கா.சு.வேலாயுதன் கோவை காந்தி நினைவகத்தை முன்வைத்து நினைவுகளை பகிர்ந்து கொண்ட காந்தியவாதி குழந்தைவேலு அண்மையில் காந்தி ஜெயந்தியன்று கோவையில் திறந்து வைக்கப்பட்ட இந்த நினைவகத்திற்கு தொடர்ந்து மக்கள் வந்து பார்த்துச் செல்கிறார்கள். வாரந்தோறும் இங்கே காந்திய சிந்தனை பிரார்த்தனை கூட்டங்களும் நடத்தி வருகிறார்கள். அங்கு நாம் சந்தித்த ஒரு காந்திய வாதியிடம் பேசிய போது பல ஆச்சரியமான தகவல்களைத்தெரிவித்தார். ‘‘பிரிட்டீஸ்காரன் காலத்தில் ஒரு பேனா வாங்குவதனால் கூட ரேசன் ஆபீசில் போய் லைசென்ஸ் வாங்கி, அதை கடையில் தந்தால்தான் கிடைக்கும். ஒரு குண்டூசி வாங்க வேண்டுமென்றால் கூட வெளிநாட்டிலிருந்துதான் வர வேண்டும். நம் நாடு சுதந்திரமடைந்ததால் என்ன கிடைத்தது என்று சிலர் கேட்கிறார்கள். இன்றைக்கு நாம் எல்லாப் பொருட்களையும் உற்பத்தி செய்து தன்னிறைவுடன் வாழ்கிறோம். அதற்கெல்லாம் காந்தியின் மகாத்மியம்தான் துணை நிற்கிறது!’’ இப்படி இந்தியாவின் சுதந்திர காலத்திற்கு முந்தைய நினைவுகளை நினைவு கூர்கிறார் கோவை அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தரான குழந்தைவேலு. கோவையில் புதிதாக அமைந்துள்ள காந்தியடிகள் நினைவகத்தை சுற்றிப் பார்த்த அவர் தன் பால்ய கால நினைவுகளை இப்படி பகிர்ந்து கொண்டார். மகாத்மா காந்தியடிகள் பல்வேறு நிகழ்ச்சிகள், கூட்டங்களில் பங்கேற்பதற்காக மூன்று முறை கோவைக்கு வந்துள்ளார். .அதன்படி 1934 ஆம் ஆண்டு கோவை வந்த காந்தியடிகள் போத்தனூரில் உள்ள ஜி.டி.நாயுடுவின் குடும்ப இல்லத்தில் இரண்டு நாள்கள் (பிப்ரவரி 6, 7) தங்கியுள்ளார். அந்தக்காலத்தில் இங்கே 40 பட்டியலின மக்களின் குழந்தைகளுக்கு பாடம் சொல்லி தந்திருக்கிறார் கல்வியாளர் அவிநாசிலிங்கம் செட்டியார். சிறு ஓட்டுக்கூரை கட்டிடங்கள் மட்டுமே இங்கிருந்திருக்கிறது. அதில் ஒன்றை கல்விக்கூடமாக பயன்படுத்த ஜி.டி.நாயுடு அவிநாசிலிங்கம் செட்டியாருக்கு அனுமதித்துள்ளார். ஸ்ரீராமகிருஷ்ண வித்யாலயம் பெயரில் நடந்து வந்த இந்தப் பள்ளிக்கு கோவையில் இடம் தேடியும் வந்துள்ளனர்.அந்த சமயம் கோவைக்கு வந்த காந்தியடிகளை நகர்பகுதியில் தங்க வைத்தால், ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்ல (அப்போது கோவை மத்திய ரயில் நிலையம் இந்த போத்தனூரில்தான் அமைந்திருந்தது) அசெளகரியம் என்பதால் இங்கேயே தங்க ஏற்பாடு செய்தார் ஜிடி நாயுடு. அதற்கு உறுதுணையாக இருந்தார் அவிநாசிலிங்கம் செட்டியார். இரண்டு நாட்கள் ஹரிஜன் நிதி திரட்டும் பணியில் வெவ்வேறு பகுதிகளில் ஈடுபட்ட காந்தி இரவுநேரத்தில் இங்கேதான் தங்க, அன்றாட, அத்தியாவசியப் பணிகளையும் கவனித்து வந்துள்ளார். அப்போது மின்சாரம் கிடையாது. அரிக்கேன் விளக்கைத்தான் பயன்படுத்தியிருக்கிறார். தன் பள்ளிக்கு காந்தியை அடிக்கல் நாட்டும்படி அவிநாசிலிங்கம் கேட்டுக்கொள்ள, அடிக்கல் நாட்டுவது சரி, “கட்டிடம் கட்ட இடம் எங்கே” என்று கேட்டிருக்கிறார் காந்தி. அதற்கு “இங்கேயே அடிக்கல் நாட்டுங்கள். எங்கே பிறகு இடம் கிடைத்து கட்டிடங்கள் அமைகிறதோ அங்கே இந்த அடிக்கல்லை எடுத்துச் சென்று பதித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார். காந்தியும் சம்மதித்து அடிக்கல் நாட்டியுள்ளார். .