வினோத்.பிரான்ஸ்சில் ஆண்டுதோறும் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா 1946ல் தொடங்கபட்டது. முதலில் ஆவணப்படங்களை திரையிடுவதற்காகத் தொடங்கப்பட்ட இந்த (Cannes Festival, பிரெஞ்சு மொழியில் Festival de Cannes), இபோது உலக அளவில் மிகுந்த செல்வாக்கும் மதிப்பும் கொண்ட ஒரு திருவிழாவாகியிருக்கிறது. இன்று உலகின் பல நாடுகளின், ஆவணத் திரைப்படங்கள் உட்பட அனைத்து வகைத் திரைப்படங்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன..அழைப்பிதழ் பெற்றோர் மட்டுமே பங்குகொள்ளும் இவ்விழா ஆண்டுதோறும் மே மாதம் நடைபெறுகிறது. 80களில் சில இந்தியப் படங்கள் மட்டுமே நுழைந்த இந்த விழாவில் கடந்த சில ஆண்டுகளாக கலக்கிக்கொண்டிருப்பவர்கள் இந்தியர்கள். பாலிவுட் மட்டுமில்லை, கோலிவுட், சாண்டல்வுட் படங்களும் போட்டிகளில் திரையிடப்படுகிறது. கலைஞர்களும் பங்கேற்கின்றனர்..இந்த ஆண்டுவிழாவில் இந்தியா கெளரவம் பெறும் மதிப்பு மிக்க நாடாக அறிவிக்கப்ட்டிருக்கிறது. அதனால், இந்தியா சார்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையில் நடிகர் அக்ஷய்குமார், மாதவன், இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், நடிகை பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இவர்களைத்தவிர ஒரு பெரிய இந்திய நடிகர் பட்டாளம்..இந்த மாதம் 17ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை நடக்கும் இந்த 75வது 'கான்' திரைப்பட விழாவின் 'தங்க பனை' விருது தேர்வுக்கான நடுவர்கள் குழுவில் இடம் பெற்றுள்ளவர் நமது பாலிவுட் நடிகை தீபிகா படுகோன்..விழாவில் பங்குக்கொள்ள அழைக்கப்பட்ட விருந்தினர்கள் விரித்த சிவப்பு கம்பளத்தின் வழியே அழைத்துச் செல்லப்படுவார்கள். இம்முறை இந்த கெளரவத்தைப்பெற்ற இந்தியர்கள் 12 பேர். இதில் நடிகைகள் அணிந்து வரும் உடைகள் ஒரு பேசுபொருளாகி விவாதிக்கப்படும். தீபிகா படுகோன் தென்னிந்தியப் பாணி சேலை அணிந்திருந்தார். ஆனால் அவர் அணிந்திருந்த ஜாக்கெட் கெளரமாகயில்லை..தொடக்கவிழாவில் அனுராக் தாக்கூரின் சம்பிராதயமான பேச்சைத்தொடர்ந்து விசேஷ விருந்தினர்கள் பேசினார்கள். அதில் தீபிகாவின் பேச்சு பலரைக் கவந்தது.."இந்த வருடம் நடுவர்கள் குழுவில் இந்தியா சார்பாக நான் பங்கேற்று இருப்பது எதிர்பாராத ஒன்று. இது எனக்கு பெருமிதமான தருணம். சினிமா துறைக்குள் 15 வருடங்களுக்கு முன்னால் நான் வந்தபோது என் திறமையை யாரும் பெரிதாக மதிப்பிட்டு இருப்பார்களா என தெரியவில்லை. ஆனால், அங்கிருந்து இன்று கான் விழாவின் நடுவராக இருப்பது பெருமிதமான ஒன்று. இந்திய கலைஞர்களின் திறமை மீது எப்போதுமே எனக்கு நம்பிக்கை உண்டு. இந்த 75 வருட 'கான்' திரைப்பட விழாவில் இந்தியர்களின் கலையும், கலைப்படைப்பும் நிறைய உள்ளது. அவர்களை போன்ற திறமையான முன்னோடிகளால்தான் நாங்கள் இங்கு இருக்கிறோம். இந்தியர்கள் 'கான்' விழாவில் பங்கேற்பது என்ற நிலை மாறி, 'இந்தியாவில் நடைபெறும் உலகப்படவிழாவில் உலக சினிமாவின் பல கலைஞர்கள் பங்கேற்பது கெளரவம்' என்ற நிலை விரைவில் வரும். .