ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பவர்கள், அதை தங்கள் குடும்ப உறுப்பினர் என்றே வைத்திருப்பர்.

ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பவர்கள், அதை தங்கள் குடும்ப உறுப்பினர் என்றே வைத்திருப்பர்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான நிரந்தர அனுமதி பெற உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து தீர்ப்பு ஓத்தி வைக்கபட்டிருக்கிறது. மற்ற வழக்குகளைவிட இதில்  நடந்த விவாதங்கள் மிக சுவாரஸ்யமாக இருந்தது. ஒரு கட்டத்தில் நீதிபதிகளை ஜல்லிகட்டு போட்டிகளை  வந்து பார்க்க தமிழக அரசு அழைத்தது.

வழக்கில் தமிழக அரசின் வாதத்தில் சில முக்கிய பகுதிகள்…

 

••  5,000 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு கலாசார நிகழ்வை பொய்யையும், அவதூறையும் கூறி நிறுத்தப் பார்க்கக் கூடாது. ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் மரபு, பண்பாட்டோடு சேர்ந்த ஒன்று. 

•• காட்டு விலங்குகள் மற்றும் மனிதனால் பழக்கப்படுத்தப்பட்டது என விலங்குகள் இரண்டு வகைப்படும். விலங்குகளுக்கென தனி உரிமை உண்டு. அதை பாதுகாப்பது கடமையென்று முந்தைய நாகராஜ் வழக்கின் தீர்ப்பு கூறுகிறது. அவ்வாறு உரிமை என்பது இல்லை. ஆனால், விலங்குகளுடனான உறவு என்பது உண்டு. அவற்றுக்கு வேண்டுமென்றே  இந்த விளையாட்டில் தீங்கு விளைவிக்க மாட்டோம்.

•• நாகராஜ் வழக்கில் ஜல்லிக்கட்டு நடக்கும்போது என்ன கள நிலவரம் என்பது தொடர்பாக 2013-ல் விலங்குகள் நல வாரியம் 3 அறிக்கைகளை அளித்தது. அதன் அடிப்படையில் நாகராஜ் வழக்கில் தடை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால், தற்போதைய நிலை வேறு. உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு, விதிகளுக்குட்பட்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. மேலும், தற்போது நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பல்வேறு விதிமுறைகளைப் பின்பற்றி, அரசின் கண்காணிப்பில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிகள் குறித்து முன்னர் தாக்கல் செயப்பட்ட அறிக்கைகள் தனியார் அமைப்பு மூலம் எடுக்கப்பட்டது. அதன் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும்

•• காளைகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது. ஜல்லிக்கட்டுக்கென தனி மைதானம் அமைத்துப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. மது போன்றவை கொடுக்கப்படுவது இல்லை. காளைகள் துன்புறுத்தப்படுவது இல்லை. காளைகளின் வால் முறுக்கப்படுவதில்லை. காளைகள் அடிக்கப்படுவதோ, காயப்படுத்தப்படுவதோ இல்லை. அந்தக் காலம் எல்லாம் கடந்து பல ஆண்டுகளாகிவிட்டன.

•• 2017 முதல் 2022 வரை ஜல்லிக்கட்டு விதிமீறல் தொடர்பாக ஒரு புகாரும் இல்லை. அதேவேளையில் தனியார் பலரும் ஜல்லிக்கட்டு நடத்துகின்றனர். காளைகளை கொடுமைப்படுத்தி, விதிகளை மீறுகின்றனர் என்ற குற்றச்சாட்டை மனுதாரர்கள் வைத்தால், முதலில் அவர்கள் விலங்குகள் நல வாரியத்தை அணுகி கோரிக்கை வைக்கட்டும் அல்லது வழக்கு பதியட்டும்.

••  மேலும், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு சட்டம் கொண்டு வந்த பின்னர் விதிமீறல் தொடர்பாக எந்தப் புகாரோ, வழக்கோ பதிவு செய்யப்படவில்லை. விலங்குகள் கொடுமைப்படுத்தப்படுகிறது என்று குற்றச்சாட்டு வந்தால், அதை விலங்குகள் நல வாரியம் கூறட்டும். மாறாக, பீட்டா அமைப்புக்கு அதுகுறித்து கூற, எந்த தார்மிக உரிமையும் இல்லை. அந்த அமைப்பு சட்டபூர்வமான அமைப்பும் இல்லை.

••  எனவே, பீட்டா அமைப்பு கூறும் குற்றச்சாட்டுகள், ஆதாரங்களை கணக்கில் கொள்ள வேண்டியதில்லை. அவர்களிடம் வெறும் குற்றச்சாட்டை தவிர வேறு எதுவும் இல்லை. பீட்டா அமைப்பு கூறும் குற்றச்சாட்டுகள் தொடர்பான வீடியோ ஆதாரங்கள் என்பது முறையானது அல்ல. அதன் நம்பகத்தன்மையை முதலில் ஆராய வேண்டும்.