அதன் பிறகு கோவையிலிருந்து 20 கிலோமீட்டர் வடக்கே பெரியநாயக்கன்பாளையத்தில் இடம் கிடைத்து ஸ்ரீராமகிருஷ்ணா வித்தியாலய கட்டிடங்கள் கட்டப்பட, காந்தி திறந்த அடிக்கல்லை அங்கே எடுத்துச் சென்று வைத்து விட்டார்கள். இந்த நிலையில் இந்த இடத்தை காந்தி வந்து சென்றதால் புனிதம் குறையாமல் காத்து வந்துள்ளனர் ஜி.டி.நாயுடு குடும்பத்தினர். அங்கே ஒரு காந்தி சிலையையும் வைத்துள்ளனர். .சில ஆண்டுகளுக்கு முன்பு இவ்வழியே சென்ற தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் மருமகனும், சமத்தூர் ஜமீன் வம்சாவழியுமான கிருஷ்ணராஜ் வாணவராயர் விசாரிக்க, விவரம் தெரிந்துள்ளது இதை இப்படியே வைத்திருப்பதை விட காந்தியின் நினைவகமாக மாற்றலாமே என கருத்துத் தெரிவித்து ஜி.டி.நாயுடு மகன் கோபாலையும், பேரன் ராஜ்குமாரையும் அணுகியிருக்கிறார். அவர்கள், “இடத்தை நாங்கள் தருகிறோம். நீங்கள் நினைவகம் அமையுங்கள்” என்று சொல்ல வாணவராயரும் செயலில் இறங்கி விட்டார். அதன் விளைவு இங்கிருந்த ஓட்டு வீடுகள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு காந்தி நினைவகம் உருவாகி விட்டது. பல்வேறு இடங்களில் இருந்தெல்லாம் காந்தி பயன்படுத்தப்பட்ட பொருட்கள், புகைப்படங்கள், புத்தகங்கள் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கு மகாத்மா காந்திக்கும், கோவைக்கும் உள்ள தொடா்பை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு வகையான புகைப்படங்கள், பிறப்பு முதல் இறப்பு வரை அவர் பங்கேற்ற நிகழ்வுகளின் வரலாற்று புகைப்படங்கள் ஆவணப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. காந்தியின் அகிம்சை கொள்கை, சத்தியம், தர்மம் ஆகியவை குறித்து விவாதிக்கும் வகையில் உரையாடல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. காந்தி பயன்படுத்தின கைராட்டை, படுத்தபடுக்கை கூட தனி அறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைவேலு காந்தி பற்றி மேலும் விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். ‘‘மகாத்மா காந்தி கைதொட்டது எல்லாம் மகத்தானதாக வளர்ந்து வந்திருக்கிறது. ராமகிருஷ்ண வித்யாலயத்திற்கு அவர் அச்சாரம் போட்டபோது அதற்கு ஒரு கையகல பூமி கிடையாது. இப்போது பெரிய நாயக்கன்பாளையத்தில் 300 ஏக்கர் பூமியில் கட்டிடங்கள் உருவாகி 9 ஆயிரம் மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். அதனுடைய கிளை ஸ்தாபனம் அவிநாசிலிங்கத்திற்கு 330 ஏக்கர் பூமி உள்ளது. அதில் 9 ஆயிரம் மாணவிகள் படிக்கிறார்கள். இந்தியாவிற்கு