'அப்பா ரொம்ப கோபக்காரர்' சிறுகதை படித்தேன். முன்கோபி, கோபக்காரன் என்று விமர்சிக்கப்படும் மாதவனின் அப்பா , கதை முழுவதும் அப்பாவை எடுத்தெறிந்து பேசும் கோபக்காரர் என்று சித்தரிக்கப்பட்டுள்ளதையும், , ஆஸ்பிடலில் அட்மிட் ஆகியுள்ள மனைவியின் காலை தடவிக் கொடுத்து விட்டு, திரும்பி நின்று அவர் கண்ணீர் மல்குவது மனைவி மீதுள்ள பாசத்தின் ஆர்ட்டீசியன் ஊற்று அவருள் இருப்பதை , கதையை படிப்பவர்களை மலைக்க வைக்கிறது.– ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்..வணக்கம். "தமிழ்நாட்டின் வானிலை மனிதன் பிரதீப் ஜான்" அவர்களின் நேர்காணல் படித்ததும் ஒரு வானிலை அறிக்கை கேட்டது போல மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. வீட்டிற்குள் உட்கார்ந்து மழை வருமா? வராதா என்று வானத்தைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்களை சொல்லுவது பாராட்டுக்குரியது. அருமையான நேர்காணல் ஒன்றை பிரசுரித்து எங்களுக்கு வானிலை அறிக்கை எப்படி சொல்லப்படுகிறது என்று புரிய வைத்த "கல்கி" இதழுக்கு பாராட்டுக்கள். – பிரகதாநவநீதன், மதுரை.'இந்தியா இந்தியர்களின் நாடு என்று தராசார் கூறியுள்ளதே சரி..உலக மகா கவிஞன் பாரதி 'வங்கத்தில் பிறந்திருந்தால் நோபல் பரிசு வாங்கியிருப்பான் என்று கவிஞர். கண்ணதாசன் ஆதங்கப்பட்டுள்ளதில் தமிழர்களை தாண்டி , உலகில் பாரதியின் எண்ணத்தை படித்த , கடைப்பிடிப்போர் ஆதங்கமும் அடங்கும்.– ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்..21 ஆண்டுகளுக்கு பிறகு 'மிஸ் யுனிவர்ஸ்' பட்டத்தை இந்தியாவிற்கு பெற்றுத் தந்திருக்கும் 21 வயதுடைய ஹர்னாஸ் சந்து, "நம்மைப்பற்றி நாம் தான் பேச வேண்டும்" என்பது துணிவான, இன்றைய இளைஞர்களுக்கு தேவையான அறிவுரை.– லலிதா சடகோபன், ஶ்ரீரங்கம்.இனப் பெருக்கத்துக்கு மட்டுமே ஒரு பெண்ணுக்கு ஆண் தேவை;மற்றபடி, அவளுக்கு அவன் கணவனாக தொடர்வது அனாவசியம்; தான் பெற்ற குழந்தையின் தந்தையாக இருந்தால் போதும் என்ற மேலை நாட்டு கலாச்சார போக்கை அருமையாக படம் பிடித்துக் காட்டியது, "சிங்கிள் மதர்" தெலுங்கு மொழிமாற்ற சிறுகதை.– உஷா, நாமக்கல்..அட்டைப்படம் அசத்தல் பேட்டியை உள்ளே தேடிப் பாத்து ஏமாந்தேன்!-பாண்டியன், தூத்துக்குடி
'அப்பா ரொம்ப கோபக்காரர்' சிறுகதை படித்தேன். முன்கோபி, கோபக்காரன் என்று விமர்சிக்கப்படும் மாதவனின் அப்பா , கதை முழுவதும் அப்பாவை எடுத்தெறிந்து பேசும் கோபக்காரர் என்று சித்தரிக்கப்பட்டுள்ளதையும், , ஆஸ்பிடலில் அட்மிட் ஆகியுள்ள மனைவியின் காலை தடவிக் கொடுத்து விட்டு, திரும்பி நின்று அவர் கண்ணீர் மல்குவது மனைவி மீதுள்ள பாசத்தின் ஆர்ட்டீசியன் ஊற்று அவருள் இருப்பதை , கதையை படிப்பவர்களை மலைக்க வைக்கிறது.– ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்..வணக்கம். "தமிழ்நாட்டின் வானிலை மனிதன் பிரதீப் ஜான்" அவர்களின் நேர்காணல் படித்ததும் ஒரு வானிலை அறிக்கை கேட்டது போல மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. வீட்டிற்குள் உட்கார்ந்து மழை வருமா? வராதா என்று வானத்தைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்களை சொல்லுவது பாராட்டுக்குரியது. அருமையான நேர்காணல் ஒன்றை பிரசுரித்து எங்களுக்கு வானிலை அறிக்கை எப்படி சொல்லப்படுகிறது என்று புரிய வைத்த "கல்கி" இதழுக்கு பாராட்டுக்கள். – பிரகதாநவநீதன், மதுரை.'இந்தியா இந்தியர்களின் நாடு என்று தராசார் கூறியுள்ளதே சரி..உலக மகா கவிஞன் பாரதி 'வங்கத்தில் பிறந்திருந்தால் நோபல் பரிசு வாங்கியிருப்பான் என்று கவிஞர். கண்ணதாசன் ஆதங்கப்பட்டுள்ளதில் தமிழர்களை தாண்டி , உலகில் பாரதியின் எண்ணத்தை படித்த , கடைப்பிடிப்போர் ஆதங்கமும் அடங்கும்.– ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்..21 ஆண்டுகளுக்கு பிறகு 'மிஸ் யுனிவர்ஸ்' பட்டத்தை இந்தியாவிற்கு பெற்றுத் தந்திருக்கும் 21 வயதுடைய ஹர்னாஸ் சந்து, "நம்மைப்பற்றி நாம் தான் பேச வேண்டும்" என்பது துணிவான, இன்றைய இளைஞர்களுக்கு தேவையான அறிவுரை.– லலிதா சடகோபன், ஶ்ரீரங்கம்.இனப் பெருக்கத்துக்கு மட்டுமே ஒரு பெண்ணுக்கு ஆண் தேவை;மற்றபடி, அவளுக்கு அவன் கணவனாக தொடர்வது அனாவசியம்; தான் பெற்ற குழந்தையின் தந்தையாக இருந்தால் போதும் என்ற மேலை நாட்டு கலாச்சார போக்கை அருமையாக படம் பிடித்துக் காட்டியது, "சிங்கிள் மதர்" தெலுங்கு மொழிமாற்ற சிறுகதை.– உஷா, நாமக்கல்..அட்டைப்படம் அசத்தல் பேட்டியை உள்ளே தேடிப் பாத்து ஏமாந்தேன்!-பாண்டியன், தூத்துக்குடி