- ஏ.ஜி.கோபாலன் 1971 இல் நான் வேலைக்குச் சேரும்போது இந்தியாவில் இரண்டே விமான நிறுவனங்கள்தான் இருந்தன. “இந்தியன் ஏர்லைன்ஸ்” உள்நாட்டு சேவைக்காகவும், “ஏர் இந்தியா” வெளிநாட்டு சேவைக்காகவும் இருந்தன. இந்தியன் ஏர்லைன்ஸில் ஆகப்பெரிய விமானம் என்பது 89 இருக்கைகள் கொண்ட பிரான்ஸ் நாட்டு ‘காரவெல்’ என்ற ஜெட் என்ஜின் கொண்ட விமானம். மற்றவை எல்லாம் சிறியவை. காற்றாடி என்ஜின்களால் இயங்குபவை. அப்போதுதான் 126 இருக்கைகள் கொண்ட அமெரிக்க போயிங் 737 ஜெட் விமானங்களை வாங்கினார்கள். அதற்காக முதன்முதலாக பட்டதாரிகளையும் வேலைக்கு எடுத்தார்கள். அப்படி போயிங் விமானத்திற்காக உள்ளே வந்த நான் வேலைக்கு சேர்ந்தது என்னவோ போயிங் விமானமே இறங்க முடியாத கோயம்புத்தூர் விமான நிலையத்தில்தான்..[caption id="attachment_59792" align="aligncenter" width="704"] ஆவ்ரோ விமானம்[/caption]கோவையில் அப்போதெல்லாம் HS 748 என்ற ஆவ்ரோ விமானங்கள் தான் வரும். நமது HAL கான்பூரில் தயாரிக்கப்பட்ட இந்த விமானங்களில் 44 இருக்கைகள் மாத்திரமே. சென்னை - பெங்களூர் - கோவை - கொச்சி - திருவந்தபுரம் - மதுரை - சென்னை அதுவே எதிர் திசையில் சென்னை - மதுரை - திருவனந்தபுரம் - கொச்சி - கோவை - பெங்களூர் - சென்னை என்று இப்படி இரண்டு விமானங்கள் கோவையில் இறங்கும். அதுபோக சென்னை-கோவை -கொச்சி -கோவை -சென்னை என்று இரண்டு விமானங்கள் இறங்கும். ஒரே விமானம் பல ஊர்களுக்கு செல்வதால் எங்களுக்கு கோட்டா முறையில் 16 சீட்டுகள் மட்டுமே உண்டு. முக்கிய நாட்களில் விமானத்தில் ஸீட் கிடைப்பது என்பது குதிரைக் கொம்புதான். மேலும் அக்காலத்தில் விமானம் என்பது ஓர் பணக்காரர்களின் வாகனமாக பார்க்கப்பட்டதால் பெரிய தொழிலதிபர்களும் சினிமா பிரபலங்களும் உயர் அதிகாரிகளும் மட்டும்தான் போவார்கள்.கோவையில் கோலோச்சிக் கொண்டிருந்த தொழிலதிபர்களும் மில் முதலாளிகளும் விமான நிலையத்திற்கு வந்து இறங்கும் உயர்ரக கார்களை வியந்து பார்ப்பது என் வழக்கம். ஊட்டி பகுதிகளில் ஷூட்டிங்குக்கு வரும் எல்லா இந்திய சினிமா பிரபலங்களும் எங்கள் விமான நிலையத்திற்கு வந்துதான் போவார்கள். அந்தக் காலத்து சூப்பர் ஹீரோ தேவ் ஆனந்த் மிக சகஜமாக எங்களுடன் பழகுவதோடு மட்டும் அல்லாமல் கவுண்டரில் எங்களுடன் நின்று பயணிகளை செக் இன் செய்வார். அவரை அங்கே சற்றும் எதிர்பார்த்திராத சில பெண் பயணிகள் ஆச்சரியத்தில் ஆர்ப்பரிப்பதும் நடக்கும். இதேபோல மெஹ்மூத் என்ற இந்தி காமெடி பிரபலமும் செய்வார்..[caption id="attachment_59793" align="aligncenter" width="736"] செஸ்னா 320 விமானம்[/caption]கோவையில் LMW அதிபர்கள் சொந்தமாக வைத்திருந்த VT-DOO என்ற பதிவு கொண்ட சிறிய Cessna CE 320 தனியார் ஆடம்பர விமானமும் ஹாங்கரில் நிற்கும். அதிகமாக உபயோகிக்காததால் இதை நடிகை கே.ஆர்.