ஒரு கலைஞனின் வாழ்க்கை.– கே.வி.ஷைலஜா.நடிகர் மம்முட்டி மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கிறார். 1979-ல் "கனவுகள் விற்பனைக்கு இருக்கிறது'' (வில்கானுண்டு சொப்னங்கள்) என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு வந்தார். சிறந்த நடிகருக்கான விருதினை தேசிய அளவில் மூன்று முறையும் மாநில அளவில் பல முறையும் பெற்றிருக்கிறார். இந்தியாவின் மிக உயரிய விருதாகிய பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர். அவர் எழுதியிருக்கும் அவருடைய வாழ்க்கை கதையை தமிழில் மொழியாக்கம் செய்திருப்பவர் கே.வி.ஷைலஜா..என்னுடைய அப்பாவிற்கும் அம்மாவிற்கும்கூட ஓமர் ஷெரீஃபை யாரென்று தெரியாது. ஆனால் எர்ணாகுளம் மகாராஜாஸ் கல்லூரியில் படிக்கும் பல மாணவர்களுக்கும் அவனைத் தெரிந்திருந்தது. அவர்கள் ப்ரியம் மீதூற அவனை ஓமரென்றும் ஷெரீஃபென்றும் அழைத்தார்கள்..எகிப்தின் நடிகனான ஓமர் ஷெரீஃப்பாக ஆக வேண்டுமென்று உள்ளூர நினைத்த அந்தப் பையன், தான் அப்படி அறியப்பட வேண்டுமென்ற கனவோடும் எதிர்பார்ப்போடும் கண்களில் மாயையேற்று கல்லூரி வளாகத்தை வண்ணமயமாக்கிக் கொண்டிருந்தான்..ஆனால் ஒருநாள் அவனுடைய புத்தகத்திலிருந்து கல்லூரியின் அடையாள அட்டை கீழே விழுந்தது. அதைக் கண்டெடுத்த சக மாணவன் சசிதரன் கத்திக் கூப்பிட்டான். "டேய் உன்னோட பேரு முகம்மது குட்டிதானே. அட திருட்டுப் பையா, வேற பேரில் அலையறயாடா மம்முட்டி. ஹா…ஹா… நீ மம்முட்டிதானேடா ஓமர் ஷெரீஃபே?".வாழ்வில் முதல்முறையாக நான் "மம்முட்டி" என்று சசிதரனால் அழைக்கப்பட்டேன். பிறகு அக்கல்லூரி முழுவதும் நான் மம்முட்டியாக அறியப்பட்டேன்..அப்பெயர் இன்றளவும் என்னைப் பின்தொடர்கிறது. 'ஓமர் ஷெரீஃப்' என்ற பெயருடன் இருந்திருந்தால் நான் இத்தனை இணக்கமாக மக்களிடம் போயிருப்பேனா என்பது சந்தேகமே..எர்ணாகுளம் மகாராஜாஸ் கல்லூரியில் பி.ஏ. படிக்கச் சேர்ந்தபோதுதான் 'பி.ஐ. முகம்மதுகுட்டி' என்ற என்னுடைய பெயர் மிகவும் பட்டிக்காட்டுத்தனமாகத் தோன்றியது. சிலர் என்னை மிகவும் கொச்சையாக 'மெகம்மது குட்'டி என்றும் கூப்பிட்டார்கள். அப்பாவும், அம்மாவும் அன்றும் இன்றும் "மம்முது குஞ்ஞே" என்றுதான் கூப்பிடுகிறார்கள். எனக்குத் தெரிந்தவர்கள் யாரும் இந்தக் கல்லூரியில் இல்லை என்பதால், நான் என் பெயரை "ஷெரீப்" என்று மாற்றிப் பார்க்க ஆசைப்பட்டேன்..திலீப்குமார் யூசுஃப் கானாகவும், ப்ரேம்நசீர் அப்துல் காதராகவும் இருந்தவர்கள்தானே, கெ.