மூலிகை நர்சரி பண்ணை வைத்து நடத்த வேண்டும் என்கிற முடிவு உங்களுக்கு எப்போது? ஏன் ஏற்பட்டது?பிளஸ் ஒன் படித்துக் கொண்டிருந்தபோதே எனக்குள்ளே மூலிகைகள் குறித்து நிறைய தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற ஆர்வம் இருந்துகொண்டே இருந்தது. டிப்ளமோ இன் பார்மசிஸ்ட் படித்துக் கொண்டிருந்தபோதும் தனியாக மூலிகைகள் பற்றி புத்தகங்கள் வாங்கிப் படிக்கத் தொடங்கினேன். ஆங்கில மருந்துகளின் தயாரிப்பில் நம்முடைய பாரம்பரிய மூலிகைகள் பலவும் பயன்படுத்தப்பட்டு வருவதை தெரிந்து கொண்டேன். அவ்வாறு இருக்கையில் நாம் ஏன் தனியாக மூலிகை நர்சரி வைத்து மூலிகைகளை நாமளே உற்பத்தி செய்து தரக் கூடாது என யோசித்தேன். அதன் விளைவாகவே அமிர்தநல்லூர் கிராமத்தில் என்.கே.மூலிகை நர்சரி பண்ணை தொடங்கினேன். எவ்விதம் தொடங்கினீர்கள்? மூலிகைக் கன்றுகளை எங்கிருந்து பெற்றீர்கள்?2௦2௦ல் என்னுடைய ஐந்து சென்ட் நிலத்தில் அதற்கான அமைப்பினை உருவாக்கினேன். கொல்லிமலை, ஏற்காடு மலை, நீலகிரி மலை, கேரளாவின் பாலக்காடு போன்ற பகுதிகளில் அலைந்து திரிந்து பல்வேறு மூலிகைச் செடிகளை அடையாளம் கண்டு, அவைகளை வேர்களுடன் பறித்து வந்தேன். (இப்போதும் மூலிகைகளைத் தேடி மேற்குறிப்பிட்ட மலைப்பகுதிகளில் நான் அலைந்து திரிவது உண்டு) அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக என்னுடைய மூலிகை நர்சரி விரிவடையத் தொடங்கியது. என்னிடம் வந்து மூலிகைக் கன்றுகளைப் பலரும் வீட்டில் வைத்து வளர்க்கவும், என்னுடையதைப் போலவே நர்சரி வைத்து வளர்க்கவும் என்னிடம் வந்து வாங்கிச் செல்கின்றனர். என்னிடம் நூற்றைம்பது வகையான மூலிகைச் செடிகள் உள்ளன..மிகவும் முக்கியமான மூலிகைகளின் மருத்துவக் குணங்கள் பற்றி கூறுங்களேன்?‘ஆனை திப்பிலி’ என்கிற மூலிகை. ஆஸ்துமா நோய்க்குக் கை கண்ட மருந்து. ஆனை திப்பிலியின் மூன்று நான்கு இலைகளைப் பறித்து அதனுடன் மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு வைத்து அரைத்து ரசமாக தயாரித்து சோற்றில் ரசம் போல ஊற்றிப் பிசைந்து சாப்பிடலாம். அல்லது வெறும் ரசமாகவும் அருந்தலாம். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று தடவை இதனை உணவாகவும் மருந்தாகவும் எடுத்துக் கொள்ளலாம். ஆஸ்துமா நோயினைக் கட்டுப்படுத்தும். நுரையீரல் சார்ந்த நோய்த்தொற்றுப் பிரச்னைகளுக்கும் இந்த ஆனை திப்பிலி ரசம் கை கண்ட மருந்தாகும்..