பண்றது… இது யாருன்னு தெரியறதா?" ன்னு என்னை காமிச்சு கேக்க, தாத்தாவிடம் அதே சிரிப்பு… 'என்னை தெரியல தாத்தாவுக்கு ' அடுத்த நொடி உள்ள ஏதோ நொறுங்க சத்தமாக அழுதேன்.."இனிமேல் தான் ரொம்ப கவனமா அவரை பார்த்துக்கணும்… தனியா விடவேக்கூடாது…" சாரதி அங்கிள் சொன்னபடி எவ்வளவோ கவனமா இருந்தும் ஒரு நாள் தனியா வீட்டுக்கு வெளில வந்து அபார்ட்மெண்ட் படிக்கட்டுல இறங்க ட்ரை பண்ணி கீழே விழுந்து தொடையில பிராக்ச்சர் … அதுல படுத்தவர்தான்… துறுதுறுன்னு இருந்துட்டு கொஞ்சம் கொஞ்சமா இயக்கம் இழந்து, தன்னையே மறந்து, படுக்கையில கிடப்பவரை பார்க்கவே எனக்கு தைரியமில்ல, என்னால முடியல… வேலையில் இருந்துக்கிட்டே எம்.பி.ஏ. சேர்ந்தேன். முழு நேரமும் ஆஃபீஸ், வீகெண்ட் கிளாஸ்ன்னு பிஸியாவே வெச்சுக்கிட்டேன். அவரை பார்ப்பதையே தவிர்த்தேன். இதோ நாளைக்கு எம்.பி.ஏ. பைனல் செமஸ்டர் எக்ஸாம் ஆரம்பிக்குது. இப்போ தாத்தாவை ஆஸ்பத்திரியில் சேர்த்தே ஆகவேண்டிய நிலை..குனிஞ்சு "தாத்தா"ன்ன என்னையே பார்த்துட்டு இருந்தாரு. "கிருஷ்ணா… ஆம்புலன்ஸ் வந்திருச்சு… தாத்தாவை ஸ்ட்ரெட்சர்ல படுக்க வெக்க கொஞ்சம் ஹெல்ப் பண்ணு …" ன்னு அப்பாவோட குரல் என்னை உலுக்க, அவரை ஆம்புலன்ஸ்ல ஏத்தி, அது கிளம்பின அந்த நொடி "இல்ல தாத்தா… உங்களுக்கு ஒண்ணும் ஆகக்கூடாது…" ன்னு ஏதோ ஒரு படபடப்பு … என்னவோ ஒண்ணு அவர் செய்யறதுக்கு பாக்கி இருக்கு… அவர் என்கிட்ட பிராமிஸ் பண்ணியிருக்கார். அவரு சரியாகியே தீரணும். அதை அவர் செஞ்சே ஆகணும்ன்னு என்னமோ உள்ளுக்குள்ள இருந்து பண்ணுது … என்னன்னு தெரியல … ஆனா ஏதோ ஒரு சங்கடம் மட்டும் என்னை ஒண்ணுமே செய்யவிடாம இருக்க, இதுக்கு மேல முடியாதுன்னு வீட்டை அப்படியே பூட்டிட்டு வண்டிய ஸ்டார்ட் பண்ணி ஹாஸ்பிடலுக்கு கிளம்பினேன்.."தாத்தா வாங்க உங்கள வெச்சு ஒரு ரவுண்ட் அடிக்கறேன் …" புது ஆக்டிவாவை ஸ்டார்ட் பண்ணிக்கிட்டே தாத்தாவை அழைத்தேன்.."டேய் கிச்சா … இப்போதான் பிளஸ் ஒன் படிக்கற … அதுக்குள்ள வண்டி ஓட்டணுமா… "."தாத்தா … ச்சும்மா நம்ம அபார்ட்மெண்ட்க்குள்ளயே ரவுண்ட் போலாம் வாங்க…"."பரவாயில்லையேடா பொறுமையா நல்லாதான் ஒட்டற … ஆனா ஸ்கூலுக்கெல்லாம் வண்டி கிடையாது. இனிமேல் எப்போ வண்டி ஓட்டும்போது ரொம்ப ஜாக்கிரதையா ஒட்டணும் சரியா…"."