பி. உம்மர் சினேகஜன் என்று மாறி பார்க்கவில்லையா, அதனால்தான் பெயர்மாற்றம் என்னை அதிக மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் என்று நினைத்தேன். ஓமர் ஷெரீஃபாக மாற நினைத்தது என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும்கூடத் தெரியாது. ஆனால் அன்று என்னுடன் இருந்த மிகச் சிலருக்கு அது தெரிந்திருந்தது..கல்லூரியில் எல்லோரும் 'மம்முட்டி' என்று கூப்பிடும்போது 'இந்தப் பெயர் சரியில்லையே' என்ற எண்ணம் என்னுள் ஓடிக்கொண்டே இருக்கும். என்னுடைய அப்பாவின் அப்பா பெயர் முகம்மது குட்டி. அப்படி பரம்பரை வழியாகத்தான் எனக்கு இந்தப் பெயர் வந்திருந்தது. ஆனாலும் மம்முட்டி எனும் பெயரின் யதார்த்த வேர் தீர்க்கதரிசியான முகம்மதிலிருந்தே வந்திருந்தது..இப்போதிருக்கிற பலருடைய பெயருக்கும் அதனுடைய வேருக்கும் இடையிலான பந்தம் மிகவும் சுவாரசியமானவை. 'சேகரன்குட்டி' என்ற பெயர்தான் சேகு, சேக்கு, செக்குட்டி, சேக்குண்ணி என்றெல்லாம் ஆனது. சமஸ்கிருத ருசியுடைய தேவனின் பெயர்தான் அடித்தட்டு மக்களிடம் போய்ச் சேரும்போது தேவன் என்று ஆகிறது..'வேலாயுதன்' என்ற பெயர்தான் வேலுப்பிள்ளை, வேலுக்குட்டி, வேலாண்டி, வேலன், வேலு என்றெல்லாம் ஆனது. 'ஜேக்கப்' என்பது சாக்கோ, சாக்கோச்சி, சாக்கு, சாக்குண்ணி என்றெல்லாம் மாறிப்போனது. 'குட்டப்பன்' என்கிற பெயர் பிடிக்காததால் நண்பனொருவன் கெசட்டில் விளம்பரம் கொடுத்து ப்ரகாசன் என்று பெயரை மாற்றினான். பிறகும் அவன் 'ப்ரகாசன் குட்டப்பன்' என்றுதான் அறியப்பட்டான். பெயர் மாற்றம் பல நேரங்களில் இப்படித்தான் துக்கத்தில் முடிகிறது..மம்முட்டி என்கிற பேரைக் கேட்கும்போது மனதில் உயர்ந்தெழும் உருவம் வடகேரளத்தில் மலபாரிலுள்ள முதியவருக்கானது. இது எப்படி வந்தது என்றெனக்குத் தெரியாது. முதல்முதலாக என்னைத் தேடிவந்த சினிமா வாய்ப்பு இந்தப் பெயரில்தான் வந்தது. மஞ்ஞேரியில் 'அட்வகேட் பி.எ. முகம்மது குட்டி' என்ற பெயர் பலகை வைத்திருந்த நாட்களில் ஒரு மத்தியான வெயிலில் போஸ்ட்மேன் விசாரித்தபடியே வந்தார். அவருடைய கையில் அட்வகேட் மம்முட்டிக்கொரு கடிதம் இருந்தது. இப்படி ஒரு வக்கீலை அந்த ஏரியாவில் போஸ்ட்மேன் அறிந்தவரில்லை. ஜனசக்தி ஃபிலிம்சிலிருந்து எம்.