இன்சுலின் செடி. பரவலாக இது இப்போது புழக்கத்தில் இருந்து வருகிறது. தினசரி இதன் மூன்று நான்கு இலைகளைப் பறித்து மென்று சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் இன்சுலின் சுரப்பு அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரை அளவினைச் சமன்படுத்துகிறது. மிக அதிக அளவு சர்க்கரைக் குறியீட்டு அளவு உடையவர்கள் இன்சுலின் செடி இலைகளுடன் நீரில் ஊற வைத்த வெந்தயமும் சேர்த்து மென்று சாப்பிட்டு வர நிச்சயம் பலன் கிடைக்கும். சர்க்கரை அளவு நார்மலுக்கு வந்த பின்னர் இதனை நிறுத்திக் கொள்ளலாம். ரத்தத்தில் சர்க்கரை அளவு நார்மலுக்கு வராதவர்கள் தினசரி இதனைப் பயன்படுத்தி வரலாம். ஒரு வாரத்தில் பலன் தெரியும். அதே நேரத்தில் உணவுக் கட்டுப்பாடும் அவசியம் கடைபிடிக்க வேண்டும்..மிளகுச் செடி. மலைவேம்பு மரத்தின் மீதாக மிளகுக் கொடியினைப் படர விட்டு வளர்க்கிறோம். “பத்து மிளகு கைவசம் இருந்தால் பகையாளியிடமும் தைரியமாக வாங்கிச் சாப்பிடலாம்” என்பார்கள். அந்தளவுக்கு நாம் சாப்பிடும் உணவில் விஷ முறிவினை ஏற்படுத்தக் கூடிய ஆற்றல் மிளகுக்கு உண்டு..திருநீற்றுப் பச்சிலை. திருநீறு வாசம் தரக் கூடியது. உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானது. நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றல் உடையது. முகத்துக்கு சரும அலர்ஜி நீக்க வல்லது. மேலும் திருநீற்றுப் பச்சிலையின் இலைகளை அரைத்து முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்துக் குளித்து வந்தால் முகம் பொலிவு பெறும்.. கரு மஞ்சள். வெளியே மஞ்சள் நிறமாகவும் அதன் தோலினை நீக்கினால் உள்ளே கருப்பு நிறமாகவும் இருக்கக் கூடியது தான் கரு மஞ்சள். ஒரு சிறிய துண்டு கரு மஞ்சள், கொஞ்சம் இஞ்சி எடுத்து தோலினைச் சீவி பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு பெரிய வெள்ளரிக்காய் தோல் சீவி துண்டுகளாக்கி, பரட்டை கீரை ஏழெட்டு இலைகள் சிறு சிறு துண்டுகளாக்கி, ஒரு எலுமிச்சைப் பழத்தினை சாறாகப் பிழிந்து மேற்கண்டவைகளுடன் சேர்த்துப் பிரட்டி, பச்சைக் காய்கறியாகவே சாப்பிடலாம். இவைகளுடன் சேர்ந்த கரு மஞ்சளால் என்ன பயன்? இந்தக் கரு மஞ்சள் முக்கியமாக புற்று நோய்க்கான நோய் எதிர்ப்பு சக்தி உடையது. ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கக் கூடியது. கெட்ட கொழுப்பினை குறைக்க வல்லது. மிகச் சிறந்த மூட்டு வலி நிவாரணியாகவும் செயல்படக் கூடியது.மூலிகை நர்சரி பண்ணை உங்களுக்கு திருப்தியாக உள்ளதா?ரொம்பவும் எனக்கு ஆத்ம திருப்தியாக உள்ளது. நம்முடைய பாரம்பரிய மூலிகைகளை இயற்கையான மலைப் பகுதிகளில் மட்டும் என்றில்லாமல், பரவலாக நம்முடைய தோட்டம் துரவுகளிலும் வைத்து வளர்த்து வருகின்ற மாபெரும் பணிக்கு நாமும் உறுதுணையாக இருந்து வருகிறோம் என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நான் இவைகள் மட்டும் அல்லாது வீடுகளில் தோட்டம், மாடி வீடுகளில் மாடித் தோட்டம் போன்றவைகளும் அவரவர்கள் விரும்பும் வகையில் அமைத்துத் தருகிறேன். சென்னையில் பலருக்கும் மாடித் தோட்டங்கள் அமைத்துத் தந்துள்ளேன்.