விஜயாவின் கணவர் நடத்தி வந்த சுதர்சன் சிட் ஃபண்ட் நிறுவனத்திற்கு விற்று விட்டார்கள். இந்த விமானத்தின் பயிற்சி பராமரிப்பு இவற்றையும் வேடிக்கை பார்க்கச் செல்வேன்.Ab Initio ட்ரெய்னிங் போவதற்கு முன்பே வேலைக்கு சேர்ந்த நான் சேர்ந்த இந்த இரண்டு வாரங்களில் உடல் வணங்கி அவர்களிடம் வேலையைக் கற்றுக் கொள்ளாமல் இப்படிக் கார்களையும் பக்கத்து ஷெட்டில் செஸ்னாவையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது பிடிக்காத என் சீனியர்கள் என்னை வியர்க்க விறுவிறுக்கப் படியேறி கண்ட்ரோல் டவருக்குப் போய் மெசேஜ் பிக் அப் ட்ராப் வேலைகளுக்கு அனுப்ப ஆரம்பித்தார்கள். அங்கிருந்த ஹெர்பர்ட் என்னும் நல்ல மனிதர் கண்ட்ரோல் டவரிலும் எனக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்க ஆரம்பித்து விட்டார் என்பது பாவம் அவர்களுக்குத் தெரியவில்லை.இப்படி ஒரு நாள் படியில் ஓடி ஏறி உச்சியில் டவரை அடைந்ததும் அங்கிருந்தவர்கள் வழக்கத்திற்கு மாறாக ஏதோ பரபரப்புடன் இருந்ததைக் கண்டு ‘என்ன?’ என்று கேட்டேன். ‘உங்கள் விமானம் திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை செல்லும் வழியில் தொடர்பு அற்றுப் போய்விட்டது என்று இப்போதுதான் செய்தி வந்தது‘ என்றார் ஹெர்பர்ட். இங்கிருந்து காலையில்தான் அந்த விமானம் கொச்சி வழியாக திருவனந்தபுரம் சென்றது என்பதால் நானும் படபடப்புடன் ‘என்ன நடக்கிறது’ என்று கவனிக்க ஆரம்பித்தேன். (தொடரும்)
- ஏ.ஜி.கோபாலன் 1971 இல் நான் வேலைக்குச் சேரும்போது இந்தியாவில் இரண்டே விமான நிறுவனங்கள்தான் இருந்தன. “இந்தியன் ஏர்லைன்ஸ்” உள்நாட்டு சேவைக்காகவும், “ஏர் இந்தியா” வெளிநாட்டு சேவைக்காகவும் இருந்தன. இந்தியன் ஏர்லைன்ஸில் ஆகப்பெரிய விமானம் என்பது 89 இருக்கைகள் கொண்ட பிரான்ஸ் நாட்டு ‘காரவெல்’ என்ற ஜெட் என்ஜின் கொண்ட விமானம். மற்றவை எல்லாம் சிறியவை. காற்றாடி என்ஜின்களால் இயங்குபவை. அப்போதுதான் 126 இருக்கைகள் கொண்ட அமெரிக்க போயிங் 737 ஜெட் விமானங்களை வாங்கினார்கள். அதற்காக முதன்முதலாக பட்டதாரிகளையும் வேலைக்கு எடுத்தார்கள். அப்படி போயிங் விமானத்திற்காக உள்ளே வந்த நான் வேலைக்கு சேர்ந்தது என்னவோ போயிங் விமானமே இறங்க முடியாத கோயம்புத்தூர் விமான நிலையத்தில்தான்..[caption id="attachment_59792" align="aligncenter" width="704"] ஆவ்ரோ விமானம்[/caption]கோவையில் அப்போதெல்லாம் HS 748 என்ற ஆவ்ரோ விமானங்கள் தான் வரும். நமது HAL கான்பூரில் தயாரிக்கப்பட்ட இந்த விமானங்களில் 44 இருக்கைகள் மாத்திரமே. சென்னை - பெங்களூர் - கோவை - கொச்சி - திருவந்தபுரம் - மதுரை - சென்னை அதுவே எதிர் திசையில் சென்னை - மதுரை - திருவனந்தபுரம் - கொச்சி - கோவை - பெங்களூர் - சென்னை என்று இப்படி இரண்டு விமானங்கள் கோவையில் இறங்கும். அதுபோக சென்னை-கோவை -கொச்சி -கோவை -சென்னை என்று இரண்டு விமானங்கள் இறங்கும். ஒரே விமானம் பல ஊர்களுக்கு செல்வதால் எங்களுக்கு கோட்டா முறையில் 16 சீட்டுகள் மட்டுமே உண்டு. முக்கிய நாட்களில் விமானத்தில் ஸீட் கிடைப்பது என்பது குதிரைக் கொம்புதான். மேலும் அக்காலத்தில் விமானம் என்பது ஓர் பணக்காரர்களின் வாகனமாக பார்க்கப்பட்டதால் பெரிய தொழிலதிபர்களும் சினிமா பிரபலங்களும் உயர் அதிகாரிகளும் மட்டும்தான் போவார்கள்.