அவர் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார். அப்படி நாம் சுதந்திரம் வாங்கினபோது நம் இந்தியாவில் ஒரு பொருளும் உற்பத்தி இல்லை. ஒரு குண்டூசி கூட வெளிநாட்டில்தான் உற்பத்தியாகி இங்கே வந்தது. அப்போ செயிண்ட் ஜோசப் கல்லூரியில் 1944 இல் நான் மாணவனாக இருந்தேன். ஒரு பேனா தொலைஞ்சு போச்சு. அதனால புதுசா பேனா வாங்க வேண்டியிருந்தது. கடைக்குப் போய் கேட்டா ‘அது ரேசன் கம்மாடிட்டி பொருள். அதுக்கு நீ ரேசன் ஆபீஸ்ல போய் பர்மிஷன் வாங்கினாத்தான் பேனா கிடைக்கும்’ன்னு சொல்லீட்டாங்க. ஏன்னா அந்தக் காலத்துல நம்ம நாட்டில் பேனா உற்பத்தி பண்றதே கிடையாது. அதனால ரேசன் ஆபீஸிற்கு காலங்கார்த்தால ஏழரை மணிக்கே போய், பதினொன்றரை மணி வரைக்கும் க்யூவில் நின்று பேனா வாங்க ஒரு பர்மிட் வாங்கினேன். அதை வாங்கிக் கடையில போய் கொடுத்தா, ‘பேனா ஸ்டாக் இல்லை. அடுத்த வாரம் வா!’ ன்னுட்டாங்க. அப்படி மூணு வாரம் நடந்த பின்னாடிதான் ஒரு பேனா கிடைச்சது. அன்றைக்கு நம்ம நாட்டு நிலைமை அப்படியிருந்தது. இன்றைக்கு பெரிய விமானம் தாங்கிக் கப்பல் நம்ம நாட்டுல சொந்தமா செஞ்சு விடறோம். அந்த அளவு வளர்ந்திருக்கிறோம். நிறைய விமானங்கள், ஹெலிகாப்டர்கள் தயார் பண்றோம். இன்றைக்கு உலகத்திலேயே ஐந்தாவது பெரிய நாடாக நம் நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது. அது எல்லாம் காந்திஜியோட ஆசீர்வாதம். அவர் தொட்டு சுதந்திரம் வாங்கிக் கொடுத்ததன் பலன் நூறு, ஆயிரம், பத்தாயிரம், லட்சம் கோடியாக தொழில் வளர்ச்சிக்கு சென்றுள்ளோம். தன்னிறைவும் பெற்றுள்ளோம். காந்தியடிகளை நாம் மனதில் வச்சிருந்தோம்ன்னு சொன்னா, நம் வாழ்க்கை மிக நன்றாக இருக்கும். சத்தியம் - அகிம்சை இந்த இரண்டும் அவர் சொன்னார். இந்த இரண்டையும் வாழ்க்கையில் கடைப்பிடித்தால் நம் வளர்ச்சிக்கு எல்லையே இருக்காது. அதை எல்லோரும் செய்ய வேண்டும். அதற்கான அத்தனை அம்சங்களையும் இந்த நினைவகத்தில் காந்தியின் மூலமாக, காந்தி உபயோகப்படுத்தின பொருட்களின் மூலமாக, அவரின் வாழ்க்கை முறையை எடுத்துக்காட்டுவதன் மூலமாக இளைஞர்கள் அறிந்துகொண்டு செயல்பட வேண்டும்!’’ .இது குறித்து ஓம்சக்தி இதழின் முன்னாள் ஆசிரியர் கவிஞர் பெ.சிதம்பரநாதன் நம்மிடம் கூறும்போது, ‘‘இந்த இடத்திற்கு காந்தியடிகள் வந்திருக்கிறார் என்ற தகவலே தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, உள்ளூரில் வசிக்கும் கோவை மக்களுக்கே தெரியாது. அந்த தவப்பெரும் தலைவர் இங்கே வந்து இரண்டு நாட்கள் தங்கி சென்றிருக்கிறார் என்பது கோவைக்கே பெருமை. அதை ஜி.டி.நாயுடுவின் மகன் ஜி.டி.கோபால் அவர்கள் கிட்டத்தட்ட 90 ஆண்டுகளாக அப்படியே பராமரித்து வந்திருக்க, அதை நினைவு இல்லமாக அழகுற அமைத்த கிருஷ்ணராஜ் வாணவராயர் போற்றுதலுக்கும் உரியவர். இந்த நினைவகம் கோவைக்கே அடையாளமாக மாறும் என்பதில் சந்தேகமேயில்லை!’ என்றார். .