மூலிகை நர்சரி பண்ணை வைத்து நடத்த வேண்டும் என்கிற முடிவு உங்களுக்கு எப்போது? ஏன் ஏற்பட்டது?பிளஸ் ஒன் படித்துக் கொண்டிருந்தபோதே எனக்குள்ளே மூலிகைகள் குறித்து நிறைய தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற ஆர்வம் இருந்துகொண்டே இருந்தது. டிப்ளமோ இன் பார்மசிஸ்ட் படித்துக் கொண்டிருந்தபோதும் தனியாக மூலிகைகள் பற்றி புத்தகங்கள் வாங்கிப் படிக்கத் தொடங்கினேன். ஆங்கில மருந்துகளின் தயாரிப்பில் நம்முடைய பாரம்பரிய மூலிகைகள் பலவும் பயன்படுத்தப்பட்டு வருவதை தெரிந்து கொண்டேன். அவ்வாறு இருக்கையில் நாம் ஏன் தனியாக மூலிகை நர்சரி வைத்து மூலிகைகளை நாமளே உற்பத்தி செய்து தரக் கூடாது என யோசித்தேன். அதன் விளைவாகவே அமிர்தநல்லூர் கிராமத்தில் என்.கே.மூலிகை நர்சரி பண்ணை தொடங்கினேன். எவ்விதம் தொடங்கினீர்கள்? மூலிகைக் கன்றுகளை எங்கிருந்து பெற்றீர்கள்?2௦2௦ல் என்னுடைய ஐந்து சென்ட் நிலத்தில் அதற்கான அமைப்பினை உருவாக்கினேன். கொல்லிமலை, ஏற்காடு மலை, நீலகிரி மலை, கேரளாவின் பாலக்காடு போன்ற பகுதிகளில் அலைந்து திரிந்து பல்வேறு மூலிகைச் செடிகளை அடையாளம் கண்டு, அவைகளை வேர்களுடன் பறித்து வந்தேன். (இப்போதும் மூலிகைகளைத் தேடி மேற்குறிப்பிட்ட மலைப்பகுதிகளில் நான் அலைந்து திரிவது உண்டு) அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக என்னுடைய மூலிகை நர்சரி விரிவடையத் தொடங்கியது. என்னிடம் வந்து மூலிகைக் கன்றுகளைப் பலரும் வீட்டில் வைத்து வளர்க்கவும், என்னுடையதைப் போலவே நர்சரி வைத்து வளர்க்கவும் என்னிடம் வந்து வாங்கிச் செல்கின்றனர். என்னிடம் நூற்றைம்பது வகையான மூலிகைச் செடிகள் உள்ளன..மிகவும் முக்கியமான மூலிகைகளின் மருத்துவக் குணங்கள் பற்றி கூறுங்களேன்?‘ஆனை திப்பிலி’ என்கிற மூலிகை. ஆஸ்துமா நோய்க்குக் கை கண்ட மருந்து. ஆனை திப்பிலியின் மூன்று நான்கு இலைகளைப் பறித்து அதனுடன் மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு வைத்து அரைத்து ரசமாக தயாரித்து சோற்றில் ரசம் போல ஊற்றிப் பிசைந்து சாப்பிடலாம். அல்லது வெறும் ரசமாகவும் அருந்தலாம். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று தடவை இதனை உணவாகவும் மருந்தாகவும் எடுத்துக் கொள்ளலாம். ஆஸ்துமா நோயினைக் கட்டுப்படுத்தும். நுரையீரல் சார்ந்த நோய்த்தொற்றுப் பிரச்னைகளுக்கும் இந்த ஆனை திப்பிலி ரசம் கை கண்ட மருந்தாகும்..