சரி தாத்தா…"."ரொம்ப க்ரிட்டிக்கல்தான் வாசு. முயற்சிப் பண்ணி பார்ப்போம்…" சாரதி அங்கிள் சொன்னதை கேட்டு என்னமோ செய்தது. ஐசியூல இருந்த தாத்தாவை பார்க்க உள்ளே நுழைந்தேன். ஏதேதோ டியூபை சொருகி வைத்திருந்தார்கள்.."நோ தாத்தா. நீங்க இன்னும் அதை செய்யவேயில்ல. அதுக்குள்ள இப்படி நீங்க பண்ணக்கூடாது … தாத்தா பிளீஸ் … ப்ளீஸ் …" கஷ்டப்பட்டு உதட்டை கடித்து பீறிட்ட அழுகையை அடக்கினேன்..கண்களை கண்ணீர் மறைக்க ட்யூபுகளுக்கு நடுவே தெரிந்த மெல்லிய உருவத்தை பார்த்தேன். முகம் மட்டும் திடீரென அதீத அமைதியாய் , சொல்லப்போனா 'என் தாத்தா' வின் அழகான புன்னகையோட நிர்மலமா இருந்ததாக தோன்றியது. அது இன்னும் என் மனதை உருக்க "நோ தாத்தா திரும்பி வந்துருங்க… நீங்க எனக்கு பிராமிஸ் பண்ணி இருக்கீங்க… அதை செய்யாம நீங்க எப்படி என்னை விட்டு போக முடியும் …" ன்னு உள்ளுக்குள்ள விடாம குரல் கேட்க மெதுவாய் ட்ரிப்ஸ் மாட்டியிருந்த மெலிந்த கையை தொட்டு "தாத்தா… தாத்தாஆ… என்னை தெரியறதா… நா பேசறது புரியறதா…" என்றேன். தழுதழுத்து போய் என் குரலே எனக்கு அந்நியமா கேட்டுது..அவரிடம் கொஞ்சமாக ஒரு சலனம் தெரிந்தது போல தோன்றியது. கண்களில் ஏதோ அசைவு. உதடுகள் மெலிதாக பிளந்து என்னவோ சொன்னது. அவர் முகத்தின் மிக அருகே சென்று உன்னிப்பா கேட்க முயற்சி பண்ணேன்..ரொம்ப தீனமா "கிச்சா ஆ … கிச்சா ஆ".அடுத்த நொடி மொத்தமாய் நொறுங்கிப் போய் நான் அழுததை பார்த்து நர்ஸ் வேகமாக ஓடி வந்தாள் …."நீங்க ஏன் இன்னைக்கு ஊர்க்கு போக போறத முன்னாடியே என்கிட்ட சொல்லல தாத்தா … ஊர்ல இருந்து எப்ப திரும்பி வருவீங்க …" ட்ரெயினின் ஜன்னல் கம்பில தொங்கிக்கிட்டே கேட்டேன்.."தாத்தாக்கு திடீர்னு ஒரு வேலை வந்திருச்சுடா கண்ணா… பத்து நாள்ல வந்துருவேன்…"."இனிமேல் எங்கிட்ட சொல்லாம எங்கேயும் போகக்கூடாது … ஓகே?"."சரிடா கண்ணா…"."ப்ராமிஸ்?"."ப்ராமிஸ் ஆ இனிமேல் எங்க போனாலும் 'கிச்சா ஆ நான் போய்ட்டு வரவா' ன்னு உன்கிட்ட சொல்லிட்டு தான் போவேன் ஓகே…".டிரெயின் ஹார்ன் சத்தம் கேட்டது..அன்னைக்கு ராத்திரியே தாத்தா கிளம்பி விட்டார்.