இந்த சிவப்பு நடை விரிப்பு வழியே அழைத்துச்செல்லப்படும் கெளரவத்தை கடந்த 2003ஆம் வருடம் முதல் தொடர்ந்து பெற்றுவருபவர் நம் ஐஸ்வர்யா ராய். இந்திய நடிகைகளில் முதன் முறையாக நடிகை ஐஷ்வர்யா ராய் கான் திரைப்பட விழாவின் நடுவராகப் பங்கேற்றார். அன்றில் இருந்து இன்று வரை கான் திரைப்பட விழாவில் ஐஷ்வர்யா நௌவர், சிறப்பான அழைப்பாளார், பார்வையாளார் என்று எதாவது ஒரு வகையில் ராயின் வரவு எப்போதும் ரசிகர்களின் கவனத்தைக் கவரும் ஒரு விஷயமாகவே இருந்துவருகிறது. இந்த வருடமும் அவர் தன் கணவரும் நடிகருமான அபிஷேக் பச்சன் மற்றும் மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டுள்ளார்..நடிகை பூஜா ஹெக்டேவும் இந்தியா சார்பாக இந்த 75வது 'கான்' திரைப்பட விழாவில் முதன் முறையாக கலந்து கொள்கிறார். . இந்தியா சார்பில் தான் கலந்து கொண்டு இருப்பது தனக்கு பெருமையான விஷயமாகவும், கான் திரைப்பட விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பில் பங்கேற்றது தன் கனவு நனவான தருணம் என்று சொல்லும் இவர் "நம் இந்தியப் படங்களை மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிட்டு பேசுவதை நிறுத்தி விட்டு நம் திறமைகளை நம் கதைகளை கொண்டாட வேண்டும். அப்படி தான், 'சாருலதா', 'நாயக்' போன்ற படங்கள் இந்தியாவை தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது" என்றார்..விழாவில் நடிகர் மாதவனின் ராக்கெட்ரி, .பார்த்திபனின் இரவின் நிழல் கமலின் விகரம் ட்ரையலர் திரையிடப்படுகிறது..எதையும் புதுமையாக யோசித்து வித்தியாசமாக செய்யக்கூடியவர் இயக்குநர், நடிகர் ஆர்.பார்த்திபன். அந்த வகையில், கடந்த ஆண்டு அவர் இயக்கிய 'ஒத்த செருப்பு' என்ற திரைப்படம், தேசிய விருதையும், சர்வதேச அளவில் பல விருதுகளையும், பாராட்டுகளையும் குவித்தது. இந்நிலையில், மீண்டும் ஒரு புதுமையான முயற்சியாகத் தற்போது 'இரவின் நிழல்' என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். சுமார் 100 நிமிடங்கள் ஓடக்கூடிய இத்திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது. அதேவேளையில், Non Linear முறையில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படமாகும். இவ்வளவு கடின முயற்சிகளை மேற்கொண்ட பார்த்திபனுக்கு ஒரு பெரிய சிக்கல் ஏற்பட்டது. இத்திரைப்படத்தைப் பார்த்த கான்ஸ் குழு, முதலில் இது ஒரு சிங்கிள் ஷாட் பிலிம் என்பதை நம்ப மறுத்தது. அவர்களின் பல சோதனைகலைக்கடந்து இத்திரைப்படம் கான்ஸ் விழாவில் திரையிடவிருக்கிறது, தொழில்நுட்ப ரீதியில் மிகவும் புதுமையான முயற்சியாக உருவாகியிருக்கும் இத்திரைப்படம் உலக அளவில் பல சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வினோத்.