– ரமணன்.பெருந்தொற்று அச்சங்கள் ஓரளவு தணிந்து, கல்வியாண்டின் தொடக்கத்திலேயே பள்ளிகள் திறக்கப்பட்டிருப்பது மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைத்துத் தரப்பினரிடமும் ஒரு புதிய உற்சாகத்தை உருவாக்கியிருக்கிறது. பெருந்தொற்றுக் காலத்தில் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றல் இடைவெளியைக் களையும் நோக்கத்தில், 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தைப் பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே தொடங்கி வைத்துள்ள தமிழக முதல்வர், பள்ளிப் படிப்பின் அவசியம் குறித்துத் தெரிவித்த கருத்துகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன..இந்த அரசு ஆட்சிப்பொறுப்பை ஏற்றவுடன் பள்ளித்துறை அமைச்சரின் தொடர்ந்த பல அறிவிப்புகள் பெற்றோர், மற்றும் பொதுமக்களிடம் நம்பிக்கைகளை விதைத்தன. அனைத்து ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும், அரசுப்பள்ளிகளிலும் ஆங்கிலம் பேசும் முறை கற்பிக்கப்பட்டும், திறன் மேம்பாடு, கைவினைக்கலை போன்றவற்றில் மாணவர்களின் ஆர்வம் அதிகரிக்க திட்டங்கள் என அறிவிப்பு மழையாக பெய்து ஆச்சரியப்படுத்தினார்..ஆனால் ஓராண்டுக்குப் பின் நமது பள்ளித்துறையின் செயல்பாடுகளை நோக்கும் போது மனவருத்தமே மிஞ்சுகிறது. இன்னும் பல கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் மிக அத்தியாவசியமான அடிப்படை வசதிகள் கூட இன்னும் எந்த முன்னேற்றங்களும் இல்லை என்பது தான் சுடும் உண்மை. இன்னமும் மாநிலம் முழுவதும் ஆசிரியர்கள் பற்றாக்குறை தொடர்கிறது. பல கிரமங்களில் பள்ளிகளுக்குச் சரியான கட்டிடங்கள் இல்லை. கல்வியைத் தொடர அருகிலிருக்கும் சிறுநகர் பள்ளிக்குப் போக பேருந்து வசதிகள் இல்லை..ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற வகையில் சென்னை நகருக்கு அருகிலிருக்கும் செங்கற்பட்டு மாவட்டத்திலிருக்கும் 'சிறுதாமூர்' கிராமத்திலிருக்கும் பள்ளியில் பார்த்த காட்சி இது..வண்ணப்பூச்சைக்கண்டு பல ஆண்டுகளாகியிருக்கும் பழுப்பேறியிருக்கும் கட்டிடங்களுடன் ஒரு வளாகம். அதில் ஒரு மேல் தளம் மக்கிப்போய் கருமை படிந்திருக்கும் கட்டிடத்தில் இயங்குவது கிராமத்தின் ரேஷன் கடை..கட்டிடம் ஒழுகுவதால் உள்ளேயிருக்கும் ரேஷன் அரிசியும் கட்டிடத்தைபோலவே மக்கிக் கொண்டிருக்கிறது..அருகில் உடைந்த ஓடுகள் போர்த்திய சிறுதாமூர் ஆரம்ப பள்ளி.'என்று சுவர் இடிந்து விழப்போகிறதோ' என்று மக்கள் அச்சத்தோடு பார்த்துத் தவித்திருக்கும் அந்தக் கட்டிடத்தின் மேற்கூரை தேர்தல் நடைபெறும் நாட்களில் மட்டும் 'வாடகை தார் பாலின் ஷீட்கள் ' போட்டு மூடி வாக்குப்பெட்டிகள் மழை வந்தால் நனையாமல் கவனமாகப் பாதுகாக்க படுகின்றன..."