மகேஷ் குமார்."காலம்பரக் காபி உனக்கு இந்தச் சத்தரத்துல கெடையாது. கண்காணாம ஒழிஞ்சு போ. ஒரு மணு விறகு எடுத்துப்போடத் துப்பில்ல? பாத்திரம் எல்லாம் ஒரே கரி. பானைல தண்ணி இல்ல… கெணத்துல வாளியும் கயிறும் அப்பிடியே தொங்கறது. கொடிக்கயறு தொங்கிப் போயிடுத்து. வரவா மடி, விழுப்பு பார்க்கமாட்டாளா? எத்தனை தடவை சொல்லியிருக்கேன்…ம்ம்ம்? ".வார்த்தைகள் தடிப்பாக இருந்தாலும் கொஞ்சம் கூடக் கோவமே இல்லாத மென்மையான குரலுக்குச் சொந்தக்காரர் 'சத்திரம் அய்யர்'. அவர் உண்மையான பெயர் யாருக்கும் தெரியுமா என்பது சந்தேகம்தான். விசுவநாதனோ சாமிநாதனோ பரமேஸ்வரனோ ஏதோ ஒன்றாக இருக்கலாம். ரேஷன் அல்லது ஓட்டர் கார்டு (இருந்தால்) பார்த்தால் ஒருவேளை தெரியலாம். அவருடைய அஸிஸ்டண்ட் கணேசனுக்குத்தான் தினசரி மேற்படி அர்ச்சனை 3 வேளையும்..அய்யருக்கு ஒல்லியான உருவி விட்டாற்போன்ற தேகம். வாங்கி ஒரு வாரம் மட்டுமே வெள்ளையாய்க் கண்டு பிறகு மெள்ள மெள்ள பழுப்பாய்க் காணும் 4 முழ வேஷ்டி, தோளில் ஒரு சிவப்பு காசித் துண்டு. கெட்டியான பூணூல். நெற்றியில் பட்டையாய் திருநீறு. சந்தை, சத்திரம் போஸ்ட் ஆபீஸ்… எங்கே பார்த்தாலும் அவ்வளவுதான் அவரது டிரெஸ் கோட்..ஊரின் மத்தியில் பரபரப்பான இடத்தில் இருக்கும் சத்திரம் இயங்குவது ஊரைவிட்டு வெளியேறி திரைகடலோடி திரவியம் தேடிய சிலரின் தயவில் ஏற்படுத்தப்பட்ட ஒரு டிரஸ்ட் பேரில். பெரிதாக இல்லாவிட்டாலும் சுமாரான அளவில் 10-50 பேருடன் ரொம்ப பணவசதி இல்லாத சிக்கனமாக நடத்த விரும்பும் குடும்ப நிகழ்வுகளுக்கு சொற்ப வாடகையில் கிடைக்கும். சமையலுக்கு விறகு அடுப்புகளும் பாத்திரங்களும் உண்டு. கொல்லையில் கிணறு. நாலைந்து தென்னை மரங்கள், நிறைய முருங்கை மரங்கள், கருவேப்பிலை என்று சின்ன தோட்டமும் உண்டு. காலேஜ் முருங்கை என்று சீசனில் சாட்டை சாட்டையாய்க் காய்க்கும். மழைக்காலத்தில் கம்பளிப்பூச்சி அடையாய் அப்பியிருக்கும். "பாவம் அதுகளும் எங்கதான் போகும்… இருந்துட்டுப் போட்டும். நாம கொஞ்சம் ஜாக்கரதையா இருந்தாப் போச்சு" என்பார்..கிராமத்திற்குச் சொல்லி அனுப்பி மரமேறிகள் வரவழைத்து தேங்காய் பறித்து, மரத்தை சுத்தம் செய்யச்சொல்லி 4 காயும் 5 ரூபாயும் கொடுப்பார். 'ஷேமமா இருப்பா. கொழந்தேளப் படிக்க வை" என்று அனுப்பிவைப்பார்..வாசல் கதவுக்கு அருகில் ஒரு சின்ன சிலேட்டுப்பலகை ஆணியில் தொங்கும். அந்த வாரம் புக்கிங் விவரங்களை சாக்பீஸில் எழுதிவைப்பார். முனிசிபாலிட்டி உத்தரவு இருப்பதால் பக்கத்தில் அலமாரியில் ஒரு ரிஜிஸ்தரும் இருக்கும். பதிவு செய்தவர் விவரங்களுடன் என்ன நிகழ்ச்சி, எத்தனை பேர், என்ன சமையல் என்று குறித்திருப்பார். இன்னொரு பேரேட்டில் வரவு செலவுகள்..