அஞ்சலி .குமுதம் குழுமத்தில் 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து பணியாற்றி வந்த அதன் ஆசிரியர் பிரியா கல்யாணராமன் அண்மையில் காலமானார். அவரைக் குறித்து அவரது நண்பரும் எழுத்தாளாருமான பாரதிபாலன்…. பாரதி பாலன் .அது 1987 குமுதம் ஆசிரியர் குழுவில் இருந்த ரா.கி. ரங்கராஜன், ஜ.ர. சுந்தரேசன்,( பாக்கியம் ராமசாமி) புனிதன் ஆகிய மூவரும் குமுதம் துணை ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்று பணி நீட்டிப்பில் இருந்த காலம். இவர்களுக்கு மாற்றாக குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. அண்ணாமலை அவர்கள் மூன்று இளம் உதவி ஆசிரியர்களைத் தேடிக் கொண்டிருந்த நேரம்.எழுத்தாளர் பிரபஞ்சன், மாலன் சிறிது காலம் உதவி ஆசிரியராக இருந்து குமுதத்தில் இருந்து விலகி விட்ட நேரம்."பிரசன்னா" என்பவர் உதவி ஆசிரியராகப் புதிதாகச் சேர்ந்திருந்தார். மும்பையில் படித்து வளர்ந்தவர். எழுத்தாளர் சுஜாதா பாணியில் பல சிறுகதைகளை குமுதத்தில் எழுதிக் கொண்டிருந்தார். இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பை நர்மதா பதிப்பகம் வெளியிட்டது. அசோகமித்திரன் முன்னுரை எழுதியிருந்தார்.இவரைத் தொடர்ந்து நாகபட்டினம் மாவட்டம், சிக்கல் கிராமத்திலிருந்து பிரகாஷ் புனைப்பெயர் ப்ரியா கல்யாணராமன் என்பவரும் பணியில் சேர்ந்து இருந்தார். மூன்றாவதாக ஒருவரை குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. அண்ணாமலை அவர்கள் தேடிக்கொண்டிருந்தார். அந்த நேரம் திரு அகிலன் கண்ணன் வழியாக பால்யூ ( குமுதம் நிருபர் ஆசிரியர் எஸ்.ஏ.பி. அண்ணாமலையின் நம்பிக்கைக்கு உரியவர்) என்னை ஆசிரியர் எஸ்.ஏ.பி. அண்ணாமலை அவர்களிடம் அழைத்துச் சென்றார். அவர் என்னை நீண்ட நேர்காணல் செய்து பின்னர் குமுதத்தின் உதவி ஆசிரியராக என்னைத் தேர்வு செய்தார். மூன்றாவது உதவி ஆசிரியராக குமுதத்தில் நான் இணைந்தேன்.திரு ரா. கி. ரங்கராஜன் திரு ஜ.ர.சுந்தரராஜன் ஆகிய இருவரும் மட்டும் எங்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காகத் தொடர்ந்து பணியில் இருந்தனர்.எங்கள் மூவரில் பிரசன்னாதான் மிகுந்த நம்பிக்கைக்குரியவராக இருந்தார். அடுத்து குமுதத்தை வழிநடத்தும் பொறுப்பு அவரிடம் தான் வரும் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர்!பிரகாஷ் அதாவது ப்ரியா கல்யாணராமன் விளையாட்டுப் பிள்ளைபோல, எதையும் ஈசியாக எடுத்துக் கொண்டு பணியாற்றினார்.ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார் பாணியில் சிறுகதைகளை எழுதினர். பெரும்பாலும் நானும் அவரும் தான் மதிய உணவுக்கு வெளியில் செல்வோம். (நாங்கள் இருவரும் மட்டும்தான் பேச்சிலர் பிரசன்னா கல்யாணம் ஆகிய புதிது.) மாலையில் புரசைவாக்கம் தெருக்களில் சுற்றித் திரியும் போது பிரியா கல்யாணராமன் தெருவில் விரித்து வைக்கப்பட்டிருக்கும் பாக்கெட் நாவல்களை விருப்பத்தோடு பொறுக்கி எடுத்துப் படிக்கக் கொண்டு செல்வார். தினசரி ஐந்து நாட்களாவது இவ்விதம் தேடிக் கொண்டு போவார்.குமுதத்தில் நிலைக்க பல யோசனைகளை எனக்கு அவர் வழங்கினார். நெளிவு சுளிவு தெரிந்தவர். கடுமையான உழைப்பாளி. குமுதத்தில் என்னால் தாக்குபிடிக்க முடியவில்லை விலகிவிட்டேன். நான் விலகிய ஒரு சில ஆண்டுகளிலேயே நம்பிக்கை நட்சத்திரமாகக் கருதப்பட்ட பிரசன்னாவும் விலகிவிட்டார்.ப்ரியா கல்யாணராமன் மட்டும் தொடர்ந்தார். புதிய அணி உருவானது . மெல்ல மெல்ல உயர்ந்து குமுதத்தின் ஆசிரியர் பொறுப்பை அடைந்தார் ப்ரியா கல்யாணராமன். எங்கள் தொடர்பும் நட்பும் அறுந்துவிடாமல் வளர்ந்தது. குமுதம் தீராநதியில் என்னை எழுதச் சொல்லி ஊக்கப்படுத்துதல். மீண்டும் தீராநதி வெளிவர உள்ளது… தொடர்ந்து எழுதுங்கள் என்று ஒரு குறுஞ்செய்தியும் எனக்கு அனுப்பியிருந்தார்…..அவருடனான பழைய நினைவுகளில் விழுந்து கிடக்கிறேன்..ஆழ்ந்த அஞ்சலி என்று என்னால் எளிதில் விலகிவிட முடியாது.