டி. வாசுதேவன் நாயர் அந்தக் கடிதத்தை அனுப்பியிருந்தார். இது எனக்காகத்தானிருக்கும் என்ற நம்பிக்கையில் நான் வாங்கினேன். கல்லூரியில் அதன் பழைமை தன்மையை யோசித்து விட்டொழித்துவிட வேண்டும் என்று நான் நினைத்த பெயர், இங்கே மீண்டும் என்னை சினிமாவிற்குக் கொண்டு செல்ல, தேடியலைந்துக் கண்டெடுத்தது..மூன்றாவது படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது பி.ஜி. விஸ்வாம்பரன் மீண்டும் என் பெயரை மாற்றினார். ஜாதியும், மதமும் புரிபடாத ஒரு பெயராக இருந்தால் எல்லா தரப்பிலிருந்தும் கொண்டாடுபவர்கள் இருப்பார்கள் என்றும் நினைத்தார்..அக்கருத்தில் எனக்கும் முழு உடன்பாடிருந்தது. அதனால் படத்திற்கான போஸ்டர் அடித்தபோது 'சஜில்' என்று பெயரை மாற்றி அடைப்புக்குறிக்குள் 'மம்முட்டி' என்றும் அச்சடித்திருந்தார். படம் வெளியாவதற்கு முன்பே வெளியிலிருந்த பெயர் போய் அடைப்புக்குறிக்குள் இருந்த பெயர் மட்டுமே மீதியாக இருந்தது. அங்கேயும் மம்முட்டி என்னைப் பின்தொடர்ந்திருந்தார்..மனதால் வெறுக்கவும், எதிர்க்கவும், வேதனைப்படவும் வைத்த பெயர்தான் பிறகு என்னை எல்லோருக்கும் அறியப்படவைத்தது. வெளிநாடுகளில் 'மாம்டி, மம்உட்டி, மாமுட்டி' என்றெல்லாம் பலரும் அழைத்தபோது அதன் அடிப்படையில் வடகேரளத்தில் மலபாரில் வயதான தேய்ந்துபோன உருவமும் பெயரும்தான் நினைவிற்கு வரும். அந்தப் பெயர் என்னைப் பலநேரங்களில் ஆள் கூட்டத்தில் தனியனாய் அடையாளப்படுத்திடவும், நெருங்கவும், கரைந்து உருகவும் உதவியது என்பதென்னவோ உண்மைதான்..குழந்தை பிறந்தவுடன் மனித உன்னதம், அடையாளம், கௌரவம், ஆதர்ஷம் என்பதெல்லாம் இல்லாமல் பெற்றோரும், நமக்கு வேண்டியவர்களும் வைப்பதுதானே பெயர். என் வாழ்வில் மம்முட்டியை என்னால் யோசிக்க முடியவில்லை. உதறி எறியப் பார்த்தும் மம்முட்டி என்னைப் பின்தொடர்ந்து கொண்டேயிருந்தார்..அப்பாவும், அம்மாவும் 'மம்மது குஞ்ஞே' என்று கூப்பிடும்போது அவ்வார்த்தையில் அதிக வாஞ்சை இருப்பதாய் தோன்றும். பெயர்களை நாம்தான் ப்ரியமானதாய் மாற்றிக் கொள்கிறோம். ஆனால் என் பெயர் எல்லோராலும் உச்சரிக்கப்பட்டு, உச்சரிக்கப்பட்டு எல்லோருக்கும் பிடித்தமானதாய் மாறியிருக்கிறது. அழைத்தலின் பின்னுள்ள அன்பும், வாத்சல்யமும்தான் பெயரைச் சந்தோஷமாக்குகிறது. என் பெயருக்கு இத்தனை பாசத்தைக் கொடுத்த எல்லோரின் அன்பைப் பொத்தி பாதுக்காகவும் மேலும் அவர்களை ஆத்மார்த்தமாக நேசிக்கவும்தான் நான் சிரமப்பட வேண்டியிருக்கிறது. நடிப்பிலும், அரிதாரத்திலும் அதன் பின்னாலும் அந்தச் சிரமத்தை நான் புன்னகையோடு ஏற்றுக்கொள்கிறேன்..(தொடரும்)