பிரான்ஸ்சில் ஆண்டுதோறும் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா 1946ல் தொடங்கபட்டது. முதலில் ஆவணப்படங்களை திரையிடுவதற்காகத் தொடங்கப்பட்ட இந்த (Cannes Festival, பிரெஞ்சு மொழியில் Festival de Cannes), இபோது உலக அளவில் மிகுந்த செல்வாக்கும் மதிப்பும் கொண்ட ஒரு திருவிழாவாகியிருக்கிறது. இன்று உலகின் பல நாடுகளின், ஆவணத் திரைப்படங்கள் உட்பட அனைத்து வகைத் திரைப்படங்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன..அழைப்பிதழ் பெற்றோர் மட்டுமே பங்குகொள்ளும் இவ்விழா ஆண்டுதோறும் மே மாதம் நடைபெறுகிறது. 80களில் சில இந்தியப் படங்கள் மட்டுமே நுழைந்த இந்த விழாவில் கடந்த சில ஆண்டுகளாக கலக்கிக்கொண்டிருப்பவர்கள் இந்தியர்கள். பாலிவுட் மட்டுமில்லை, கோலிவுட், சாண்டல்வுட் படங்களும் போட்டிகளில் திரையிடப்படுகிறது. கலைஞர்களும் பங்கேற்கின்றனர்..இந்த ஆண்டுவிழாவில் இந்தியா கெளரவம் பெறும் மதிப்பு மிக்க நாடாக அறிவிக்கப்ட்டிருக்கிறது. அதனால், இந்தியா சார்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையில் நடிகர் அக்ஷய்குமார், மாதவன், இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், நடிகை பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இவர்களைத்தவிர ஒரு பெரிய இந்திய நடிகர் பட்டாளம்..இந்த மாதம் 17ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை நடக்கும் இந்த 75வது 'கான்' திரைப்பட விழாவின் 'தங்க பனை' விருது தேர்வுக்கான நடுவர்கள் குழுவில் இடம் பெற்றுள்ளவர் நமது பாலிவுட் நடிகை தீபிகா படுகோன்..விழாவில் பங்குக்கொள்ள அழைக்கப்பட்ட விருந்தினர்கள் விரித்த சிவப்பு கம்பளத்தின் வழியே அழைத்துச் செல்லப்படுவார்கள். இம்முறை இந்த கெளரவத்தைப்பெற்ற இந்தியர்கள் 12 பேர். இதில் நடிகைகள் அணிந்து வரும் உடைகள் ஒரு பேசுபொருளாகி விவாதிக்கப்படும். தீபிகா படுகோன் தென்னிந்தியப் பாணி சேலை அணிந்திருந்தார். ஆனால் அவர் அணிந்திருந்த ஜாக்கெட் கெளரமாகயில்லை..தொடக்கவிழாவில் அனுராக் தாக்கூரின் சம்பிராதயமான பேச்சைத்தொடர்ந்து விசேஷ விருந்தினர்கள் பேசினார்கள். அதில் தீபிகாவின் பேச்சு பலரைக் கவந்தது.."இந்த வருடம் நடுவர்கள் குழுவில் இந்தியா சார்பாக நான் பங்கேற்று இருப்பது எதிர்பாராத ஒன்று. இது எனக்கு பெருமிதமான தருணம். சினிமா துறைக்குள் 15 வருடங்களுக்கு முன்னால் நான் வந்தபோது என் திறமையை யாரும் பெரிதாக மதிப்பிட்டு இருப்பார்களா என தெரியவில்லை. ஆனால், அங்கிருந்து இன்று கான் விழாவின் நடுவராக இருப்பது பெருமிதமான ஒன்று. இந்திய கலைஞர்களின் திறமை மீது எப்போதுமே எனக்கு நம்பிக்கை உண்டு. இந்த 75 வருட 'கான்' திரைப்பட விழாவில் இந்தியர்களின் கலையும், கலைப்படைப்பும் நிறைய உள்ளது. அவர்களை போன்ற திறமையான முன்னோடிகளால்தான் நாங்கள் இங்கு இருக்கிறோம். இந்தியர்கள் 'கான்' விழாவில் பங்கேற்பது என்ற நிலை மாறி, 'இந்தியாவில் நடைபெறும் உலகப்படவிழாவில் உலக சினிமாவின் பல கலைஞர்கள் பங்கேற்பது கெளரவம்' என்ற நிலை விரைவில் வரும். .