அஞ்சலி .குமுதம் குழுமத்தில் 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து பணியாற்றி வந்த அதன் ஆசிரியர் பிரியா கல்யாணராமன் அண்மையில் காலமானார். அவரைக் குறித்து அவரது நண்பரும் எழுத்தாளாருமான பாரதிபாலன்…. பாரதி பாலன் .அது 1987 குமுதம் ஆசிரியர் குழுவில் இருந்த ரா.கி. ரங்கராஜன், ஜ.ர. சுந்தரேசன்,( பாக்கியம் ராமசாமி) புனிதன் ஆகிய மூவரும் குமுதம் துணை ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்று பணி நீட்டிப்பில் இருந்த காலம். இவர்களுக்கு மாற்றாக குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. அண்ணாமலை அவர்கள் மூன்று இளம் உதவி ஆசிரியர்களைத் தேடிக் கொண்டிருந்த நேரம்.எழுத்தாளர் பிரபஞ்சன், மாலன் சிறிது காலம் உதவி ஆசிரியராக இருந்து குமுதத்தில் இருந்து விலகி விட்ட நேரம்."பிரசன்னா" என்பவர் உதவி ஆசிரியராகப் புதிதாகச் சேர்ந்திருந்தார். மும்பையில் படித்து வளர்ந்தவர். எழுத்தாளர் சுஜாதா பாணியில் பல சிறுகதைகளை குமுதத்தில் எழுதிக் கொண்டிருந்தார். இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பை நர்மதா பதிப்பகம் வெளியிட்டது. அசோகமித்திரன் முன்னுரை எழுதியிருந்தார்.இவரைத் தொடர்ந்து நாகபட்டினம் மாவட்டம், சிக்கல் கிராமத்திலிருந்து பிரகாஷ் புனைப்பெயர் ப்ரியா கல்யாணராமன் என்பவரும் பணியில் சேர்ந்து இருந்தார். மூன்றாவதாக ஒருவரை குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. அண்ணாமலை அவர்கள் தேடிக்கொண்டிருந்தார். அந்த நேரம் திரு அகிலன் கண்ணன் வழியாக பால்யூ ( குமுதம் நிருபர் ஆசிரியர் எஸ்.ஏ.பி. அண்ணாமலையின் நம்பிக்கைக்கு உரியவர்) என்னை ஆசிரியர் எஸ்.ஏ.பி. அண்ணாமலை அவர்களிடம் அழைத்துச் சென்றார். அவர் என்னை நீண்ட நேர்காணல் செய்து பின்னர் குமுதத்தின் உதவி ஆசிரியராக என்னைத் தேர்வு செய்தார். மூன்றாவது உதவி ஆசிரியராக குமுதத்தில் நான் இணைந்தேன்.திரு ரா. கி. ரங்கராஜன் திரு ஜ.ர.சுந்தரராஜன் ஆகிய இருவரும் மட்டும் எங்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காகத் தொடர்ந்து பணியில் இருந்தனர்.எங்கள் மூவரில் பிரசன்னாதான் மிகுந்த நம்பிக்கைக்குரியவராக இருந்தார். அடுத்து குமுதத்தை வழிநடத்தும் பொறுப்பு அவரிடம் தான் வரும் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர்!பிரகாஷ் அதாவது ப்ரியா கல்யாணராமன் விளையாட்டுப் பிள்ளைபோல, எதையும் ஈசியாக எடுத்துக் கொண்டு பணியாற்றினார்.ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார் பாணியில் சிறுகதைகளை எழுதினர். பெரும்பாலும் நானும் அவரும் தான் மதிய உணவுக்கு வெளியில் செல்வோம். (நாங்கள் இருவரும் மட்டும்தான் பேச்சிலர் பிரசன்னா கல்யாணம் ஆகிய புதிது.) மாலையில் புரசைவாக்கம் தெருக்களில் சுற்றித் திரியும் போது பிரியா கல்யாணராமன் தெருவில் விரித்து வைக்கப்பட்டிருக்கும் பாக்கெட் நாவல்களை விருப்பத்தோடு பொறுக்கி எடுத்துப் படிக்கக் கொண்டு செல்வார். தினசரி ஐந்து நாட்களாவது இவ்விதம் தேடிக் கொண்டு போவார்.குமுதத்தில் நிலைக்க பல யோசனைகளை எனக்கு அவர் வழங்கினார். நெளிவு சுளிவு தெரிந்தவர். கடுமையான உழைப்பாளி. குமுதத்தில் என்னால் தாக்குபிடிக்க முடியவில்லை விலகிவிட்டேன். நான் விலகிய ஒரு சில ஆண்டுகளிலேயே நம்பிக்கை நட்சத்திரமாகக் கருதப்பட்ட பிரசன்னாவும் விலகிவிட்டார்.ப்ரியா கல்யாணராமன் மட்டும் தொடர்ந்தார். புதிய அணி உருவானது . மெல்ல மெல்ல உயர்ந்து குமுதத்தின் ஆசிரியர் பொறுப்பை அடைந்தார் ப்ரியா கல்யாணராமன். எங்கள் தொடர்பும் நட்பும் அறுந்துவிடாமல் வளர்ந்தது. குமுதம் தீராநதியில் என்னை எழுதச் சொல்லி ஊக்கப்படுத்துதல். மீண்டும் தீராநதி வெளிவர உள்ளது… தொடர்ந்து எழுதுங்கள் என்று ஒரு குறுஞ்செய்தியும் எனக்கு அனுப்பியிருந்தார்…..அவருடனான பழைய நினைவுகளில் விழுந்து கிடக்கிறேன்..ஆழ்ந்த அஞ்சலி என்று என்னால் எளிதில் விலகிவிட முடியாது.