ஏதாவது நிகழ்வுக்கு 2 நாள் முன்னால் அவர் கணேசனைக் கூட்டிக்கொண்டு விறகு வாங்கப் போவது ஒரு வைபவம். வளைந்து நெளிந்து போன சக்கரங்களுடன் ஒரு சின்ன கைவண்டி சத்திரத்தின் அசையும் சொத்துக்களில் ஒன்று. அதை கணேசன் 'கடக் கடக்' சத்தத்துடன் தள்ளிக்கொண்டு போக நாயக்கர் விறகு டிப்போவுக்குப் பயணம் தொடங்கும்.."மாமா… கொல்லம் பட்டறைக்குக் கொண்டுபோய் புது சக்கரம் போட்டு டயர் மாட்டினா சொஸ்தமா இருக்கும்" என்பான் கணேசன்.."இருக்கும்… இருக்கும்… எல்லாம் சொஸ்தமாத்தான் இருக்கும். உன் வரும்படிலதான் பண்ணணும். செய்யறியா?" என்று எதிர்கேள்வி கேட்டு அத்தோடு அந்த சம்பாஷணை நிறைவுபெறும்.."என்ன நாய்க்கரே, சௌக்யமா? போன விச குடுத்த விறகெல்லாம் பச்சை. ஒண்ணு கூட எரியல. பாட்டில் பாட்டிலா கிரசின் விட்டதுதான் மிச்சம். இவன் நாலு நாளைக்கு கண்ணு செவந்து திரிஞ்சான்"."என்ன அய்யரே… இப்படிச் சொல்லிட்டீங்க. கூரை வேஞ்சும் அத்தனை வெறகும் சாரல் கூடப் படாம இருக்கு."."ஆமா… கூரை வேஞ்சு மாமாங்கம் ஆறது. வெளிய உள்ள எல்லாம் ஒண்ணுதான். சரி சரி காஞ்ச வெறகா 5 மணு போடுங்கோ. டேய் கணேசா போடா உள்ள".மூவரும் டிப்போவின் மறு மூலைக்குப் போவார்கள். கைவண்டி உள்ளே போனால் சேற்றில் சிக்கிக்கொள்ளும் என்பதால் கடைவாசலிலேயே நிற்கும். மூலையில்தான் சின்னதும் பெரிசுமாய் கழித்த விறகுகளெல்லாம் நாயக்கர் குவித்து வைத்திருப்பார். பாதிக்கு மேல் வெறும் மரப்பட்டைகள்தான் இருக்கும். இடம் காலியானால் போதும் என்று சல்லிசாய்க் கொடுப்பார் நாயக்கர்.."செராயெல்லாம் வெறகாகுமா? ம்ம்ம்…" என்றபடி அருகே இருக்கும் நல்ல விறகில் நாலை இழுப்பார் அய்யர். "டேய் கணேசா…" என்று இரைவார்..அவன் மண்டி போட்டு கருட வாகனம் போல கைகளை நீட்டி, குறுக்கே ஒரு சாக்கைப் பரப்பி தயாராய் இருப்பான். ஐந்தாறு விறகுகளை அவன் கையில் வைத்து "போய் தராசுல வெச்சுட்டு வா" என்பார். இப்படி நாலைந்து நடை ஆனபின், கொஞ்சம் சின்னப்பட்டைகள் சிராய்த் தூள் போன்றவற்றையும் ஒரு சாக்குப்பையில் அடைத்து எடுத்துக்கொள்வார். கூடவே கொஞ்சம் வரட்டிகளும்..தராசில் 10, 20 என்று கற்களை வைத்து எடை போட்டு கைவண்டியில் ஏற்றியபின்னர், "நாய்க்கரே, வெலை கொஞ்சம் படிஞ்சு போடுங்க. சத்திரத்துக்குத்தானே… பாவம் ஏழை பாழைங்கதான் வரா… ரொம்பக் கசக்க முடியாது பாருங்கோ" என்பார்.."அதெப்படிக் கட்டும் அய்யரே… மலங்காட்டுல இருந்து வெறகு கொண்டு வர்ரவன் லாரி லோடு இவ்வளவுங்கறான். குடுக்கத்தானே வேண்டியிருக்கு. வியாபாரம் பண்ணனும் பாருங்க…" என்று சிரித்தபடி பில் போட்டு பணம் வாங்கிக்கொண்டு கணேசனைக் கூப்பிட்டு இன்னும் நாலு விறகு கொடுப்பார். பின்னர் இருவரும் நகரும்போது ஒரு சின்னப் பையில் கொஞ்சம் லீக்கோ கரியும் கொடுப்பார்.."