வாக்குகள் காக்கப்பட வேண்டும்" என்று எண்ணும் அரசு, மற்ற நாட்களில் வருங்கால வாக்காளர்களான மாணவர்களோ அல்லது வகுப்பில் இருக்கும் ஒரே ஆசிரியர் நனைந்தாலோ, காய்ந்தாலோ பரவாயில்லை என்று எண்ணுகிறது போலும்..இந்தக் கிராமப் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை பயிலும் 82 மாணவ, மாணவிகளுக்கு ஒரே ஓர் ஆசிரியர். நான்கு, ஐந்தாம் வகுப்புகளுக்கு அந்த ஒரே ஆசிரியர்தான்!. எப்படி ஒரே ஆசியர் இரண்டு வகுப்புகளுக்கு ஒரே நேரத்தில் ஆசிரியராக இருக்க முடியும்.? பல சமயங்களில் ஐந்தாம் வகுப்பு மாணவர் 1, 2, 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கற்பிக்கிறார் ! அதாவது பள்ளியை விட்டு வெளியில் அந்தக்குழந்தைகள் சென்றுவிடாமல் பார்த்துக்கொள்வார். இதுவா கற்றல் திறன் மேம்பாடு?.கிராமத்தின் மீதும் மாணவர்களின் கல்வி மீதும் அக்கரை கொண்ட ஒரு தனியார் அறக்கட்டளை பள்ளிக்கு ஒரு கழிப்பறையைக் கட்டித்தந்திருக்கிறது. ஆனால் அதை பாரமாக்கப் பணியாள் சரியான தண்ணீர் வசதி செய்து கொடுக்கபடாதாதால் பயனற்ற நிலையில் இருக்கிறது..பள்ளிக் கட்டிடம் இருக்கும் இந்த நிலையிலும் கிராம மக்கள் தங்கள் குழந்தைகள் குறிப்பாக பெண் குழந்தைகள் ஐந்தாம் வகுப்புக்கும் மேலும் இதே கிராமத்தில் படிக்க வேண்டும் என விரும்பி, இந்தப் பள்ளியை நடுத்தரப் பள்ளியாக உயர்த்த அரசிடம் கோரிக்கை வைத்துக் கடந்த சில ஆண்டுகளாக போராடுகின்றனர். அந்தக் கோப்பு பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தில் மற்ற கோப்புகளுடன் நிம்மதியாக உறங்கி கொண்டிருக்கிறது..என் பார்வையில் தமிழரசின் பள்ளிக்கல்வித்துறை விழித்துக்கொள்ள வேண்டும். நிகழ்ந்தவற்றிற்கும் இன்றைய அரசு பொறுப்பேற்க முடியாமலிருக்கலாம். ஆனால், சரி செய்யவேண்டிய அதுவும் உடனடியாகச் செயலாற்ற வேண்டிய பொறுப்பு இந்த அரசுக்குத்தான் இருக்கிறது. இந்தச் செயல்பாடுகள் கவர்ச்சிகரமான பெயர்களுடன் அறிவிக்கப்படும் புதிய திட்டங்களை விட மிக அவசியமானது.."பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம்" என்றான் பாரதி. இந்த மணி வரிகளின் பொருள் நமது பள்ளிகளை நாம் வழிபடும் புனித இடங்களைப்போல பாரமரிப்போம் என்பதே.. அரச மரமும், ஆல மரமும் தரும் நிழலில் இயங்கிக்கொண்டிருக்கும் இந்தப் பள்ளியிருக்கும் கிராமம். பிற கிராமங்களிலிருந்து வேறுபட்டு நிற்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக ஊரின் மத்தியில் தினமும் தேசியக் கொடியேற்றி, தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் பாடி வணங்குகிறார்கள். ஆண்டுக்கு இரு முறை அல்ல தினசரி நம் கொடியைக் கிராம மக்கள் வணங்குகிறார்கள்..தினமும் தேசியக் கொடியை வணங்கத் தலை நிமிரும் சிறுதாமூர் கிராம மக்கள் தங்கள் ஊர் பள்ளியிருக்கும் நிலைகண்டு மற்ற நேரங்களில் தலை குனிகின்றனர்.