"அப்பாக்கு திடீர்னு மூச்சுத் திணறல் அதிகமா இருக்கு சாரதி … இப்போ என்ன பண்றது?" அப்பா போனில் டாக்டர் சாரதி அங்கிளிடம் கூறியது காதில் விழ பரீட்சைக்கு படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை சட்டென்று மூடிவிட்டு தாத்தாவின் அறைக்கு ஓடினேன்..கண்கள் ரெண்டும் சொருக 'ஹாஹா …' என்று மூச்சுக்கு திணறிக் கொண்டிருந்தார்… அம்மா அவருக்கு ஆக்சிஜன் மாஸ்க்கை மாட்டிவிட கொஞ்சம் திணறல் குறைந்தது போல தோணியது…."ஜானு உடனே அப்பாவை அட்மிட் பண்ண சொல்லிட்டான் சாரதி. இப்போவே எல்லா சப்போர்ட்டோட ஆம்புலன்ஸ் அனுப்பறதா சொல்லி இருக்கான்… நீ ரெடியாய்கோ. கிருஷ்ணா நானும் அம்மாவும் தாத்தாவோட ஆம்புலன்ஸ்லயே சாரதி ஹாஸ்பிடலுக்கு போயிடறோம். போய் என்னன்னு உனக்கு அப்டேட் பண்றேன். நாளைக்கு பரீட்சை இருக்குல்ல… அதனால தேவைன்னா சொல்றேன், அப்போ வா. அதுவரைக்கும் படிச்சிட்டு இரு சரியா" படபடன்னு பேசின அப்பாவை பார்த்து தலையை மட்டும் ஆட்டினேன்… பார்வை திரும்ப தாத்தாவிடம் போனது. இப்போ கொஞ்சம் திணறல் குறைஞ்ச மாதிரிதான் தெரிந்தது. ஆனாலும் அவர் முகத்தை பார்த்தப்போ என்னமோ செய்தது…."டேய்ய்ய்ய் குட்டிப்பயலே நீ தான…" கண்களை பொத்தி இருந்த என் கைகளை தடவிட்டே தாத்தா சொல்ல "போங்க தாத்தா எப்படிதான்கரெக்ட்டா கண்டுபிடிக்கறீங்களோ …" ன்னு சிணுங்கினேன்.."உன்னோட கை குட்டியா இருக்கு இல்லையா… அதுமில்லாம என்னோட கிச்சா கை எனக்கு தெரியாதா"ன்னு பெருமையா சிரிச்சார். விபூதி கீத்தும் நடுவுல குங்குமமும் இருக்கற அந்த வரிகள் விழுந்த நெத்தியும், அவர் சிரிக்கும்போது கூடவே சிரிக்கும் அவர் கண்களும் அதன் ஓரத்து சுருக்கங்களும் , மெல்லிசான உதடு பிரிஞ்சு ஒரு பக்கம் மட்டும் இருக்கற அந்த தெத்து பல்லும்ன்னு சிரிக்கும்போது என்னோட தாத்தா தான் எவ்வளவு அழகுன்னு பெருமையா அவர் முகத்தையே பாத்தேன்.."என்னடா அப்டி பாக்கற"."நீங்க சிரிக்கும்போது எவ்வளவு அழகா இருக்கீங்க தாத்தா…"னேன்..உடனே சட்னு ஒரு வெட்கம் அவர் முகத்துல பரவ "படவா …" ன்னு என்முன்னுச்சி தலையை மென்மையா தடவினார். தலையை கலைக்கக்கூட மாட்டார். இப்படி மெல்லிசா தடவிதான் விடுவார்...