ஒரு கலைஞனின் வாழ்க்கை.– கே.வி.ஷைலஜா.நடிகர் மம்முட்டி மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கிறார். 1979-ல் "கனவுகள் விற்பனைக்கு இருக்கிறது'' (வில்கானுண்டு சொப்னங்கள்) என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு வந்தார். சிறந்த நடிகருக்கான விருதினை தேசிய அளவில் மூன்று முறையும் மாநில அளவில் பல முறையும் பெற்றிருக்கிறார். இந்தியாவின் மிக உயரிய விருதாகிய பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர். அவர் எழுதியிருக்கும் அவருடைய வாழ்க்கை கதையை தமிழில் மொழியாக்கம் செய்திருப்பவர் கே.வி.ஷைலஜா..என்னுடைய அப்பாவிற்கும் அம்மாவிற்கும்கூட ஓமர் ஷெரீஃபை யாரென்று தெரியாது. ஆனால் எர்ணாகுளம் மகாராஜாஸ் கல்லூரியில் படிக்கும் பல மாணவர்களுக்கும் அவனைத் தெரிந்திருந்தது. அவர்கள் ப்ரியம் மீதூற அவனை ஓமரென்றும் ஷெரீஃபென்றும் அழைத்தார்கள்..எகிப்தின் நடிகனான ஓமர் ஷெரீஃப்பாக ஆக வேண்டுமென்று உள்ளூர நினைத்த அந்தப் பையன், தான் அப்படி அறியப்பட வேண்டுமென்ற கனவோடும் எதிர்பார்ப்போடும் கண்களில் மாயையேற்று கல்லூரி வளாகத்தை வண்ணமயமாக்கிக் கொண்டிருந்தான்..ஆனால் ஒருநாள் அவனுடைய புத்தகத்திலிருந்து கல்லூரியின் அடையாள அட்டை கீழே விழுந்தது. அதைக் கண்டெடுத்த சக மாணவன் சசிதரன் கத்திக் கூப்பிட்டான். "டேய் உன்னோட பேரு முகம்மது குட்டிதானே. அட திருட்டுப் பையா, வேற பேரில் அலையறயாடா மம்முட்டி. ஹா…ஹா… நீ மம்முட்டிதானேடா ஓமர் ஷெரீஃபே?".வாழ்வில் முதல்முறையாக நான் "மம்முட்டி" என்று சசிதரனால் அழைக்கப்பட்டேன். பிறகு அக்கல்லூரி முழுவதும் நான் மம்முட்டியாக அறியப்பட்டேன்..அப்பெயர் இன்றளவும் என்னைப் பின்தொடர்கிறது. 'ஓமர் ஷெரீஃப்' என்ற பெயருடன் இருந்திருந்தால் நான் இத்தனை இணக்கமாக மக்களிடம் போயிருப்பேனா என்பது சந்தேகமே..எர்ணாகுளம் மகாராஜாஸ் கல்லூரியில் பி.ஏ. படிக்கச் சேர்ந்தபோதுதான் 'பி.ஐ. முகம்மதுகுட்டி' என்ற என்னுடைய பெயர் மிகவும் பட்டிக்காட்டுத்தனமாகத் தோன்றியது. சிலர் என்னை மிகவும் கொச்சையாக 'மெகம்மது குட்'டி என்றும் கூப்பிட்டார்கள். அப்பாவும், அம்மாவும் அன்றும் இன்றும் "மம்முது குஞ்ஞே" என்றுதான் கூப்பிடுகிறார்கள். எனக்குத் தெரிந்தவர்கள் யாரும் இந்தக் கல்லூரியில் இல்லை என்பதால், நான் என் பெயரை "ஷெரீப்" என்று மாற்றிப் பார்க்க ஆசைப்பட்டேன்..திலீப்குமார் யூசுஃப் கானாகவும், ப்ரேம்நசீர் அப்துல் காதராகவும் இருந்தவர்கள்தானே, கெ.