– ரமணன்.பெருந்தொற்று அச்சங்கள் ஓரளவு தணிந்து, கல்வியாண்டின் தொடக்கத்திலேயே பள்ளிகள் திறக்கப்பட்டிருப்பது மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைத்துத் தரப்பினரிடமும் ஒரு புதிய உற்சாகத்தை உருவாக்கியிருக்கிறது. பெருந்தொற்றுக் காலத்தில் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றல் இடைவெளியைக் களையும் நோக்கத்தில், 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தைப் பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே தொடங்கி வைத்துள்ள தமிழக முதல்வர், பள்ளிப் படிப்பின் அவசியம் குறித்துத் தெரிவித்த கருத்துகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன..இந்த அரசு ஆட்சிப்பொறுப்பை ஏற்றவுடன் பள்ளித்துறை அமைச்சரின் தொடர்ந்த பல அறிவிப்புகள் பெற்றோர், மற்றும் பொதுமக்களிடம் நம்பிக்கைகளை விதைத்தன. அனைத்து ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும், அரசுப்பள்ளிகளிலும் ஆங்கிலம் பேசும் முறை கற்பிக்கப்பட்டும், திறன் மேம்பாடு, கைவினைக்கலை போன்றவற்றில் மாணவர்களின் ஆர்வம் அதிகரிக்க திட்டங்கள் என அறிவிப்பு மழையாக பெய்து ஆச்சரியப்படுத்தினார்..ஆனால் ஓராண்டுக்குப் பின் நமது பள்ளித்துறையின் செயல்பாடுகளை நோக்கும் போது மனவருத்தமே மிஞ்சுகிறது. இன்னும் பல கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் மிக அத்தியாவசியமான அடிப்படை வசதிகள் கூட இன்னும் எந்த முன்னேற்றங்களும் இல்லை என்பது தான் சுடும் உண்மை. இன்னமும் மாநிலம் முழுவதும் ஆசிரியர்கள் பற்றாக்குறை தொடர்கிறது. பல கிரமங்களில் பள்ளிகளுக்குச் சரியான கட்டிடங்கள் இல்லை. கல்வியைத் தொடர அருகிலிருக்கும் சிறுநகர் பள்ளிக்குப் போக பேருந்து வசதிகள் இல்லை..ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற வகையில் சென்னை நகருக்கு அருகிலிருக்கும் செங்கற்பட்டு மாவட்டத்திலிருக்கும் 'சிறுதாமூர்' கிராமத்திலிருக்கும் பள்ளியில் பார்த்த காட்சி இது..வண்ணப்பூச்சைக்கண்டு பல ஆண்டுகளாகியிருக்கும் பழுப்பேறியிருக்கும் கட்டிடங்களுடன் ஒரு வளாகம். அதில் ஒரு மேல் தளம் மக்கிப்போய் கருமை படிந்திருக்கும் கட்டிடத்தில் இயங்குவது கிராமத்தின் ரேஷன் கடை..கட்டிடம் ஒழுகுவதால் உள்ளேயிருக்கும் ரேஷன் அரிசியும் கட்டிடத்தைபோலவே மக்கிக் கொண்டிருக்கிறது..அருகில் உடைந்த ஓடுகள் போர்த்திய சிறுதாமூர் ஆரம்ப பள்ளி.'என்று சுவர் இடிந்து விழப்போகிறதோ' என்று மக்கள் அச்சத்தோடு பார்த்துத் தவித்திருக்கும் அந்தக் கட்டிடத்தின் மேற்கூரை தேர்தல் நடைபெறும் நாட்களில் மட்டும் 'வாடகை தார் பாலின் ஷீட்கள் ' போட்டு மூடி வாக்குப்பெட்டிகள் மழை வந்தால் நனையாமல் கவனமாகப் பாதுகாக்க படுகின்றன..."