"சரிங்க அண்ணா வெச்சுடறேன்…" போனை டேபிள் மேல் வீசி விட்டு "அம்மா அம்மா…" என அலறினபடி கிச்சனுக்கு ஓடினான் செந்தில்..குக்கரின் மூன்றாவது விசிலுக்காகக் காத்திருந்த பார்வதி எரிச்சலுடன் திரும்பினாள்..'என்னடா' என்றது பார்வை.."அப்பாவோட ஆபிஸ்ல காலைலிருந்து ரெய்டாம். மூணு கார்ல ஸ்க்வாட்காரங்க வந்து இறங்கியிருக்காங்களாம். ஆபிஸ்க்கு எதிர்ல பேக்கரி வெச்சு நடத்துற திருப்பதி அண்ணன் போன் பண்ணி எனக்கு தகவல் சொன்னாரு."."அடக் கடவுளே…" பார்வதி நிலைகுலைந்து போய் டேபிளில் சரிந்தாள்.."என்னடா இது சோதனை!' அது அரசாங்க ஆபிசே கிடையாது, கொள்ளைக் காரங்க குடியிருக்கிற கூடாரம்ன்னு ஏற்கெனவே நம்ம ஊருல நல்ல பேரு! பாதிக்கப்பட்ட யாரோ ஒருத்தர்தான் மேலிடத்துல புகார்பண்ணியிருக்கனும். அதனாலதான் இப்படி நடந்திருக்குது…" யூகித்தாள்.."அம்மா… அப்பா…" செந்தில் முடிக்க முடியாமல் கதறினான்.."அந்த அங்காளம்மன்தான் அவரைக் காப்பாத்தணும்! லஞ்சம் வாங்காதீங்கன்னு தலைபாடா அடிச்சுக்கிட்டேன். அரசாங்கம் கொடுக்கிற சம்பளமே போதும். சந்தோசமா நிம்மதியா வாழலாம்ன்னு பலவிதமா சொல்லிப் பார்த்தாச்சு. அந்த மனுசன் மதிச்சா தானே. 'எல்லோரும் வாங்கறாங்க. நான் வாங்காம தனியா நின்னா கூட்டமா சேர்ந்து என்னை அழிச்சுடுவாங்க..'ன்னு கண்ணைக் கசக்குனாரு. லஞ்சம் வாங்க இப்படியொரு நியாயம். இப்போ கூட்டத்தோட சேர்ந்து அவரும் சிறைக்குப் போகப் போறாரு! நாம மானம், மரியாதையெல்லாம் கெட்டு சீரழிஞ்சு தெருவுல நிக்கப் போறோம்.".கண்ணீர் சிந்தின அம்மாவை கவலையோடு பார்த்தான்.."அம்மா என் ஃப்ரெண்ட்சுக்கெல்லாம் தெரிஞ்சா அவ்வளவு தான்ம்மா. கிண்டல் பண்ணியே கொன்னுடுவாங்க…" முனகினான்.."சொந்தக்காரங்க முன்னாடி தலைகுனிஞ்சு நிக்கணுமே. செய்திச் சேனல், பத்திரிக்கைகள், யூ ட்யூப் வீடியோ.. கடவுளே.. மயக்கம் வருதே. நான் எங்கேயாவது கொஞ்ச நாள் தலைமறைவாகிடட்டுமா".."நான் பூஜை ரூம் போறேன். எனக்கு கடவுளை விட்டா வேற கதி இல்லை..".பார்வதி கேஸ் அடுப்பை அணைத்துவிட்டு பூஜையறை ஓடுகிறாள்…. ஸ்ரீதரன் வீடு திரும்பினபோது இரவு ஒன்பது மணி.."வந்துட்டீங்களா…" கட்டி அணைத்துக் கொண்டு கதறினாள் பார்வதி.."இந்த வேலையே வேணாம். ராஜினாமா பண்ணுங்க முதல்ல..".அவளை மென்மையாக விலக்கினவன் அப்பா படத்திற்கு முன் வந்து கண்கலங்கி நின்றான்.."எங்க ஆபிஸ்ல ஏழு பேர் சிக்கிட்டாங்க. மொத்தம் ஒன்பது லட்சம் லஞ்சப் பணம் மாட்டியிருக்கு. நானும் இன்னொருத்தரும் மட்டும்தான் தப்பிச்சோம்.".புரியாமல் பார்த்தாள். மனதில் சந்தோசம். நிம்மதி.."ஆனா… நீங்க எப்படி.. அவங்க ரெய்டுக்கு வர்றது முன்னாடியே தெரியுமா."."ம்ஹூம்.." திரும்பினவனின் கண்களில் நீர்த் தேக்கம்.."என்னை அப்பாதான் காப்பாத்தினாரு.!" அழுதான்.."நீதி, நேர்மைன்னு நூறு சதவீத ஒழுக்கத்தோட வாழ்ந்த மனுசன் அவரு. இன்னைக்கு அவரோட நினைவு நாள். அதனால இன்னைக்கு ஒருநாளாவது லஞ்சம் வாங்காம இருக்கலாம்ன்னு முடிவு பண்ணி…" முடிக்கமுடியாமல் வெடித்தான்.."அப்பாவோட புண்ணியம்தான் என்னைக் காப்பாத்தியிருக்கு…".படமாக சிரித்துக் கொண்டிருக்கிறார் அவர்!