எப்பவுமே அழகா நீட்டா எல்லாத்தையும் வெச்சுக்கதான் அவருக்கு பிடிக்கும். அது அவர் தினமும் துடைச்சு வெச்சுக்கற அவர் வண்டி ஆகட்டும், நீவி மடிச்சு வெச்சுக்கற துணிகளாகட்டும், அலமாரியில் அழகா அடுக்கியிருக்கற புத்தகங்கள் ஆகட்டும் , அழகா பண்டில் மாதிரி கட்டி வெச்சுக்கற ஷேவிங் செட் ஆகட்டும், டப்பால போட்டு வெச்சுருக்கற மருந்துகளாகட்டும், அவர் படிய சீவியிருக்கும் அவர் நரைத்த தலைமுடியாகட்டும், எல்லாத்துலயும் ஒரு துல்லியம், அழகு… அவர் ரூமில் எதுவுமே இடம் மாறியோ கலைந்தோ நான் பார்த்ததேயில்லை. அதும் பாட்டி இறந்து போன அப்பறம்கூட அவங்களோட துணிகளையும் பொருட்களையும் அதோட இடத்தில இருந்து கூட மாத்தாம அப்படியே வெச்சிருந்தார். ஜன்னலோரத்துல ஒரு மணி பிளான்ட். மர கட்டிலை ஒட்டிய சைட் போர்ட்ல அவர் வாசிக்கும் புஸ்தகங்கள், ஒரு ட்ரேல நெயில்கட்டர், சீப்பு, தேங்காய் எண்ணெய், போரோப்ளஸ் பவுடர் , அவரோட வாட்ச், பர்ஸ்ன்னு அடுக்கியிருக்கறதுல கூட ஒரு ஒழுங்கு இருக்கும். எப்பவுமே மெல்லிசா ஒரு வாசனை அது ஊதுபத்தியா இல்ல காதி பிளவர் டஸ்ட்டா இல்ல தாத்தா வாசனையா என்னனு தெரியாது… ஆனா அந்த ரூமுக்குள்ள நுழைஞ்சாலே அப்படி ரம்மியமா இருக்கும்..ஆஸ்பத்திரிகளில் இருப்பதை போன்ற உயரத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வெள்ளை நிற கட்டில், டயப்பர் ஷீட் விரித்த பெட், பக்கத்திலேயே எப்போது தேவைனாலும் ட்ரிப்ஸ் போட தேவையான ஸ்டாண்ட், கட்டிலை ஒட்டிய அந்த சைட் போர்டில் ஏதேதோ மருந்துகள், இன்ஜெக்ஷன் சிரிஞ்சுகள், ப்ரெஷர் மானிட்டர், தெர்மாமீட்டர், பல்ஸ் ஆக்சிமீட்டர், அடல்ட் டயப்பர், அவசரத்துக்கு தேவையான ட்ரே, அவருக்கு மிக பிரியமான பழனி முருகன் படம், பாடி லோஷன், க்ளென்சிங் லிக்விட் இப்படி என்னென்னவோ … அம்மா அந்த அறையை முடிந்த அளவு க்ளீனாகதான் வைத்திருந்தாள். ஆனாலும் அது தாத்தாவோட அறையாக எனக்கு தெரியவில்லை..பக்கத்தில் போய் ஆக்சிஜன் மாஸ்க் மாட்டியிருக்கும் அவர் முகத்தையே பார்த்தேன். கண்களெல்லாம் குழி விழுந்து, கன்னங்கள் ஒட்டிப்போய் உடம்பே மெலிஞ்சு பத்து வயசு பையனை போல இருந்தார். மெதுவா அவர் கையை தொட்டேன். என் கைதொடுதலில் அவரிடம் ஒரு மெல்லிய அசைவு தெரிந்தது. கண்களை மெல்லத் திறந்தார். அவர் முகத்திற்கு அருகே குனிந்து "தாத்தா…" என்று அழைத்தேன்..."