கா.சு.வேலாயுதன் கோவை காந்தி நினைவகத்தை முன்வைத்து நினைவுகளை பகிர்ந்து கொண்ட காந்தியவாதி குழந்தைவேலு அண்மையில் காந்தி ஜெயந்தியன்று கோவையில் திறந்து வைக்கப்பட்ட இந்த நினைவகத்திற்கு தொடர்ந்து மக்கள் வந்து பார்த்துச் செல்கிறார்கள். வாரந்தோறும் இங்கே காந்திய சிந்தனை பிரார்த்தனை கூட்டங்களும் நடத்தி வருகிறார்கள். அங்கு நாம் சந்தித்த ஒரு காந்திய வாதியிடம் பேசிய போது பல ஆச்சரியமான தகவல்களைத்தெரிவித்தார். ‘‘பிரிட்டீஸ்காரன் காலத்தில் ஒரு பேனா வாங்குவதனால் கூட ரேசன் ஆபீசில் போய் லைசென்ஸ் வாங்கி, அதை கடையில் தந்தால்தான் கிடைக்கும். ஒரு குண்டூசி வாங்க வேண்டுமென்றால் கூட வெளிநாட்டிலிருந்துதான் வர வேண்டும். நம் நாடு சுதந்திரமடைந்ததால் என்ன கிடைத்தது என்று சிலர் கேட்கிறார்கள். இன்றைக்கு நாம் எல்லாப் பொருட்களையும் உற்பத்தி செய்து தன்னிறைவுடன் வாழ்கிறோம். அதற்கெல்லாம் காந்தியின் மகாத்மியம்தான் துணை நிற்கிறது!’’ இப்படி இந்தியாவின் சுதந்திர காலத்திற்கு முந்தைய நினைவுகளை நினைவு கூர்கிறார் கோவை அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தரான குழந்தைவேலு. கோவையில் புதிதாக அமைந்துள்ள காந்தியடிகள் நினைவகத்தை சுற்றிப் பார்த்த அவர் தன் பால்ய கால நினைவுகளை இப்படி பகிர்ந்து கொண்டார். மகாத்மா காந்தியடிகள் பல்வேறு நிகழ்ச்சிகள், கூட்டங்களில் பங்கேற்பதற்காக மூன்று முறை கோவைக்கு வந்துள்ளார். .அதன்படி 1934 ஆம் ஆண்டு கோவை வந்த காந்தியடிகள் போத்தனூரில் உள்ள ஜி.டி.நாயுடுவின் குடும்ப இல்லத்தில் இரண்டு நாள்கள் (பிப்ரவரி 6, 7) தங்கியுள்ளார். அந்தக்காலத்தில் இங்கே 40 பட்டியலின மக்களின் குழந்தைகளுக்கு பாடம் சொல்லி தந்திருக்கிறார் கல்வியாளர் அவிநாசிலிங்கம் செட்டியார். சிறு ஓட்டுக்கூரை கட்டிடங்கள் மட்டுமே இங்கிருந்திருக்கிறது. அதில் ஒன்றை கல்விக்கூடமாக பயன்படுத்த ஜி.டி.நாயுடு அவிநாசிலிங்கம் செட்டியாருக்கு அனுமதித்துள்ளார். ஸ்ரீராமகிருஷ்ண வித்யாலயம் பெயரில் நடந்து வந்த இந்தப் பள்ளிக்கு கோவையில் இடம் தேடியும் வந்துள்ளனர்.அந்த சமயம் கோவைக்கு வந்த காந்தியடிகளை நகர்பகுதியில் தங்க வைத்தால், ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்ல (அப்போது கோவை மத்திய ரயில் நிலையம் இந்த போத்தனூரில்தான் அமைந்திருந்தது) அசெளகரியம் என்பதால் இங்கேயே தங்க ஏற்பாடு செய்தார் ஜிடி நாயுடு. அதற்கு உறுதுணையாக இருந்தார் அவிநாசிலிங்கம் செட்டியார். இரண்டு நாட்கள் ஹரிஜன் நிதி திரட்டும் பணியில் வெவ்வேறு பகுதிகளில் ஈடுபட்ட காந்தி இரவுநேரத்தில் இங்கேதான் தங்க, அன்றாட, அத்தியாவசியப் பணிகளையும் கவனித்து வந்துள்ளார். அப்போது மின்சாரம் கிடையாது. அரிக்கேன் விளக்கைத்தான் பயன்படுத்தியிருக்கிறார். தன் பள்ளிக்கு காந்தியை அடிக்கல் நாட்டும்படி அவிநாசிலிங்கம் கேட்டுக்கொள்ள, அடிக்கல் நாட்டுவது சரி, “கட்டிடம் கட்ட இடம் எங்கே” என்று கேட்டிருக்கிறார் காந்தி. அதற்கு “இங்கேயே அடிக்கல் நாட்டுங்கள். எங்கே பிறகு இடம் கிடைத்து கட்டிடங்கள் அமைகிறதோ அங்கே இந்த அடிக்கல்லை எடுத்துச் சென்று பதித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார். காந்தியும் சம்மதித்து அடிக்கல் நாட்டியுள்ளார். .