கோவையில் கோலோச்சிக் கொண்டிருந்த தொழிலதிபர்களும் மில் முதலாளிகளும் விமான நிலையத்திற்கு வந்து இறங்கும் உயர்ரக கார்களை வியந்து பார்ப்பது என் வழக்கம். ஊட்டி பகுதிகளில் ஷூட்டிங்குக்கு வரும் எல்லா இந்திய சினிமா பிரபலங்களும் எங்கள் விமான நிலையத்திற்கு வந்துதான் போவார்கள். அந்தக் காலத்து சூப்பர் ஹீரோ தேவ் ஆனந்த் மிக சகஜமாக எங்களுடன் பழகுவதோடு மட்டும் அல்லாமல் கவுண்டரில் எங்களுடன் நின்று பயணிகளை செக் இன் செய்வார். அவரை அங்கே சற்றும் எதிர்பார்த்திராத சில பெண் பயணிகள் ஆச்சரியத்தில் ஆர்ப்பரிப்பதும் நடக்கும். இதேபோல மெஹ்மூத் என்ற இந்தி காமெடி பிரபலமும் செய்வார்..[caption id="attachment_59793" align="aligncenter" width="736"] செஸ்னா 320 விமானம்[/caption]கோவையில் LMW அதிபர்கள் சொந்தமாக வைத்திருந்த VT-DOO என்ற பதிவு கொண்ட சிறிய Cessna CE 320 தனியார் ஆடம்பர விமானமும் ஹாங்கரில் நிற்கும். அதிகமாக உபயோகிக்காததால் இதை நடிகை கே.ஆர்.விஜயாவின் கணவர் நடத்தி வந்த சுதர்சன் சிட் ஃபண்ட் நிறுவனத்திற்கு விற்று விட்டார்கள். இந்த விமானத்தின் பயிற்சி பராமரிப்பு இவற்றையும் வேடிக்கை பார்க்கச் செல்வேன்.Ab Initio ட்ரெய்னிங் போவதற்கு முன்பே வேலைக்கு சேர்ந்த நான் சேர்ந்த இந்த இரண்டு வாரங்களில் உடல் வணங்கி அவர்களிடம் வேலையைக் கற்றுக் கொள்ளாமல் இப்படிக் கார்களையும் பக்கத்து ஷெட்டில் செஸ்னாவையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது பிடிக்காத என் சீனியர்கள் என்னை வியர்க்க விறுவிறுக்கப் படியேறி கண்ட்ரோல் டவருக்குப் போய் மெசேஜ் பிக் அப் ட்ராப் வேலைகளுக்கு அனுப்ப ஆரம்பித்தார்கள். அங்கிருந்த ஹெர்பர்ட் என்னும் நல்ல மனிதர் கண்ட்ரோல் டவரிலும் எனக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்க ஆரம்பித்து விட்டார் என்பது பாவம் அவர்களுக்குத் தெரியவில்லை.இப்படி ஒரு நாள் படியில் ஓடி ஏறி உச்சியில் டவரை அடைந்ததும் அங்கிருந்தவர்கள் வழக்கத்திற்கு மாறாக ஏதோ பரபரப்புடன் இருந்ததைக் கண்டு ‘என்ன?’ என்று கேட்டேன். ‘உங்கள் விமானம் திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை செல்லும் வழியில் தொடர்பு அற்றுப் போய்விட்டது என்று இப்போதுதான் செய்தி வந்தது‘ என்றார் ஹெர்பர்ட். இங்கிருந்து காலையில்தான் அந்த விமானம் கொச்சி வழியாக திருவனந்தபுரம் சென்றது என்பதால் நானும் படபடப்புடன் ‘என்ன நடக்கிறது’ என்று கவனிக்க ஆரம்பித்தேன். (தொடரும்)