கண்ணன் அரண்மனை வாசலுக்கே ஓடி வந்து 'சுதாமாஆ' ன்னு அன்பா அணைஞ்சுண்டு அவனுக்கு சரியா சமமா உக்கார வெச்சு பேச பேச குசேலனுக்கு ஒரே பிரமிப்பு … 'இவனுக்கு குடுக்க எங்கிட்ட இந்த அவல் மட்டும் தானே இருக்கு'ன்னு கூச்சம் வேற. ஆனா, அதை கொடுத்ததும் கண்ணனுக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா… கண்ணா கிட்ட வேற எதுவுமே கேக்காம குசேலன் திரும்ப வீட்டுக்கு கிளம்பிட்டான் … ஆனா, அவன் கேக்காமலே கண்ணன் அந்த ஒரு பிடி அவலுக்கு பதிலா அவன் பிரெண்ட்க்கு என்னலாம் கொடுத்தான்னு தெரியுமா?" கண்கள் விரிய, அபிநயத்தோடு கதை சொல்லிக்கொண்டே இருந்த தாத்தா சட்ன்னு நிறுத்தினார்.."தாத்தா சொல்லுங்க தாத்தா கண்ணா என்ன கொடுத்தார் பிரெண்ட்க்கு?"."ஹம்ம்ஹும்ம் இப்போ நீ ஒழுங்கா உன்னோட ஹோம் வொர்க்க முடிச்சிட்டு வருவியாம், அப்போதான் மீதிய சொல்லுவேன் …" கையில் இருந்த அமர்சித்ர கதா புத்தகத்தை மூடிவைத்துக் கொண்டே சொன்னார் தாத்தா ….ஸ்கூலில் இருந்து வந்ததுமே பூஸ்ட்டை கலந்து தருவதிலிருந்து , விளையாட பக்கத்து பார்க்குக்கு அழைத்து போவது, காய்கறி பழம் வாங்கப் போகும் போது கூடவே அழைத்துக்கொண்டு போய் ஒவ்வொன்றையும் காட்டிக்காட்டி அதை பற்றி சொல்வது , ஸ்லோகங்கள் சொல்லித் தருவது, ஹோம் வொர்க் செய்ய வைப்பது , புத்தகங்களை படித்து காண்பித்து கதை சொல்வது , புத்தகங்களை படிக்க வைத்தது என ஆபீஸில் இருந்து அம்மாவும் அப்பாவும் வரைவரைக்கும் எல்லாமே தாத்தாதான் ….டீனேஜில் ஒரு நாள் பக்கத்து பெஞ்சு பையன் ரொம்ப வெறுப்பேத்தியதில் அவனை நான் அறைந்துவிட, ஸ்கூலுக்கு அப்பாவை அழைத்துவர சொல்லிவிட்டார்கள். வீட்டில் சொல்ல பயந்து மறுநாளே காய்ச்சல். தாத்தா மட்டும் எப்படியோ ஏதோ பிரச்னை இருக்குன்னு கண்டுபிடித்துவிட்டார். மெதுவா அவர்க்கிட்ட மட்டும் சொல்ல , அவரே பக்குவமாய் அப்பாக்கிட்ட சொல்லி, எனக்கும் அட்வைஸ் பண்ணி, 'நாந்தான் உனக்கு சரியா எதுவும் சொல்லிக் குடுக்கலன்னு நினைக்கிறேன் 'ன்னு என்கிட்ட அவர் சொன்ன வார்த்தைகள்தான் அதுக்கப்பறம் நான் ஒருநாளும் அதுபோன்ற தவறை செய்யவேயில்லை..கிழிந்த நாராய் மூச்சுத் திணறி கிடந்திருந்தவர் என் குரல் கேட்டதும் மெல்ல கண் திறந்து எந்த ஒரு சலனமும் இல்லாமல் என்னை பார்த்த அந்த நொடி எனக்குள்ளே என்னமோ உடைந்தது. எப்போதிருந்து இப்படி ஆனார் என்று யோசிக்கும் போதே வலித்தது. முதலில் கைவிரல்களில் ஒரு நடுக்கம், பின்னே கொஞ்சம் கொஞ்சமாக கைகளின் இயக்கம் குறைய ஆரம்பித்த போதே சாரதி அங்கிளிடம் போய் விட்டோம் …."