இன்சுலின் செடி. பரவலாக இது இப்போது புழக்கத்தில் இருந்து வருகிறது. தினசரி இதன் மூன்று நான்கு இலைகளைப் பறித்து மென்று சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் இன்சுலின் சுரப்பு அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரை அளவினைச் சமன்படுத்துகிறது. மிக அதிக அளவு சர்க்கரைக் குறியீட்டு அளவு உடையவர்கள் இன்சுலின் செடி இலைகளுடன் நீரில் ஊற வைத்த வெந்தயமும் சேர்த்து மென்று சாப்பிட்டு வர நிச்சயம் பலன் கிடைக்கும். சர்க்கரை அளவு நார்மலுக்கு வந்த பின்னர் இதனை நிறுத்திக் கொள்ளலாம். ரத்தத்தில் சர்க்கரை அளவு நார்மலுக்கு வராதவர்கள் தினசரி இதனைப் பயன்படுத்தி வரலாம். ஒரு வாரத்தில் பலன் தெரியும். அதே நேரத்தில் உணவுக் கட்டுப்பாடும் அவசியம் கடைபிடிக்க வேண்டும்..மிளகுச் செடி. மலைவேம்பு மரத்தின் மீதாக மிளகுக் கொடியினைப் படர விட்டு வளர்க்கிறோம். “பத்து மிளகு கைவசம் இருந்தால் பகையாளியிடமும் தைரியமாக வாங்கிச் சாப்பிடலாம்” என்பார்கள். அந்தளவுக்கு நாம் சாப்பிடும் உணவில் விஷ முறிவினை ஏற்படுத்தக் கூடிய ஆற்றல் மிளகுக்கு உண்டு..திருநீற்றுப் பச்சிலை. திருநீறு வாசம் தரக் கூடியது. உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானது. நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றல் உடையது. முகத்துக்கு சரும அலர்ஜி நீக்க வல்லது. மேலும் திருநீற்றுப் பச்சிலையின் இலைகளை அரைத்து முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்துக் குளித்து வந்தால் முகம் பொலிவு பெறும்.. கரு மஞ்சள். வெளியே மஞ்சள் நிறமாகவும் அதன் தோலினை நீக்கினால் உள்ளே கருப்பு நிறமாகவும் இருக்கக் கூடியது தான் கரு மஞ்சள். ஒரு சிறிய துண்டு கரு மஞ்சள், கொஞ்சம் இஞ்சி எடுத்து தோலினைச் சீவி பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு பெரிய வெள்ளரிக்காய் தோல் சீவி துண்டுகளாக்கி, பரட்டை கீரை ஏழெட்டு இலைகள் சிறு சிறு துண்டுகளாக்கி, ஒரு எலுமிச்சைப் பழத்தினை சாறாகப் பிழிந்து மேற்கண்டவைகளுடன் சேர்த்துப் பிரட்டி, பச்சைக் காய்கறியாகவே சாப்பிடலாம். இவைகளுடன் சேர்ந்த கரு மஞ்சளால் என்ன பயன்? இந்தக் கரு மஞ்சள் முக்கியமாக புற்று நோய்க்கான நோய் எதிர்ப்பு சக்தி உடையது. ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கக் கூடியது. கெட்ட கொழுப்பினை குறைக்க வல்லது. மிகச் சிறந்த மூட்டு வலி நிவாரணியாகவும் செயல்படக் கூடியது.மூலிகை நர்சரி பண்ணை உங்களுக்கு திருப்தியாக உள்ளதா?ரொம்பவும் எனக்கு ஆத்ம திருப்தியாக உள்ளது. நம்முடைய பாரம்பரிய மூலிகைகளை இயற்கையான மலைப் பகுதிகளில் மட்டும் என்றில்லாமல், பரவலாக நம்முடைய தோட்டம் துரவுகளிலும் வைத்து வளர்த்து வருகின்ற மாபெரும் பணிக்கு நாமும் உறுதுணையாக இருந்து வருகிறோம் என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நான் இவைகள் மட்டும் அல்லாது வீடுகளில் தோட்டம், மாடி வீடுகளில் மாடித் தோட்டம் போன்றவைகளும் அவரவர்கள் விரும்பும் வகையில் அமைத்துத் தருகிறேன். சென்னையில் பலருக்கும் மாடித் தோட்டங்கள் அமைத்துத் தந்துள்ளேன்.