•• புதிய விதிகளின்படி, கண்காணிப்பு, காளைகளை ஆய்வு செய்வது, அதற்கென உரிய குழு அமைப்பது, ஜல்லிக்கட்டுக்கென தனி இடம் ஒதுக்குவது என பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எனவே, ஜல்லிக்கட்டை ஏனோ தானோவென்று நடத்திட முடியாது. குறிப்பாக ஆட்சியர் அனுமதி இல்லாமல் ஜல்லிக்கட்டு நடத்த முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்","இந்த விளையாட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஆடை கட்டுப்பாடு கூட உள்ளது"

•• "காளைகள் அதன் உடற்தகுதி , தோற்றத்தை வைத்து வாங்கப்படுகிறது. லட்சத்துக்கும் மேலாக பணம் கொடுத்து வாங்கப்படுகிறது. 18 மாதங்கள் முதல் 6 வயது வரை ஜல்லிக்கட்டில் பங்கேற்கும். அதன்பின்னர் அந்த காளை வீடுகளில் வளர்ப்பர். வெளிநாட்டில் (ஸ்பெயின்) இருப்பது போன்று கொல்லும் வழக்கம் கிடையாது. ஏனெனில் அந்த காளைகளை குடும்ப உறவு, உறுப்பினர் என்றே வைத்திருப்பர்" என்று தெரிவிக்கப்பட்டது.

•• "ஜல்லிக்கட்டு வெறும் கேளிக்கை விளையாட்டு அல்ல. மனிதர்களின் மகிழ்ச்சிக்கான விளையாட்டு அல்ல, அது தமிழர் பண்பாடோடும், கலாசாரத்தோடும் இணைந்தது. ஜல்லிக்கட்டு தொடர்பான அரசியல் சாசன அமர்வின் விசாரணை நிறைவடைந்த பின்னர், இந்த ஆண்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண நீதிபதிகள் நேரில் வரவேண்டும்.

••  இந்த ஜல்லிக்கட்டு காளைகள் பெரும் வருமானம் ஈட்டும் விலங்கு அல்ல. மாறாக, அவை இனப்பெருக்கத்துக்கு பயன்படுத்தப்படுகின்றன. மேலும் ஜல்லிக்கட்டுக் காளைகள் அந்த மண்ணின் நாட்டு மாடுகள் ஆகும். எனவே, நாட்டு மாடுகள் இனத்தை காப்பாற்ற இவை பயன்படுத்தப்படுகின்றன.

•• மேலும், “ஜல்லிக்கட்டு விளையாட்டு அபாயகரமானது” என்று கூறினால் குத்துச்சண்டை, ரக்பி, அமெரிக்கன் கால்பந்து, கிரிக்கெட் என அனைத்து விளையாட்டும் அபாயமானதுதான். விளையாட்டில் விருப்பம் உள்ளவர்கள் விளையாடுகின்றனர், யாரும் நிர்பந்தம் செய்யப்படுவதில்லை. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது மிக அபாயகரமானதுதான். ஆனால், அதற்காக எவரெஸ்ட் சிகரத்தை ஏறாமல் இருக்கிறார்களா? விளையாட்டு என்றாலே அதில் சில ஆபத்து இருக்கத்தான் செய்யும். அதற்காக அனைத்தையும் தடை விதித்து விட முடியாது"

•• 5000 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு கலாசார நிகழ்வை பொய்யையும் அவதூறையும் கூறி நிறுத்த பார்க்கக் கூடாது. ஜல்லிக்கட்டு போட்டிகள் நடப்பதை உயர் நீதிமன்றமும் கண்காணிக்கிறது. போட்டிகள் நடக்கும்போது முழுமையாக அதனை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்படுகின்றது. மாவட்ட ஆட்சியர் கண்காணிக்கிறார். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் களத்திலிருந்து ஆய்வு செய்கிறார். இவை அனைத்தும் நடந்தும், எப்படி விதிமுறை மீறப்படுகிறது என்று கூறும் வாதத்தை ஏற்றுக் கொள்வது

••  "ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டு இருந்தால், நாட்டு மாடுகள் இனம் அழிந்து போகும் நிலை ஏற்பட்டிருக்கும் அல்லது அவற்றின் எண்ணிக்கை மிக மிக குறைந்திருக்கும். ஜல்லிக்கட்டை ஒரு வெறுக்கத்தக்க விளையாட்டாக சித்தரிக்கப்பட்டு இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com