பார்க்கின்ஸன் மாதிரி தோணறது டா வாசு… எதுக்கும் மேற்கொண்டு சில டெஸ்ட்ஸ்லாம் பண்ணிட்டு சொல்றேன்./." கொஞ்சம் டெஸ்ட் செய்து பாத்தவுடனேயே சாரதி அங்கிள் அப்பாவிடம் சொன்னது அதுதான்..சாரதி அங்கிள் அப்பாவோட ரொம்ப க்ளோஸ் பிரெண்ட். நியூரோலஜிஸ்ட்… தாத்தாக்கு வந்திருப்பது பார்கின்ஸன் தான்னு சொல்லிட்டார். அம்மா வேலையை விட்டுட்டு வீட்ல இருந்து அவர பாத்துக்க ஆரம்பிச்சா. அதுக்கப்பறம் பார்க்க பார்க்கவே கொஞ்சம் கொஞ்சமா தாத்தாக்கிட்ட எவ்வளவு மாற்றங்கள்… நடையில் ஒரு வித்தியாசம், தடுமாறுவது, பேங்க் விஷயங்களில் ஒரு கையெழுத்து போடுவதற்குள் அந்த பேனாவை பிடிப்பதற்குகூட அவர் பட்ட பாடு … அந்த நாள் காலை இப்பவும் நினைவிருக்கு… மறக்கக்கூடியதா என்ன அந்த நாள். என் ப்ரியமான தாத்தாவை தொலைத்துவிட்டதாய் உள்ளே அதீதமாக வலித்த நாள்… காலேஜ் கேம்பஸ் இன்டர்வ்யூவில செலக்ட் ஆகி சந்தோஷமாக சுவீட்டோட வீட்டுக்கு வந்து, பால்கனில உக்காந்து கைல ஏதோ புத்தகத்தை வெச்சிட்டு அதையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்த தாத்தாவிடம் சுவீட் பாக்சை நீட்டிக்கொண்டே "தாத்தா நான் கேம்பஸ்ல செலக்ட் ஆகிட்டேன்…" ன்னு சொன்னேன்… பதிலுக்கு எந்த அசைவுமில்லை அவரிடம்… "தாத்த … தாத்தா …" ன்னு அவர் தோளை தொட்டு அசைத்தேன் … திரும்பி என்னை பார்த்தாரே ஒரு பார்வை … யாரையோ பார்ப்பதை போல ஒரு பார்வை …. உதட்டில் அதுவரை நான் பார்த்திராத ஒரு சிரிப்பு ….அவரையே அதிர்ச்சியோட பார்த்த என்னை பார்த்து அப்படியே ஒரு வார்த்தைக்கூட பேசாமல் சிரித்துக்கொண்டே இருந்தார். மறதி… தன்னையே மறந்துவிட்ட மறதி. என்னை அவருக்கு தெரியவேயில்லை. நான் காலேஜ் சேர்ந்த முதல் வருஷத்தில் அவருக்கு பார்க்கின்ஸன் பாதித்தது. காலையில ஆறுமணி பஸ்ல காலேஜுக்கு கிளம்பி சாயங்காலம் ஆறுமணிக்கு வீட்டுக்கு வந்து , ப்ராஜெக்ட்ஸ்,பிரண்ட்ஸ், செமஸ்டர்ஸ்ன்னு நாலு வருஷங்களா அவர் பக்கத்துல உக்காந்து அவருகிட்ட கதை கேட்க முடியாத, பேச முடியாத என்னை அன்னைக்கு அவரோட வெறித்த பார்வையும் சிரிப்பும் உள்ளே என்னமோ செய்தது. சாயங்காலம் வீட்டுக்கு வந்த அப்பா "அப்பா என்ன பண்றது… இது யாருன்னு தெரியறதா?" ன்னு என்னை காமிச்சு கேக்க, தாத்தாவிடம் அதே சிரிப்பு… 'என்னை தெரியல தாத்தாவுக்கு ' அடுத்த நொடி உள்ள ஏதோ நொறுங்க சத்தமாக அழுதேன்.."