அதன் பிறகு கோவையிலிருந்து 20 கிலோமீட்டர் வடக்கே பெரியநாயக்கன்பாளையத்தில் இடம் கிடைத்து ஸ்ரீராமகிருஷ்ணா வித்தியாலய கட்டிடங்கள் கட்டப்பட, காந்தி திறந்த அடிக்கல்லை அங்கே எடுத்துச் சென்று வைத்து விட்டார்கள். இந்த நிலையில் இந்த இடத்தை காந்தி வந்து சென்றதால் புனிதம் குறையாமல் காத்து வந்துள்ளனர் ஜி.டி.நாயுடு குடும்பத்தினர். அங்கே ஒரு காந்தி சிலையையும் வைத்துள்ளனர். .சில ஆண்டுகளுக்கு முன்பு இவ்வழியே சென்ற தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் மருமகனும், சமத்தூர் ஜமீன் வம்சாவழியுமான கிருஷ்ணராஜ் வாணவராயர் விசாரிக்க, விவரம் தெரிந்துள்ளது இதை இப்படியே வைத்திருப்பதை விட காந்தியின் நினைவகமாக மாற்றலாமே என கருத்துத் தெரிவித்து ஜி.டி.நாயுடு மகன் கோபாலையும், பேரன் ராஜ்குமாரையும் அணுகியிருக்கிறார். அவர்கள், “இடத்தை நாங்கள் தருகிறோம். நீங்கள் நினைவகம் அமையுங்கள்” என்று சொல்ல வாணவராயரும் செயலில் இறங்கி விட்டார். அதன் விளைவு இங்கிருந்த ஓட்டு வீடுகள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு காந்தி நினைவகம் உருவாகி விட்டது. பல்வேறு இடங்களில் இருந்தெல்லாம் காந்தி பயன்படுத்தப்பட்ட பொருட்கள், புகைப்படங்கள், புத்தகங்கள் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கு மகாத்மா காந்திக்கும், கோவைக்கும் உள்ள தொடா்பை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு வகையான புகைப்படங்கள், பிறப்பு முதல் இறப்பு வரை அவர் பங்கேற்ற நிகழ்வுகளின் வரலாற்று புகைப்படங்கள் ஆவணப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. காந்தியின் அகிம்சை கொள்கை, சத்தியம், தர்மம் ஆகியவை குறித்து விவாதிக்கும் வகையில் உரையாடல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. காந்தி பயன்படுத்தின கைராட்டை, படுத்தபடுக்கை கூட தனி அறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைவேலு காந்தி பற்றி மேலும் விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். ‘‘மகாத்மா காந்தி கைதொட்டது எல்லாம் மகத்தானதாக வளர்ந்து வந்திருக்கிறது. ராமகிருஷ்ண வித்யாலயத்திற்கு அவர் அச்சாரம் போட்டபோது அதற்கு ஒரு கையகல பூமி கிடையாது. இப்போது பெரிய நாயக்கன்பாளையத்தில் 300 ஏக்கர் பூமியில் கட்டிடங்கள் உருவாகி 9 ஆயிரம் மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். அதனுடைய கிளை ஸ்தாபனம் அவிநாசிலிங்கத்திற்கு 330 ஏக்கர் பூமி உள்ளது. அதில் 9 ஆயிரம் மாணவிகள் படிக்கிறார்கள். இந்தியாவிற்கு