குமுட்டிக்குப் போடுங்க… நெய்வேலி லீகோ… நின்னு எரியும்."."சந்தோஷம். காபி கெட்டில் வெக்கக் காணும். ஷேமமா இருங்கோ" என்று அய்யரும் கணேசனும் கிளம்புவார்கள்..சத்திரத்தில் நடக்கும் நிச்சயதார்த்தம், இருபதாம் கல்யாணம், வளைகாப்பு, அறுபதாம் கல்யாணம் எல்லாம் நடந்த பிறகும், நடத்தியவர்கள் அவ்வப்போது வந்து அய்யருக்கு நன்றி சொல்லிவிட்டு சம்பந்தப்பட்டவர்கள் சௌக்கியமாய் இருப்பதைச் சொல்லி அவரை சந்தோஷப்படுத்திவிட்டுப் போவார்கள். முடிந்தவர்கள் கிராமத்தில் இருந்து வாழைத்தண்டு, இலை, பழத்தார் ஏதாவது கொடுத்துவிட்டும் போவார்கள். தைமாதம் யாராவது ஆட்களை அனுப்பி ஓட்டடை தட்டி வெள்ளையடித்துக் கொடுப்பவர்களும் உண்டு. மோட்டருக்குக் காயில் வாங்க வரும் பையன் பல்பு, ஒயரிங் பிரச்னைகளை சரிசெய்துவிட்டுப் போவான்..அவர் குடும்பம் எங்கே என்ன விவரம் என்பதெல்லாம் யாரும் கேட்டதில்லை. அவரும் அதைபற்றி பிரஸ்தாபித்ததும் இல்லை. கணேசனுக்குப் பிறகு வெங்கிட்டா, மூர்த்தி, நாணா என்று பலர் வந்து போயினர். காலப்போக்கில் அவ்வப்போது வந்து ஒன்றிரண்டு நாட்கள் தங்கிப்போவோர் போக்குவரவும் நின்றுபோனது. அய்யர் இருந்த காலம் வரை சத்திரமும் இருந்தது..(தொடரும்).ஓவியம்: ராஜன்
மகேஷ் குமார்."காலம்பரக் காபி உனக்கு இந்தச் சத்தரத்துல கெடையாது. கண்காணாம ஒழிஞ்சு போ. ஒரு மணு விறகு எடுத்துப்போடத் துப்பில்ல? பாத்திரம் எல்லாம் ஒரே கரி. பானைல தண்ணி இல்ல… கெணத்துல வாளியும் கயிறும் அப்பிடியே தொங்கறது. கொடிக்கயறு தொங்கிப் போயிடுத்து. வரவா மடி, விழுப்பு பார்க்கமாட்டாளா? எத்தனை தடவை சொல்லியிருக்கேன்…ம்ம்ம்? ".வார்த்தைகள் தடிப்பாக இருந்தாலும் கொஞ்சம் கூடக் கோவமே இல்லாத மென்மையான குரலுக்குச் சொந்தக்காரர் 'சத்திரம் அய்யர்'. அவர் உண்மையான பெயர் யாருக்கும் தெரியுமா என்பது சந்தேகம்தான். விசுவநாதனோ சாமிநாதனோ பரமேஸ்வரனோ ஏதோ ஒன்றாக இருக்கலாம். ரேஷன் அல்லது ஓட்டர் கார்டு (இருந்தால்) பார்த்தால் ஒருவேளை தெரியலாம். அவருடைய அஸிஸ்டண்ட் கணேசனுக்குத்தான் தினசரி மேற்படி அர்ச்சனை 3 வேளையும்..அய்யருக்கு ஒல்லியான உருவி விட்டாற்போன்ற தேகம். வாங்கி ஒரு வாரம் மட்டுமே வெள்ளையாய்க் கண்டு பிறகு மெள்ள மெள்ள பழுப்பாய்க் காணும் 4 முழ வேஷ்டி, தோளில் ஒரு சிவப்பு காசித் துண்டு. கெட்டியான பூணூல். நெற்றியில் பட்டையாய் திருநீறு. சந்தை, சத்திரம் போஸ்ட் ஆபீஸ்… எங்கே பார்த்தாலும் அவ்வளவுதான் அவரது டிரெஸ் கோட்..