இனிமேல் தான் ரொம்ப கவனமா அவரை பார்த்துக்கணும்… தனியா விடவேக்கூடாது…" சாரதி அங்கிள் சொன்னபடி எவ்வளவோ கவனமா இருந்தும் ஒரு நாள் தனியா வீட்டுக்கு வெளில வந்து அபார்ட்மெண்ட் படிக்கட்டுல இறங்க ட்ரை பண்ணி கீழே விழுந்து தொடையில பிராக்ச்சர் … அதுல படுத்தவர்தான்… துறுதுறுன்னு இருந்துட்டு கொஞ்சம் கொஞ்சமா இயக்கம் இழந்து, தன்னையே மறந்து, படுக்கையில கிடப்பவரை பார்க்கவே எனக்கு தைரியமில்ல, என்னால முடியல… வேலையில் இருந்துக்கிட்டே எம்.பி.ஏ. சேர்ந்தேன். முழு நேரமும் ஆஃபீஸ், வீகெண்ட் கிளாஸ்ன்னு பிஸியாவே வெச்சுக்கிட்டேன். அவரை பார்ப்பதையே தவிர்த்தேன். இதோ நாளைக்கு எம்.பி.ஏ. பைனல் செமஸ்டர் எக்ஸாம் ஆரம்பிக்குது. இப்போ தாத்தாவை ஆஸ்பத்திரியில் சேர்த்தே ஆகவேண்டிய நிலை..குனிஞ்சு "தாத்தா"ன்ன என்னையே பார்த்துட்டு இருந்தாரு. "கிருஷ்ணா… ஆம்புலன்ஸ் வந்திருச்சு… தாத்தாவை ஸ்ட்ரெட்சர்ல படுக்க வெக்க கொஞ்சம் ஹெல்ப் பண்ணு …" ன்னு அப்பாவோட குரல் என்னை உலுக்க, அவரை ஆம்புலன்ஸ்ல ஏத்தி, அது கிளம்பின அந்த நொடி "இல்ல தாத்தா… உங்களுக்கு ஒண்ணும் ஆகக்கூடாது…" ன்னு ஏதோ ஒரு படபடப்பு … என்னவோ ஒண்ணு அவர் செய்யறதுக்கு பாக்கி இருக்கு… அவர் என்கிட்ட பிராமிஸ் பண்ணியிருக்கார். அவரு சரியாகியே தீரணும். அதை அவர் செஞ்சே ஆகணும்ன்னு என்னமோ உள்ளுக்குள்ள இருந்து பண்ணுது … என்னன்னு தெரியல … ஆனா ஏதோ ஒரு சங்கடம் மட்டும் என்னை ஒண்ணுமே செய்யவிடாம இருக்க, இதுக்கு மேல முடியாதுன்னு வீட்டை அப்படியே பூட்டிட்டு வண்டிய ஸ்டார்ட் பண்ணி ஹாஸ்பிடலுக்கு கிளம்பினேன்.."தாத்தா வாங்க உங்கள வெச்சு ஒரு ரவுண்ட் அடிக்கறேன் …" புது ஆக்டிவாவை ஸ்டார்ட் பண்ணிக்கிட்டே தாத்தாவை அழைத்தேன்.."டேய் கிச்சா … இப்போதான் பிளஸ் ஒன் படிக்கற … அதுக்குள்ள வண்டி ஓட்டணுமா… "."தாத்தா … ச்சும்மா நம்ம அபார்ட்மெண்ட்க்குள்ளயே ரவுண்ட் போலாம் வாங்க…"."