இந்த சிவப்பு நடை விரிப்பு வழியே அழைத்துச்செல்லப்படும் கெளரவத்தை கடந்த 2003ஆம் வருடம் முதல் தொடர்ந்து பெற்றுவருபவர் நம் ஐஸ்வர்யா ராய். இந்திய நடிகைகளில் முதன் முறையாக நடிகை ஐஷ்வர்யா ராய் கான் திரைப்பட விழாவின் நடுவராகப் பங்கேற்றார். அன்றில் இருந்து இன்று வரை கான் திரைப்பட விழாவில் ஐஷ்வர்யா நௌவர், சிறப்பான அழைப்பாளார், பார்வையாளார் என்று எதாவது ஒரு வகையில் ராயின் வரவு எப்போதும் ரசிகர்களின் கவனத்தைக் கவரும் ஒரு விஷயமாகவே இருந்துவருகிறது. இந்த வருடமும் அவர் தன் கணவரும் நடிகருமான அபிஷேக் பச்சன் மற்றும் மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டுள்ளார்..நடிகை பூஜா ஹெக்டேவும் இந்தியா சார்பாக இந்த 75வது 'கான்' திரைப்பட விழாவில் முதன் முறையாக கலந்து கொள்கிறார். . இந்தியா சார்பில் தான் கலந்து கொண்டு இருப்பது தனக்கு பெருமையான விஷயமாகவும், கான் திரைப்பட விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பில் பங்கேற்றது தன் கனவு நனவான தருணம் என்று சொல்லும் இவர் "நம் இந்தியப் படங்களை மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிட்டு பேசுவதை நிறுத்தி விட்டு நம் திறமைகளை நம் கதைகளை கொண்டாட வேண்டும். அப்படி தான், 'சாருலதா', 'நாயக்' போன்ற படங்கள் இந்தியாவை தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது" என்றார்..விழாவில் நடிகர் மாதவனின் ராக்கெட்ரி, .பார்த்திபனின் இரவின் நிழல் கமலின் விகரம் ட்ரையலர் திரையிடப்படுகிறது..எதையும் புதுமையாக யோசித்து வித்தியாசமாக செய்யக்கூடியவர் இயக்குநர், நடிகர் ஆர்.பார்த்திபன். அந்த வகையில், கடந்த ஆண்டு அவர் இயக்கிய 'ஒத்த செருப்பு' என்ற திரைப்படம், தேசிய விருதையும், சர்வதேச அளவில் பல விருதுகளையும், பாராட்டுகளையும் குவித்தது. இந்நிலையில், மீண்டும் ஒரு புதுமையான முயற்சியாகத் தற்போது 'இரவின் நிழல்' என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். சுமார் 100 நிமிடங்கள் ஓடக்கூடிய இத்திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது. அதேவேளையில், Non Linear முறையில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படமாகும். இவ்வளவு கடின முயற்சிகளை மேற்கொண்ட பார்த்திபனுக்கு ஒரு பெரிய சிக்கல் ஏற்பட்டது. இத்திரைப்படத்தைப் பார்த்த கான்ஸ் குழு, முதலில் இது ஒரு சிங்கிள் ஷாட் பிலிம் என்பதை நம்ப மறுத்தது. அவர்களின் பல சோதனைகலைக்கடந்து இத்திரைப்படம் கான்ஸ் விழாவில் திரையிடவிருக்கிறது, தொழில்நுட்ப ரீதியில் மிகவும் புதுமையான முயற்சியாக உருவாகியிருக்கும் இத்திரைப்படம் உலக அளவில் பல சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.