ஊரின் மத்தியில் பரபரப்பான இடத்தில் இருக்கும் சத்திரம் இயங்குவது ஊரைவிட்டு வெளியேறி திரைகடலோடி திரவியம் தேடிய சிலரின் தயவில் ஏற்படுத்தப்பட்ட ஒரு டிரஸ்ட் பேரில். பெரிதாக இல்லாவிட்டாலும் சுமாரான அளவில் 10-50 பேருடன் ரொம்ப பணவசதி இல்லாத சிக்கனமாக நடத்த விரும்பும் குடும்ப நிகழ்வுகளுக்கு சொற்ப வாடகையில் கிடைக்கும். சமையலுக்கு விறகு அடுப்புகளும் பாத்திரங்களும் உண்டு. கொல்லையில் கிணறு. நாலைந்து தென்னை மரங்கள், நிறைய முருங்கை மரங்கள், கருவேப்பிலை என்று சின்ன தோட்டமும் உண்டு. காலேஜ் முருங்கை என்று சீசனில் சாட்டை சாட்டையாய்க் காய்க்கும். மழைக்காலத்தில் கம்பளிப்பூச்சி அடையாய் அப்பியிருக்கும். "பாவம் அதுகளும் எங்கதான் போகும்… இருந்துட்டுப் போட்டும். நாம கொஞ்சம் ஜாக்கரதையா இருந்தாப் போச்சு" என்பார்..கிராமத்திற்குச் சொல்லி அனுப்பி மரமேறிகள் வரவழைத்து தேங்காய் பறித்து, மரத்தை சுத்தம் செய்யச்சொல்லி 4 காயும் 5 ரூபாயும் கொடுப்பார். 'ஷேமமா இருப்பா. கொழந்தேளப் படிக்க வை" என்று அனுப்பிவைப்பார்..வாசல் கதவுக்கு அருகில் ஒரு சின்ன சிலேட்டுப்பலகை ஆணியில் தொங்கும். அந்த வாரம் புக்கிங் விவரங்களை சாக்பீஸில் எழுதிவைப்பார். முனிசிபாலிட்டி உத்தரவு இருப்பதால் பக்கத்தில் அலமாரியில் ஒரு ரிஜிஸ்தரும் இருக்கும். பதிவு செய்தவர் விவரங்களுடன் என்ன நிகழ்ச்சி, எத்தனை பேர், என்ன சமையல் என்று குறித்திருப்பார். இன்னொரு பேரேட்டில் வரவு செலவுகள்..ஏதாவது நிகழ்வுக்கு 2 நாள் முன்னால் அவர் கணேசனைக் கூட்டிக்கொண்டு விறகு வாங்கப் போவது ஒரு வைபவம். வளைந்து நெளிந்து போன சக்கரங்களுடன் ஒரு சின்ன கைவண்டி சத்திரத்தின் அசையும் சொத்துக்களில் ஒன்று. அதை கணேசன் 'கடக் கடக்' சத்தத்துடன் தள்ளிக்கொண்டு போக நாயக்கர் விறகு டிப்போவுக்குப் பயணம் தொடங்கும்.."மாமா… கொல்லம் பட்டறைக்குக் கொண்டுபோய் புது சக்கரம் போட்டு டயர் மாட்டினா சொஸ்தமா இருக்கும்" என்பான் கணேசன்.."இருக்கும்… இருக்கும்… எல்லாம் சொஸ்தமாத்தான் இருக்கும். உன் வரும்படிலதான் பண்ணணும். செய்யறியா?" என்று எதிர்கேள்வி கேட்டு அத்தோடு அந்த சம்பாஷணை நிறைவுபெறும்.."என்ன நாய்க்கரே, சௌக்யமா? போன விச குடுத்த விறகெல்லாம் பச்சை. ஒண்ணு கூட எரியல. பாட்டில் பாட்டிலா கிரசின் விட்டதுதான் மிச்சம். இவன் நாலு நாளைக்கு கண்ணு செவந்து திரிஞ்சான்"."என்ன அய்யரே… இப்படிச் சொல்லிட்டீங்க. கூரை வேஞ்சும் அத்தனை வெறகும் சாரல் கூடப் படாம இருக்கு."."ஆமா… கூரை வேஞ்சு மாமாங்கம் ஆறது. வெளிய உள்ள எல்லாம் ஒண்ணுதான். சரி சரி காஞ்ச வெறகா 5 மணு போடுங்கோ. டேய் கணேசா போடா உள்ள".