பி. உம்மர் சினேகஜன் என்று மாறி பார்க்கவில்லையா, அதனால்தான் பெயர்மாற்றம் என்னை அதிக மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் என்று நினைத்தேன். ஓமர் ஷெரீஃபாக மாற நினைத்தது என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும்கூடத் தெரியாது. ஆனால் அன்று என்னுடன் இருந்த மிகச் சிலருக்கு அது தெரிந்திருந்தது..கல்லூரியில் எல்லோரும் 'மம்முட்டி' என்று கூப்பிடும்போது 'இந்தப் பெயர் சரியில்லையே' என்ற எண்ணம் என்னுள் ஓடிக்கொண்டே இருக்கும். என்னுடைய அப்பாவின் அப்பா பெயர் முகம்மது குட்டி. அப்படி பரம்பரை வழியாகத்தான் எனக்கு இந்தப் பெயர் வந்திருந்தது. ஆனாலும் மம்முட்டி எனும் பெயரின் யதார்த்த வேர் தீர்க்கதரிசியான முகம்மதிலிருந்தே வந்திருந்தது..இப்போதிருக்கிற பலருடைய பெயருக்கும் அதனுடைய வேருக்கும் இடையிலான பந்தம் மிகவும் சுவாரசியமானவை. 'சேகரன்குட்டி' என்ற பெயர்தான் சேகு, சேக்கு, செக்குட்டி, சேக்குண்ணி என்றெல்லாம் ஆனது. சமஸ்கிருத ருசியுடைய தேவனின் பெயர்தான் அடித்தட்டு மக்களிடம் போய்ச் சேரும்போது தேவன் என்று ஆகிறது..'வேலாயுதன்' என்ற பெயர்தான் வேலுப்பிள்ளை, வேலுக்குட்டி, வேலாண்டி, வேலன், வேலு என்றெல்லாம் ஆனது. 'ஜேக்கப்' என்பது சாக்கோ, சாக்கோச்சி, சாக்கு, சாக்குண்ணி என்றெல்லாம் மாறிப்போனது. 'குட்டப்பன்' என்கிற பெயர் பிடிக்காததால் நண்பனொருவன் கெசட்டில் விளம்பரம் கொடுத்து ப்ரகாசன் என்று பெயரை மாற்றினான். பிறகும் அவன் 'ப்ரகாசன் குட்டப்பன்' என்றுதான் அறியப்பட்டான். பெயர் மாற்றம் பல நேரங்களில் இப்படித்தான் துக்கத்தில் முடிகிறது..மம்முட்டி என்கிற பேரைக் கேட்கும்போது மனதில் உயர்ந்தெழும் உருவம் வடகேரளத்தில் மலபாரிலுள்ள முதியவருக்கானது. இது எப்படி வந்தது என்றெனக்குத் தெரியாது. முதல்முதலாக என்னைத் தேடிவந்த சினிமா வாய்ப்பு இந்தப் பெயரில்தான் வந்தது. மஞ்ஞேரியில் 'அட்வகேட் பி.எ. முகம்மது குட்டி' என்ற பெயர் பலகை வைத்திருந்த நாட்களில் ஒரு மத்தியான வெயிலில் போஸ்ட்மேன் விசாரித்தபடியே வந்தார். அவருடைய கையில் அட்வகேட் மம்முட்டிக்கொரு கடிதம் இருந்தது. இப்படி ஒரு வக்கீலை அந்த ஏரியாவில் போஸ்ட்மேன் அறிந்தவரில்லை. ஜனசக்தி ஃபிலிம்சிலிருந்து எம்.