வாக்குகள் காக்கப்பட வேண்டும்" என்று எண்ணும் அரசு, மற்ற நாட்களில் வருங்கால வாக்காளர்களான மாணவர்களோ அல்லது வகுப்பில் இருக்கும் ஒரே ஆசிரியர் நனைந்தாலோ, காய்ந்தாலோ பரவாயில்லை என்று எண்ணுகிறது போலும்..இந்தக் கிராமப் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை பயிலும் 82 மாணவ, மாணவிகளுக்கு ஒரே ஓர் ஆசிரியர். நான்கு, ஐந்தாம் வகுப்புகளுக்கு அந்த ஒரே ஆசிரியர்தான்!. எப்படி ஒரே ஆசியர் இரண்டு வகுப்புகளுக்கு ஒரே நேரத்தில் ஆசிரியராக இருக்க முடியும்.? பல சமயங்களில் ஐந்தாம் வகுப்பு மாணவர் 1, 2, 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கற்பிக்கிறார் ! அதாவது பள்ளியை விட்டு வெளியில் அந்தக்குழந்தைகள் சென்றுவிடாமல் பார்த்துக்கொள்வார். இதுவா கற்றல் திறன் மேம்பாடு?.கிராமத்தின் மீதும் மாணவர்களின் கல்வி மீதும் அக்கரை கொண்ட ஒரு தனியார் அறக்கட்டளை பள்ளிக்கு ஒரு கழிப்பறையைக் கட்டித்தந்திருக்கிறது. ஆனால் அதை பாரமாக்கப் பணியாள் சரியான தண்ணீர் வசதி செய்து கொடுக்கபடாதாதால் பயனற்ற நிலையில் இருக்கிறது..பள்ளிக் கட்டிடம் இருக்கும் இந்த நிலையிலும் கிராம மக்கள் தங்கள் குழந்தைகள் குறிப்பாக பெண் குழந்தைகள் ஐந்தாம் வகுப்புக்கும் மேலும் இதே கிராமத்தில் படிக்க வேண்டும் என விரும்பி, இந்தப் பள்ளியை நடுத்தரப் பள்ளியாக உயர்த்த அரசிடம் கோரிக்கை வைத்துக் கடந்த சில ஆண்டுகளாக போராடுகின்றனர். அந்தக் கோப்பு பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தில் மற்ற கோப்புகளுடன் நிம்மதியாக உறங்கி கொண்டிருக்கிறது..என் பார்வையில் தமிழரசின் பள்ளிக்கல்வித்துறை விழித்துக்கொள்ள வேண்டும். நிகழ்ந்தவற்றிற்கும் இன்றைய அரசு பொறுப்பேற்க முடியாமலிருக்கலாம். ஆனால், சரி செய்யவேண்டிய அதுவும் உடனடியாகச் செயலாற்ற வேண்டிய பொறுப்பு இந்த அரசுக்குத்தான் இருக்கிறது. இந்தச் செயல்பாடுகள் கவர்ச்சிகரமான பெயர்களுடன் அறிவிக்கப்படும் புதிய திட்டங்களை விட மிக அவசியமானது.."பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம்" என்றான் பாரதி. இந்த மணி வரிகளின் பொருள் நமது பள்ளிகளை நாம் வழிபடும் புனித இடங்களைப்போல பாரமரிப்போம் என்பதே.. அரச மரமும், ஆல மரமும் தரும் நிழலில் இயங்கிக்கொண்டிருக்கும் இந்தப் பள்ளியிருக்கும் கிராமம். பிற கிராமங்களிலிருந்து வேறுபட்டு நிற்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக ஊரின் மத்தியில் தினமும் தேசியக் கொடியேற்றி, தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் பாடி வணங்குகிறார்கள். ஆண்டுக்கு இரு முறை அல்ல தினசரி நம் கொடியைக் கிராம மக்கள் வணங்குகிறார்கள்..தினமும் தேசியக் கொடியை வணங்கத் தலை நிமிரும் சிறுதாமூர் கிராம மக்கள் தங்கள் ஊர் பள்ளியிருக்கும் நிலைகண்டு மற்ற நேரங்களில் தலை குனிகின்றனர்.