மூவரும் டிப்போவின் மறு மூலைக்குப் போவார்கள். கைவண்டி உள்ளே போனால் சேற்றில் சிக்கிக்கொள்ளும் என்பதால் கடைவாசலிலேயே நிற்கும். மூலையில்தான் சின்னதும் பெரிசுமாய் கழித்த விறகுகளெல்லாம் நாயக்கர் குவித்து வைத்திருப்பார். பாதிக்கு மேல் வெறும் மரப்பட்டைகள்தான் இருக்கும். இடம் காலியானால் போதும் என்று சல்லிசாய்க் கொடுப்பார் நாயக்கர்.."செராயெல்லாம் வெறகாகுமா? ம்ம்ம்…" என்றபடி அருகே இருக்கும் நல்ல விறகில் நாலை இழுப்பார் அய்யர். "டேய் கணேசா…" என்று இரைவார்..அவன் மண்டி போட்டு கருட வாகனம் போல கைகளை நீட்டி, குறுக்கே ஒரு சாக்கைப் பரப்பி தயாராய் இருப்பான். ஐந்தாறு விறகுகளை அவன் கையில் வைத்து "போய் தராசுல வெச்சுட்டு வா" என்பார். இப்படி நாலைந்து நடை ஆனபின், கொஞ்சம் சின்னப்பட்டைகள் சிராய்த் தூள் போன்றவற்றையும் ஒரு சாக்குப்பையில் அடைத்து எடுத்துக்கொள்வார். கூடவே கொஞ்சம் வரட்டிகளும்..தராசில் 10, 20 என்று கற்களை வைத்து எடை போட்டு கைவண்டியில் ஏற்றியபின்னர், "நாய்க்கரே, வெலை கொஞ்சம் படிஞ்சு போடுங்க. சத்திரத்துக்குத்தானே… பாவம் ஏழை பாழைங்கதான் வரா… ரொம்பக் கசக்க முடியாது பாருங்கோ" என்பார்.."அதெப்படிக் கட்டும் அய்யரே… மலங்காட்டுல இருந்து வெறகு கொண்டு வர்ரவன் லாரி லோடு இவ்வளவுங்கறான். குடுக்கத்தானே வேண்டியிருக்கு. வியாபாரம் பண்ணனும் பாருங்க…" என்று சிரித்தபடி பில் போட்டு பணம் வாங்கிக்கொண்டு கணேசனைக் கூப்பிட்டு இன்னும் நாலு விறகு கொடுப்பார். பின்னர் இருவரும் நகரும்போது ஒரு சின்னப் பையில் கொஞ்சம் லீக்கோ கரியும் கொடுப்பார்.."குமுட்டிக்குப் போடுங்க… நெய்வேலி லீகோ… நின்னு எரியும்."."சந்தோஷம். காபி கெட்டில் வெக்கக் காணும். ஷேமமா இருங்கோ" என்று அய்யரும் கணேசனும் கிளம்புவார்கள்..சத்திரத்தில் நடக்கும் நிச்சயதார்த்தம், இருபதாம் கல்யாணம், வளைகாப்பு, அறுபதாம் கல்யாணம் எல்லாம் நடந்த பிறகும், நடத்தியவர்கள் அவ்வப்போது வந்து அய்யருக்கு நன்றி சொல்லிவிட்டு சம்பந்தப்பட்டவர்கள் சௌக்கியமாய் இருப்பதைச் சொல்லி அவரை சந்தோஷப்படுத்திவிட்டுப் போவார்கள். முடிந்தவர்கள் கிராமத்தில் இருந்து வாழைத்தண்டு, இலை, பழத்தார் ஏதாவது கொடுத்துவிட்டும் போவார்கள். தைமாதம் யாராவது ஆட்களை அனுப்பி ஓட்டடை தட்டி வெள்ளையடித்துக் கொடுப்பவர்களும் உண்டு. மோட்டருக்குக் காயில் வாங்க வரும் பையன் பல்பு, ஒயரிங் பிரச்னைகளை சரிசெய்துவிட்டுப் போவான்..அவர் குடும்பம் எங்கே என்ன விவரம் என்பதெல்லாம் யாரும் கேட்டதில்லை. அவரும் அதைபற்றி பிரஸ்தாபித்ததும் இல்லை. கணேசனுக்குப் பிறகு வெங்கிட்டா, மூர்த்தி, நாணா என்று பலர் வந்து போயினர். காலப்போக்கில் அவ்வப்போது வந்து ஒன்றிரண்டு நாட்கள் தங்கிப்போவோர் போக்குவரவும் நின்றுபோனது. அய்யர் இருந்த காலம் வரை சத்திரமும் இருந்தது..(தொடரும்).ஓவியம்: ராஜன்