டி. வாசுதேவன் நாயர் அந்தக் கடிதத்தை அனுப்பியிருந்தார். இது எனக்காகத்தானிருக்கும் என்ற நம்பிக்கையில் நான் வாங்கினேன். கல்லூரியில் அதன் பழைமை தன்மையை யோசித்து விட்டொழித்துவிட வேண்டும் என்று நான் நினைத்த பெயர், இங்கே மீண்டும் என்னை சினிமாவிற்குக் கொண்டு செல்ல, தேடியலைந்துக் கண்டெடுத்தது..மூன்றாவது படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது பி.ஜி. விஸ்வாம்பரன் மீண்டும் என் பெயரை மாற்றினார். ஜாதியும், மதமும் புரிபடாத ஒரு பெயராக இருந்தால் எல்லா தரப்பிலிருந்தும் கொண்டாடுபவர்கள் இருப்பார்கள் என்றும் நினைத்தார்..அக்கருத்தில் எனக்கும் முழு உடன்பாடிருந்தது. அதனால் படத்திற்கான போஸ்டர் அடித்தபோது 'சஜில்' என்று பெயரை மாற்றி அடைப்புக்குறிக்குள் 'மம்முட்டி' என்றும் அச்சடித்திருந்தார். படம் வெளியாவதற்கு முன்பே வெளியிலிருந்த பெயர் போய் அடைப்புக்குறிக்குள் இருந்த பெயர் மட்டுமே மீதியாக இருந்தது. அங்கேயும் மம்முட்டி என்னைப் பின்தொடர்ந்திருந்தார்..மனதால் வெறுக்கவும், எதிர்க்கவும், வேதனைப்படவும் வைத்த பெயர்தான் பிறகு என்னை எல்லோருக்கும் அறியப்படவைத்தது. வெளிநாடுகளில் 'மாம்டி, மம்உட்டி, மாமுட்டி' என்றெல்லாம் பலரும் அழைத்தபோது அதன் அடிப்படையில் வடகேரளத்தில் மலபாரில் வயதான தேய்ந்துபோன உருவமும் பெயரும்தான் நினைவிற்கு வரும். அந்தப் பெயர் என்னைப் பலநேரங்களில் ஆள் கூட்டத்தில் தனியனாய் அடையாளப்படுத்திடவும், நெருங்கவும், கரைந்து உருகவும் உதவியது என்பதென்னவோ உண்மைதான்..குழந்தை பிறந்தவுடன் மனித உன்னதம், அடையாளம், கௌரவம், ஆதர்ஷம் என்பதெல்லாம் இல்லாமல் பெற்றோரும், நமக்கு வேண்டியவர்களும் வைப்பதுதானே பெயர். என் வாழ்வில் மம்முட்டியை என்னால் யோசிக்க முடியவில்லை. உதறி எறியப் பார்த்தும் மம்முட்டி என்னைப் பின்தொடர்ந்து கொண்டேயிருந்தார்..அப்பாவும், அம்மாவும் 'மம்மது குஞ்ஞே' என்று கூப்பிடும்போது அவ்வார்த்தையில் அதிக வாஞ்சை இருப்பதாய் தோன்றும். பெயர்களை நாம்தான் ப்ரியமானதாய் மாற்றிக் கொள்கிறோம். ஆனால் என் பெயர் எல்லோராலும் உச்சரிக்கப்பட்டு, உச்சரிக்கப்பட்டு எல்லோருக்கும் பிடித்தமானதாய் மாறியிருக்கிறது. அழைத்தலின் பின்னுள்ள அன்பும், வாத்சல்யமும்தான் பெயரைச் சந்தோஷமாக்குகிறது. என் பெயருக்கு இத்தனை பாசத்தைக் கொடுத்த எல்லோரின் அன்பைப் பொத்தி பாதுக்காகவும் மேலும் அவர்களை ஆத்மார்த்தமாக நேசிக்கவும்தான் நான் சிரமப்பட வேண்டியிருக்கிறது. நடிப்பிலும், அரிதாரத்திலும் அதன் பின்னாலும் அந்தச் சிரமத்தை நான் புன்னகையோடு ஏற்றுக்கொள்கிறேன்..(தொடரும்)