உணவெனும் ஒரு ஜீவன்!

கவிதை!
உணவெனும் ஒரு ஜீவன்!

திரசம் முறுக்கு சுட்டு

அக்கம் பக்கம், அடுத்த தெரு

பக்கத்து வீதியென பாட்டி

பலகாரங்களைப் பகிர்ந்துண்டு

மகிழ்ந்ததைப் பார்த்து

வளர்ந்ததென் பால்யம்.

சகுல்லா, மைசூர் பாகை

கச்சிதமாய் செய்து முடித்து

தனித்தனி டப்பாவில் அடுக்கி

எதிர்வீடு, பக்கத்து வீட்டில்

அளித்த அன்னையின் அன்பில்

திளைத்ததென் பதின்பருவம்

யூ ட்யூப் குக் வழிகாட்ட

நேர்த்தியாய் தயாரித்த

காஜு கத்லிகளை

குடும்பத்தோடு ருசித்து விட்டு

மீதத்தை நாளைக்கென

பாதுகாத்து வைக்கிறது

என் சுயநல விரல்கள்! 

நான்கு நாட்களில்

அத்தனையும் கெட்டுப் போய்

குப்பையிலே வீசுகையில்

மெல்லத் தேம்பி அழுகிறது

உணவெனும் ஒரு ஜீவன்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com