அவர் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார். அப்படி நாம் சுதந்திரம் வாங்கினபோது நம் இந்தியாவில் ஒரு பொருளும் உற்பத்தி இல்லை. ஒரு குண்டூசி கூட வெளிநாட்டில்தான் உற்பத்தியாகி இங்கே வந்தது. அப்போ செயிண்ட் ஜோசப் கல்லூரியில் 1944 இல் நான் மாணவனாக இருந்தேன். ஒரு பேனா தொலைஞ்சு போச்சு. அதனால புதுசா பேனா வாங்க வேண்டியிருந்தது. கடைக்குப் போய் கேட்டா ‘அது ரேசன் கம்மாடிட்டி பொருள். அதுக்கு நீ ரேசன் ஆபீஸ்ல போய் பர்மிஷன் வாங்கினாத்தான் பேனா கிடைக்கும்’ன்னு சொல்லீட்டாங்க. ஏன்னா அந்தக் காலத்துல நம்ம நாட்டில் பேனா உற்பத்தி பண்றதே கிடையாது. அதனால ரேசன் ஆபீஸிற்கு காலங்கார்த்தால ஏழரை மணிக்கே போய், பதினொன்றரை மணி வரைக்கும் க்யூவில் நின்று பேனா வாங்க ஒரு பர்மிட் வாங்கினேன். அதை வாங்கிக் கடையில போய் கொடுத்தா, ‘பேனா ஸ்டாக் இல்லை. அடுத்த வாரம் வா!’ ன்னுட்டாங்க. அப்படி மூணு வாரம் நடந்த பின்னாடிதான் ஒரு பேனா கிடைச்சது. அன்றைக்கு நம்ம நாட்டு நிலைமை அப்படியிருந்தது. இன்றைக்கு பெரிய விமானம் தாங்கிக் கப்பல் நம்ம நாட்டுல சொந்தமா செஞ்சு விடறோம். அந்த அளவு வளர்ந்திருக்கிறோம். நிறைய விமானங்கள், ஹெலிகாப்டர்கள் தயார் பண்றோம். இன்றைக்கு உலகத்திலேயே ஐந்தாவது பெரிய நாடாக நம் நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது. அது எல்லாம் காந்திஜியோட ஆசீர்வாதம். அவர் தொட்டு சுதந்திரம் வாங்கிக் கொடுத்ததன் பலன் நூறு, ஆயிரம், பத்தாயிரம், லட்சம் கோடியாக தொழில் வளர்ச்சிக்கு சென்றுள்ளோம். தன்னிறைவும் பெற்றுள்ளோம். காந்தியடிகளை நாம் மனதில் வச்சிருந்தோம்ன்னு சொன்னா, நம் வாழ்க்கை மிக நன்றாக இருக்கும். சத்தியம் - அகிம்சை இந்த இரண்டும் அவர் சொன்னார். இந்த இரண்டையும் வாழ்க்கையில் கடைப்பிடித்தால் நம் வளர்ச்சிக்கு எல்லையே இருக்காது. அதை எல்லோரும் செய்ய வேண்டும். அதற்கான அத்தனை அம்சங்களையும் இந்த நினைவகத்தில் காந்தியின் மூலமாக, காந்தி உபயோகப்படுத்தின பொருட்களின் மூலமாக, அவரின் வாழ்க்கை முறையை எடுத்துக்காட்டுவதன் மூலமாக இளைஞர்கள் அறிந்துகொண்டு செயல்பட வேண்டும்!’’ .இது குறித்து ஓம்சக்தி இதழின் முன்னாள் ஆசிரியர் கவிஞர் பெ.சிதம்பரநாதன் நம்மிடம் கூறும்போது, ‘‘இந்த இடத்திற்கு காந்தியடிகள் வந்திருக்கிறார் என்ற தகவலே தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, உள்ளூரில் வசிக்கும் கோவை மக்களுக்கே தெரியாது. அந்த தவப்பெரும் தலைவர் இங்கே வந்து இரண்டு நாட்கள் தங்கி சென்றிருக்கிறார் என்பது கோவைக்கே பெருமை. அதை ஜி.டி.நாயுடுவின் மகன் ஜி.டி.கோபால் அவர்கள் கிட்டத்தட்ட 90 ஆண்டுகளாக அப்படியே பராமரித்து வந்திருக்க, அதை நினைவு இல்லமாக அழகுற அமைத்த கிருஷ்ணராஜ் வாணவராயர் போற்றுதலுக்கும் உரியவர். இந்த நினைவகம் கோவைக்கே அடையாளமாக மாறும் என்பதில் சந்தேகமேயில்லை!’ என்றார். .