கந்தர் சஷ்டியின் 6-வது நாளான இன்று மாலையில் திருச்செந்தூர் உட்பட அனைத்து கோவில்களிலும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறுகிறது. இதை முன்னிட்டு பல கோவில்களிலும் பக்தர்கள் பால்குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
கூடலூர் சுந்தரவேலவர் ஆலயத்தில் சூரசம்ஹார நிகழ்வை முன்னிட்டு காலையில் 100-க்கும் மேறபட்ட பெண் பக்தர்கள் பால்குடம் ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோயிலுக்குச் சென்று வழிபாடுகள் நடத்தினர். இக்கோவிலில்
மாலையில் நடைபெறும் சூரசம்ஹார நிகழ்வுகளுக்கு விழாக் குழுவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.