பரவாயில்லையேடா பொறுமையா நல்லாதான் ஒட்டற … ஆனா ஸ்கூலுக்கெல்லாம் வண்டி கிடையாது. இனிமேல் எப்போ வண்டி ஓட்டும்போது ரொம்ப ஜாக்கிரதையா ஒட்டணும் சரியா…"."சரி தாத்தா…"."ரொம்ப க்ரிட்டிக்கல்தான் வாசு. முயற்சிப் பண்ணி பார்ப்போம்…" சாரதி அங்கிள் சொன்னதை கேட்டு என்னமோ செய்தது. ஐசியூல இருந்த தாத்தாவை பார்க்க உள்ளே நுழைந்தேன். ஏதேதோ டியூபை சொருகி வைத்திருந்தார்கள்.."நோ தாத்தா. நீங்க இன்னும் அதை செய்யவேயில்ல. அதுக்குள்ள இப்படி நீங்க பண்ணக்கூடாது … தாத்தா பிளீஸ் … ப்ளீஸ் …" கஷ்டப்பட்டு உதட்டை கடித்து பீறிட்ட அழுகையை அடக்கினேன்..கண்களை கண்ணீர் மறைக்க ட்யூபுகளுக்கு நடுவே தெரிந்த மெல்லிய உருவத்தை பார்த்தேன். முகம் மட்டும் திடீரென அதீத அமைதியாய் , சொல்லப்போனா 'என் தாத்தா' வின் அழகான புன்னகையோட நிர்மலமா இருந்ததாக தோன்றியது. அது இன்னும் என் மனதை உருக்க "நோ தாத்தா திரும்பி வந்துருங்க… நீங்க எனக்கு பிராமிஸ் பண்ணி இருக்கீங்க… அதை செய்யாம நீங்க எப்படி என்னை விட்டு போக முடியும் …" ன்னு உள்ளுக்குள்ள விடாம குரல் கேட்க மெதுவாய் ட்ரிப்ஸ் மாட்டியிருந்த மெலிந்த கையை தொட்டு "தாத்தா… தாத்தாஆ… என்னை தெரியறதா… நா பேசறது புரியறதா…" என்றேன். தழுதழுத்து போய் என் குரலே எனக்கு அந்நியமா கேட்டுது..அவரிடம் கொஞ்சமாக ஒரு சலனம் தெரிந்தது போல தோன்றியது. கண்களில் ஏதோ அசைவு. உதடுகள் மெலிதாக பிளந்து என்னவோ சொன்னது. அவர் முகத்தின் மிக அருகே சென்று உன்னிப்பா கேட்க முயற்சி பண்ணேன்..ரொம்ப தீனமா "கிச்சா ஆ … கிச்சா ஆ".அடுத்த நொடி மொத்தமாய் நொறுங்கிப் போய் நான் அழுததை பார்த்து நர்ஸ் வேகமாக ஓடி வந்தாள் …."நீங்க ஏன் இன்னைக்கு ஊர்க்கு போக போறத முன்னாடியே என்கிட்ட சொல்லல தாத்தா … ஊர்ல இருந்து எப்ப திரும்பி வருவீங்க …" ட்ரெயினின் ஜன்னல் கம்பில தொங்கிக்கிட்டே கேட்டேன்.."தாத்தாக்கு திடீர்னு ஒரு வேலை வந்திருச்சுடா கண்ணா… பத்து நாள்ல வந்துருவேன்…"."இனிமேல் எங்கிட்ட சொல்லாம எங்கேயும் போகக்கூடாது … ஓகே?"."சரிடா கண்ணா…"."ப்ராமிஸ்?"."ப்ராமிஸ் ஆ இனிமேல் எங்க போனாலும் 'கிச்சா ஆ நான் போய்ட்டு வரவா' ன்னு உன்கிட்ட சொல்லிட்டு தான் போவேன் ஓகே…".டிரெயின் ஹார்ன் சத்தம் கேட்டது..அன்னைக்கு ராத்திரியே தாத்தா கிளம்பி விட்டார்.