"சரிங்க அண்ணா வெச்சுடறேன்…" போனை டேபிள் மேல் வீசி விட்டு "அம்மா அம்மா…" என அலறினபடி கிச்சனுக்கு ஓடினான் செந்தில்..குக்கரின் மூன்றாவது விசிலுக்காகக் காத்திருந்த பார்வதி எரிச்சலுடன் திரும்பினாள்..'என்னடா' என்றது பார்வை.."அப்பாவோட ஆபிஸ்ல காலைலிருந்து ரெய்டாம். மூணு கார்ல ஸ்க்வாட்காரங்க வந்து இறங்கியிருக்காங்களாம். ஆபிஸ்க்கு எதிர்ல பேக்கரி வெச்சு நடத்துற திருப்பதி அண்ணன் போன் பண்ணி எனக்கு தகவல் சொன்னாரு."."அடக் கடவுளே…" பார்வதி நிலைகுலைந்து போய் டேபிளில் சரிந்தாள்.."என்னடா இது சோதனை!' அது அரசாங்க ஆபிசே கிடையாது, கொள்ளைக் காரங்க குடியிருக்கிற கூடாரம்ன்னு ஏற்கெனவே நம்ம ஊருல நல்ல பேரு! பாதிக்கப்பட்ட யாரோ ஒருத்தர்தான் மேலிடத்துல புகார்பண்ணியிருக்கனும். அதனாலதான் இப்படி நடந்திருக்குது…" யூகித்தாள்.."அம்மா… அப்பா…" செந்தில் முடிக்க முடியாமல் கதறினான்.."அந்த அங்காளம்மன்தான் அவரைக் காப்பாத்தணும்! லஞ்சம் வாங்காதீங்கன்னு தலைபாடா அடிச்சுக்கிட்டேன். அரசாங்கம் கொடுக்கிற சம்பளமே போதும். சந்தோசமா நிம்மதியா வாழலாம்ன்னு பலவிதமா சொல்லிப் பார்த்தாச்சு. அந்த மனுசன் மதிச்சா தானே. 'எல்லோரும் வாங்கறாங்க. நான் வாங்காம தனியா நின்னா கூட்டமா சேர்ந்து என்னை அழிச்சுடுவாங்க..'ன்னு கண்ணைக் கசக்குனாரு. லஞ்சம் வாங்க இப்படியொரு நியாயம். இப்போ கூட்டத்தோட சேர்ந்து அவரும் சிறைக்குப் போகப் போறாரு! நாம மானம், மரியாதையெல்லாம் கெட்டு சீரழிஞ்சு தெருவுல நிக்கப் போறோம்.".கண்ணீர் சிந்தின அம்மாவை கவலையோடு பார்த்தான்.."அம்மா என் ஃப்ரெண்ட்சுக்கெல்லாம் தெரிஞ்சா அவ்வளவு தான்ம்மா. கிண்டல் பண்ணியே கொன்னுடுவாங்க…" முனகினான்.."சொந்தக்காரங்க முன்னாடி தலைகுனிஞ்சு நிக்கணுமே. செய்திச் சேனல், பத்திரிக்கைகள், யூ ட்யூப் வீடியோ.. கடவுளே.. மயக்கம் வருதே. நான் எங்கேயாவது கொஞ்ச நாள் தலைமறைவாகிடட்டுமா".."நான் பூஜை ரூம் போறேன். எனக்கு கடவுளை விட்டா வேற கதி இல்லை..".பார்வதி கேஸ் அடுப்பை அணைத்துவிட்டு பூஜையறை ஓடுகிறாள்…. ஸ்ரீதரன் வீடு திரும்பினபோது இரவு ஒன்பது மணி.."வந்துட்டீங்களா…" கட்டி அணைத்துக் கொண்டு கதறினாள் பார்வதி.."இந்த வேலையே வேணாம். ராஜினாமா பண்ணுங்க முதல்ல..".அவளை மென்மையாக விலக்கினவன் அப்பா படத்திற்கு முன் வந்து கண்கலங்கி நின்றான்.."எங்க ஆபிஸ்ல ஏழு பேர் சிக்கிட்டாங்க. மொத்தம் ஒன்பது லட்சம் லஞ்சப் பணம் மாட்டியிருக்கு. நானும் இன்னொருத்தரும் மட்டும்தான் தப்பிச்சோம்.".புரியாமல் பார்த்தாள். மனதில் சந்தோசம். நிம்மதி.."ஆனா… நீங்க எப்படி.. அவங்க ரெய்டுக்கு வர்றது முன்னாடியே தெரியுமா."."ம்ஹூம்.." திரும்பினவனின் கண்களில் நீர்த் தேக்கம்.."என்னை அப்பாதான் காப்பாத்தினாரு.!" அழுதான்.."நீதி, நேர்மைன்னு நூறு சதவீத ஒழுக்கத்தோட வாழ்ந்த மனுசன் அவரு. இன்னைக்கு அவரோட நினைவு நாள். அதனால இன்னைக்கு ஒருநாளாவது லஞ்சம் வாங்காம இருக்கலாம்ன்னு முடிவு பண்ணி…" முடிக்கமுடியாமல் வெடித்தான்.."அப்பாவோட புண்ணியம்தான் என்னைக் காப்பாத்தியிருக்கு…".படமாக சிரித்துக் கொண்டிருக்கிறார் அவர்!