கர்நாடகாவில் இன்று அதிகாலை 2 முறை நிலநடுக்கம்! வேலூரிலும் லேசான அதிர்வு!

கர்நாடகாவில் இன்று அதிகாலை 2 முறை நிலநடுக்கம்! வேலூரிலும் லேசான அதிர்வு!

கர்நாடகா மாநிலத்தில் இன்று அதிகாலையில் 2 இடங்களில் நிலநடுக்கம் ஏறப்படது.

இதுகுறித்து கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் வெளீயிட்ட தகவல்:

இன்று காலை கர்நாடகா மாநிலத்தில் உள்ள  சிக்கபல்லாபுரா மாவட்டத்தில் 2.9 ரிக்டர் அளவிலும் மற்றும் 3.0 ரிக்டர் அளவில் இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. கர்நாடகாவிலுள்ள சிக்பல்லாபூர் மாவட்டத்தில் இந்த 2 நிலநடுக்கங்கள் ஏறபட்டன. சிக்பல்லாபூர் மாவட்டம் மண்டிகல் பகுதியில் காலை 7.10 மணியளவிலும் ஆடகுல்லா பகுதியில் காலை 7.14 மணியளவிலும் நிலநடுகம் ஏற்பட்டது. இதனால் எந்தவித பாதிப்பும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்லது.

இதையடுத்து தமிழகத்திலும் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பக்தியில் 3-வது முறையாக லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதுகுறித்து வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com